search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "search"

    • பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியா செல்வதற்காக வந்தார். அவரின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது அவர் வைத்திருந்த இரண்டு அட்டைப்பெட்டிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதில் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள் இருப்பதாக கூறினார்.

    ஆனால் அந்த அட்டைப்பெட்டிகள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அட்டைப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் உயிருடன் 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.

    இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், அந்தப் பயணியை கைது செய்தனர். மேலும் அட்டை பெட்டிகளில் இருந்த நட்சத்திர ஆமைகளையும் பறிமுதல் செய்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    சுங்க அதிகாரிகள் அந்த பயணியின், மலேசியா பயணத்தை ரத்து செய்தனர். விசாரணையில் இந்த நட்சத்திர ஆமைகளை, ஆந்திர மாநிலம் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும், இந்த நட்சத்திர ஆமைகளுக்கு இங்கு ரூ.50 முதல் ரூ. 100 வரையில் விலை ஆனால் மலேசியா நாட்டில் இந்த நட்சத்திர ஆமைகள் ரூ.5 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்குவார்கள் என்று தெரிவித்தார்.

    மேலும் அங்குள்ள வீடுகளில் நட்சத்திர ஆமைகள் வளர்க்கப்படுகின்றன. நட்சத்திர விடுதிகளில், இறைச்சி மற்றும் சூப்புக்காகவும், மருத்துவ குணமுடைய நட்சத்திர ஆமைகளை, மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துவதால் கடும் கிராக்கி இருப்பதாக தெரிவித்தார்.

    பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
    • 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர்.

    சேலம்:

    சேலத்தை அடுத்த வலசையூரை சேர்ந்தவர் சபரி சங்கர் (35) . இவர் சேலம், தருமபுரி, நாமக்கல் , ஆத்தூர், திருச்சி உள்பட 11 இடங்களில் எஸ்.வி.எஸ். நகை கடை என்ற பெயரில் நகை கடைகளை நடத்தி வந்தார். இதில் கவர்ச்சி கரமான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் முதலீடு பெற்றார்.

    பின்னர் சில மாதங்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு தலைமறை வாகிவிட்டார் .

    இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை புதுச்சேரியில் வைத்து தருமபுரி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோவை சிறையில் வைத்து சபரிசங்கரை கைது செய்தனர். பின்னர் கடந்த 24-ந் தேதி சபரிசங்கரிடம் விசாரணை நடத்த 4 நாட்கள் காவலில் எடுத்தனர்.

    தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், தாரமங்கலம் உள்பட 5 இடங்களில் உள்ள எஸ்.வி.எஸ். நகைகடைகளை திறந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வருவாய்துறையினருடன் இணைந்து கடைகளை திறந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சபரி சங்கரை அந்த கடைகளுக்கு அழைத்து வந்து கடையில் பொருட்களை கணக்கெடுத்தனர். அதில் தங்க நகைகள் பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது. 70 கிலோவிற்கு மேல் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளிக்கட்டிகள் அங்கு இருந்ததாகவும், அதனை பறிமுதல் செய்ததாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

    தொடர்ந்து சபரி சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, நகை கடைகளில் வேலை செய்த மேலாளர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களுக்கு கார்களை வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனால் அவர்கள் கடைகளில் இருந்த நகைகளை அள்ளி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கடைகளின் மேலாளர்களை பிடித்தால் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். 

    • சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் அதிகாரிகள்.

    சென்னை:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

    இதுபோன்ற சம்பவம் இனி ஏற்படாமல் தடுக்கும் விதமாக பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்களை அமைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், தீபாவளி முடியும்வரை பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    வருவாய், தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
    • துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல கும்பலின் தலைவன் பெரும்பாவூர் அனஸ். கொச்சி பியூட்டிபார்லர் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் மீது மேலும் பல வழக்குகள் இருக்கின்றன. இவருடைய கூட்டாளிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அனசின் கூட்டாளியான எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள மஞ்சலி கொச்சுகுன்றும்புரம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 4 துப்பாக்கிகள், 2 கத்திகள், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 25 குண்டுகள் இருந்தன.

    அவற்றை சோதனையில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ரியாசின் வீட்டில் இருந்து ரூ8.83 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ரியாசை போலீசார் கைது செய்தனர். ரியாசின் வீட்டில் கடந்த 8 ஆண்களுக்கு முன்பு இதேபோல் பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.

    இந்நிலையில் தற்போதும் அவர் துப்பாக்கிகளுடன் சிக்கியிருக்கிறார். அவர் தனது வீட்டில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கிவைத்திருந்தது தொடர்பாக அவரிடம் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று அனசின் மற்றொரு கூட்டாளியான அல்தாப் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரிவால்வர் கேஸ், கைவிலங்கு மற்றும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அனசின் நெருங்கிய கூட்டாளியான பெரும்பாவூரை சேர்ந்த ஷாஜி பாப்பன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் அனசுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் கோவை மாவட்டம் ஆனைமலையில் ஒருவரின் வீடு, மேட்டுப்பாளையத்தில் ஒருவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் பயங்கரவாத தடுப்பு படையினர் அந்த மாவட்ட போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தி உள்ளனர்.

    பயங்கரவாத தடுப்பு படையினரின் அதிரடி சோதனையில துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
    • கார் அரசு மற்றும் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தப்புவதில்லை அனைத்தையும் மடக்கி பிடித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை மெயின் ரோட்டில் அழகாபுரி சோதனை சாவடியில் பறக்கும் படை உதவி தேர்தல் அதிகாரி தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னை திருவொற்றியூர் குப்பம் பெட்டினத்தார் கோவில் தெருவில் வசிக்கும் செந்தில்குமார் (வயது 43) என்பவர் மினி லாரியில் மீன் லோடு ஏற்றி வந்தார்.

    அந்த லாரியை பறக்கும் படையினர் மறித்து விசாரித்ததில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக பறக்கும் படையினர் அந்த பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் அந்த பணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பறக்கும் படையினர் சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கார் அரசு மற்றும் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தப்புவதில்லை அனைத்தையும் மடக்கி பிடித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் ரெயில்களில் மட்டும் இந்த சோதனை நடைபெறுவதில்லை அதற்கு மட்டும் தேர்தல் அதிகாரிகள் பாராமுகமாக இருந்து கண்டு கொள்வதில்லை. இதனால் பணம் கடத்துவோர் ரெயில்கள் மூலம் எளிதாக பணத்தை கடத்தலாம் எனவும் பறக்கும் படையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரெயில்களிலும் சோதனை இட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வருபவர் நாகராஜன்(44). இவர் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் இருந்து முட்டை வியாபாரம் செய்துவிட்டு அருப்புக் கோட்டைக்கு வரும் போது தேர்தல் நிலையான கண் காணிப்பு குழு தலைவர் மகாலட்சுமி தலைமையி லான குழுவினர் நாகராஜன் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்தை பறிமுதல் செய்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக் கண்ணு முன்பு அந்த பணத்தை சீல் வைக்கப்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

    • சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
    • தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை கவர மது பானங்களை பயன்படுத்துவதை தடுக்க மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக மது பானங்களை கடத்துவதை தடுக்கவும், புதுவை பிராந்திய எல்லை பகுதிகளில் 10 இடங்களில் கலால்துறையால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கனகசெட்டிகுளம், தவளக்குப்பம், முள்ளோடை, சோரியாங் குப்பம், மடுகரை, மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, அய்யங் குட்டிபாளையம், கோரிமேடு ஆகிய சோதனை சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுக்கள் புதுச்சேரியில் இருந்து அண்டை மாநிலத்துக்கும், அண்டை மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கும் வாக்காளர்களுக்கு வழங்க பணம், மதுபானங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்துவதை, தவிர்க்க வாகன சோதனையில் தேர்தல் நடக்கும் நாள் வரை ஈடுபட உள்ளது.

    மேலும் இந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    இதற்கிடையே புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ் பெக்டர்கள் பங்கேற்றனர்.

    அந்த ஆலோசனை கூட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து தடுக்க வேண்டும். தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    • மானாமதுரையில் உளள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
    • விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து அவற்றை அழித்தார்.

    மானாமதுரை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பகுதியில் இனிப்பு, கார வகைகள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்து றையினர் திடீர் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தர–வின்படியும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரிலும் சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் சர வணக்குமார் மானா மதுரை நகரிலுள்ள பல இனிப்பு வகை கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத் தினார்.

    இதில் தரமான முறையில் இனிப்பு, கார வகைகள் தயார் செய்யப்படுகிறதா? என்று கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கெட்டுப்போன மற்றும் அதிக கலர் பொடி கலந்து உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகை யில் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து அவற்றை அழித்தார்.

    மேலும் இவற்றை பறிமு தல் செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இனிப்பு வகைகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களிடம் இனிப்பு, காரம் தயாரிப்புக்கு ஒருமுறை பயன்படுத்தும் எண்ணையை மீண்டும் வடி கட்டி பயன்படுத்த கூடாது. இனிப்பு வகைகளில் அதிக கலர் பொடி சேர்க்க கூடாது என்றும் சரவணக்குமார் அறிவுறுத்தினார்.

    • தற்போது என்ன செய்து வருகிறார்கள்? என்பது குறித்து வீடு வீடாக சென்று அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
    • திருவாமூர் மோகன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கொலை குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடு களை சோதனை செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காடாம்புலியூர் இன்ஸ் பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்- இன்ஸ் பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆயுதம் பதுக்கி வைத்துள்ளார் களா? குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எங்கு உள்ளார்கள்? தற்போது என்ன செய்து வருகிறார்கள்? என்பது குறித்து வீடு வீடாக சென்று அதிரடி சோதனை மேற் கொண்டனர்.

    அப்போது கொலை வழக்கில் கைதாகி ஜாமி னில் வந்த தலைமறைவு குற்றவாளி திருவாமூர் மோகன் (வயது 35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பண்ருட்டியில் போலீ சார் அதிரடியாக குற்ற வழக்குகளில் சம்பந்தப் பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிரடியாக சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காரைக்காலில் போதை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.1000 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ள ஒரு கடையில் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார், குறிப்பிட்ட கடையில், சில சாட்சிகள் முன்னிலையில் சோதனை செய்தபோது, ரூ.1000 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது. மேலும், கடை உரிமையாளர் காரைக்கால் பெருமாள் கோவில் வீதியைச்சேர்ந்த முகம்மது சகாபுதினை போலீசார் கைது செய்தனர்.

    • வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை 2-வது நாளாக தேடி வருகின்றனர்
    • இது குறித்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    நம்பியூர்,

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள நடுப்பாளையம் கிழக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பிரியா தனது வீட்டின் அருகில் உள்ள கீழ்பவானி வாய்க்கா லுக்கு குளிக்க சென்றார். அதை தொடர்ந்து தான் எடுத்து வந்த செல்போன் மற்றும் காலணிகளை கரை யில் வைத்து விட்டு கீழ் பவா னி வாய்க்காலில் இறங்கி உள்ளார். கீழ்பவா னி வா ய்க்கலில் பாசனத்தி ற்காக அதிகளவில் தண்ணீர் திறக்க ப்பட்டு உள்ளதால் கீழ் பவானி வாய்க்காலின் இரு கரை களையும் தொட்டபடி தண்ணீர் வேகமாக செல் கிறது. தண்ணீர் அதிகளவில் சென்றதால் பிரியா வாய்க்காலில் குளித்த போது திடீரென நீரில் மூழ்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது உறவினர் மற்றும் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கீழ்பவானி வாய்க்கா லில் இறங்கி பிரியாவை தேடினர். ஆனால் பிரியா குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை. தொடர்ந்து அவர்கள் தேடி வருகிறன்ற னர். இந்த நிலையில் இன்று காலை முதல் 2-வது நாளாக தொடர்ந்து தீய ணைப்பு வீரர்கள் வாய்க்காலின் பல பகுதி களில் அவரை தேடி வருகி ன்றனர்.இது குறித்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார். 

    • குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அதே பகுதியை சேர்ந்த பிச்சை என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திட்டக்குடி தாலுகா மேல் கல் பூண்டி தனியார் மில்லில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, போலீஸ்காரர்கள் முருகானந்தம், ராஜா, பவானி ஆகியோர் மாவு மில்லுக்கு நேரில் சென்றனர்.

    அங்கு சோதனை மேற்கொண்டபோது, 30 சாக்கு மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிச்சை (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

    • திமுக ஊராட்சி செயலாளர் உள்பட 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
    • போலீஸ் நிலையம் முன்பு தலித் இளைஞரை காலில் விழ வைத்த விவகாரம்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன். பாஜக ஒன்றிய செயலாளராக இருக்கும் இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மகளுக்கு கடந்த 8-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்கு அங்குள்ள ஆதிச்சன நல்லூர் கிராமத்தில் இருந்து தாய்மாமன் சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. அப்போது அன்பரசன் தரப்பினர் அங்குள்ள ஒரு தெருவில் பட்டாசு வெடித்துள்ளனர்.மறுநாள் அன்பரசனின் இளைய சகோதரர் திருநாவுக்கரசு போதையில் மேற்கண்ட தெருவில் பெட்டிக்கடையில் நின்று கொண்டு சிகரெட் வாங்கி பற்ற வைத்ததாக கூறப்படுகிறது.அப்போது அங்கிருந்த ஒருவர் என்னடா வெடி வெடிக்கிறீங்க. சிகரெட் வாங்கி குடிக்கிறீங்க பெரிய ஆள் ஆகி விட்டீர்களா என கேட்டு தகராறு செய்தார. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்த தகவல் அறிந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக ஊராட்சி செயலாளருமான கண்ணன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர்.மறுநாள் காவல் நிலையம் முன்பு திருநாவுக்கரசு ஊர் மக்கள் முன்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.இதை அறிந்த அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார்.பாஜக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளராக இருக்கும் அவர் காவல் நிலையம் முன்பு காலனி தெருவை சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது தீண்டாமை அல்லவா என பதிவிட்டு பதிவு தபால் மூலம் குடியரசுத் தலைவர், தமிழக கவர்னர்,மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர்களுக்கு புகார் மனு அனுப்பினார்.இதைத்தொடர்ந்து அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த திமுக ஊராட்சி செயலாளர் கண்ணன், ராஜேஷ் ,ராமச்சந்திரன், ரமேஷ் ,அருண், வேலுச்சாமி, உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ராஜேஷ் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். அவர் மீது எஸ்சி எஸ்டி தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தலைமறைவாக உள்ள திமுக ஊராட்சி செயலாளர் கண்ணன் உள்ளிட்ட 5 பேரை இரண்டு தனிப்படை போலீசார் வலைவீசி தேடுகின்றனர். இந்த சம்பவம் மேற்கண்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×