search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த தலைமறைவான குற்றவாளி: 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது
    X

    பண்ருட்டியில் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த தலைமறைவான குற்றவாளி: 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

    • தற்போது என்ன செய்து வருகிறார்கள்? என்பது குறித்து வீடு வீடாக சென்று அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
    • திருவாமூர் மோகன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கொலை குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடு களை சோதனை செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காடாம்புலியூர் இன்ஸ் பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்- இன்ஸ் பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆயுதம் பதுக்கி வைத்துள்ளார் களா? குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எங்கு உள்ளார்கள்? தற்போது என்ன செய்து வருகிறார்கள்? என்பது குறித்து வீடு வீடாக சென்று அதிரடி சோதனை மேற் கொண்டனர்.

    அப்போது கொலை வழக்கில் கைதாகி ஜாமி னில் வந்த தலைமறைவு குற்றவாளி திருவாமூர் மோகன் (வயது 35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பண்ருட்டியில் போலீ சார் அதிரடியாக குற்ற வழக்குகளில் சம்பந்தப் பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிரடியாக சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×