search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    தனியார் மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

    • குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அதே பகுதியை சேர்ந்த பிச்சை என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திட்டக்குடி தாலுகா மேல் கல் பூண்டி தனியார் மில்லில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, போலீஸ்காரர்கள் முருகானந்தம், ராஜா, பவானி ஆகியோர் மாவு மில்லுக்கு நேரில் சென்றனர்.

    அங்கு சோதனை மேற்கொண்டபோது, 30 சாக்கு மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிச்சை (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×