என் மலர்
நீங்கள் தேடியது "tiger"
- எச்.பி.எப். குடியிருப்புப் பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிகிறது
- கரடி கடந்த சில நாள்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஊட்டி,
ஊட்டி - கூடலூா் சாலையில் எச்.பி.எப்.பகுதியில் வளா்ப்பு எருமைைய கடந்த புதன்கிழமை வனவிலங்கு வேட்டையாடி, மீதமுள்ள உடலை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப் பகுதியில் விட்டு சென்றது. இதன் பேரில் அங்கு சென்று வனத் துறையினா் ஆய்வு நடத்தினா். பின்னா் கால்நடை மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு எருமையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், எச்.பி.எப். குடியிருப்புப் பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிவதை அந்த பகுதியைச் சோ்ந்த சிலா் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனா். இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் நடமாட பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
மேலும், அப்பகுதியில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
ஊட்டி 27-வது வாா்டு தீட்டுக்கல் பகுதியில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கரடி புகுந்து கடந்த சில நாள்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனா்.
- தாளவாடி அருகே வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து கொன்றது.
- மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தாளவாடி வனச் சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்தநிலையில் கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரசுவாமி (49)இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார் வழக்கம் போல் மாடுகளை அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார் நேற்று மதியம் மாடுகளை அழைத்தை வர சென்ற போது ஓரு பசு மாடு இறந்துகிடந்தது மாடு இறந்துகிடந்த இடம் கர்நாடக வனப்பகுக்கு உட்பட்டது.
இதுபற்றி தாளவாடி வனத்துறை மற்றும் கர்நாடக வனத்துறைக்கு தகவல் அளித்தார் சம்பவயி–டத்திக்கு வந்த வனத்துறை இறந்த மாட்டை ஆய்வு செய்தனர் புலி தாக்கி பசு மாடு இறந்தது தெரியவந்தது.
இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக கால்நடை வளர்போர் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-
கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்றனர்.
- தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
- 4 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதி களில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அருகே உள்ள உள்ள கிராம பகுதிகளில் புகுந்து அட்ட காசம் செய்து வருகிறது.
அதே போல் தாளவாடி வனச்சர கத்துக்கு உட்பட்ட வன ப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்ட த்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
இநத நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி சேசன் நகர் கிராமத்தில் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது. கடந்த 2 மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி கால்நடைகளை தொடர்ந்து அடித்து கொன்று வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனத்துறையினர் 2 டிரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இன்று 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர்.
மேலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலி யின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் புலியை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை யினர் தெரிவி த்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிமண்டல பகுதியான மசினகுடி மற்றும் கூடலூர் வனச்சரகத்தில் தேவன்- 1 பகுதியில் 1 ஆண்டுக்குள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பெண் உள்பட 4 பேரை புலி தாக்கி கொன்றது. இதைத்தொடர்ந்து ஆட்கொல்லி புலியை பிடிக்க வேண்டும் என கூடலூர், மசினகுடி பகுதியில் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் 3 வாரங்களுக்கும் மேலாக ஆட்கொல்லி புலியை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக பிடிக்க முடியவில்லை. பின்னர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு கடந்த மாதம் 15-ந் தேதி மசினகுடி வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின்னர் இரும்புக் கூண்டில் அடைத்தனர். அப்போது புலியின் உடலில் காயங்கள் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். ஆண் புலிகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக ஆட்கொல்லி புலி கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று 27- வது நாளாக ஆட்கொல்லி புலிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை காலத்தில் உயிருடன் கோழிகள் மற்றும் மாட்டு இறைச்சிகள் புலிக்கு உணவாக வழங்கப்பட்டன. தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள புலி இரையை நன்கு சாப்பிட்டு வருகிறது. மேலும் அதன் உடலிலுள்ள காயங்களுக்கு கர்நாடக வன கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இதில் புலியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடைந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மசினகுடி வனத்தில் பிடிபட்ட புலி தொடர் சிகிச்சையால் பூரண குணம் அடைந்து உள்ளது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வனப்பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில் அடிக்கடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து வீட்டு கால்நடைகளை அடித்து காயப்படுத்தி சென்றதும் மக்களை மிரட்டி செல்வதும் நடந்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக புலியூர், டைகர் சோலை, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் வன விலங்குகள் காட்டுத் தீக்கு பயந்து கிராமங்களுக்குள் நுழைந்து வருகின்றன.
வில்பட்டியை அடுத்துள்ள புலியூர் பகுதியைச் சேர்ந்த சேகர் தனக்கு சொந்தமான குதிரையை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மீண்டும் காலையில் குதிரையை பார்த்த போது அதை காணவில்லை.சிறிது தூரம் தேடிச் சென்று பார்த்த போது மர்ம விலங்கு தாக்கி இறந்தது கிடந்தது. குதிரையின் கழுத்தில் ஆழமான காயம் இருந்ததால் புலி கடித்து கொன்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்தனர்.
இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் ஹக்கீம் சம்பவ இடத்துக்கு வந்து குதிரையின் உடலை அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.
வனத்துறையினர் தெரிவிக்கையில், புலி நடமாட்டம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. குதிரை எவ்வாறு இறந்தது என விசாரணை நடத்தப்படும் என்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்லை பகுதியில் புலி வந்து சென்றதற்கான கால்தடம் பதிவாகி இருந்தது அதே போல் தற்போது வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள கால் தடத்தால் விலங்குகள் இடம் பெயர்ந்து வந்திருக்கலாம் என பொதுமக்கள் கூறும் போதும் வனத்துறையினர் அதனை மறுத்து வருவது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
மிருகங்கள் தனது இனத்தை அடித்து கொன்று சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஆனால் புலிகள் இனத்தில் அத்தகைய நடைமுறை இல்லை. ஆனால் அபூர்வமாக புலி தனது இனத்தை சேர்ந்த மற்றொரு புலியை அடித்து கொன்று தின்ற சம்பவம் நடந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் முந்திதாதர் என்ற இடத்தில் காங்கா தேசிய பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி யானைகள் உள்ளிட்ட பல வகையான மிருகங்கள் உள்ளன.
இந்த நிலையில் அங்கு இனப் பெருக்கத்திற்காக ஒரு பெண் புலியை ஆண் புலியுடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தனர். ஆனால் பெண் புலியை அந்த ஆண் புலி அடித்துக் கொன்றது.
மேலும் அதன் இறைச்சியை சாப்பிட்டது. பூங்கா ஊழியர்கள் பார்த்தபோது பெண் புலியின் மண்டை ஓடும், அதன் கால்களின் பாதங்கள் மட்டுமே எஞ்சி இருந்தது.
இந்த தகவலை தேசிய பூங்காவின் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
ஒரு புலி மற்றொரு புலியை அடித்துக்கொன்று சாப்பிடுவது அபூர்வ சம்பவமாகும். இத்தகைய சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. சில சமயங்களில் தனது குட்டியை புலிகள் தின்ற சம்பவம் நடந்தது உண்டு.
ஆனால் ஒரு பெரிய புலியை மற்றொரு புலி அடித்து கொன்று தின்ற சம்பவம் நடந்தது இல்லை என்றும் அவர் கூறினார்.
கொல்லப்பட்ட பெண் புலியின் எஞ்சிய உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே கொடூரமாக ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளும்போது பசியின் காரணமாக மற்றொன்றை அடித்துக் கொன்று சாப்பிடும் சம்பவம் நடந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்தியபிரதேசத்தில் அதிக புலிகள் வாழ்கின்றன. கடந்த 1995-ம் ஆண்டு இது புலிகள் மாநிலம் என அறிவிக்கப்பட்டது. இந்திய அளவில் 20 சதவீதம் புலிகள் இங்கு உள்ளன. உலக அளவில் 10 சதவீதம் புலிகள் இருக்கின்றன. #MP #TigerDeath
இந்தியாவின் தேசிய விலங்காக இருக்கும் புலியின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை தடுக்க வந்த காப்பகத்தின் பாதுகாவலரை தாக்கிய கிராம மக்கள், வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த 10 வயது பெண் புலியை அங்கு இருந்த ஒரு ட்ராக்டரை கொண்டு ஏற்றியுள்ளனர். அதோடு விட்டுவிடாமல், அதனை கட்டையால் சாகும்வரை தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட பெண் புலி இதுவரை எந்த மனிதரையும் தாக்கியது இல்லை என்றும், கிராம மக்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு புலியை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். புலியை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். #UP
பழனி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.
வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை மற்றும் பிற விலங்குகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு பணி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதன்படி கடந்த 24-ந்தேதி பழனி, கொடைக்கானல் வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
தற்போது கணக்கெடுப்பு பணிகள் முடிந்து விட்டது. இதுகுறித்து பழனி வனத்துறையினரிடம் கேட்ட போது, பாலசமுத்திரம் காப்புக்காடு, கோணவாய்க்கால் பகுதியில் சிறுத்தையின் கால்தடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மரங்களிலும் அவற்றின் நகக்கீரல்கள் பதிவாகி இருந்தன. அவற்றின் மூலம் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.
அதே போல் புலிகளின் கால்தடங்களும் வனப்பகுதியில் பதிவாகி உள்ளது. பழனி வனப்பகுதியில் தற்போது சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் யானைகள், காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்டவைகளையும் நேரில் பார்த்து கணக்கெடுத்துள்ளோம்.
கணக்கெடுப்பின் முழு விவரம் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் மாவட்ட வன அலுவலர் பழனி, கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றனர். #tamilnews
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வன பகுதிகளாகும். இங்கு காட்டெருமை, மான், சிறுத்தை, கரடி, காட்டுபன்றி, யானை, புலி போன்ற மிருகங்கள் வசித்து வருகின்றன.
இவைகள் அடிக்கடி குன்னூர் நகருக்குள் வந்து பொது மக்களை அவ்வபோது தாக்கி செல்கின்றன. தற்போது குன்னூர் நகர பகுதியான ஆரஞ்ச் குரோவ், ஹவுசிங் யூனிட், வண்ணாரபேட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் வாழும் அதிக குடியிருப்புகள் உள்ளன. மேலும் தனியார் பள்ளியும் மகளிர்கான தனியார் பெண்கள் விடுதியும் உள்ளது.
இந்த பகுதியில் இரவு நேரங்களில் தினந்தோறும் புலி ஒன்று உலா வருகிறது. அந்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் சி.சி.டி கண்காணிப்பு கேமிராவில் புலி நடமாடுவது பதிவாகி இருந்தன. மேலும் அங்குள்ள ஒரு நாயை அடித்து கொன்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.
இதை பற்றிபல முறை வனதுறைக்கு தகவல் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆரஞ்சு குரோவ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பங்களாவில் இரவு நாய் குரைத்து கொண்டு இருப்பதை என்னவென்று இரவு நேர காவலாளி டார்ச் லைட் வெளிசத்தில் பார்துள்ளார். நாயின் கூண்டின் முன்பு பெரிய புலி ஒன்று நாயை பார்த்துகொண்டே படுத்து இருப்பதை பார்த்த
அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் வனதுறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. வன துறையினர் அந்த பகுதியில் புலியை பிடிக்க கூண்டில் கோழியை வைத்துள்ளனர்.
ஈரோடு வனக்கோட்டத்துக்கு உள்பட்ட அந்தியூர் வனப்பகுதியில் முதல் முறையாக புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் வன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கு பயிற்சி அளிக்கும் முகாம் அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்போது ‘அந்தியூர், சென்னம்பட்டி, பர்கூர் ஆகிய வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி 15-ந்தேதி (நேற்று) தொடங்கி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை என 3 நாட்கள் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்வநாதன் மற்றும் கூடுதல் வன அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்னம்பட்டி, முரளி பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல்வேறு ஊன் உண்ணிகள் தாவர உண்ணிகள் என 2 வகையாக பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பேது தனது குட்டியுடன் சிறுத்தைபுலி அங்குள்ள ஒரு வனக்குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றதை நேரில் பார்த்து பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பதிவான புலியின் கால் தடங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘வரைபடங்கள் மற்றும் குறிப்புகள் பதிவு செய்தல் பற்றிய கையேடுகள் வைத்து புலி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டோம். மொத்தம் 4 அளவுகளில் பதிவாகி இருந்த புலியின் கால்தடங்களை சேகரித் தோம். முதல் நாள் 4 புலிகளின் கால்தடங்கள் பதிவு செய்தோம். மேலும் வனப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலமும் வன விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். புலிகள் இருப்பிடம் பற்றிய தகவல் ஜி.பி.ஆர்.எஸ் மூலம் கண்காணிக்கப்படும்’ என்று வனத்துறையினர் தெரிவித்தார்கள்.
இந்த கணக்கெடுக்கும் பணியில் அந்தியூர் வனச்சரகர் பாலகிருஷ்ணன். பர்கூர் வனச்சரகர் மணிகண்டன், சென்னம்பட்டி வனச்சரகர் செங்கோட்டையன் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனத்தினர் 100 பேர் ஈடுபட்டனர்.
புலியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தன் கையிலிருந்த கோடாரியின் கைப்பிடி பகுதியை புலியின் வாயில் வைத்து, புலி தன்னை கடித்து விடாமல் பாதுகாத்துக் கொண்டுள்ளார். ராகேஷின் அலறலை கேட்ட இதர கிராமவாசிகள் அங்கு வந்து புலியை விரட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வனச்சரக அதிகாரி விஜய் சங்கர் கூறுகையில், புலியின் தாக்குதலினால் தாடையில் முறிவு ஏற்பட்டு, பலத்த காயங்களுடன் ராகேஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.