search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hunting"

    • விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் பிரஜீஷ்(வயது36). விவசாயியான இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். கடந்த சில நாட்ளுக்கு முன்பு அவற்றிற்கு புல் அறுப்பதற்கு சென்ற போது, புலி அவரை அடித்துக் கொன்று சாப்பிட்டது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விவசாயியை வேட்டையாடிய புலியை சுட்டுக்கொல்ல கேரள அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து விவசாயியை கொன்ற புலியை தேடும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். விவசாயி கொல்லப்பட்ட பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிகளில் புலியை தேடினர். மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.

    இந்நிலையில் புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதனை தள்ளுபடி செய்தது. மனிதனை கொன்ற புலியை சுட்டுக்கொல்லுவது தவறு இல்லை என்று கருத்து கூறிய ஐகோர்ட்டு, வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

    இந்நிலையில் விவசாயியை கொன்ற புலியை பிடிக்க 80 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். வனத்துறையைச் சேர்ந்த அவர்கள் புலி நடமாட்டம் கண்டறியப்பட்ட இடங்க ளில் 5-வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    புலி சிக்குவதற்காக பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதனையும் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருப்பதால் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி வருகின்றனர். 

    • நீர்வரத்து பகுதியான உப்பாறு ஓடையில் அதிக அளவில் மான்கள் காணப்படுகின்றன.
    • மான்களை அதன் இறைச்சிக்காக ஒரு சிலா் வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

    திருப்பூர்:

    பல்லடத்தை அடுத்துள்ள பொங்கலூா் பகுதியில் உப்பாறு அணை உள்ளது. இதன் நீா்வரத்து பகுதியான உப்பாறு ஓடையில் அதிக அளவில் மான்கள் காணப்படுகின்றன. தற்போது மான்களின் இனப்பெருக்கக் காலமாக உள்ளது.

    இந்நிலையில், உப்பாறு ஓடையில் காணப்படும் மான்களை அதன் இறைச்சிக்காக ஒரு சிலா் வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.மேலும் இப்பகுதியில் காணப்படும் மான்களை பாதுகாக்க மான் வேட்டையில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    • சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.
    • நாயக்கன் பட்டி என்ற இடத்தில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். நாயக்கன் பட்டி என்ற இடத்தில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது. போலீசார், இவற்றை பறிமுதல் செய்து, விசாரித்து வந்தனர்.

    விசாரணையில் வேடு காத்தாம்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 23), திரு மலைகிரி பச்சா கவுண்டர் தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (19) ஆகியோர் இந்த துப்பாக்கி மற்றும் மோட் டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடியதும், இவர்கள் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீ சார், இவர்களது கூட்டா ளியை தேடி வருகின்றனர்.

    • மான், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மானை வேட்டையாடி சமைத்து உண்ண முயன்றது தெரியவந்தது.

    அவிநாசி,ஜூலை.6-

    திருப்பூா் மாவட்டம் அவிநாசி வட்டம், சேவூா் அருகே பொங்கலூா் பகுதியில் மான், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது பொங்கலூா் ரஞ்சித்குமாா் என்பவரது வீட்டில் மான் கறி சமைத்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த பொங்கலூரைச் சோ்ந்த ரவி (40), ரஞ்சித்குமாா் (28), நாராயணன் (45), வெள்ளியங்கிரி (40) ஆகியோரை விசாரித்ததில், அவா்கள் மானை வேட்டையாடி சமைத்து உண்ண முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து வனத் துறையினா் 4 பேரைக் கைது செய்து, அவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இணக்கக் கட்டணம் விதித்தனா். 

    • சில சமூக விரோதிகள் காட்டுக்குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
    • சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான் உள்ளிட்ட அரிய வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சில சமூக விரோதிகள் காட்டுக் குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதன் காரணமாக வனத்துறையினரும் ராஜபாளையம் வனப்பகுதியில் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தி யுள்ளனர்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று வனச்சரக அலுவலர்கள் சக்தி பிரசாத், கதிர்காமன், வனவர் இள வரசன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஆவாரம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

    உடனே வனத்துறையினர் அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். அப்போது அங்கிருந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. உடனே வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் 6 பேர் தப்பிவிட, காளிராஜ் (வயது21) என்பவர் மட்டும் சிக்கினார். தொடர்ந்து வீட்டில் இருந்த 10 கிலோ மான் இறைச்சி, அரிவாள், கத்தி, எடை எந்திரம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக காளிராஜை கைது செய்து விசாரித்தபோது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான வாழைக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் கும்பலாக சென்று மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • பறவைகள் வேட்டையாடுவதாக திண்டிவனம் வனசார அலுவலகத்திற்கு தகவல் வந்தது.
    • பறவைகளை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வானூர் வட்டம் உப்பு வேலூர் கிராமம் சிவன் கோயில் அருகே அதிகாலை நேரத்தில் பறவைகள் வேட்டையாடுவதாக திண்டிவனம் வனசார அலுவலகத்திற்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தபோது 3 வாலிபர்களால் 20 அரியவகை பறவை கள் மற்றும் 10 உள்நாட்டு பறவைகள் வேட்டையாடப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து பறவைகளை வேட்டையாடிய 3 வாலிகர்களை பிடித்து வனசரக அலுவலகத்திற்கு வந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் புதுவை மாநிலத்தை சேர்ந்த கௌதம், சூர்யா, சரவணன், ஆகியோர் என்பதும் இவர்கள் அறிய வகை பறவைகளை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரி யவந்தது. உடனே போலீசார் இவர்களை வானூர் நீதிமன்ற ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் வைத்திருந்த அரியவகை பறவைகள், மோட்டார் சைக்கிள் மற்றும் 2 நாட்டுத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
    • நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா விற்கு உட்பட்ட இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை,வெள்ளாளபாளையம்,ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள், கன்றுகள், நாய்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்டவைகளை கடந்த 15 நாட்களுக்கு மேலாக வேட்டையாடி வந்த சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக இப்பகுதியில் எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை.

    கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.

    செஞ்சுடையாம்பா ளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை புலி வந்து சென்றதற்கான கால்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து இரவில் 30 கிலோமீட்டர் தூரம் வெளியே சென்று வேட்டையாடிவிட்டு மீண்டும் அதன் இருப்பி டத்திற்கு திரும்பி வருவதும் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட வனசரக அலுவலர் பிரவீன் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் சிறுத்தை புலி வந்து செல்லும் இடம் கண்டறியப்பட்ட பகுதியில் மொத்தம் 18 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி யும், இரண்டு கூண்டுகள் வைத்து சிறுத்தை புலியின்

    நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலமும் சிறுத்தை புலியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை புலி எந்த கால்நடைகளையும் பிடிக்க வில்லை என்பதால் இடம் மாறி வேறு பகுதிக்கு சென்று விட்டதா? என வனத்துறையினர் தீவிர மாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்பு தூர் பகுதியில் உள்ள தோட்டப் பகுதியில் சிறுத்தை புலியின் கால் தடங்கள் பதிந்து இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த மணி கண்டன் மற்றும் ராமாயி ஆகியோரது தோட்டப் பகுதிக்கு சென்று சிறுத்தை புலியின் கால் தடங்களை ஆய்வு செய்ததில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு

    சிறுத்தை புலி வந்து சென்ற

    தற்கான பழைய கால்த டங்கள் என்பதை உறுதி செய்தனர். மேலும் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறை யினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பரமத்தி

    அருகே காளிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது

    38).விவசாயி.அதே பகுதி யில் இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஆடு களை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு

    காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதி யில் பதிவான கால் தடங்கள்

    சிறுத்தை புலி கால் தடமா?

    என ஆய்வு செய்து வருகின்ற

    னர்.இந்நிலையில் பரமத்தி வேலூர் பகுதியில் கால்ந டைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலியின் நட

    மாட்டம் பற்றிய எந்த தடை

    யும் இல்லை. இதனால் சிறுத்தை இடம் மாறி

    இருக்கலாம் என்று

    வனத்துறை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.

    அதை உறுதி செய்யும் வகையில் நேற்று கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதியில் சிறுத்த புலி ஆட்டை வேட்டையாடி உள்ளது. பரமத்தி வேலூரில் முகாமில் இருந்த வனத்துறையை சேர்ந்த மலைவாழ் மக்கள் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலி பற்றிய எந்த தடையும் இல்லை. இருக்கூர் சுற்றுவட்டார பகுதியில் வனத்துறையினரின் தேடுதல் வேட்டை அதி கரித்திருப்பதால் பயந்து போன சிறுத்தை புலி இருக்கூர்பகுதியில் இருந்து காவிரி ஆற்றை கடந்து அக்கரையான கரூர் மாவட்டம் நொய்யல் வருகை அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளது. ஆனால் நீண்ட காலமாக தான் வசித்த கல்குவாரியை விட்டு போகாது. மீண்டும் இதே பகுதிக்கு திரும்ப வரலாம். அதனால் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் எச்சரிக்கையுடன் தங்களது கால்நடைகளையும், குழந்தை

    களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இருக்கூர் பகுதி மற்றும் கல்குவாரிகளில் புலிகளின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • ஜனவரி 27 -ந்தேதியன்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 2 நபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
    • சிவகிரி அருகே மான்களை வேட்டையாடியது சம்பந்தமாக இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகிரி:

    சிவகிரி வனத்துறை ரேஞ்சர் மவுனிகா தலைமையில், கடந்த மாதம் 17-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முருகன் என்பவரின் தோட்டத்தில் மான்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாக 5 நபர்களையும், இதனை தொடர்ந்து ஜனவரி 27 -ந்தேதியன்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 2 நபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜதுரை மகன் சதீஸ்குமார் (வயது 28) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி அருகே மான்களை வேட்டையாடியது சம்பந்தமாக இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    மேலும் இதுசம்பந்தமாக சில நபர்களை வனத்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.


    • தேவகோட்டை அருகே தாய்-மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படை தேடுதல் வேட்டை நடந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கனகம், அவரது மகள் வேலுமதி ஆகியோர் கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து இறந்தனர். இந்த சம்பவத்தில் வேலுமதியின் மகன் மூவரசு (வயது 12) என்ற சிறுவன் படுகாயம் அடைந்தான். அவனுக்கு மதுரை தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள்.

    இந்த நிலையில் கண்ணங்கோட்டை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்ணின் திருமணத்திற்கு நகைகள் மற்றும் பணம் வழங்க முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    கூட்டத்தில் அனைத்து நாட்டார்களும் மற்றும் கிராமத்தார்களும் பங்கேற்ற னர். அவர்கள் 2 பெண்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற உண்மை குற்றவாளி கண்டுபிடிக்க வேண்டும்.பா திக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும். மேலும் இழப்பீட்டு தொகையாக அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். தேவகோட்டை பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குற்றவாளிகளை விரை வில் கண்டுபிடிக்கவில்லை என்றால் தேவகோட்டையில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கொலையுண்ட 2 பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் வாங்க மறுத்து வந்தனர். இதுபற்றி அறிந்த அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன ரெட்டி, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆவின் சேர்மன் அசோகன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத்தலைவர் ரமேஷ், தேவகோட்டை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சித்தனூர் சரவணன், மெய்யப்பன், கார்த்திக் மற்றும் கிராம மக்கள்அஞ்சலி செலுத்தி னர்.இதன் பிறகு கொலை யுண்ட கனகம், வேலுமதி உடல்களை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்தனர்.

    இந்த கொலையில் துப்பு துலக்க போலீஸ் டி.ஐ.ஜி. துரை ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ ராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த கண்ணங்கோட்டை கிராமத்தில் முகாமிட்டு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவகோட்டையில் கடந்த சில மாதங்களாக பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதும், பொருட்கள் கிடைக்க வில்லை என்றால் வீடுகளை தீயிட்டு கொளுத்துவதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் இதுவரை பிடிக்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    • வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு நேரத்தில் டி.என். புதுக்குடி வனப்பகுதிகளில் ரோந்து வந்தனர்.
    • 2 பேரும் காட்டுப்பன்றியை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி டி.என். புதுக்குடி பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    காட்டுப்பன்றி வேட்டை

    அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் வனசரக அலுவலர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் வனவர்கள் மகேந்திரன், குமார், வனக்காப்பாளர்கள் முத்துப்பாண்டி, முருகேசன், அனிதா, வேட்டை தடுப்பு காவலர்கள் மாரியப்பன், தாசன் ஆசிர்வாதம் ஆகி யோர் இரவு நேரத்தில் டி.என். புதுக்குடி வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிந்தா மணியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சண்முகராஜ் (வயது 27), புளியங்குடியை சேர்ந்த கணேசன் மகன் மகேஷ்குமார் (26) ஆகியோர் காட்டுப் பன்றியை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். அவர்களை மடக்கி பிடித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ரூ. 50 ஆயிரம் அபராதம்

    இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் 2 பேருக்கும் ரூ 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    களக்காடு வனப்பகுதியில் செந்நாய்கள் கூட்டம் காட்டெருமைகளை வேட்டையாட விரட்டி செல்லும் காட்சி தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்ற பெருமையை பெற்ற இந்த காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால்குரங்கு, செந்நாய்கள், நீலகிரி வரையாடு, கடமான் உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள் வசிக்கின்றன.

    இந்நிலையில் வனப்பகுதியின் பாதுகாப்பை கருதியும், வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து அறியவும், சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளார்களா என்பதை கண்காணிக்கவும் களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் 115 இடங்களில் அதி நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

    இதில் பதிவான படங்களை வனத்துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி தற்போதும் தானியங்கி கேமராவில் பதிவான படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது செந்நாய்கள் கூட்டம் காட்டெருமைகளை வேட்டையாட விரட்டி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த செந்நாய்கள் நாய் குடும்பத்தை சேர்ந்த மாமிச உண்ணி ஆகும். அனைத்து பகுதி காடுகளிலும் வாழும் தன்மை கொண்டவை. கூட்டம், கூட்டமாக வாழும் செந்நாய்கள் வேட்டையாடுவதில் வல்லமை கொண்டவைகளாக திகழ்கின்றன. தன்னை விட பத்து மடங்கு எடை கொண்ட விலங்குகளையும் தனது புத்தி கூர்மையால் எளிதில் வேட்டையாடும் செந்நாய்கள் புள்ளிமான், காட்டெருமை, கடமான், காட்டுபன்றி, கோழையாடு, சருகுமான் போன்ற விலங்குகளை விரும்பி உண்ணும்.

    இவைகள் 4 முதல் 10 குட்டிகளை ஈனும். இவைகளின் வாழ்நாள் காலம் 10 ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில் 4,500 முதல் 10 ஆயிரம் வரையிலான செந்நாய்கள் வாழ்வது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் அறிக்கை படி செந்நாய்கள் கூட்டம் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவில் செந்நாய்கள் இருப்பதும், அவைகள் ஆரோக்கியமாக சுற்றி திரிவதும் தானியங்கி கேமரா மூலம் தெரியவருகிறது.

    இத்தகவல்களை களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளனர். #tamilnews
    அரூர் அருகே வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கியால் காட்டெருமையை கொன்று கறியை பங்கு போட்டு எடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை வனச்சரசம் மாம்பாடி பகுதியில் தீர்த்தமலை வனச்சரகர் தண்டபாணி தலைமையில் வனவர் வேலு, வனக்காப்பாளர்கள் முகமது வக்கீல், மணி, ஜான்அந்தோணி ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது மல்லூத்து பகுதியில் சத்தம் கேட்டு சென்று கொண்டிருந்த போது கும்பலாக வந்த சிலர் வனத்துறையினரை பார்த்தவுடன் ஓடி விட்டனர். அதில் 2 பேரை மட்டும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில்  மாம்பாடி நரிமேட்டை பகுதியை சேர்ந்த 12 பேர் அடங்கிய கும்பல் கள்ளத்துப்பாக்கியால் காட்டெருமையை கொன்று கறியை பங்கு போட்டு எடுத்து வந்தது தெரியவந்தது.  

    பிடிப்பட்ட ரத்தினம் (வயது 47), கோவிந்தன் (60) 2 பேரையும் தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி, அரூர் நீதிமன்ற நடுவர் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தப்பியோடிய 10 பேரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
    ×