search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானை வேட்டையாடிய 4 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    மானை வேட்டையாடிய 4 பேர் கைது

    • மான், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மானை வேட்டையாடி சமைத்து உண்ண முயன்றது தெரியவந்தது.

    அவிநாசி,ஜூலை.6-

    திருப்பூா் மாவட்டம் அவிநாசி வட்டம், சேவூா் அருகே பொங்கலூா் பகுதியில் மான், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது பொங்கலூா் ரஞ்சித்குமாா் என்பவரது வீட்டில் மான் கறி சமைத்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த பொங்கலூரைச் சோ்ந்த ரவி (40), ரஞ்சித்குமாா் (28), நாராயணன் (45), வெள்ளியங்கிரி (40) ஆகியோரை விசாரித்ததில், அவா்கள் மானை வேட்டையாடி சமைத்து உண்ண முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து வனத் துறையினா் 4 பேரைக் கைது செய்து, அவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இணக்கக் கட்டணம் விதித்தனா்.

    Next Story
    ×