search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேட்டை கும்பலை சேர்ந்த 2 பேர் கைது
    X

    வேட்டை கும்பலை சேர்ந்த 2 பேர் கைது

    • சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.
    • நாயக்கன் பட்டி என்ற இடத்தில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். நாயக்கன் பட்டி என்ற இடத்தில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது. போலீசார், இவற்றை பறிமுதல் செய்து, விசாரித்து வந்தனர்.

    விசாரணையில் வேடு காத்தாம்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 23), திரு மலைகிரி பச்சா கவுண்டர் தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (19) ஆகியோர் இந்த துப்பாக்கி மற்றும் மோட் டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடியதும், இவர்கள் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீ சார், இவர்களது கூட்டா ளியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×