search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dog"

    • நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
    • நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

    வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலையை நாய் குரைத்து விரட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிறது.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாடாலியா ரோஜாஸ் என்பவரின் பண்ணைவீடு ஒரு குளத்தை ஒட்டி உள்ளது. அதில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று அவரது வீட்டின் முற்றத்திற்கு வந்தது. கண்ணாடி கதவுக்கு வெளியே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த முதலையை வீட்டில் வளர்த்த நாய் கவனித்தது. உடனே அது பயங்கரமாக குரைக்கத் தொடங்கியதால் முதலை மிரண்டுபோய் குளத்தை நோக்கி ஓடி மறைந்தது. நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

    வீட்டில் இருந்த கேமராவில் பதிவான இந்த காட்சிகளை அவர் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டார். வீடியோ வைரலானது. பல லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    "நாய் குரைத்ததால் முதலை ஓடியிருக்கலாம், ஆனால் நாய்க்காகத்தான் முதலை உங்கள் வீட்டிற்கு வந்தது" என்று ஒருவர் கருத்து பதிவிட்டு இருந்தார். மேலும் பலர் நாயின் தைரியத்தை பாராட்டி பதிவிட்டு இருந்தனர்.

    • நிகிதா தன் அக்கா குழந்தையுடன் தனியாக ஒரு அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென சமையலறைக்குள் ஒரு குரங்கு நுழைந்துள்ளது
    • அலெக்சா சாதனத்திடம் குரங்கை அச்சுறுத்தும் விதமாக சத்தம் எழுப்புமாறு நிகிதா கூறியுள்ளார்

    உத்தரபிரதேச மாநிலம் அவாஸ் விகாஸ் என்ற பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்குச் சென்ற நிகிதா என்ற 13 வயது சிறுமி, அங்கு குடும்பத்தினருடன் வீட்டில் இருந்திருக்கிறார்.

    அப்போது தன் அக்கா குழந்தையுடன் தனியாக ஒரு அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென சமையலறைக்குள் ஒரு குரங்கு நுழைந்துள்ளது. அச்சமயத்தில் குடும்பத்தினர் வேறு அறையில் இருந்ததால் குரங்கு வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

    சமையலறையில் நுழைந்த குரங்கு வீட்டு பாத்திரங்கள் அனைத்தையும் தூக்கி வீசி இருக்கிறது. பின்னர் குழந்தையை நோக்கி குரங்கு வந்ததால், என்ன செய்வது என்று புரியாமல் நிகிதா அமைதியாக இருந்திருக்கிறார். குழந்தை குரங்கைப் பார்த்து அழுதிருக்கிறது.

    அச்சமயத்தில் வீட்டின் பிரிட்ஜின் மேல் அலெக்சா சாதனம் இருப்பதைப் பார்த்த நிகிதா, அலெக்சா சாதனத்திடம் குரங்கை அச்சுறுத்தும் விதமாக சத்தம் எழுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி அலெக்சா சாதனம் நாய் குரைப்பது போன்ற ஒலியை எழுப்பியதால், குரங்கு அலறித்துடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

    இந்த நிகழ்வில் நிகிதா தனது சமயோசித புத்தியால் குரங்கை விரட்டியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்தநிலையில், உத்திர பிரதேசத்தில் குழந்தையை தூக்க வந்த குரங்கிடமிருந்து தப்பித்து கொள்ள கூகுள் அலெக்சாவை நாயை போல குரைக்க வைத்து சமயோசிதமாக தப்பித்த சிறுமிக்கு எதிர்காலத்தில் தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தருவதாக மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா எக்ஸ் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • நேற்றைய போட்டியின் நடுவே நாய் ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது.
    • உடனே சுற்றியிருந்த ரசிகர்கள் ஹர்திக்.. ஹர்திக் என முழக்கமிட்டனர்.

    ஐபிஎல் கிரிக்கெட்டின் தொடரில் 5-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 169 ரன்கள் சேர்த்தது.

    இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தொடக்கம் முதல் முடிவு வரை சில சம்பவங்கள் அரங்கேறியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே கோபத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. அந்த கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்து தள்ளினர்.

    அந்த வகையில் இந்த போட்டிக்கான டாஸ் போடும் போது மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யா என அழைக்கும் போது, சுற்றியிருந்த ரசிகர்கள் ரோகித்.. ரோகித் என முழக்கமிட்டனர். இதனால் ஹர்திக் பாண்ட்யா முகம் சற்று மாறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    அதை தொடர்ந்து பாண்ட்யா பீல்டிங் சரி செய்யும் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை பல இடங்களில் மாற்றி மாற்றி பீல்டிங் நிற்க சொன்னார். இந்த சம்பவத்தை பார்த்த ரசிகர்கள் பாண்ட்யாவை திட்டி வருகின்றனர். இந்த வீடியோவும் வைரலானது.

    இதனையடுத்து போட்டியின் போது நாய் ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. ரோகித்.. ரோகித் என முழக்கமிட்ட ரசிகர்கள் நாயை பார்த்ததும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டனர்.

    மேலும் அவர் பெவிலியனுக்கு செல்லும் போது அவரை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். ரோகித் தான் எப்போதுமே மும்பை கேப்டன் என பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் பேனர் வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரோகித் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட ஐபிஎல் ரசிகர்கள் என அனைவரும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    • சிறுமி தினமும் நாய்க்கு நூடுல்ஸ் வைப்பது போல் ஓட்டலில் இருந்து நூடுல்ஸ் வாங்கி வந்து வைத்தும் ரோசி சாப்பிடவில்லை.
    • கடந்த 2-ந்தேதி முதல் எதை வைத்தாலும் சாப்பிடாமல் நாய் மிகவும் மெலிந்து விட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    சிறுமி ஆசைப்பட்டதால் அவரின் தந்தை சிப்பிப்பாறை நாய் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    அதற்கு 'ரோசி' என பெயரிட்டு வளர்த்து வந்த சிறுமி தினமும் நாய்க்கு உணவு வைத்து விட்டு தான் சாப்பிடுவாள்.

    மேலும் சிறுமிக்கு விருப்பமான நூடூல்சை நாய்க்கும் கொடுத்து பழகியுள்ளார். தினமும் இரவு நாய்க்கு சிறுமி நூடூல்ஸ் வைப்பார்.

    சிறுமி இறந்த 2-ந்தேதி முதல் வாய் இல்லாத ஜீவனான அந்த நாய் உணவு உட்கொள்ளாமல் சிறுமியின் வீட்டையே சுற்றி வருவதும் இரவில் அழுவதுமாக உள்ளது. சிறுமி தினமும் நாய்க்கு நூடுல்ஸ் வைப்பது போல் ஓட்டலில் இருந்து நூடுல்ஸ் வாங்கி வந்து வைத்தும் ரோசி சாப்பிடவில்லை.

    கடந்த 2-ந்தேதி முதல் எதை வைத்தாலும் சாப்பிடாமல் நாய் மிகவும் மெலிந்து விட்டது.

    சிறுமியை பிரிந்துள்ள நாய்க்கு ஆதரவாக இருக்கும் அந்த பகுதி இளைஞர்கள் யாரை பார்த்தாலும் குரைக்கும். இந்த நாய் கடந்த ஒரு வாரமாக சத்தமின்றி அமைதியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

    இரவு நேரங்களில் நாய் அழுவது அப்பகுதி மக்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சீனாவில் லின் என்ற பெண்மணி தனது நாயுடன் வாக்கிங் சென்றார்.
    • அப்போது அந்த நாய் கவ்விப் பிடித்த லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்தது.

    பீஜிங்:

    தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார் லின் என்ற பெண்மணி. அவர் கையில் பிடித்திருந்த நாய், ஒரு கடைக்கு அருகே வந்தபோது திடீரென எஜமானரின் பிடியில் இருந்து நழுவி கடைக்குள் ஓடியது. அங்கு வைக்கப்பட்டிருந்த லாட்டரி டிக்கெட்டை கவ்விப் பிடித்தது. இதனால் அவர் அந்த டிக்கெட்டை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 139 டாலர் பரிசு விழுந்தது. இதனால் லின் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

    மறுநாள் அவர் தனது நாயை அந்தக் கடைக்கு அழைத்துச்சென்று மீண்டும் ஒரு லாட்டரி டிக்கெட்டை கவ்வச் செய்தார். இந்த முறை அவருக்கு 4 டாலர் பரிசு விழுந்தது. அதிர்ஷ்டத்தை தேடித்தந்த நாய்க்கு பரிசுத்தொகையில் ஒரு பகுதியை செலவு செய்தேன் என்றார் லின்.

    • லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.
    • விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழுதி வைத்தார்.

    ஆனாலும் அந்த பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது அவரது குழந்தைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.

    இதையறிந்த அவரது குழந்தைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையான ஒருவரை தேர்ந்தெடுத்து கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் நன்கு பராமரிக்க ஒரு விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-போளூர் நெடுஞ்சாலையில் தனியார் ரைஸ் மில் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாராவது உள்ளே நுழையாமல் இருப்பதற்காக பூனை மற்றும் நாயை வளர்த்து வருகின்றனர்.

    இங்குள்ள பூனை, நாயுடன் ஒன்றாக சேர்ந்து கொஞ்சி விளையாடி வருகிறது.

    அந்த நாயும் பாசத்துடன் பூனைக்கு பால் கொடுக்கிறது.

    இதனால் பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது. சில நாய்கள் தன்னுடைய குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுக்கிறது. ஆனால் இங்குள்ள நாய் பூனைக்கு பால் கொடுப்பதை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • சமூக வலைதளத்தில் வீடியோ பரவல்
    • பல்கலைக் கழகத்தின் உள்ளே உள்ள சாலையில் வந்து கொண்டி ருந்த அவரை வழிமறித்த நாய் அவரை சுற்றி சுற்றி வந்து விடாமல் குரைத்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக வெறி நாய் மற்றும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதலியார்பேட்டை, மூலக்குளம், அண்ணா சாலை பகுதிகளில் 30-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் விரட்டி சென்று கடித்தன. இதைய டுத்து புதுவை நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சி சார்பில் தெருவில் சுற்றி திரிந்த 38 நாய்களை பிடித்தனர்.

    இந்தநிலையில் சின்ன காலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகசாமி (வயது 50). இவர் புதுவை காலாப்பட்டு மத்திய பல்கலை க்கழகத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு வந்தார். பல்கலைக் கழகத்தின் உள்ளே உள்ள சாலையில் வந்து கொண்டி ருந்த அவரை வழிமறித்த நாய் அவரை சுற்றி சுற்றி வந்து விடாமல் குரைத்தது.

    ஒரு கட்டத்தில் நாயை சமாளிக்க முடியாத முருகசாமி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கிய போது அந்த நாய் அவரை விடாமல் விரட்டியது. ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு ஓடிய அவரை துரத்திச் சென்று நாய் கடித்து குதறியது. கீழே விழுந்த முருகசாமியை நாய் விடாமல் கடித்ததில் இடது கால், இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அங்கு பணியில் இருந்த சக காவலாளிகள் அவரை மீட்டு காலாப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் கடித்ததில் கையில் ரத்தம் சொட்ட சொட்ட வரும் முருகசாமியின் வீடியோ சமூக வலை தளத்தில் பரவி வருவ தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு கல்லூரி பேராசிரியர் தங்கதுரை(50)யை நாய் கடித்தது குறிப்பிடத் ததக்கது.

    • இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.
    • 15 பேரை வெறிநாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பற்றி பொதுமக்கள் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெட்டியார்பாளையம் பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்தது. அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.

    ரெட்டியார்பாளையம் பகுதியில் இருந்து கம்பன் நகர், மூலக்குளம் பகுதிக்கு சென்ற அந்த நாய், பொதுமக்களை கடித்து குதறியது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 15 பேரை அந்த நாய் கடித்துள்ளது.

    காயமடைந்த அனைவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். 15 பேரைவெறிநாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    • வெறிநாய் தடுப்பூசிகளை நாய்களுக்கு போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்கள் நாய் கடியில் இருந்து தப்புவதற்கு நாய்களை பார்த்தால் உஷாராக ஒதுங்கி செல்வதே நல்லது.

    சென்னை:

    சென்னையில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் நடந்து செல்பவர்களை குறிைவத்து பல இடங்களில் தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    இந்த நிலையில் சென்னை ராயபுரம் ஜி.ஏ. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி குழந்தைகள் உள்பட 29 பேரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த அனைவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து 29 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரோட்டில் சென்றவர்களை கடித்து குதறிய வெறிநாயை பொதுமக்களே அடித்து கொன்றனர்.


    இதையடுத்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெறிநாய்கள் மற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் எம்.கே.பி.நகர் பகுதிகளிலும் பொதுமக்களை தெருநாய்கள் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்துக்குட்பட்ட கொடுங்கையூர் எம்.கே.பி.நகர் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், நடந்து சென்ற பெண்கள் என 8 பேரை தெருநாய்கள் கடித்துள்ளன. ஒரே வாரத்தில் அடுத்தடுத்த தெருநாய்கள் பொது மக்களை கடித்துள்ளதால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதேபோன்று சென்னையில் பல இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாகவே பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தெரு நாய்கள் தொல்லை மற்றும் நாய் கடியை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் விலங்குகள் நலவாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து வருகிறோம். அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. பாலூட்டும் நாய்களுக்கும், கர்ப்பமாக இருக்கும் நாய்களுக்கும், நோய்வாய்ப்பட்டிருக்கும் நாய்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்ய முடியாது. அதேநேரத்தில் கருத்தடை மற்றும் வெறிநாய் தடுப்பூசிகளை நாய்களுக்கு போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள சுமார் 1 லட்சம் நாய்களை பிடித்து தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் சுமார் 900 நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நாய் கடித்ததும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். வெறிநாய்கள் இல்லாத மாநகராக சென்னை மாநகராட்சியை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ள நாய்களின் உடல்களில் உள்ள நோய் கிருமிகளை ஒழிப்பதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில் தான் நாய்களை பிடித்து தடுப்பூசிகளை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு இடத்தில் பிடிக்கும் தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில்தான் கொண்டு விடுகிறோம்.

    எனவே பொதுமக்கள் நாய் கடியில் இருந்து தப்புவதற்கு நாய்களை பார்த்தால் உஷாராக ஒதுங்கி செல்வதே நல்லது. சில நேரங்களில் ரோட்டில் நடந்து செல்பவர்கள் நாய்களை சீண்டுவது உண்டு. அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    தவுட்டுப்பாளையம் பகுதியில் நாய் தொல்லை

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    அதிக அளவில் நாய்கள் தெருக்களில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏராளமான நாய்கள் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கருக்கள் காவிரி பகுதி பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கும்பலாக சுற்றி திரிவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும், ஆற்றுக்கு குளிக்க வருபவர்களையும் நாய்கள் ஒன்று சேர்ந்து துரத்துவதும், கடிப்பதுமாக உள்ளதால் தெருநாய்களை பிடித்து நாய்கள் காப்பகத்தில் ஒப்படைக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அரியலூரில் சுற்றி திரியும் வெறிநாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் சிக்கி தவிக்கின்றனர்
    • நாய்களை பிடித்து செல்ல கோரிக்கை எழுந்துள்ளது

    அரியலூர், 

    அரியலூர் நகரில் அதிகளவில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டு வருகிறது.  இந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதுடன், உணவு பொருட்களை கையில் எடுத்து செல்லும் பொதுமக்களை விரட்டவும் செய்கின்றனர். குழந்தைகளுடன் செல்பவர்கள், பெரும் அச்சத்துடன் நாய்களை கடந்து செல்கின்றனர். எனவே நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×