என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்"

    • சிறப்பு சலுகைகள் விதிகளை மீறவோ, செல்லப்பிராணிகளை சபைக்குள் கொண்டு வரவோ அனுமதிக்கவில்லை
    • கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்"

    நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி தனது நாய்க்குட்டியுடன் வந்த சம்பவம் விவாதத்தை தூண்டியது.

    குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ரேணுகா சவுத்ரி, காரில் தனது நாய்க்குட்டியுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகை புரிந்தார். இதுபெரும் விவாதமாக உருவெடுத்த நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சவுத்ரி, "இது ஒரு பிரச்சனையா? அது ஒரு சின்ன உயிரினம். யாரையும் கடிக்காது. கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்" என தெரிவித்தார். 

    இதுகுறித்து பூஜ்ஜிய நேரத்தில் பேசிய பாஜக எம்பி ஜகதாம்பிகா பால், "சிறப்பு சலுகைகள் விதிகளை மீறவோ, செல்லப்பிராணிகளை சபைக்குள் கொண்டு வரவோ அனுமதிக்கவில்லை. பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்," என தெரிவித்தார்.

    பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா பேசுகையில், "ரேணுகா சௌத்ரி நாடாளுமன்றத்தையும், எம்.பி.க்களையும் அவமதித்துள்ளார். அவர் ஒரு நாயுடன் நாடாளுமன்றத்திற்கு வருகிறார், இது பற்றி கேட்டால், 'கடிப்பவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' என்று கூறுகிறார். அதாவது, நாடாளுமன்றம், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் எம்.பி.க்கள் அனைவரும் நாய்கள் என்பது அவரது கருத்து" என்று கடுமையாகச் சாடினார். இந்த சம்பவம் தொடர்பாக ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மற்றும் டெல்லி காற்று மாசுபாடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே மீண்டும் பலத்த மோதல் ஏற்பட்டது. 

    டிசம்பர் 19 வரை நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் அணுசக்தி மசோதா 2025, இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா, 2025 போன்ற முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகள், UGC, கார்ப்பரேட் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, காப்பீட்டு சட்டங்கள் (திருத்தம்) மசோதா மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் (திருத்தம்) மசோதா உட்பட 13 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

    மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய கலால் (திருத்த) மசோதா மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா, 2025 ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளார். இந்த அமர்வின் போது, தற்போதைய SIR, டெல்லி குண்டுவெடிப்பு, மாசுபாடு மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான விஷயங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. 

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, ராமர் கோவில் கட்ட மசோதா நிறைவேற்றப்படும் என விசுவ இந்து பரிஷத் நம்பிக்கை தெரிவித்துள்ளது. #RamTemple #VHP #AlokKumar
    புதுடெல்லி:

    விசுவ இந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்யக்கோரி, அனைத்து கவர்னர்களிடமும் மத, சமூக அமைப்புகள் மனு கொடுத்துள்ளன. அனைத்து எம்.பி.க்களிடமும் ஆதரவு கேட்போம். எனவே, மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். கட்சி வேறுபாடுகளை கடந்து, எதிரணி தலைவர்களும் அதை ஆதரிப்பார்கள்.

    ராமர் கோவில் கட்ட வற்புறுத்தி, வருகிற 25-ந் தேதி, அயோத்தி, நாக்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் துறவிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். டெல்லியில், டிசம்பர் 9-ந் தேதி பிரமாண்ட கூட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×