என் மலர்
நீங்கள் தேடியது "congress MP"
- இந்தத் திட்டத்தை படிப்படியாக அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்
- 2029-ல் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்குவோம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து பாத யாத்திரை திருவட்டார் பேருந்து நிலையம் முன்பு தொடங்கியது.
திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மகாத்மா காந்தி திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பாதயாத்திரையை துவக்கி வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது,
இங்கு வந்திருக்கும் காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் அன்பான வணக்கம், இந்த கொட்டும் மழையிலும் நமது பேரியக்கத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஒன்று கூடி இந்த பாத யாத்திரையில் கலந்து கொளும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை முடக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. முதலில் வேலை நாட்களை குறைவாக கொடுத்தனர்.பின்னர் ஊதியத்தை நிறுத்தினார்.
தற்போது பெயரை மாற்றி திட்டத்திற்கு வேறு பெயரை வைத்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு நூறு சதவீதம் நிதியை வழங்கி வந்தது. தற்போது பாஜக அரசு 60% நிதியையும் மாநில அரசு 40% நிதியையும் வழங்க வேண்டுமென கூறுகிறது.
இந்தத் திட்டத்தை படிப்படியாக அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம், இது மட்டுமல்ல பல திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது போலவும், அந்தத் திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தது போன்றும், அல்லது அவர்கள் புதுப்பித்தது போன்றும் செய்கின்றனர்.
இதனை நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்கிறார். நாம் எல்லோரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். மத்தியில் இருக்கும் பாஜக அரசை தூக்கி எறிவோம், 2029-ல் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் குமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் , முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செலின் மேரி, முன்னாள் வட்டார தலைவர் தங்க நாடார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் . நடைபயணம் திருவட்டார், ஆற்றூர், வீயன்னூர் வழி வேர்கிளம்பி-யை சென்றடைந்தது.
- மகாராஷ்டிராவை சேர்ந்த உருது கவிஞர் இம்ரான் பிரதாப்கர்ஹி காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம். பி ஆக உள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த உருது கவிஞர் இம்ரான் பிரதாப்கர்ஹி. இவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம். பி ஆக உள்ளார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் மாநிலங்களவையில் இம்ரான் உணர்ச்சிபொங்க உரையாற்றி உள்ளார்.
அவையில் அவர் பேசியதாவது, நாட்டில் சட்டம் என்பது சிலரைத் தேர்ந்தெடுத்து மட்டுமே பாய்கிறது. பரேலியில் தொழுகை நடத்தியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தயாரான கிறிஸ்தவர்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தின் பெதுல் பகுதியில், மக்களின் எதிர்ப்பையும் மீறி ஒரு பள்ளிவாசல் இடிக்கப்படுகிறது.
வாரணாசியில் நீதிமன்றத் தடை உத்தரவு இருந்தும் இஸ்லாமியர்களின் கடைகள் இடிக்கப்படுகின்றன. 42 முஸ்லிம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற பிறகு, அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தனர்.
சில மாநிலத் தலைவர்கள் ஜனநாயக நெறிமுறைகளை வெளிப்படையாக மீறி வருகிறார்கள். கலவரத்தை தூண்டுபவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு அமைதிக்கு குரல் கொடுப்பவர்களை குறிவைக்கிறது.
சிறுபான்மையினரை இலக்கு வைப்பதும், நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை ஒடுக்குவதும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.
வரலாறு இந்த அரசாங்கத்தை அதன் கோஷங்களை வைத்து மதிப்பிடாது. எளிய மக்களை அது எவ்வாறு பாதுகாத்தது மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை எவ்வாறு நிலைநாட்டியது என்பதை வைத்தே மதிப்பிடும் என்று பேசிய அவர், இறுதியாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரைக் குறிப்பிட்டு தனது உரையை முடித்தார்.
அதாவது, பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் பெயரை நாடு நினைவில் வைத்திருக்கும் அதே வேளையில், நேரு நினைவுகூரப்படுவார், அதே நேரத்தில் நரேந்திர மோடி எப்ஸ்டீன் கோப்புடன் நினைவுகூரப்படுவார் என்று அவர் கூறினார்.
எப்ஸ்டீன் கோப்புகள்:
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.
கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
மேலும் உலக பணக்காரர் பில் கேட்ஸ், ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி அதற்கான மருந்துகளை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது. ஆனால் இவற்றில் உண்மை இல்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
- தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
- நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிந்துஜா தலைமை தாங்கினார்.
தமிழக அரசு சார்பில் "உலகம் உங்கள் கையில்" என்ற திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல இன்று இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிந்துஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் உறுப்பினர் ரத்னகுமார், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா, மேல்புறம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ரவிசங்கர், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் மாணவர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டார்.
- கூட்டணி குறித்து இறுதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு.
டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் திமுக எம்பி கனிமொழி சந்தித்துள்ளார்.
கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் இறுதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக- காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி எம்பி கனிமொழி, ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.
- ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை, ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது என ஐபிடிஎஸ் தகவலை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
யாருக்கு வாக்கு?" – IPDS தரவு சொல்லும் தகவல்.
தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.
ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.
இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.
ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.
அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே !
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விஜய்வசந்த் எம்.பி, நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
- குணசேகர் முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி, நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் நகர காங்கிரஸ் தலைவர் விஜயன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் சாமுவேல், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் கிங்ஸ்லின், குணசேகர் முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

- சிறப்பு சலுகைகள் விதிகளை மீறவோ, செல்லப்பிராணிகளை சபைக்குள் கொண்டு வரவோ அனுமதிக்கவில்லை
- கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்"
நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி தனது நாய்க்குட்டியுடன் வந்த சம்பவம் விவாதத்தை தூண்டியது.
குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ரேணுகா சவுத்ரி, காரில் தனது நாய்க்குட்டியுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகை புரிந்தார். இதுபெரும் விவாதமாக உருவெடுத்த நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சவுத்ரி, "இது ஒரு பிரச்சனையா? அது ஒரு சின்ன உயிரினம். யாரையும் கடிக்காது. கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.
இதுகுறித்து பூஜ்ஜிய நேரத்தில் பேசிய பாஜக எம்பி ஜகதாம்பிகா பால், "சிறப்பு சலுகைகள் விதிகளை மீறவோ, செல்லப்பிராணிகளை சபைக்குள் கொண்டு வரவோ அனுமதிக்கவில்லை. பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்," என தெரிவித்தார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா பேசுகையில், "ரேணுகா சௌத்ரி நாடாளுமன்றத்தையும், எம்.பி.க்களையும் அவமதித்துள்ளார். அவர் ஒரு நாயுடன் நாடாளுமன்றத்திற்கு வருகிறார், இது பற்றி கேட்டால், 'கடிப்பவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' என்று கூறுகிறார். அதாவது, நாடாளுமன்றம், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் எம்.பி.க்கள் அனைவரும் நாய்கள் என்பது அவரது கருத்து" என்று கடுமையாகச் சாடினார். இந்த சம்பவம் தொடர்பாக ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மற்றும் டெல்லி காற்று மாசுபாடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே மீண்டும் பலத்த மோதல் ஏற்பட்டது.
டிசம்பர் 19 வரை நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் அணுசக்தி மசோதா 2025, இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா, 2025 போன்ற முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகள், UGC, கார்ப்பரேட் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, காப்பீட்டு சட்டங்கள் (திருத்தம்) மசோதா மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் (திருத்தம்) மசோதா உட்பட 13 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய கலால் (திருத்த) மசோதா மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா, 2025 ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளார். இந்த அமர்வின் போது, தற்போதைய SIR, டெல்லி குண்டுவெடிப்பு, மாசுபாடு மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான விஷயங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் மும்முனைப் போட்டி.
- பீகாருக்கு அறிவிக்கப்படும் நிதிகள் அனைத்தும் விடுவிக்கப்படுகிறதா?.
சிவகங்கையில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி,
"நிதிஷ்குமார் எவ்வளவு நாள் முதலமைச்சராக இருப்பார் என்பது கேள்விக்குறியே. பாஜக நிதிஷ்குமாரை எவ்வளவு நாட்கள் விட்டுவைப்பார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். தவெக ஒவ்வொரு விஷயத்திலும் தங்கள் கொள்கையை விளக்குவார்கள் என நம்புகிறேன். பொதுவாக 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனக்கூறுவது கொள்கை கிடையாது.
குறுகிய காலத்தில் எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்கக்கூடாது. தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே இப்பணிகளை தொடங்கியிருக்க வேண்டும். பணியாளர்களுக்கும் இதனால் அழுத்தம் கூடுகிறது. வெளிப்படைத்தன்மையோடு தேர்தல் ஆணையம் செயல்படவேண்டும். அடுத்த 5 மாதத்திற்கு பிரதமருக்கு கேரளா, தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி சாப்பாடுதான் பிடிக்கும். இந்த மாநிலங்களின் நடனம், கலாச்சாரம்தான் பிடிக்கும். இவற்றின் மொழி, ஆடைதான் பிடிக்கும்.
எல்லா ஊர்களுக்கும் மெட்ரோ தேவையில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில், சென்னையைத்தவிர வேறு எந்த நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் தேவையில்லை. இந்தூர், ஆக்ராவில் போடப்பட்ட மெட்ரோக்கள் அனைத்தும் நட்டத்தில்தான் செல்கின்றன. பெரிய நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ தேவை. மற்ற ஊர்களுக்கு நகர்ப்புற போக்குவரத்து போதுமானது. நான் மத்திய அரசை நியாயப்படுத்தவில்லை. என்னுடைய புரிதல்தான் இது.
தமிழ்நாட்டிற்கு, தமிழ் மொழிக்கு குறைந்தளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் பீகாருக்கு ஒதுக்கப்படும் ரூ.50 ஆயிரம் கோடி நிதி அவர்களுக்கு விடுவிக்கப்படுகிறதா? தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் வரத்தான் செய்யும். நடைமுறையில் எதுவும் இருக்காது. பீகார் தேர்தலுக்கும், தமிழ்நாடு தேர்தலுக்கும் இருக்கும் தொடர்பு அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் இருக்கும் சம்மந்தம் போன்றதுதான். மாநில கூட்டணிகளின்படிதான் வெற்றி இருக்கும். என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மும்முனை போட்டி வந்தால், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் அமோக வெற்றிப் பெரும்" என தெரிவித்தார்.
- அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் துவக்கி வைத்தார்.
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி நால் ரோட்டில் சோமனூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 41 நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் திருஉருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து இந்திரா காந்தியின் நினைவு நாளை ஒட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி. எம். சி. மனோகர் தலைமையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கராஜன் முன்னிலையில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்டத் துணைத் தலைவர் ஆர் பி முருகேஷ், மாநகராட்சி உறுப்பினர் நவீன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS முன்னிலை நடைபெற்றது.
- கூட்டத்தில் பல்வேறு துறை திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS முன்னிலை நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், தாரகைகத்பட், மேயர் மகேஷ் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

"கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழி சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் முடிக்கப்படும்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், குமரி மாவட்டத்தில் 60,702 ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைகள் உள்ளன. 2 லட்சத்து 30 ஆயிரத்து 662 நபர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். பி.எச்.எச். குடும்ப அட்டைகளை பொறுத்தமட்டில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைகள் மூலம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 286 நபர்கள் பயனடைந்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல்வேறு துறை திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன.
- நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கிச் செல்கிறது என்றார்.
மும்பை:
காங்கிரஸ் எம்.பி.யான பிரணிதி ஷிண்டே மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை இன்று சந்தித்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் பிறந்தநாள் எங்களுக்கு கருப்பு நாள்.
நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கி செல்கிறது. எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன.
பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மோடிக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
விவசாயிகளின் போராட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானுடன் சண்டை போடும் அதே வேளையில், அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறோம்.
இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
சோலாப்பூர் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டாக சோலாப்பூர் நகராட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது ஜனநாயகப் படுகொலை என தெரிவித்தார்.
- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார்.
- மயிலாடி தியாக சுடர் காமராஜர் பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைவாணர் படத்திற்கு மரியாதை.
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார்.
இந்நிலையில், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடி தியாக சுடர் காமராஜர் பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைவாணர் என்.எஸ்.கே திருவுருவ படத்திற்கு கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் நாகர்கோவில் காங்கிரஸ் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், வட்டார தலைவர் தங்கம், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், மாவட்ட செயல் தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணை தலைவர் கிங்ஸ்டன், வட்டார பொருளாளர் ஏ. நாகராஜன், வட்டார செயலாளர் ஏசுதாஸ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் அருண், முத்துகுட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






