என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "congress mp"
- ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக தகவல்.
- அருண் கோயல் திடீரென பதவி விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண் கோயல் திடீரென பதவி விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பதாவது:-
விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யமாட்டார்கள். சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது.
பாஜக சொல்வதை இவர் கேட்கவில்லையா? அல்லது பாஜகவுக்கு இவரைவிட சமத்தாக இருக்கக்கூடிய ஒரு அதிகாரி தேவைப்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஏதோவொரு பிளானை முன்வைத்துதான் இவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஐந்து முறை மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
- 2004-ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்.
குஜராத் மாநிலத்தின் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான நரன் ரத்வா பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதம் வரை இருக்கும் நிலையில் தனது மக்கள் ஆதரவாளர்களுடன் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே குஜராத்தில் பலவீனமாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பழங்குடியின தலைவரான நரன் ரத்வா தற்போது பா.ஜனதாவுக்கு சென்றிருப்பது மேலும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
சோட்டோ உதேப்பூரில் பழங்குடியின தலைவரான ரத்வா ஐந்து முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். முதன்முறையாக 1989-ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் 1991, 1996, 1998 மற்றும் 2004-ல் மக்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்.
ரத்வாவின் மகன் 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோட்டா உதேப்பூர் பழங்குடியின தொகுதியில் (ST) போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ரத்வா ரெயில்வே துணை மந்திரியாக இருந்தவர். 2009-ல் பா.ஜனதா வேட்பாளர் ராம்சின் ரத்வாவிடம் தோல்வியடைந்தார்.
பா.ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அம்மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர். பாட்டில் தலைமையில் ரத்வான தனது ஆதரவாளர்களும் பா.ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.
- வனவிலங்குகள் வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
- இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனப்பகுதியின் அருகே உள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக வன விலங்குகள் புகுந்து பொதுமக்களைத் தாக்கி வருகிறது. கடந்த மாதம் 31-ம் தேதி யானை தாக்கியதில் லட்சுமணன் (65) என்பவர் பலியானார். கடந்த 10-ம் தேதி மானந்தவாடி பகுதியில் அஜீஷ் (42) என்பவரை காட்டு யானை விரட்டிச் சென்று தாக்கியது. இதில் அவரும் உயிர் இழந்தார். இந்த சம்பவங்கள் வயநாடு மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.
இந்தப் பணியில் தற்காலிக வன ஊழியரும், சுற்றுலா வழிகாட்டியுமான பால் (50) என்பவரும் இருந்தார். இவர் காட்டுப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதிக்கு மக்கள் வராமல் இருக்க அவர்களை திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை பாலை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வன ஊழியர் பால் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் இறங்கினர். நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது வன ஊழியர் பால் உடலுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சுமார் 4½ மணி நேரம் நீடித்த இந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.
வனத்துறை வாகனத்தை முற்றுகையிட்டவர்கள், அதில் வந்த துணை வன அதிகாரி ஷாஜியை தாக்கினர். வாகனத்தையும் சேதப்படுத்தினர். இதனால் நிலைமையை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். இந்த சமய த்தில் அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். அவர்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இதற்கிடையே, சம்பவம் குறித்து வயநாடு தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தில் இருந்த அவர், தனது பயணத்தை நிறுத்திவிட்டு நேற்று மாலை கேரளா சென்றார்.
இந்நிலையில், இன்று காலை ராகுல் காந்தி வயநாடு மாவட்டம் மானந்தவாடிக்குச் சென்றார். அங்கு யானை தாக்கியதில் பலியான அஜீஷ் வீட்டிற்கு சென்ற அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அஜீஷின் மகன் ஆலனை தனது அருகில் அமரவைத்துப் பேசினார். அஜீஷின் மனைவி ஷீபா, பெற்றோர் ஜோசப்-எல்சி ஆகியோரிடமும் ராகுல் காந்தி பேசினார். அதன்பின், அங்கிருந்து புறப்பட்ட அவர், பலியான பால் வீட்டுக்குச் சென்றார். அங்கு பாலின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் கட்சியினர் சென்றிருந்தனர்.
- எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
- எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெற வேண்டும்.
இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் குமார் இடைக்கால பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு முறையும் நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது பணம் நமக்கு வேண்டும். ஜி.எஸ்.டி., சுங்கம், நேரடி வரி என எல்லாவற்றில் இருந்தும் எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெற வேண்டும். எங்களது வளர்ச்சிக்கு தேவையான நிதி வட இந்தியாவுக்கே வழங்கப்பட்டு வருகிறது."
"வரும் நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை எனில், இந்தி மொழி பேசும் பகுதியினர் நம் மீது திணித்துள்ள சூழ்நிலை காரணமாக தனிநாடு கோரிக்கையை முன்வைக்க நேரிடும்," என்று தெரிவித்தார்.
- இடைக்கால பட்ஜெட் தாக்கப்பட இருக்கும் நிலையில் இன்று ஜனாதிபதி உரையாற்றினார்.
- ஜனாதிபதி உரையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இடம் பிடித்திருந்தது.
மத்திய இடைக்கால பட்ஜெட் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவரது உரையில் பல்வேறு விசயங்களுடன் ராமர் கோவிலும் இடம் பிடித்திருந்தது.
ஜனாதிபதி உரையில் ராமர் கோவில் இடம் பிடித்த நிலையில், அவரது உரை குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி உரை குறித்து சதி தரூர் கூறுகையில் "பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை தேர்தல் உரையாக எழுதி உள்ளனர். இது ஒருதலைப்பட்சமானது ஆகும். பல முக்கியமான விசயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது அதுபற்றி யோசிக்க வேண்டும்" என்றார்.
காங்கிரஸ் எம்.பி. சக்தி சிங் கோஹில் கூறுகையில் "10 வருடத்திற்கு முன் பிரதமர் மோடி ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், ஒன்றையும் நிறைவேற்றவில்லை.
அவர்கள் செய்துள்ள பணிகளை வைத்துக் கொண்டு மக்களிடம் வாக்கு கேட்க செல்ல முடியாது. ஆகவே வாக்கிற்காக ராமர் கோவிலை பயன்படுத்துகிறார்கள்.
காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா கூறுகையில் "ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில் ராமர் கோவிலை பயன்படுத்தும்போது, சோனியா காந்தி வரவேற்றார்.
ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை" என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் "ஜனாதிபதி உரை பிரதமர் மோடி மற்றும் அவரது அரசை பாராட்டியே இருந்தது. பிரதமர் மோடி மற்றும் அரசியல் உரைக்கான பிரசாரம், விளம்பரம்.
ஜனாதிபதி உரையில் வேலைவாய்ப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. ஏழைகளை சிக்கவைப்பதற்கான ஆவணம்தான் இது" என்றார்.
- ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என தகவல்.
- ராகுல்காந்தி யாத்திரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரை தொடங்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால், ராகுல் காந்தி யாத்திரைக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மணிப்பூர் அரசு யாத்திரைக்கு அனுமதி மறுத்து வருகிறது. ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " பெரும் அளவில் மக்கள் கூடுவதற்கு வழிவகுக்கும் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி இல்லை" என்றார்.
இதுகுறித்து, "காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "மணிப்பூரின் வேறு பகுதியில் ராகுல்காந்தி யாத்திரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்த இடம் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என விளக்கம் அளித்துள்ளார்.
- காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.
- அமலாக்கத் துறை என்னை விசாரணைக்கு அழைப்பது வாடிக்கையாகி வருகிறது என்றார்.
புதுடெல்லி:
கடந்த 2011-ம் ஆண்டில் 263 சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராகும்படி காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஆஜராக கார்த்தி சிதம்பரம் இன்று அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அமலாக்கத்துறை அலுவலகத்தில் இது எனது 20வது நாள். இது வாடிக்கையாகி வருகிறது. அவர்கள் அதே விஷயங்களைக் கேட்கிறார்கள், நான் அதே பதில்களை தருகிறேன்.
இது ஒரு கிடப்பில் உள்ள வழக்கு, முடிந்துவிட்ட வழக்கு. இந்த விஷயத்தை சி.பி.ஐ. பிராக்டிகலாக முடித்துவிட்டது. ஆனால் அதை மீண்டும் திறந்து என்னிடம் ஏதாவது கேட்க விரும்புகிறார்கள். நானும் அதையே மீண்டும் சொல்கிறேன்.
இது கிறிஸ்மஸ் சீசன். அமலாக்கத்துறை என்னை தவறவிட்டது. அதனால் அவர்கள் மீண்டும் என்னை அழைக்கிறார்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ள இங்கு வந்துள்ளேன் என தெரிவித்தார்.
- சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.
- கிரிமினல் சதி, ஏமாற்றுதல் மற்றும் யாரும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
சத்தீஷ்கர் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்றது.
சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. காங்கிரஸ் முன்னாள் மேல் சபை எம்.பி. விஜய் தர்தாவை குற்றவாளியாக அறிவித்து சிறப்பு நீதிபதி சஞ்சய் பன்சால் தீர்ப்பு வழங்கினார்.
முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் எச்.சி.குப்தா உள்பட மொத்தம் 7 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தர்தாவின் மகன் தேவேந்திர தர்தா, 2 சீனியர் அரசு ஊழியர்களான சிரோபா, சம்ரியா, தனியார் நிறுவன இயக்குனர் மனோஜ்குமார் ஆகியோரையும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
கிரிமினல் சதி, ஏமாற்றுதல் மற்றும் யாரும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான தண்டை விவரம் வருகிற 18-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.
பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், மவுலானா அஸ்ரார்-உல்-ஹக். இவர் நேற்று முன்தினம் மாலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கிஷான்கஞ்சில் உள்ள சுற்றுலா இல்லத்தில் இரவில் தங்கினார்.
அங்கு நேற்று அதிகாலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது ஆதரவாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 76. அவரது இறுதிச்சடங்குகள் நேற்று மாலையில் அவரது சொந்த ஊரில் நடந்தது. மவுலானா அஸ்ரார்-உல்-ஹக் எம்.பி.க்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
மவுலானா அஸ்ரார்-உல்-ஹக் எம்.பி. மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். #CongressMP #MaulanaAsrarulHaqueQasmi
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டார்.
உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த போது இந்த மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக சரிதாநாயார் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் கூறும்போது, உம்மன்சாண்டி மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மோசடியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான சரிதாநாயர், காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் உம்மன்சாண்டி ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.
கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த பின்னர் இந்த வழக்கு மீண்டும் வேகம் எடுத்தது.
இப்போது இந்த வழக்கு தொடர்பாக சரிதாநாயர் மீண்டும் கேரள குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் இவர்கள் இருவர் மீதும் கேரள குற்றப்பிரிவு போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உம்மன்சாண்டி கூறும்போது, சரிதா நாயர் புகாரை சட்டப்படி சந்திப்பேன். கேரளாவில் அய்யப்பன் கோவில் விவகாரத்தில் கம்யூனிஸ்டு அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். மக்களை திசை திருப்ப இந்த விவகாரத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இதற்கு நாங்கள் கோர்ட்டு மூலம் உரிய பதில் அளிப்போம், என்றார்.
இதுபோல கேரள எதிர் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவும், இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார். #OommenChandy #SarithaNair
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது முதல்- மந்திரியாக உம்மன்சாண்டி இருந்தார்.
அப்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 2013-ம் ஆண்டு மாநில அரசு நிறைவேற்றியது.
இது தொடர்பான ஒப்பந்தம் பந்தளம் செங்கனூரைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயரின் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. சரிதாநாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் தகடுகளை பெரிய நிறுவனங்கள், தனியார் கம்பெனிகளுக்கு பொருத்தி கொடுத்தனர்.
அப்போது அவர்கள் பலரிடம் பணம் வசூல் செய்து விட்டு சோலார் பேனல் தகடுகளை பொருத்தி கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. கேரளா, கோவையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் கேரள தொழில் அதிபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான புகாரின் பேரில், சரிதாநாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். பிறகு சரிதாநாயர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
ஜாமீனில் வெளி வந்த பிறகு சரிதாநாயர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்த தொடங்கினார். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் பொருத்தும் பணியை தனது கம்பெனிக்கு வழங்குவதற்கு பலருக்கும் பணம் லஞ்சமாக கொடுத்ததாகவும், பணத்திற்கு பதில் சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.
சோலார் பேனல் பொருத்தும் பணி தொடர்பாக தான் பலமுறை உம்மன்சாண்டியை சந்தித்து பேசி உள்ளதாகவும், அப்போது உம்மன்சாண்டியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.
அதேபோல முன்னாள் மத்திய மந்திரி கே.சி. வேணு கோபால் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் மீதும் சரிதாநாயர் பாலியல் புகார் கூறினார்.
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை உம்மன்சாண்டி மறுத்தார். முதல்- அமைச்சர் என்ற முறையில் பலரும் தன்னை சந்தித்து பேசுவது வழக்கம். அது போல தொழில் அதிபர் என்ற முறையில் சரிதாநாயரை சந்தித்ததாகவும், தவறாக எதுவும் நடக்க வில்லை என்றும் கூறினார். இதேபோல கே.சி.வேணுகோபாலும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் முதல்-மந்திரி பதவியில் இருந்து உம்மன்சாண்டி ராஜினாமா செய்யவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் முன்பு உம்மன் சாண்டி ஆஜராகி விளக்கம் அளித்தார். சரிதாநாயரும் விசாரணை கமிஷனில் இதே குற்றச்சாட்டை வலியுறுத்தினார்.
சரிதாநாயர் புகார் தொடர்பாக திருவனந்தபுரம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான சரிதாநாயர் தனது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பரபரப்பு வாக்குமூலத்தையும் கோர்ட்டில் அளித்தார்.
இந்த நிலையில் கேரள சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் உம்மன்சாண்டி மீதான சோலார் பேனல் மோசடி, சரிதாநாயரின் பாலியல் புகார் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசாரம் செய்தனர்.
அந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் அமைந்தது. பினராய் விஜயன் பதவியேற்றதும், உம்மன்சாண்டி மீதான சரிதாநாயர் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். ஆனாலும் உம்மன்சாண்டி மீது உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
சமீபத்தில் கேரள குற்றப்பிரிவு போலீசிலும் உம்மன்சாண்டி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது சரிதாநாயர் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் உம்மன் சாண்டி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் உம்மன்சாண்டி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உம்மன் சாண்டி கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட கே.சி. வேணு கோபால் தற்போது ஆலப்புழா தொகுதி எம்.பி.யாகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உம்மன் சாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கூறும்போது, தற்போது கேரளாவில் சபரிமலை கோவில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அதை திசை திருப்ப மாநில அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.
சரிதாநாயர் சில மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார். குமரி மாவட்டம் தக்கலை உள்பட சில இடங்களில் தொழில் நிறுவனங்களும் நடத்தி வருகிறார். அவரது ஆடை மாற்றும் நிர்வாணப் படம் செல்போன்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #OommenChandy #SarithaNair
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்