search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MP Kanimozhi"

    • 10 லட்சம் பேர் பணியாற்றும் தீப்பெட்டி தொழிலை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்றார்.
    • தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது தீப்பெட்டி மீதான சரக்கு, சேவை வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

    தீப்பெட்டி செய்யப் பயன்படுத்தப்படும் அட்டை விலை கிலோவுக்கு ரூ.40-லிருந்து ரூ.90 ஆக உயர்ந்து விட்டது.

    தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் சிவப்பு பாஸ்பரஸ் ஒரு கிலோ விலை ரூ.400-ல் இருந்து ரூ.1000 ஆக அதிகரித்து விட்டது.

    90 சதவீதம் பெண்கள் உள்பட 10 லட்சம் பேர் பணியாற்றும் தீப்பெட்டி தொழிலை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
    • எம்.பி கனிமொழி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கையும், உயிர் பலியும் அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார்.

    இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் எம்.பி கனிமொழி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    ×