search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும் - தி.மு.க. எம்.பி. கனிமொழி
    X

    கனிமொழி எம்.பி. 

    தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும் - தி.மு.க. எம்.பி. கனிமொழி

    • 10 லட்சம் பேர் பணியாற்றும் தீப்பெட்டி தொழிலை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்றார்.
    • தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது தீப்பெட்டி மீதான சரக்கு, சேவை வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

    தீப்பெட்டி செய்யப் பயன்படுத்தப்படும் அட்டை விலை கிலோவுக்கு ரூ.40-லிருந்து ரூ.90 ஆக உயர்ந்து விட்டது.

    தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் சிவப்பு பாஸ்பரஸ் ஒரு கிலோ விலை ரூ.400-ல் இருந்து ரூ.1000 ஆக அதிகரித்து விட்டது.

    90 சதவீதம் பெண்கள் உள்பட 10 லட்சம் பேர் பணியாற்றும் தீப்பெட்டி தொழிலை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×