என் மலர்
நீங்கள் தேடியது "நினைவு தினம்"
- இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வதற்காக ஆபத்தான முறையில் இளைஞர்கள் பயணம்
- ஓடும் காரின் உள்ளே இருந்துகொண்டு, காரின் மேற்கூறையில் இளைஞர் ஒருவர் ஏற முயன்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வதற்காக பார்த்திபனூர் பகுதியில் ஆபத்தான முறையில் பேருந்து மற்றும் கார்களில் பயணித்த இளைஞர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் பார்த்திபனூர் அருகே ஓடும் காரின் உள்ளே இருந்துகொண்டு, காரின் மேற்கூறையில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர், தவறி சாலையில் விழுந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, பின்னே வந்த வாகனம் உடனடியாக பிரேக் அடித்ததால், அந்த இளைஞர் நூலிழையில் உயிர்தப்பினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார்.
- மயிலாடி தியாக சுடர் காமராஜர் பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைவாணர் படத்திற்கு மரியாதை.
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார்.
இந்நிலையில், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடி தியாக சுடர் காமராஜர் பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைவாணர் என்.எஸ்.கே திருவுருவ படத்திற்கு கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் நாகர்கோவில் காங்கிரஸ் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், வட்டார தலைவர் தங்கம், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், மாவட்ட செயல் தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணை தலைவர் கிங்ஸ்டன், வட்டார பொருளாளர் ஏ. நாகராஜன், வட்டார செயலாளர் ஏசுதாஸ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் அருண், முத்துகுட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கும்பகோணம் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.
- அக்குழந்தைகளின் நினைவிடங்களில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் தமிழகமே மிகுந்த சோகத்தில் மூழ்கியது.
இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக ஆண்டுதோறும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (புதன்கிழமை) 21-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
முன்னதாக தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் படங்கள் அடங்கிய பேனர் பள்ளியின் முன்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனருக்கு பெற்றோர்கள், உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் மலர் தூவி, மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அக்குழந்தைகளின் நினைவிடங்களில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, மாலை தீ விபத்து ஏற்பட்ட பள்ளியில் இருந்து தீபம் ஏந்தியவாறு, மவுன ஊர்வலம் புறப்பட்டு, மகாமக குளத்திற்கு சென்று மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.
- கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் உருவ படம் வைக்கபட்டு மலர் தூவி அஞ்சலி.
- அரிசி, காய்கறிகள் பிண்டம் வைத்து மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்து கடலில் விட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திதி கொடுத்தார்.
முன்னதாக கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ படம் வைக்கபட்டு மலர் தூவி அஞ்சலி, செலுத்தினர்.
பின்னர் அரிசி, காய்கறிகள் பிண்டம் (சோற்று உருண்டை)வைத்து மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்து கடலில் விட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
- அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் பங்கேற்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை போளூர், கீழ்பென்னாத்தூர் செங்கம் ஆகிய தொகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டன.
- ராமநாதபுரத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- அவரது படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம்
மறைந்த அ.தி.மு.க, பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் ராமநாதபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஆலோ சனையின் பேரில், நகர் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பா ட்டில் அரண்மனை அருகே ஜெயலலிதா படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சேது பாலசிங்கம், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், சரவணகுமார், ராமநாதபுரம் நகர் துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் பாரதி நகரில் ராமநாதபுரம் (தெற்கு) ஒன்றியம், ராமநாதபுரம் நகர் (கிழக்கு) அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தர்மர் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்து முருகன், ராமநாதபுரம் நகர் செயலாளர் (கிழக்கு) பாலசுப்பிரமணியன், மாவட்ட இணை செய லாளர் சித்ரா, மாவட்ட துணை செயலாளர் கற்பகம், தொகுதி செயலாளர் பரமக்குடி நவநாதன், முதுகுளத்தூர் மூக்கையா, திருவாடானை ராமகிருஷ்ணன், ராமநாத
பு ரம் முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் உடையத்தேவன், சர வணன், நந்திவர்மன், கோட்டைச்சாமி, ரஜினிகாந்த், கரிகாலன், செந்தில் குமார், சண்முக பாண்டியன், கே.பாண்டி சரவணன், சுரேஷ், சிவக்குமார் சீனிமாரி, அழகர்சாமி மற்றும் பலர் பங்ேகற்றனர்.
- தஞ்சை மேலவீதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தஞ்சை மேல வீதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், பால்வளத் தலைவர் காந்தி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுபின்னர் முன்னாள்மேயர் சாவித்ரி கோபால், கவுன்சிலர் கோபால் ஆகியோர் ஏற்பாட்டின்படி பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் எம்.ஜி.ஆர் மன்ற இணை செய லாளர் ராஜமாணிக்கம், கூட்டுறவு அச்சகத் தலைவர் புண்ணி யமூர்த்தி, பகுதி செயலா ளர் சாமிநாதன், மாண வரணி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்புவனத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சோனைரவி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் மணலூர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், ஒன்றிய பேரவை செயலாளர் பாண்டி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மனோன்மணி மதிவாணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலசந்தர், கிளைச் செயலாளர்கள் மணலூர் பிரபு, ராஜ், பீசர் பட்டினம் ராமசந்திரன், கீழடி சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி ஒன்றியத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலா ளர்கள் பாரதிராஜன், ஜெகதீசுவரன், கோபி, நகர் செயலாளர் நாகுர்மீரா ஒன்றிய மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஜெயல லிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மானாமதுரை ஒன்றி யத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன் தலைமையிலும் காளையார்கோவில் ஒன்றியத்தில் பஸ்நிலையம் முன்பு ஜெயலலிதா படத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி, மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை இணைச்செ யலாளர் மோசஸ், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை ஓ.பி.எஸ். அணி
சிவகங்கை அ.தி. மு.க., (ஓ.பன்னீர் செல்வம் அணி) சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்., அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு ஊர்வலமாக வந்து மலர்
தூவி மரியாதை செலுத்தி னர். நகர் செயலாளர் கே.வி., சேகர், மாவட்ட துணை செயலாளர் என்.எம்., ஜெயச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் சுந்தரபாண்டியன், தொகுதி செயலாளர் நாக ராஜன், நகர் துணை செய லாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
- மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மகா கணபதி, கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க.வினர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சின்ன கடை தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அபுதாஹீர், மாவட்ட துணை செயலாளர் உதயகுமார், மாவட்ட மகளிர் இணை செயலாளர் சசிகலா, துணை செயலாளர் விமல், பொதுக்குழு உறுப்பினர் ஐ.ஓ.பி. பன்னீர்செல்வம், நகர செயலாளர் குமார் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர். கிட்டு, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மகா கணபதி, கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- கறம்பக்குடியில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
- அ.இ.அ.தி.மு.க. ஈ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மற்றும் நகர அ.இ.அ.தி.மு.க. ஈ.பி.எஸ் அணி சார்பில் அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு கரம்பக்குடி சீனி கடை முக்கத்திலிருந்து ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், கணேசன் மற்றும் நகர செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று மீன் மார்க்கெட்டில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சாகுல் ஹமீது, தீத்தானிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம், குபேந்திரன், பல்லவராயன், முருகேசன், பந்துவக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், வாண்டான விடுதி ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் பழனியப்பன், புது விடுதி சுலைமான் தகவல் தொடர்பு செயலாளர் முத்துசாமி, சேகர் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது
- இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மாவட்ட துணைச் செயலாளருமான ராமஜெயலிங்கம் தலைமையில் திருச்சி சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக அண்ணா சிலையில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல் தி.க.கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் தலைமையில் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய தலைவர் கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய அமைப்பாளர் தமிழ் சேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு ஜெயங்கொண்டம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் சின்னராஜா, சுந்தர் மற்றும் இளையபாரதி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- எம்.ஜி.ஆர்.நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் சார்பில் எம்.ஜி.ஆர்.நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி கிருஷ்ணகிரி 5 ரோடுரவுண்டானா அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜ் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீராமுலு, பொருளாளர் வெங்கடேசப்பா, நகரசெயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் சகாதேவன், ராமு,நாகரத்தினம், ஒன்றிய செயலளர்கள் முனியப்பன், கோவிந்தராஜ், ஆறுமுகம்,பிரேம்குமார், வடிவேல், தாமோதரன், நாகராஜ், ஜெயலலிதா பேரவை நிர்வாகி ராதாகார்த்திக், மாவட்ட சார்பு அமைப்பு செயலாளர்கள், இளைஞர் அணி மணிகண்டன்,மாணவர் அணி மோகன், அண்ணா தொழிற்சங்க பாபு, கணேசன், சரவணன், பாக்கியராஜ்,ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






