search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Memorial Day"

    • பிரதமர் மோடி மகாத்மா காந்தி குறித்து தனது எக்ஸதளத்தில் பதவிட்டுள்ளார்.
    • தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன்.

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள், மக்களுக்கு சேவை செய்யவும், நாட்டுக்காக அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பலியான 414 பேர் உடல்களும் குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாக்கத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் மலர்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    குளச்சல்:

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இந்திய கடல் பகுதியையும் சுனாமி விட்டு வைக்கவில்லை. இதில் தமிழகத்தின் குமரி மாவட்டம் பெரும் உயிர்சேதம் மற்றும் பொருட் சேதத்தை சந்தித்தது. சுனாமி பேரலையில் சிக்கி கடற்கரை கிராமங்கள் சின்னாபின்னமாகின.

    மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி சொத்த விளை, குளச்சல் கொட்டில் பாடு, பிள்ளை தோப்பு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் ஏராளமானோர் சுனாமியின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தனர். கொட்டில்பாடு பகுதியில் 199 பேர் பலியாகினர். அவர்களது உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப் பட்டன. சுனாமி பேரலை தாக்கியதன் நினைவாக கடற்கரை கிராமங்களில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு ஆண்டு தோறும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி 19-ம்ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.


    இதையொட்டி கொட்டில் பாடு சுனாமி காலணியில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை தோட்டத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. நினைவு ஸ்தூபியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித அலெக்ஸ் ஆலயத்தில் 199 பேர் நினைவாக நினைவு திருப்பலி நடந்தது. ஆலய பங்குத்தந்தை ராஜ், மற்றும் பங்குத் தந்தை சர்ச்சில் உள்பட ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்தும், பூக்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சுனாமியின் போது குளச்சல் பகுதியில் பலியான 414 பேர் உடல்களும் குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாக்கத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் நினைவாக இன்று இரவு 7 மணிக்கு உதவி பங்குத் தந்தை தலைமையில் நினைவு திருப்பலி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து கல்லறை மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் பலியானவர்கள் நினைவாக அந்த நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.


    இதுபோல் சுனாமியில் ஏராளமான முஸ்லிம்கள் பலியானார்கள். அவர்களின் உடல்கள் ரிபாய பள்ளி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் 118 பேரை பலி கொண்ட மணக்குடியிலும் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புனித அந்திரேயா ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோணியப்பன் தலைமையில் நினைவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆலயத்தில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக 118 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டம் சென்றனர். அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் மலர்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

    • வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவை சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 87-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவாஸ்ரமம் மடத்தில் அவரது உருவ படத்திற்கு வாஸ்மரம் சுவாமி சிவானந்தம், ராஜ கிருஷ்ண மடம் குடில் சுவாமி பிரன வாணந்தா ஆகியோர் மலர் தூவி மாரியதை செலுத்தினர்.

    பின்னர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வ.உ.சி பேரவை தலைவர் வேடராஜன் செய்திருந்தார். இதில் சரவணன், தவமணி, லதா, சேதுராமன், முருகன் உள் பட பலர் கலந்து கொண்ட னர்.

    இதேபோல் பரமக்குடி யில் நடந்த வ.உ.சிதம்பரனா ரின் 87-வது நினைவு தினத்தை யொட்டி முக் குலத்தோர் புலிப்படையின் தலைவர் சேது.கருணாஸ் ஆலோசனைப்படி மாநில செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலை மையில் வ.உ.சிதம்பரனா ரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், கிழக்கு மாவட்ட செயலாளர் பசும் பொன் பாலாஜி, மேற்கு மாவட்ட துணை செய லாளர் பசும்பொன் சவுந் தர், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிவசங்கர மேத்தா, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் ஆகாஸ்சேதுபதி, பரமக்குடி நகர் பொருளாளர் அஜித், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரண், ஒன்றிய மாணவரணி செயலாளர் சோனை வீர ரகு, ராமநாத புரம் நகர் துணைச் செய லாளர் சிமியோன் பிரபா கரன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி அனைத்து வெள்ளாளர் மகா சபை சார்பில் தலைவர் குரு.சுப்பிர மணியன் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் இருளப்பன் பிள்ளை, முனியாண்டி பிள்ளை, வின்சென்ட் ஜெய குமார், கோவிந்த ராஜ், அழகுசுந்தரம், மில்கா செந்தில், சூர்யா ஜெராக்ஸ் முருகேசன், குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து வ.உ.சி. பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு பள்ளி முதல்வர் உள்பட அனைத்து ஆசிரியர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

    முடிவில் பள்ளியின் பொருளாளர் மகேஸ்வரன் பிள்ளை நன்றி கூறினார்.

    இதையடுத்து சோழ வந்தானில் தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ் தலைமை யில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வ.உ சி. சிலைக்கு மாலை அணி வித்தார். வ.உ.சி. அறக் கட்டளை சார்பில் அன்ன தானத்தை தொடங்கி வைத்தார். முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் கீர்த்திகா ஞானசேகரன், வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன், முன்னாள் தலைவர் சந்திர சேகரன், முன்னாள் பேரூ ராட்சி துணைத் தலைவர் ராஜ்குமார், வ.உ.சி. அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜசேகரன், சிங்கராஜ், விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இமானுவேல்சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் கிராமத்தில் இமானுவேல் சேகரன் சிலை உள்ளது. அவரது நினைவு தினத்தை யொட்டி இந்த சிலைக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதல்-அமைச்ச ருக்கு ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாகவும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் நன்றிகள் தெரிவித்து கொள்வதாக அப்போது எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் நகர செய லாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல் முருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் மலர் மன்னன், குமார், மாவட்ட பிரதிநிதி கணேசன், மாவட்ட அணியின் துணை அமைப்பாளர்கள் கார்த்திக், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • சமு–தாய அமைப்புகளின் பிரதிநிதி–களுடன் ஆலோச–னைக் கூட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரமக்குடியில் உள்ள சுதந் திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகர–னார் நினைவிடத்தில் செப்டம்பர் 11-ந்தேதி தியாகி நினைவு தினம் அனுசரித்தல் தொடர் பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரை முன்னிலையில், மாவட்ட மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், தலைமை–யில் அனைத்துத்துறை அலு–வலர்கள் மற்றும் சமு–தாய அமைப்புகளின் பிரதிநிதி–களுடன் ஆலோச–னைக் கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் தெரி–வித்ததாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு விதிமுறைகளை பின் பற்றி நினைவு தின நிகழ்ச் சியில் பங்கேற்றிடும் வகை–யில் அனைத்து அமைப்பு பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு கொடுத்து காவல் துறையு–டன் ஒருங்கிணைந்து தேவை–யான முன் அனுமதிகளை பெற்றிட வேண்டும்.

    காவல்துறை வழிகாட்டு–தலின்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விளம் பர பலகை வைத்துக் கொள் ளவும். வெளி மாவட்டங்க–ளிலிருந்து வருபவர்களுக்கு தேவையான முன் அனுமதி காவல்துறை மூலம் அனுமதி சீட்டு பெற்று வந்து செல்ல தேவையான நடவடிக்கை–களை முன்கூட்டியே மேற் கொள்ள வேண்டும்.

    மேலும் நினைவிடத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக தேவையான சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. நினைவு நாள் அன்று வெளியூரிலிருந்து பரமக்குடி–யில் உள்ள நினைவிடத்திற்கு வரக்கூடியவர்களுக்கு காவல்துறையின் மூலம் உரிய வழித்தடங்கள் வழி–யாக பேருந்து சென்று வர திட்டமிடப்பட்டுள்ளது. அனும–திக்கப்பட்ட வழித்த–டங்களில் சென்று நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றுச் செல்லவும். மேலும் விழா–வினை சிறந்த முறையில் நடத்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித் தார்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ராமநாதபுரம் வரு–வாய் கோட்டாட்சியர் கோபு, தாசில்தார்கள் ஸ்ரீதர் (ராம–நாதபுரம்), பழனிக் குமார் (கீழக்கரை), கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜய–குமார், தேவேந்திரர் பண் பாட்டு கழகம் சார்பில் தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகிகள், புதிய தமிழகம் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முத்துக் கூரி (ராமநாதபுரம்), மகேஷ் (பரமக்குடி) மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.கே.முனியசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கள் முனியசாமி (கிழக்கு), சேகர் (மேற்கு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல் வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல் தலைமை தாங்கி னார்.

    கருணாநிதி உருவப் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணி வித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சி யில் மாவட்ட மாணவரணி கதிர் ராஜ்குமார், நகர செயலா ளர் கார்த்திகேயன், பேரூ ராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, நாராய ணன், மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவண்ணாமலையில் மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்தது
    • அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்தார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு, கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு உணவு வழங்குதலை தொடங்கி வைத்தார்.

    தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.முத்து, பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலைஞர் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொதுப்பணித்துறை அமைச்ச ரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பின ருமான எ.வ.வேலு கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

    • கருணாநிதி நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
    • தி.மு.க. ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடியில் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் மற்றும் சாயல்குடி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுச ரிக்கப்பட்டது. சாயல்குடி மும்முனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், சாயல்குடி பேரூர் செயலாளர் வெங்க டேஷ் ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர் மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் சத்தியேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி காமராஜ், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை சேர்மன் மணி மேகலை, பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முனீஸ்வரன், சாயல்குடி புனித ராஜன் உள்ளிட்ட தி.மு.க. ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • மரக்கன்றுகள் நடவு செய்யவும், சுற்றுச்சூழலை பாது காக்கவும் உறுதிமொழி எடுத்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அன்னை நர்சிங் கல்லூரி சார்பாக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி தலைமை தாங்கி அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்.

    உடன் கல்லூரி மாண விகள் வெள்ளை சீருடைய அணிந்து மவுன அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்தனர். மேலும் கல்லூரி மாணவிகள் தங் களது வீடுகளுக்கு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடவு செய்ய வும், சுற்றுச்சூழலை பாது காக்கவும் உறுதிமொழி எடுத்தனர்.

    • அப்துல்கலாம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ஆசிரியர்கள், மாணவர்கள்
    • அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொ ண்டனர்

    அரியலூர்,

    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிக், கல்லூரிகளில் அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அரியலூர் அருகேயுள்ள சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், அப்து ல்கலாம் படத்துக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை, அரியலூர் அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, தங்கபாண்டி இளநிலை உதவியாளர் மணி கண்டன், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொ ண்டனர். லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சௌ ந்தர்ராஜன் தலைமையில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் அப்துல்கலாம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதே போல் மாவட்ட த்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூ ரிகளில் அப்துல்கலாம் நினைவுத் தினம் அனுசரி க்கப்பட்டது.

    • இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர் தூவி அவர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    • மாலை அணிவித்து , புத்தாடைகள் வைத்து கண்ணீரை காணிக்கையாக செலுத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர்.

    இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 19 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குழந்தைகளை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து , புத்தாடைகள் வைத்து கண்ணீரை காணிக்கையாக செலுத்தினர்.

    பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர் தூவி அவர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    இந்த துயர சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் ஆகினும், இன்னும் பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலிருந்து இன்னும் விலகவில்லை.

    தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி நினைவு தினத்தையொட்டி அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முன்னாள் மாவட்ட தி.மு.க. செயலாளர் என். பெரியசாமியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி  போல்பேட்டை உள்ள அவரது நினைவு இல்லத்தில் அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், துணைச் செயலாளர் கீதா முருகேசன், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாணவரணி துணை அமைப்பாளரும் தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, 

    பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன்,  நிர்மல்ராஜ், பொறியாளர் அணி  அமைப்பாளர் அன்பழகன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி,  கவுன்சிலர்கள் இசக்கி  ராஜா, கந்தசாமி, பொன்னப்பன், வட்ட செய லாளர் ரவீந்திரன், கீதா செல்வ மாரியப்பன்,மற்றும் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×