search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indira gandhi"

    • நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
    • வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெருக்கடி நிலை முடிந்தவுடன் ராஜீவ்காந்தியும், சஞ்ஜய் காந்தியும் ஆட்சியாளர்களுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோட முயன்றார்கள் என்று ஒரு அப்பட்டமான அவதூறு செய்தியை அண்ணாமலை கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார்.

    நெருக்கடி நிலை முடிந்ததும் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய தேர்தலில் அவரே வெற்றி வாய்ப்பை இழந்ததின் மூலம் ஜனநாயகத்தை உலகத்திற்கு நிரூபித்தார். நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒருமுறை மாறுவேடம் அணிந்து ஜெயிலில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு செய்தியைக் கொண்டு சேர்க்கும் ரகசிய மிஷனிலும் ஈடுபட்டுள்ளார்
    • ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்களில் மாறுவேடங்களின் மன்னன் [ MASTER OF DISGUISE] என்று பெயர் வாங்கினார் மோடி

    இந்தியாவில் 1975 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரசைச் சேர்ந்த அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவசர நிலையை அறிவித்தார். இந்த அவசர நிலையானது 25 ஜூன் 1975 முதல் 21 மார்ச் 1977 வரை சுமார் 21 மாதங்கள் நீடித்தது. அவசர நிலையின்போது மக்களின் அடிப்படை உரிமைகள் செயலிழந்தது. எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைது நடவைடிக்கையில் இருந்து தப்பிக்க பலர் தலைமறைவாக திரிந்தனர். அந்த சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி போலீசிடம் இருந்து தப்பிக்க பல்வேறு மாறுவேடங்களில் உலவியுள்ளார். குஜராத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கிடையில் செய்திப் பாலமாக செயல்பட்ட நரேந்திர மோடி, ஒருமுறை மாறுவேடம் அணிந்து ஜெயிலில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு செய்தியைக் கொண்டு சேர்க்கும் ரகசிய மிஷனிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

     

     

    டர்பன் அணிந்து சீக்கியராகவும், தனது இயல்புக்கு மாறான தாடி மீசையுடன் பெரிய மூக்குக்கண்ணாடி அணிந்து வேறொரு வேடத்திலும், காவி உடை தரித்து சாமியார் வேடத்திலும் குஜராத் முழுவதும் எமெர்ஜெசிக்கு எதிரான ஆர்எஸ்எஸ் பிரச்சாரங்களையும் செய்திகளும் கொண்டுசேர்த்துள்ளார். குஜராத்தின் வதோதரா, அகமதாபாத், ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்களுக்கு 'பதுக் பாய்' என்ற புனைபெயருடன் மோடி பயணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அக்காலத்திய ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்களில் மாறுவேடங்களின் மன்னன் [ MASTER OF DISGUISE] என்று பெயர் வாங்கும் அளவுக்கு மோடியின் மாறுவேடங்கள் கச்சித்தமாக யாருக்கும் துளியும் சந்தேகம் வராத அளவுக்கு இருக்கும் என்று அவரது அபிமானிகள் இப்போதும்கூட சிலாகிக்கின்றனர்.

     

     

    நேற்று ஜூன் 25 ஆம் தேதி எமெர்ஜென்சி கொண்டுவரப்பட்டு 50 வது ஆண்டுகள் ஆன நிலையில் மோடி அச்சமயத்தில் புனைந்திருந்த மாறுவேடங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளன. 

    இதற்கிடையில் எமெர்ஜென்சி காலம் குறித்து நேற்று மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், அவசர நிலையை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்றாகும். அவசர நிலையில் இருட்டு நாட்கள் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் எப்படி எதிர்த்தது என்பதை நினைவூட்டுகிறது துன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்
    • யாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமயிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் மோடியின் புதிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய பிரபல கேரள நடிகர் சுரேஷ் கோபி எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்ப்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று பாஜகவின் முதல் வெற்றியை கேரளாவில் பதிவு செய்தார். இந்த வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 15) கேரளாவில் செய்தியளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, மறைந்த காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி இந்தியாவின் அன்னையாக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டினார்.

     

    மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து சர்சையைக் கிளப்பி வரும் நிலையில் பாஜக சார்பில் அமைச்சராகியுள்ள சுரேஷ் கோபி இந்திரா காந்தியை இந்தியாவின் அன்னை என்று புகழ்ந்தது அரசியல் களத்தில் பேசுபொருளானது.

    இந்நிலையில் தனது கருத்து குறித்து சுரேஷ் கோபி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தில், இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்று நான் கூறியது எனது இதயபூர்வமான கருத்து. எனது மனதில் உள்ளதையே நான் பேசினேன். அதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.

    யாரும் விரும்பினாலும் விருமாபாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுதந்திரத்துக்கு பின் தனது இறுதி மூச்சுவரை இந்தியாவை கட்டியெழுப்பிய தலைவர் இந்திரா காந்தி. தேசத்துக்காக உழைத்த ஒரு தலைவரை அவர்  எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மறுக்கவும் மறக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார். 

     

    • வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது.
    • கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் குறித்தும் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

    இந்தியாவில் நடந்து முடித்த பாராளுன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமயிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று 3 வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 72 அமைச்சர்களும் பதவியேற்றனர். கூட்டணியை தவிர்த்து இந்த தேர்தலில் மொத்தம் 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது.

    தென் மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக வரவேற்பு இல்லாத நிலையில் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக விளங்கும் கேரளாவில் முதல்முறையாக பாஜக 1 இடத்தில் வெற்றிபெற்றுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய பிரபல கேரள நடிகர் சுரேஷ் கோபி எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்ப்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று பாஜகவின் முதல் வெற்றியை கேரளாவில் பதிவு செய்தார்.

    இந்த வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் செய்தியளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, மறைந்த காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி குறித்தும், கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் குறித்தும் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

    செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னையாக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரளாவின் முன்னாள் முதல்வருமான கருணாகரன் மிகவும் தைரியமான ஒரு தலைவரும் நிர்வாகியுமாவார். மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் E.K. நாயனாரும் கருணாகரனும் தனது அரசியல் குருக்கள் என்று சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். ஆலப்புழாவில் கருணாகாரனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

     

     

    இதற்கிடையில் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து சர்சையைக் கிளப்பி வரும் நிலையில் பாஜக சார்பில் அமைச்சராகியுள்ள சுரேஷ் கோபி இந்திரா காந்தியை இந்தியாவின் அன்னை என்று புகழ்ந்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

     

    • இந்திரா காந்தியை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றதை சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
    • இதுதொடர்பாக கனடா அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய வம்சாவளி எம்.பி. வலியுறுத்தினார்.

    ஒட்டாவா:

    கனடாவின் வான்கூவரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதை சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக, கனடா நாட்டின் பொது பாதுகாப்பு, ஜனநாயக அமைப்புகள் மற்றும் வெளிவிவகார மந்திரி டொமினிக் லெப்லாங் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த வாரம் வான்கூவரில் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. கனடாவில் வன்முறையை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பதிவிட்டுள்ளார்.

    இந்திய வம்சாவளி எம்.பி.யான சந்திரா ஆர்யா கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக கனடா அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும், காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள அந்த போஸ்டர்கள் கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு அச்சத்தை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    • ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் மீது பாஜக இன்றுவரை குற்றம் சாட்டி வருகிறது
    • காங்கிரஸ் மற்றும் அதன் சித்தாந்தம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்டது

    மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு வடமாநிலங்களில் பலமான தாக்கத்தை ஏற்படுதியுள்ளது. பாஜக தலைவர்கள் காங்கிரஸ் மீது தொடங்கத்திலிருந்தே கடுமையான விமர்சனங்களை முனைவைத்து வருகின்றனர்.

    தற்போதைய காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் இல்லாமல் சுதந்திரத்துக்குக்குப் பின்னால் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் மீதும் இன்றுவரை குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ்ஸின் தற்போதைய தலைவர் மோகன் பகவத், காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்கள் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபடத்தையும் புகழ்ந்து பேசும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு மோகன் பகவத் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அவர், காங்கிரஸ் மற்றும் அதன் சித்தாந்தம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு சுதந்திரத்துக்கு பாதை அமைத்தது என்றும் நாட்டுக்காக தங்களை அர்பணித்துக்கொண்ட ஏராளமான தலைவர்களை காங்கிரஸ் உருவாக்கி அளித்து, இன்றளவும் நமக்கெல்லாம் இன்ஸ்பிரேஷனாக உள்ளது.

     

    ஒவ்வொரு இந்தியனையும் காங்கிரஸ் இயக்கம் சுதந்திரத்துக்காகப் போராடத் தூண்டியது என்று பேசியுள்ளார். கடந்த மே 22 ஆம் தேதி பேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்ததில் இருந்து வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வரத் தொடங்கியுள்ளது. மோகன் பகவத் பேசிய வீடியோவின் ஒரு பகுதி மட்டுமே இது என்பது குறிப்பிடத்தக்கது

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
    • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சியும் என்டிஏ கூட்டணியின் பாஜக கட்சியும் ஒன்றை ஒன்று கடுமையாக விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் வாக்கு ஜிகாத்தில் ஈடுபடுகிறது என்று பாஜக குற்றம்சாட்டிவரும் நிலையல்ல பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் பேசுகையில், 1976 ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் மாற்றம் செய்யப்பட்டது. அதை இந்திரா காந்திதான் செய்தார்.

     

    ஆனால் இப்போது தேவையில்லாமல், பாஜக அரசியலமைப்பை மாற்றும் என்று இதை தேர்தல் பிரச்சனையாக்க காங்கிரஸ் முயல்கிறது என்று கூறினார். முன்னதாக கடந்த 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் 'சோசியலிச' 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு 'தேசத்தின் ஒற்றுமை' என்ற வாக்கியம், 'தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு' என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை பாஜக ஒழிந்துவிடும் என்ற காங்கிரஸின் விமர்சனம் குறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், இட ஒதுக்கீட்டை ஏன் ஒழிக்கப்போகிறோம்? ஓபிசி,எஸ்.சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு தேவை, ஆனால் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று தெரிவித்தார். 

    • காந்தி’ குடும்பத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.
    • 14 முறை அமேதி பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருக்கிறது.

    அமேதி பாராளுமன்றத் தொகுதி 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது தொடங்கி 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் வரை காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த தொகுதியில் போட்டியிடுவது வழக்கமாக இருந்தது.

    அமேதியில் கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்ட ஸ்மிருதி இரானி (மத்திய மந்திரி) 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்தார்.

    தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் ஷர்மா போட்டியிட உள்ளார். ஏற்கனவே கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்ட ராகுல் காந்தி தற்போது ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட உள்ளார்.

    இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதி பாராளுமன்றத் தொகுதியில் `காந்தி' குடும்பத்தை (ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி) சேர்ந்த ஒருவர் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 1998-ம் ஆண்டு அமேதி தொகுதியில் காந்தி குடும்பத்துக்கு மாற்றாக அவர்களின் சார்பில் சதீஷ் சர்மா நிறுத்தப்பட்டார். அவர் பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் சிங்கிடம் தோல்வியைத் தழுவினார். ஆனால் மீண்டும் 1999-ல் நடைபெற்ற தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சஞ்சய் சிங்கை வீழ்த்தி சோனியா காந்தி வெற்றிபெற்றார்.

    இந்த முறை காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் போட்டியிட்டு பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தி வரலாறு படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முதல் அமேதி தொகுதியை ராகுல் காந்திக்கு விட்டுக்கொடுத்து விட்டு சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடத் தொடங்கினார். இந்நிலையில் 2004, 2009, 2014 என தொடர்ந்து மூன்றுமுறை அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி வாகை சூடி இறுதியாக 2019 தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் வீழ்ந்தார்.

    காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியில் 1967-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வித்யா தர் பாஜ்பாய் வெற்றிபெற்று 1971 தேர்தலிலும் தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்.

    1977 தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை வீழ்த்தி ஜனதா கட்சியைச் சேர்ந்த ரவீந்திர பிரதாப் சிங் வெற்றிபெற்றார். மீண்டும் 1980-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ரவீந்திர சிங்கை சஞ்சய் காந்தி தோற்கடித்தார்.

    வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்தார். இதனால் அமேதி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    இதில் இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி போட்டியிட்டு 84.18 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார்.

    இதன்பிறகு தொடர்ச்சியாக 3 முறை அமேதி தொகுதி எம்பியாக ராஜீவ் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1991-ம் ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அமேதி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மா வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு தேர்தலிலும் அமேதியில் இருந்து அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1998-ம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். அப்போது காங்கிரசுக்கு 31.1 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது அமேதியில் அந்த கட்சி சந்தித்த மோசமான தோல்வி ஆகும்.

    இதன்பிறகு கடந்த 1999-ம் ஆண்டு அமேதி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி 67.12  சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டில் அவர் ரேபரேலி பாராளுமன்றத் தொகுதிக்கு மாறினார்.

    அந்த ஆண்டில் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009, 2014-ம் ஆண்டு அதேதொகுதியில் இருந்து அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம், ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.

    இதுவரை 14 முறை அமேதி பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. 1977, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.

    தற்போதைய பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மீண்டும் அமேதியில் களமிறங்கி உள்ளார்.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டு உள்ளார். இதன் காரணமாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் தேர்தல் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
    • விமானப்படை ஹெலிகாப்டர்களை பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது ஒரு ஊழல் நடைமுறையாகும்

    தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாகேட் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், "ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் விமான படை ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்.

    தேர்தல் பரப்புரைக்காக செல்லும் போது அரசு ஹெலிகாப்டர், விமானத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

    தேர்தல் தேதியை அறிவித்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே தற்போது பிரதமர் மீது விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கிறதா என்பதை பார்க்கலாம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான செய்தியை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "விமானப்படை ஹெலிகாப்டர்களை பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது ஒரு ஊழல் நடைமுறையாகும், இதற்காக 1975 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் இந்திரா காந்தியை அலகாபாத் உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. ஆனால் இன்று மோடி அரசு பணத்தையும், அரசு ஏஜென்சிகளையும், அரசு ஊழியர்களையும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறார்" என்று பதிவிட்டுள்ளார். 

    • ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
    • தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தியுள்ளார்

    தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாகேட் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், "ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் விமான படை ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்.

    தேர்தல் பரப்புரைக்காக செல்லும் போது அரசு ஹெலிகாப்டர், விமானத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "தேர்தல் விதிமீறலை காரணம் காட்டி இதே காரணத்திற்காக தான் 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த அரசு விமானத்தை ஒருவேளை பாஜக வாடகை எடுத்திருக்கலாம். ஆனால் மற்ற தலைவர்கள் அனைவரும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த விவிஐபி ஹெலிகாப்டரை பயன்படுத்தும் போது பிரதமர் மட்டும் விமான படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்துவதற்கான தேவை என்ன என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் தேர்தல் தேதியை அறிவித்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே தற்போது பிரதமர் மீது விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கிறதா என்பதை பார்க்கலாம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை புதுவை அரசு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.

    தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், சதீஷ், செந்தில்வேல், ஆறு முகம், அசோக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    விளையாட்டு வீரர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்க வேண்டிய ஊக் கத்தொகை, உதவித்தொகையை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை புதுவை அரசு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு, நடைபயிற்சி மேற்கொள்ள வருவோரிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது. அவ்வாறான முயற்சிகளை அரசு நடைமுறைக்கு கொண்டு வரக் கூடாது.

    தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் முழு வதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, போதிய காவலாளிகளை பணிக்கு அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

    • இந்திரா காந்தி மிகத் திறமையான நிர்வாகி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர்.
    • நாட்டுக்கான அர்ப்பணிப்பு குறித்து அவர் கற்றுத்தந்த பாடங்களே எனது ஒவ்வொரு அடியையும் வலுப்படுத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளையொட்டி புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது,

    "இந்திரா காந்தி மிகத் திறமையான நிர்வாகி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். அவரது பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    இந்திய மக்களின் தலைவர் இந்திரா காந்தி, நாட்டுக்கான அர்ப்பணிப்பு குறித்து அவர் கற்றுத்தந்த பாடங்களே எனது ஒவ்வொரு அடியையும் வலுப்படுத்தி வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

    ×