என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indira Gandhi"

    • 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.
    • ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது.

    புதுடெல்லி:

    சிலியின் முன்னாள் அதிபரும், மனித உரிமைகளுக்கான உலகளாவிய வழக்கறிஞருமான மிச்செல் பச்லெட்டுக்கு அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான 2024-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார் என டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை அறிவித்திருந்தது.

    மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சிலி அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. சபையின் முதல் பெண் இயக்குநர், மனித உரிமைகளுக்கான ஐ.நா.சபையின் உயர் தூதர், சிலி நாட்டின் அதிபராக 2 முறை பணியாற்றியது போன்ற பணிகளுக்காகவும் அவர் இந்த விருதைப் பெறுகிறார்.

    ரூ.25 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது. 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்திரா காந்தி விருதை மிச்செல் பச்லெட்டுக்கு வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    வெரோனிகா மைக்கேல் பேச்லெட் ஜெரியா என்ற முழு பெயர் கொண்ட பேச்லெட் அமைதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான உறுதியான அர்ப்பணிப்பிற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில், அவர் ஐ.நா.பெண்களின் நிறுவன இயக்குநராக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர், மற்றும் சிலியின் முதல் பெண் அதிபராக இரு முறை பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41-வது நினைவு நாளான இன்று காங்கிரஸ் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • அதே ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
    • இதற்கு இந்திரா காந்தியைக் குறை கூற முடியாது.

    1984 இல் ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே தலைமையிலான பிரிவினைவாதிகள் பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கக்கோரி அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கியிருந்தபடி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தனர்.

    இந்த பிரிவினைவாதிகளை பொற்கோயிலில் இருந்து வெளியேற்றுவதற்காக இந்திரா காந்தி அரசு ஜூன் 1 முதல் ஜூன் 6, 1984 வரை மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் பெயர் தான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.

    இந்த நடவடிக்கையில் பொற்கோவிலுக்குள் புகுந்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பல பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பொற்கோவிலிலும் சேதங்கள் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் சீக்கியர்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்திய நிலையில் இதற்கு பழிவாங்கும் விதமாக, அதே ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான நடவடிக்கை என்றும் அந்த தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரை விலையாக கொடுத்தார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    நேற்று, இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் நடந்த பஞ்சாப் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இலக்கிய விழாவில் பத்திரிகையாளர் ஹரிந்தர் பவேஜா எழுதிய இந்திரா காந்தி படுகொலை பற்றிய புத்தகம் குறித்த விவாதத்தில் சிதம்பரம் கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய அவர், "எந்த ராணுவ அதிகாரியையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை, ஆனால் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடத்தப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.

    ப்ளூ ஸ்டார் ஒரு தவறான அணுகுமுறை, மேலும் அந்த தவறுக்கு இந்திரா காந்தி தனது உயிரை விலையாக கொடுத்தார் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்பது இராணுவம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் சிவில் அமைப்பிகளின் கூட்டு முடிவு. இதற்கு இந்திரா காந்தியைக் குறை கூற முடியாது" என்று கூறினார்.

    மேலும் கலந்துரையாடலின் போது, பஞ்சாபில் காலிஸ்தான் மற்றும் பிரிவினைவாதம் பற்றிய அரசியல் முழக்கங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அங்கு தற்போது உள்ள உண்மையான பிரச்சனை பொருளாதார நிலைமை என்றும் பஞ்சாப் சென்றபோது தான் இதை உணர்ந்ததாகவும் சிதம்பரம் கூறினார்.  

    • கூட்டத்தில் தரூரின் சமீபத்திய அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • 1971-ல் இந்தோ பாக் போரின் போது இந்திரா காந்தி அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து காங்கிரஸின் நிலைப்பாட்டை எதிர்த்ததற்காக எம்.பி. சசி தரூரை காங்கிரஸ் கட்சித் தலைமை எச்சரித்துள்ளது.

    தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த இது நேரமில்லை என்றும், கட்சியின் கருத்துக்களைப் பொதுமக்களிடம் முன்வைக்க வேண்டும் என்றும் தலைமை தரூருக்கு புத்திமதி வழங்கி உள்ளது.

    டெல்லியில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. தரூரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தரூரின் சமீபத்திய அறிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான தனிப்பட்ட முறையில் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கூட்டத்தில் சசி தரூருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பாகிஸ்தானுடன் இந்தியா மோதல், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சண்டை நிறுத்தம் ஆகியவை தொடர்பாக சசி தரூரின் கருத்துக்கள் காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு முரணாக அமைத்திருந்தன.

    1971-ல் இந்தோ பாக் போரின் போது இந்திரா காந்தி அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தார். அதே வேளை தற்போதைய சூழலில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மோடி இணங்கியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

    ஆனால் இந்திரா காந்தி இருந்தபோது நிலைமை வேறு, இப்போது சூழ்நிலை வேறு என்றும், அமெரிக்காவின் அழுத்தம் குறித்தும் காங்கிரசின் கருத்துக்கு முரணான கருத்துக்களை சசி தரூர் ஊடகங்களிடம் கூறினார்.

    மேலும் அண்மைக் காலமாகவே பிரதமர் மோடி, மற்றும் பாஜக அரசு செயல்பாடுகளை புகழும் விதமாக சசி தரூர் பேசி வருகிறார். இதன் பின்னணியிலேயே காங்கிரஸ் சசி தரூரை கண்டித்துள்ளது. 

    • டிரம்ப் தலையீடு குறித்து விவாதிக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
    • மோதலை மேலும் நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை

    பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டுக டிரம்ப் தலையீடு பிரதமர் மோடியின் பலவீனத்தை குறிப்பதாக குற்றம்சாட்டும் காங்கிரஸ், 1971 இல் இந்திரா காந்தி இந்தோ - பாக் போரை கையாண்ட விதம் குறித்து பதிவுகளை பகிர்ந்து வருகிறது.

    மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், இந்த விவகாரத்தில் டிரம்ப் தலையீடு குறித்து விவாதிக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

    இந்நிலையில் இந்த ஒப்பீடு குறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஒரு இந்திய குடிமகனாக, 1971 இல் இந்திரா காந்தியின் செயல்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தற்போதைய நிலைமை 1971-ல் இருந்து வேறுபட்டது. வங்கதேசம் சுதந்திரத்திற்காக தார்மீகப் போராட்டத்தை நடத்திய நாள் அது.

    வங்கதேசத்தை விடுவிப்பது இந்தியாவின் தெளிவான இலக்காக இருந்தது. இன்றைய போராட்டத்தின் குறிக்கோள், பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு அனுப்பியவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதாகும். அதற்கான விலையை அவர்கள் கொடுத்தால் போதும். அந்தப் பாடம் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. மோதலை மேலும் நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.

    • 1972 இந்தோ - பாக் போரில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி பெற்றதை நினைவு கூர்கின்றனர்.
    • வளரும் நாடாக இருப்பதால், நமக்கு வலுவான முதுகெலும்பு உள்ளது,

    இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

    இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில் இந்தியாவின் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. மேலும் 1972 இந்தோ - பாக் போரில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி பெற்றதையும் காங்கிரஸ் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    "வளரும் நாடாக இருப்பதால், நமக்கு வலுவான முதுகெலும்பு உள்ளது. அனைத்து அட்டூழியங்களையும் எதிர்த்துப் போராட போதுமான விருப்பமும் வளங்களும் எங்களிடம் உள்ளன என்று எழுதினார். 3-4 ஆயிரம் மைல்கள் தொலைவில் அமர்ந்திருக்கும் எந்த நாடும் இந்தியர்களுக்கு ஆர்டர்களை வழங்கக்கூடிய காலம் கடந்துவிட்டது. இந்தியா இன்று இந்திரா காந்தியை மிகவும் மிஸ் செய்கிறது! என்று பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ராமேஷ் வெளியிட்ட பதிவில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்து இருப்பது வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் வெளிநாட்டு அழுத்தத்திற்கு பணிந்து போகாத இந்திரா காந்தி பேசிய காணொளிகளும் அவர் குறித்த பதிவுகளும் சமூக வலைதளங்களில் பலராலும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

    • 93,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த பிறகு வங்கதேசம் சுதந்திரம் நாடான அறிவிக்கப்பட்டது.
    • இந்தக் கோட்டை மீறுவதற்கு பலத்தைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்துவதை நாங்கள் தவிர்ப்போம்.

    ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததை அடுத்து சிம்லா ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் ரத்து செய்தது.

    சிம்லா ஒப்பந்தம்:

    1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை மீட்டெடுப்பதையும் உறவுகளை இயல்பாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, சிம்லா ஒப்பந்தம் ஜூலை 2, 1972 அன்று கையெழுத்தானது.

    போரில் இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து, கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து, வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக மாறியது. கிழக்கு பாகிஸ்தானில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த பிறகு வங்கதேசம் சுதந்திரம் நாடான அறிவிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் - இந்தியா போர் நிறுத்தம் ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோவும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது.

    ஒப்பந்தத்தின் முக்கிய விதிகள்:

    டிசம்பர் 17, 1971 அன்று ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டை இரு நாடுகளும்  முன்நிபந்தனைகளும் இல்லாமல் மதிக்கும். இந்தக் கோட்டை மீறுவதற்கு பலத்தைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்துவதை நாங்கள் தவிர்ப்போம் என்ற வாக்குறுதிகள் இதில் அடங்கும்.

    இந்த ஒப்பந்தத்தின்படி, போரின் போது கைப்பற்றப்பட்ட 13,000 சதுர கிலோமீட்டர் நிலம் இந்தியாவிடம் திரும்ப வழங்கப்பட்டது. சிம்லா ஒப்பந்தத்தின்படி காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோடு நிறுவப்பட்டது.

    இந்த வழித்தடத்தை ஒருதலைப்பட்சமாக மாற்ற எந்த முயற்சியும் இருக்காது என்றும் ஒப்பந்தம் கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கும் வரையறுப்பதற்கும் சிம்லா ஒப்பந்தம் ஒரு முக்கிய ராஜதந்திர மைல்கல்லாகக் கருதப்படுகிறது. 

    • மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
    • புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும்  அனுசரிக்கப்பட்டது.

    புதுவை அரசு சார்பில் 100 அடி சாலையில் உள்ள அவரின் சிலைக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது. 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ஆர்.இ.சேகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இந்திராகாந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

    • முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, மாவட்ட செயலாளர் மணி, துணைத்தலைவர் வண்ணை சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் ரசூல் மைதீன், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
    • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்தது

    கரூர்:

    முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி நினைவுநாளை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு, இந்திரா காந்தி திருஉருவப்படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநில சேவா தள செயலாளர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், மாவட்ட சேவா தள தலைவர் தாந்தோணி குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் நாகேஸ்வரன், சின்னையன், நகரத்தலைவர் பெரியசாமி, தெற்கு நகரத்தலைவர் வெங்கடேஷ், கிழக்கு நகரத்தலைவர் சண்முக சுந்தரம் மற்றும் அனைத்து 

    துறை சார்ந்த தலைவர்களும் நிர்வாகிகளுக்கும் கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

    • இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு நடந்தது
    • அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்

    அரியலூர்

    அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜ் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சங்கர், முன்னாள் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் மா.மு.சிவகுமார், பொதுக் குழு உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேகர், வட்டாரத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கர்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து செலுத்தினர். இதே போல், புங்கங்குழி ஆதனூரிலுள்ள இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மாநகர நிர்வாகிகள் சீதாராமன், கரந்தை கண்ணன், ராஜு, செந்தில் சிவகுமார், மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் மணிவண்ணன், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் பொன் நல்லதம்பி, மக்கள் நலப் பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஜெயராமன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சாந்தா ராமதாஸ், மகிளா காங்கிரஸ் கலைச்செல்வி, சிறுபான்மை பிரிவு சாகுல் ஹமீது, செயல்வீரர் அருண் சுபாஷ், ரயில் வடிவேல், ஆசிரியர் முருகேசன், நாஞ்சி ராஜேந்திரன், ரவிக்குமார், அலுவலக நிர்வாகி மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×