search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Observance"

    • தேச பிரிவினை தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் பா.ஜ.க. சார்பில் பாரத தேச பிரிவினை தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் கோசா பெருமாள் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சீனிவாசன், சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் நன்றி கூறினார்.

    மண்டல் பொதுச் செயலாளர் அருண், பாண்டியன் மண்டல் பொருளாளர் ராஜ்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் சோழவந்தான் பகுதியை சேர்ந்த மாநில மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • பொது மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் விளக்கி காட்டப்படும்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்து. மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைக்கும் பணியின்போது உயர்நீத்த 66 தீயணைப்பு வீரர்கள் நினைவாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சந்திரசேகரன், பார்த்திபன் தலைமை தாங்கினர்.

    இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சஹாராணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு நீத்தார் நினைவாக வைக்கப்பட்ட நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் தீ தொண்டு வாரம் நேற்று முதல் ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. பள்ளிகள்,கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிலையம் ஆகிய பொது மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் விளக்கி காட்டப்படும் என்று நிலைய அலுவலர் கூறினார்.

    • மதுரையில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கடைபிடிக்கப்பட்டது.
    • தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இன்று முதல் 8-ந் தேதி வரை ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாடப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    2019-20-ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவுகூறும் வகையில் ''ஆட்சிமொழிச் சட்ட வாரம்" ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இன்று (1-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்படுகிறது.

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள் அரசு அலுவலர்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி நடத்தியும், அரசு அலுவலர்களுக்கு கணினித் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, அரசாணைகள், பிழையின்றி தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கு பயிற்சி அளித்தும், மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்களுடன் பட்டிமன்றம் நடத்தியும், ஒன்றியம், வட்ட அளவில் அரசு பணியாளர்கள், பொதுமக்கள், தமிழ் அமைப்புகளுடன் ஆட்சிமொழிச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்தியும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டா டப்பட உள்ளது.

    தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்துகொள்ள தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரத்தை சிறப்பாக கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தர்மர் எம்.பி. தலைமை தாங்கினார்.

    பரமக்குடி நகர செயலாளர் வின்சென்ட் ராஜா முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்பு ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தனர். அங்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர்-வக்கீல் நவநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் திசை நாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் முத்தரசு, பரமக்குடி நகர ஐ.டி.பிரிவு செயலாளர் ஜாவா பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் லாட.செல்வம், சுரேஷ், வாணியவல்லம் ஊராட்சி மன்ற தலைவர் நாகநாதன், வெங்கலக்குறிச்சி செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிவா தேவன், வர்த்தக அணி செயலாளர் பாபு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் விஜய் கார்த்திக், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பிஆர். செந்தில்நாதன் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

    இதில் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ், நகரச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் தசரதன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்கர் 66-வது நினைவு நாள் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
    • அவரது சிலைக்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 66- வது நினைவு நாள் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிக ழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வையாபுரி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், நகர செயலாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர் ஜவகர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், முன்னாள் நகர செயலாளர் முருகேசன், முத்துக்குமார், பக்கிரிசாமி, விவசாய தொழிலாளர் சங்க நகர செயலாளர் வாசுதேவன் , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்புவனத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சோனைரவி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் மணலூர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், ஒன்றிய பேரவை செயலாளர் பாண்டி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மனோன்மணி மதிவாணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலசந்தர், கிளைச் செயலாளர்கள் மணலூர் பிரபு, ராஜ், பீசர் பட்டினம் ராமசந்திரன், கீழடி சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இளையான்குடி ஒன்றியத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலா ளர்கள் பாரதிராஜன், ஜெகதீசுவரன், கோபி, நகர் செயலாளர் நாகுர்மீரா ஒன்றிய மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஜெயல லிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மானாமதுரை ஒன்றி யத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன் தலைமையிலும் காளையார்கோவில் ஒன்றியத்தில் பஸ்நிலையம் முன்பு ஜெயலலிதா படத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி, மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை இணைச்செ யலாளர் மோசஸ், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை ஓ.பி.எஸ். அணி

    சிவகங்கை அ.தி. மு.க., (ஓ.பன்னீர் செல்வம் அணி) சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்., அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு ஊர்வலமாக வந்து மலர்

    தூவி மரியாதை செலுத்தி னர். நகர் செயலாளர் கே.வி., சேகர், மாவட்ட துணை செயலாளர் என்.எம்., ஜெயச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் சுந்தரபாண்டியன், தொகுதி செயலாளர் நாக ராஜன், நகர் துணை செய லாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    சிவகங்கை

    மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வின் 6-ம் ஆண்டு நினைவு நாள் சிவகங்கை மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது.

    சிவகங்கை நகர அ.தி.மு.க. சார்பில் செயலாளர் என்.எம்.ராஜா.தலைமையில் நிர்வாகிகள் அரண்மனை வாயில் வழியாக மவுன ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் ஒன்றிய செயலா ளர்கள் ஸ்டிபன்அருள்சாமி, செல்வமணி, நகர் அவைத்தலைவர் பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, சக்தி, மாரிமுத்து, கவுன்சிலர்கள் தாமு, ராபர்ட், கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் மோகன், கேபி.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெயலலி தாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.வி. நாகராஜன் மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரன் ஆகியோரது தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

    காந்தி சிலையில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக நடந்து சென்று ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், பேரவை மாவட்ட இணை செயலாளர் சி.எம். முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகர்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிரேம்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ராஜா முகமது, நகர துணை செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய துணை செயலாளர்கள் சின்னையா, ஆறுமுகம், கவுன்சிலர்கள் பழனியப்பன், சையது ராபின் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் நகரில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளரும், ஆவின் சேர்மனுமான கே.ஆர். அசோகன் தலைமையில் நகரச் செயலாளர் முருகேசன்,ஒன்றிய கழக செயலாளர்கள் நாகராஜன், தேவேந்திரன் கணேசன், சிவா, தொகுதி செயலாளர் பத்மநாதன் முன்னிலையில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    அவரது படத்திற்கு மலர் தூவி மவுனஅஞ்சலி செலுத்தியதோடு, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் கல்லல் ஒன்றிய செயலாளர்கள் தென்கரை சுப்பிரமணியன், முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார், விஜயராஜ்,மாவட்ட பேரவை இணைச்செ யலாளர் திருஞானம், திருப்பத்தூர் நகர் நிர்வாகிகள், ராம ராஜன், ஆனந்த்ராஜ், ராமகிருஷ்ணன், மலைச்சாமி, சரவணன், கணேசன், வெள்ளைக்கண்ணு,விஜயா, மோகன் காதர், ஜோதிபாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் படத்திற்கு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ.-முன்னாள் நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் மாவட்ட பேரவை ஊரவயல் எஸ்.பி.ராமு, மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மாவட்ட பேரவை துணை செயலாளர் இயல் தாகூர், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, நகர மகளிரணி செயலாளர் சுலோசனா, வட்ட செயலாளர்கள் சீனிவாசன், சரவணன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் என்.ஜி.ஓ. காலனி மற்றும் பர்மா காலனி பகுதிகளில் ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பி ரமணியன், தேவிமீனாள், ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் நகர செயலாளர் பாலா, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, நிர்வாகி திருஞானம், மாவட்ட பாசறை செயலாளர் அங்கு ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட ஆவின் சேர்மன் கே ஆர் அசோகன் தலைமையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை மற்றும் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

    தேவகோட்டை, காரைக்குடியை தொட ர்ந்து திருப்பத்தூரில் மாவட்ட செயலாளர் தலைமையில் திருப்பத்தூர் நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலா ளர்கள் நாகராஜன் தேவேந்திரன் கணேசன், சிவா, தொகுதி செயலாளர் பத்மநாபன் ஏற்பாட்டில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    இதில் கல்லல் ஒன்றிய செயலாளர்கள் தென்கரை சுப்பிரமணியன், முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார் விஜயராஜ், மாவட்ட பேரவை இணைச்செ யலாளர் திருஞானம் மற்றும் பலர் பங்கேற்றனர். 

    • வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசியகாவலர்தியாகதினம் அனுசரிக்கப்பட்டது.
    • இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசியகாவலர்தியாகதினம் அனுசரிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், இந்தியாவில் 1959-ம்ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி இந்திய-சீனா எல்லையான லடாக்கில் நடந்த மோதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு காவலர்கள் 10 பேர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர். அதனால் அக்டோபர் 21-ந்தேதி தேசியகாவலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    காவலர்களின் பணி, செயல்பாடு, தினசரி கடமைகள், வழக்குப்பதிவுசெய்யும்முறை, விசாரணை, புலனாய்வு, குற்றசெயல்பாடுகளை கண்டறியும் தன்மை, போதைதடுப்பு, சட்ட விதிகளை பின்பற்றும்வழிமுறைகள் பற்றி விளக்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், வாண்டையார், (பயிற்சி) சக்தி கணேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், ஸ்டாலின் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவர்கள் கலந்துகொண்டனர்.

    எழுத்தர் நாகராஜன் நன்றி கூறினார். முன்னதாக வாடிப்பட்டி காவல்நிலையத்தில் பணியின் போது கடந்தஆண்டு இறந்த போலீஸ்காரர் கச்சைகட்டி மகேந்திரன் படத்திற்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • முன்னாள் முதல்வர் ஓமந்தூரர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

     வாடிப்பட்டி

    வாடிப்பட்டி நகர் அரிமா சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் 52-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

    இதில் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் பாலாஜி, வாடிப்பட்டி லயன்ஸ் தலைவர் சிவசங்கரன், முன்னாள் செயலாளர் குருசாமி, முன்னாள் பொருளா ளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

    • கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க உறுப்பினர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மண்டல இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34-வது சங்க அமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் காந்தி ராஜு தலைமை தாங்கினார். சங்க கொடியை மாநில துணைத் தலைவர் மாரியப்பன் ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார்.

    தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு பெற்றோர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் குருசாமி அமைப்பு தினப் பேருரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க உறுப்பினர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • தி.மு.க.வினர் பழையநீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு மவுன ஊர்வலமாக வாடிப்பட்டி பஸ்நிலையம் வந்தனர்.

    வாடிப்பட்டி

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள், வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் அண்ணாசிலை முன்பு மதுரைபுறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கருணாநிதி படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பேரூர் செயலாளர் பால்பாண்டியன், ஒன்றியசெயலாளர் பாலராஜேந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் சேகர், மாநில பொதுக்குழுஉறுப்பினர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மாவட்டதுணைச்செயலாளர் அயூப்கான், பேரூராட்சிதுணைத்தலைவர் கார்த்திக், மதுசூதனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தி.மு.க.வினர் பழையநீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு மவுன ஊர்வலமாக பஸ்நிலையம் வந்தனர்.

    ×