

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 66- வது நினைவு நாள் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிக ழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வையாபுரி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், நகர செயலாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர் ஜவகர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், முன்னாள் நகர செயலாளர் முருகேசன், முத்துக்குமார், பக்கிரிசாமி, விவசாய தொழிலாளர் சங்க நகர செயலாளர் வாசுதேவன் , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.