search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவூரில் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சி
    X

    சேவூரில் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சி

    • ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அவினாசி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • அ.தி.மு.க.சார்பில், ஜெயலலிதா உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    அனுப்புர்பாளையம் :

    அவினாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அவினாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றதுணைத்தலைவர் என்.சின்னக்கண்ணு, கிளாகுளம் ராமன், வடக்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் பேபி, தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்தி, வடக்கு ஒன்றிய மீனவரணி செயலாளர் தினேஷ் குமார், ஒன்றிய இளைஞரணி பாசறை துணை செயலாளர் அய்யாச்சாமி, வார்டு உறுப்பினர்கள் குமரேசன், கார்த்தி, செல்வி, சித்ரா, லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் அவினாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சியிலுள்ள கிராமங்களிலும் அ.தி.மு.க.சார்பில், ஜெயலலிதா உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    Next Story
    ×