என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Parliament attack"
- பாராளுமன்ற மக்களவைக்குள் புகுந்து வண்ண புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர்கள் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருந்த இடத்திற்குள் குதித்து புகைக்குண்டுகளை வீசினர். இதனால் மக்களவை அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தன. பின்னர் எம்.பி.க்கள் மக்களவை பாதுகாவர்களுடன் சேர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதேநேரத்தில் மேலும் இருவர் பாராளுமன்ற வளாகத்திலும் இதேபோன்று தாக்குதலில் ஈடுபட்டனர்.
நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூடுதல் செசன் நீதிமன்ற நீதிபதி ஹர்தீக் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் (மனோரஞ்சன், சாகர் சர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே மகேஷ் குவாவாத் ஆகியோர் "தங்களிடம் வலுக்கட்டாயமாக 70 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புள்ளதாக தொடர்புள்ளதா ஒத்துக்கொள்ளும்படி போலீசார் சித்ரவதை செய்தனர் என்றும் தெரிவித்தனர். இதற்காக தங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டதாகவும் நீதிபதியுடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் பதில் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கின் 6-வது குற்றவாளி நீலம் ஆசாத் ஆவார்.
- பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
- இதனால் இரு அவைகளில் இருந்தும் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பாராளுமன்ற மக்களவையில் இருவர் புகுந்து வண்ண புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது மிகப்பெரிய பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் 146 எம்.பி.க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் "ஜனநாயகத்தை பாதுகாப்போம்" என்ற தலைப்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி. ராசா, சீத்தாரம் யெச்சூரி, மல்லிகார்ஜூன கார்கே, திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் "ஜனநாயகத்தை காப்பாற்ற எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.
#WATCH | At the INDIA bloc protest at Jantar Mantar in Delhi, NCP chief Sharad Pawar says, "We are ready to pay any price to save the democracy..." pic.twitter.com/SPmsuTshcN
— ANI (@ANI) December 22, 2023
உலக ஜனநாயக வரலாற்றில் 146 எம்.பி.க்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டது கிடையாது. ஜனநாயகம் அபாயகரமான நிலையில் உள்ளது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகத்தான் என சசி தரூர் தெரிவித்தார்.
"உள்துறை அமைச்சரிடம் அறிக்கை கேட்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் எங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காமல் பிடிவாதமாக இருந்தது. அதனால் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு எதிர்வினையாக 146 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்" என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
#WATCH | On INDIA bloc protest against mass suspension of MPs, Congress MP Karti Chidambaram says, "It was only natural on the part of the opposition to ask for a statement by the home minister... But the government was adamant in not heeding our request. So there were protests… pic.twitter.com/rWQOL7fOee
— ANI (@ANI) December 22, 2023
இரண்டு இளைஞர்கள் பாராளுமன்ற மக்களவையில் நுழைந்து புகை குண்டுகளை வீசினர். அப்போது பா.ஜனதா எம்.பி.க்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு குளறுபடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் இந்த வழியில் போராட்டம் நடத்துகிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை இல்லாதது என்பதுதான்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
#WATCH | At INDIA bloc protest at Jantar Mantar, Congress' Rahul Gandhi says, "2-3 youth entered Parliament and released smoke. At this BJP MPs ran away. In this incident, there is the question of security breach, but there is another question of why they protested this way. The… pic.twitter.com/ll5K8Sp3gp
— ANI (@ANI) December 22, 2023
#WATCH | Congress President Mallikarjun Kharge and NCP chief Sharad Pawar and leaders of INDIA parties take part in 'Save Democracy' protest against mass suspension of MPs, at Jantar Mantar in Delhi pic.twitter.com/nxslPhTB1V
— ANI (@ANI) December 22, 2023
- பாராளுமன்ற மக்களவையில் இருவர் வண்ண புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
- இது தொடர்பாக இதுவரை ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாராளுமன்ற மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவை எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் இருவர் குதித்து வண்ண புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் புகை குண்டுகள் வீசினார்.
இந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு மூளையாக செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. சதித்திட்டம் தீட்டியது குறித்து வாட்ஸ்அப், சமூக வலைத்தள உரையாடல்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் உயர் போலீஸ் அதிகாரியின் மகனை இந்த வழக்க தொடர்பாக போலீசார் பாகல்கோட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை டெல்லி அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மக்களவையில் தாக்கப்பட்ட டி. மனோ ரஞ்சனின் நண்பர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர்.
வீட்டில் இருந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த எனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை என அவரது சகோதரி தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி போலீசார் வீட்டிற்கு வந்தது உண்மை. எனது சகோதரரிடம் விசாரணை நடத்தினர். நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்ப வழங்கினோம். எனது சகோதரரும் மனோரஞ்சனும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். தற்போது எனது சகோதரர் வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்" என்றார்.
- கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சபையை பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
- இதுவரை மொத்தம் 141 எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதி பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியிலும் ஒரு கும்பல் புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசினார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரச்சனைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது. உடனே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கையில் அமருமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். இதனால் அவையில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது.
இதையடுத்து கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சபையை பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
12 மணிக்கு மீண்டும் சபை கூடியது. அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், சுப்ரியா சுலே, சசிதரூர், மணிஷ் திவாரி, டிம்பிள் யாதவ் உள்பட 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதுவரை மொத்தம் 141 எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே , தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த தி,மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
பாராளுமன்றத்துக்கு வெளியில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்.கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்யாண் பானர்ஜி என்ற எம்.பி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை கேலி செய்யும் வகையில் மிமிக்ரி செய்தார். இந்த செயலுக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கல்யாண் பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
- பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அமித்ஷா விளக்கம் அளிக்க கோரியும், 14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
- 2 மணிக்கு பிறகு அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடந்த வாரம் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 14 எம்.பி.க்கள் எஞ்சிய கூட்டத் தொடர் முழுவதும் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அமித்ஷா விளக்கம் அளிக்க கோரியும், 14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 2 நாட்கள் அவை அலுவல்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
2 தினங்களுக்கு பிறகு பாராளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு பிறகு அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயல்பட்டதாக தி.மு.க. எம்.பி.க்களான டி.ஆர். பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், அண்ணாதுரை, கலாநிதி வீராச்சாமி, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், காங்கிரஸ் எம்.பி.க்களான ஆதிரஞ்சன் சௌத்ரி, திருநாவுக்கரசர், விஜய் வசந்த் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 31 மக்களவை உறுப்பினர்கள் இன்று ஒரே நாளிஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் 15பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 46பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களவையில் இரண்டு பேர் வண்ண புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
- பாராளுமன்ற வளாகத்திலும் இரண்டு பேர் வண்ண புகை குண்டுகளை வீசினர்.
பாராளுமன்ற மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் இருக்கும் இடத்திற்குள் குதித்த இருவர் வண்ண புகை குண்டுகளை வீசினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதிக பாதுகாப்பு நிறைந்த இடத்திற்குள் அவர்கள் எவ்வாறு சென்றனர். இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மக்களவைக்குள் இருவர் செல்ல கர்நாடக மாநிலம் மைசூரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா எனத் தெரியவந்தது.
இவர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது பாஸ் வழங்கிய குற்றவாளி உள்ளே. கேள்வி கேட்ட நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோம் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு போர் புகை குண்டு வீசியவர்கள். ஒருவர் மூளையாக செயல்பட்ட லலித் ஜா. மற்ற இவர்கள் லலித் ஜாவுக்கு உதவியவர்கள்.
டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா மற்றும் அவரது தனி உதவியாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வாக்குமூலம் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்க முடியாது.
- எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்திற்கு வெளியேயும், மக்களவைக்கு உள்ளேயும் வண்ண புகை குண்டு தாக்குதல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு, இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தீர்மானம் நிறைவேற்றி கனிமொழி உள்பட 13 எம்.பி.க்கள் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் பங்கேற்க முடியாது. அதேபோல் மாநிலங்களவையில் ஒரு எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பாராளுமன்ற இரு அவைகளும் வருகிற 18-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட்.
- பிரதமர் மோடி, அமித் ஷா ஏன் மவுனம் காக்கிறார்கள் என கேள்வி எழுப்பி போராட்டம்.
பாராளுமன்றத்திற்கு வெளியேயும், பாராளுமன்றத்தின் மக்களவைக்கு உள்ளேயும் வண்ண புகை குண்டு தாக்குதல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள். இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தீர்மானம் நிறைவேற்று கனிமொழி உள்பட 13 எம்.பி.க்கள் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது. அதேபோல் மாநிலங்களைவில் ஒரு எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது கைகளில் பதாதைகள் ஏந்தி நின்று எதிர்ப்பை தெரிவித்தனர்.
அந்த பதாதைகளில் குற்றவாளிகள் உள்ளே உள்ளனர். பேசியதற்காக நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோம். நாட்டு மக்கள் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். பா.ஜனதா எம்.பி. மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. பிரதமர் மோடி, அமித் ஷா ஏன் மவுனம் காக்கிறார்கள் போன்ற வாசகங்கள் இடம் பிடித்திருந்தனர்.
பின்னர் பாராளுமன்ற நுழைவாயில் படிக்கட்டில் நின்று போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், பாராளுமன்ற இரு அவைகளின் காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவருமான சோனியா காந்தி போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
- பலத்த 4 அடுக்கு பாதுகாப்பை மீறி அவர்கள் பாராளுமன்றத்துக்குள் புகை தாக்குதல் நடத்தியது மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது.
- பாராளுமன்ற புகை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிக்கொடுத்தது லலித் மோகன் ஜா என்பவர்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சாகர் சர்மா, மனோ ரஞ்சன் என்ற 2 இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து மஞ்சள் நிற புகைக்குண்டு வீச்சு நடத்தினார்கள். பலத்த 4 அடுக்கு பாதுகாப்பை மீறி அவர்கள் பாராளுமன்றத்துக்குள் வண்ண புகை குண்டு தாக்குதல் நடத்தியது மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது.
பாராளுமன்றத்துக்குள் புகை தாக்குதல் நடந்த அதே நேரத்தில் நீலம் தேவி என்ற பெண்ணும், அமோல் ஷிண்டே என்ற வாலிபரும் பாராளுமன்ற வளாகத்தில் புகைக்குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை போலீசார் மேலும் விசாரணைக்காக 7 நாள் காவலில் எடுத்து உள்ளனர்.
இதற்கிடையே பாராளுமன்ற புகை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிக்கொடுத்தது லலித் மோகன் ஜா என்பவர்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இவர் அங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்தான் முக்கிய குற்றவாளி ஆவார். பாராளுமன்றத்தில் புகை குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டங்களை வடிவமைத்து கொடுத்தது இவர்தான்.
குற்றவாளிகள் தாக்குதலுக்கு பயன்படுத்திய பிரத்தியேக ஷூவை இவர்தான் லக்னோ சென்று தயாரித்து வாங்கி வந்துள்ளார். மேலும் குற்றவாளிகள் குருக்கிராமில் தங்கி இருக்கவும், புகை குண்டு குப்பிகள் வாங்கவும் இவர்தான் ஏற்பாடு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக பாராளுமன்ற புகை குண்டு தாக்குதலில் லலித் மோகன் ஜா முக்கிய குற்றவாளி என்பது உறுதியானது. தாக்குதல் நடந்தபோது அவரும் பாராளுமன்ற வளாகத்தில்தான் இருந்தார். நீலம் தேவியும், அமோல் ஷிண்டேவும் பாராளுமன்ற வளாகத்தில் புகை குண்டுகளை வீசிய போது அதை செல்போனில் லலித் மோகன் ஜா படம் பிடித்தார்.
பாதுகாவலர்களிடம் இருந்து மிகவும் லாவகமாக அவர் தப்பி சென்று விட்டார். அவரை பிடிக்க டெல்லி முழுக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. கைதான குற்றவாளிகள் 4 பேரின் செல்போன்கள் லலித் மோகன் ஜாவிடம் இருப்பது தெரிய வந்தது.
எனவே அவரை கைது செய்தால்தான் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என்று கருதப்பட்டது. இந்தநிலையில் நேற்று இரவு லலித் மோகன்ஜா டெல்லி போலீசாரிடம் சரண் அடைந்தார். டெல்லியில் உள்ள பாத் ஆப் டியூட்டி என்ற போலீஸ் நிலையத்தில் அவர் சரணடைந்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசார் அவரை பாராளுமன்ற தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து லலித் மோகன் ஜாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டதும் லலித் மோகன் ஜா பஸ்சில் ராஜஸ்தானுக்கு தப்பி சென்றிருக்கிறார்.
அங்கு அவர் நகுர் என்ற பகுதியில் தனது 2 நண்பர்களுடன் ஓட்டலில் தங்கி இருக்கிறார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் போலீசார் தன்னை நெருங்குவதை உணர்ந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்துதான் அவர் டெல்லிக்கு திரும்பி வந்து சரணடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து முக்கிய குற்றவாளி லலித் மோகன் ஜாவுக்கு உதவி செய்த 2 நண்பர்கள் பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அந்த 2 பேரும் மகேஷ், ராகேஷ் என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முக்கிய குற்றவாளி லலித் மோகன் ஜாவும் பாராளுமன்றத்துக்குள் புகைக்குண்டு வீசி தாக்கும் திட்டத்துடன் வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்காததால் அவர் உள்ளே செல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது.
கொல்கத்தாவில் அவருக்கு நெருக்கமானவர்கள் யார்? யார்? என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஒருவருடன் அவர் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
லலித் மோகன் ஜாவை இயக்கியது யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக உள்ளனர். அவருக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆவணங்களை சேகரிக்கும் முயற்சிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளி லலித் மோகன் ஜா சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் மீது மிகுந்த பற்று கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. பகத்சிங் போன்று நாட்டுக்காக புரட்சி செய்ய வேண்டும் என்று அவர் முகநூலில் பதிவுகளை வெளியிட்டு ஆதரவு பெற்ற தாகவும் தெரியவந்துள்ளது.
லலித் மோகன் ஜா என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்றில் பொதுச்செயலாளராக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த அமைப்பின் தலைவருக்கு அவர் பாராளுமன்ற தாக்குதல் முடிந்ததும் தகவல்கள் அனுப்பி இருக்கிறார். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அந்த தகவலில் அவர் கூறி இருக்கிறார்.
இதனால் பாராளுமன்ற தாக்குதல் சதி திட்டத்தில் கொல்கத்தாவை சேர்ந்த மேலும் சிலர் தொடர்பில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் லலித் மோகன் ஜா ராஜஸ்தானுக்கு தப்பி சென்றபோது தன்னுடன் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து சென்றுள்ளார்.
அந்த ஆவணங்களை அவர் தீவைத்து எரித்து இருப்பதாக விசாரணைக் குழுவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட சாகர் சர்மா, மனோ ரஞ்சன், நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய 4 பேரின் செல்போன்களை அவர் தீ வைத்து முழுமையாக எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து குற்றவாளிகளிடம் வேறு கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- நேற்று அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
- இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் இருவர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர். இது பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு மக்களை சபாநாயகர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் நேற்று முதல் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 14 எம்.பி.க்கள் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாநிலங்களவையில் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியதும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் அதே விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கூச்சலிட்டனர். அவைத் தலைவர்கள் சமாதானப்படுத்தியும் அவர்கள் கூச்சலை நிறுத்தவில்லை. இதனால் அவைகள் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவைத் தலைவர்கள் தன்னுடைய அறையில் சந்திக்குமாறு சேர்மன் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
- பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!
- பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது.
சென்னை:
பாராளுமன்றம் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்ட தமிழக எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சுப்பராயன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே!
பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!
அவையில் மட்டுமல்ல..
பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது.
ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமைசேர்க்கலாம்.
இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே!
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 15, 2023
பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!
அவையில் மட்டுமல்ல..
பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது.
ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும்… pic.twitter.com/sFoQFl7kqV
- வண்ண புகை குண்டு வீச்சு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
- உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற மக்களவையில் இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம், பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு வெளிச்சம் போட்டு காட்டியது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கூச்சலிட்டனர்.
இதன்காரணமாக சபாநாயகர் மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 13 எம்.பி.க்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்தது. இவர்கள் அனைவரும் இந்த குளிர்கால தொடரில் மீதமுள்ள நாட்களில் கலந்து கொள்ள முடியாது.
சபாநாயகர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியலில் திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் நேற்று மக்களவை நடைபெற்றபோது பார்த்திபன் கலந்து கொள்ளவில்லை. அவர் டெல்லியிலே இல்லை எனக் கூறப்பட்டது.
மக்களவையில் கலந்து கொள்ளாத எம்.பி. மீது சஸ்பெண்ட் நடவடிக்கையா? என குழப்பம் நிலவியது. பின்னர், தவறாக அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் திரும்பப்பெற்றார்.
இதனால் சிறிது நேரம் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து ஜோஷி கூறுகைளில் "நான் தவறுதலாக அடையாளம் கண்டும் சபாநாயகருக்கு எம்.பி.யின் பெயரை தெரிவித்து வேண்டுகோள் விடுத்துவிட்டேன்" எனத் தெரிவித்தார்.
மக்களவையில் 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ-பிரைன் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்