search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Economic growth"

    • பிரதமர் நரேந்திர மோடி அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு வெளியாகி இருக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு விவேகானந்தர் பாறைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

    நாளை (ஜூன் 1) மாலை வரை விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தியானத்திற்கு இடையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு வெளியாகி இருக்கிறது.

    அதில், "அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ரெமல் புயல் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டது. எனது எண்ணமும், பிரார்த்தனையும் அங்கு பாதிக்கப்பட்டோருடனேயே உள்ளது. அங்குள்ள கள சூழல் குறித்து கேட்டறிந்தேன். மத்திய அரசு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்ததோடு, அங்குள்ள கள நிலவம் குறித்தும் கேட்டறிந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்," என குறிப்பிட்டுள்ளார்.


    மற்றொரு பதிவில், "2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி நமது பொருளாதாரத்தை பெருமளவு வளர்ச்சியடைய செய்யும் என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் கடின உழைப்பாளிகளுக்கு நன்றி, 2023-24 காலக்கட்டத்தில் நாட்டின் 8.2 சதவீத வளர்ச்சி உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியதை போன்றே இவை அனைத்தும், எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் தான்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது. #india #Richest
    லண்டன்:

    சர்வதேச முகவாண்மை நிறுவனமான ‘பி.டபிள்யூ.சி.’ உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது. உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    அதன்படி நடப்பு 2019-ம் ஆண்டில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 7-வது இடத்தில் இருந்த இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    இதன்மூலம் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸ் 6-வது இடத்தை பெற்றுள்ளது.


    இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். அதனால் மக்களின் உழைப்பு காரணமாக உற்பத்தி திறன் அதிகரித்து பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக பி.டபிள்யூ.சி. தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி நிரந்தரமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்தும், பிரான்சும் முறையே 5 மற்றும் 6-வது இடத்தில் இருந்தன. தற்போது ‘பிரக்ஸிட்’ பிரச்சனையில் இங்கிலாந்து உள்ளது. இதனால் பவுண்டு மற்றும் யூரோ நாணயங்களுக்கு இடையேயான மதிப்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

    2 நாடுகளுமே சமமான மக்கள் தொகையை கொண்டது. இருந்தாலும் நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக இங்கிலாந்தை 7-வது இடத்துக்கு தள்ளிவிட்டு 6-வது இடத்திலேயே பிரான்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது.

    பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றத்துடன் அமெரிக்கா பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2-வது இடத்திலும், ஜப்பான், ஜெர்மனி தலா 3 மற்றும் 4-வது இடத்தில் உள்ளன. #india #Richest
    பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பாக பா.ஜனதாவினரின் கொண்டாட்டத்தை முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். #BJP #PChidambaram
    புதுடெல்லி:

    இந்திய பொருளாதாரம் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் 7.1 சதவீத வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது. அத்துடன் சீனாவை விட வேகமான வளர்ச்சியை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

    ஆனால் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பாக பா.ஜனதாவினரின் கொண்டாட்டத்தை முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.


    இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்தது போலவே முதல் காலாண்டை விட இரண்டாவது காலாண்டில் 1 சதவீதம் குறைந்து இருக்கிறது. குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதுவும் இல்லாத போது இதில் கொண்டாட்டத்துக்கு எந்த அவசியமும் இல்லை. எதிர்பாராத அதிர்ச்சிகள் எதுவும் இல்லையென்றால் அக்டோபர்-டிசம்பர் மற்றும் ஜனவரி-மார்ச் ஆகிய காலாண்டுகளிலும் இதைப்போன்ற வளர்ச்சியே இருக்கும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இந்திய பொருளாதாரத்தின் புதிய வழக்கமான வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருப்பதாக கூறியுள்ள ப.சிதம்பரம், அந்தவகையில் 2018-19-ம் நிதியாண்டு ஒரு வழக்கமான ஆண்டாகவே இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளார். #BJP #PChidambaram
    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கையே காரணம் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #Modi #PMModi #PonRadhakrishnan
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற முதல் இதுவரையில் பொருளாதார வளர்ச்சி அடைந்து இருக்கிறது. பொருளாதார தவறுகளை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. தற்போது பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது.

    மோடி அரசில் வாகனங்கள், விவசாயம், தொழிற் உற்பத்தி, தொழில்முனைவோர் முன்னேற்றம், தொழில் தொடர்பான வாகனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை. உலகளவில் நம்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இதற்கு காரணம் பிரதமர் மோடியின் துணிச்சலான தேச பக்தியான நடவடிக்கைகள்தான்.

    மகாராஷ்டிராவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு ராகுல்காந்தி உள்பட மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மகாராஷ்டிரா உயர் போலீஸ் அதிகாரி, ஆயிரக்கணக்கான ஆவணங்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளார்.

    அவர்கள் பயங்கரவாதிகள் திரைமறைவில் இருந்து சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறவர்கள். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொலை செய்யும் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.



    இப்படிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணை போகின்ற மாதிரி அவசரப்பட்டு ராகுல்காந்தி உள்ளிட்ட மற்ற கட்சியினர் அறிக்கை வெளியிடக்கூடாது. இன்று வரை ராஜீவ் காந்தி படுகொலை பற்றி பேசி வருகிறோம்.

    அதே போல ஒரு கொலை மீண்டும் நடக்க வேண்டுமா? அதற்கு எந்த முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

    1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தியை எந்த வழியில் கொலை செய்தார்களோ அதே வழிமுறையை பின் பற்றி பிரதமர் மோடியை கொலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் அறிக்கைகள் இப்படிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணையாக அமைந்து விடும்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது ராஜீவ் காந்தி கொலை உள்பட பல சம்பவங்கள் நடந்தது. அதுபோல இந்த ஆட்சியிலும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்ககூடாது.

    ஆந்திர மாநிலத்தில் செம்மர கடத்தலில் தமிழர்கள் சுட்டு கொல்லப்படுவது குறித்து தமிழக அரசு முறையாக கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Modi #PMModi #PonRadhakrishnan
    ×