என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NITI Aayog"

    • அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.
    • மே 26, 2014 அன்று, நான் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன்.

    உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    கடந்த சனிக்கிழமை, ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் தெரிவித்தார்.

    நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுப்ரமணியம், இந்தியாவின் பொருளாதாரம் இப்போது 4 டிரில்லியன் டாலர் மதிப்புடையது என்றும், அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.

    இந்நிலையில் இன்று குஜராத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, "மே 26, 2014 அன்று, நான் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன்.

    அப்போது, இந்தியாவின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. இன்று, இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.

    இப்போது நாம் ஜப்பானை விஞ்சிவிட்டோம் என்பது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். ஆறாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியபோது, நாடு முழுவதும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட உற்சாகத்தை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். காரணம், 250 ஆண்டுகளாக நம்மை ஆண்ட ஐக்கிய இராஜ்ஜியத்தை இந்தியா முந்தியது" என்று தெரிவித்தார்.

    • முதல்வர் ஸ்டாலின், இம்முறை மட்டும் ஏன் நிதிஆயோக் கூட்டத்திற்கு செல்ல வேண்டும்?
    • எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்

    பாஜகவுடன் மறைமுக கூட்டணி என்பதால் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு முன்வரிசை கொடுக்கப்பட்டுள்ளது என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத்தை ஆளுகின்ற ஊழல் கபடதாரி தி.மு.க. அரசியல் எதிரி என்றும், ஒன்றியத்தை ஆளுகின்ற பிளவுவாத பா.ஜ.க. கொள்கை எதிரி என்றும் தீர்க்கமாக அறிவித்திருந்தோம். ஆட்சியில் இருக்கும் இவ்விரு கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் வருகிறோம்.

    அ.தி.மு.க. பா.ஜ.க. இடையே பழைய கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போதே. தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உள்ள மறைமுகக் கூட்டணி பற்றியும் நாம் தெரிவித்திருந்தோம். அதே போல், ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது. உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டால், அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தோம். அதையும் நிரூபிப்பது போலவே அமைச்சர்கள் பலரைத் தொடர்ந்து தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் டெல்லிப் பயணம் அமைந்துள்ளது.

    டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டைத் தொடர்ந்து, சமீபத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் தி.மு.க. தலைமையின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களின் இடாங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

    இதற்கிடையே, டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையையும் வாங்கியது. எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்பதால், எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு, வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தள்ளப்பட்டார். அதற்கேற்றாற்போல அமைந்ததுதான் நிதி ஆயோக் கூட்டம்.

    சென்ற ஆண்டு இதே நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடந்தபோது அக்கூட்டத்துக்குச் செல்லாமல், தான் செல்லாததற்கான காரணங்களை அடுக்கி, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு வீடியோ வெளியிட்டார். அப்போது சொன்ன காரணங்கள். இப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும்? எல்லாவற்றுக்கும் காரணம் அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்!

    என்றைக்கு இருந்தாலும் அமலாக்கத் துறை நடவடிக்கை. காலைச் சுற்றும் பாம்பு என்பதை உணர்ந்த முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ரூ.1000 கோடி ஊழல் தோண்டி எடுக்கப்பட்டால் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் இந்த முறை. நிதி ஆயோக் கூட்டத்தைக் காரணமாக வைத்து டெல்லி சென்றார். பிரதமரையும் வேறு தனியாகச் சந்தித்தார்.

    உண்மையிலேயே அந்தச் சந்திப்பில், அமலாக்கத் துறை சோதனைகள், வழக்குகள் தொடர்பாகவும் தன் குடும்பத்திற்காகவும் ஒன்றிய அரசின் பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என்று தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் மனசாட்சியுடன் வெளிப்படையாகக் கூற முடியுமா?

    அது மட்டுமின்றி, தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தங்களிடம் தஞ்சம் அடையத்தான் வருகிறார் என்பது தெரிந்தும், தி.மு.க.வை அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக எதிர்ப்பது உண்மையெனில், பா.ஜ.க.வால் எப்படி இவர்களைக் கொஞ்சிக் குலாவி வரவேற்க இயலும்? நாம் ஏற்கெனவே சொன்னது போல, இதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் உள்ள மறைமுகக் கூட்டின் வெளிப்பாடு.

    இச்சூழலில், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதை உற்று நோக்கினாலே பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படும். அந்தப் புகைப்படத்தில்,

    பா.ஜ.க.வுடன் வெளிப்படையான கூட்டணியில் இருக்கும் ஆந்திர முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் ஒருபுறம் முன்வரிசையில் நிற்கிறார். அதே முன்வரிசையில் இன்னொரு புறம். தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நிற்கிறார். இதற்கு என்ன பொருள்? ஒருவருக்கு வெளிப்படைக் கூட்டணி என்பதால் முன்வரிசை. இன்னொருவருக்கு மறைமுகக் கூட்டணி என்பதால் முன்வரிசை. இதுதானே உண்மை?

    இது சாதாரண நிகழ்வு போலத் தோற்றம் கொண்டதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும், தி.மு.க பா.ஜ.க. இடையிலான மறைமுகக் கூட்டும் பேர அரசியலும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது. இதுவே இதன் பின் இருக்கும் மிகப் பெரிய உண்மை.

    ஒன்றிய பா.ஜ.க அரசின் வஞ்சிக்கும் போக்கைக் கண்டித்து, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை நிராகரித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். 

    • அரசியல் உள் நோக்கத்தோடு விமர்சிக்கும் போது எதையும் காரணமாக சொல்லலாம்.
    • யுபிஎஸ்சி தேர்வு மையங்களில் ஆங்கில அறிவிப்பு இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    திருச்சி:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏற்கனவே நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை.

    தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை கேட்டு பெறவும், நிலுவையில் இருக்கக்கூடிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியது முதலமைச்சருக்கு இருக்கக் கூடிய பொறுப்பு, கடமை.

    பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு கவர்னர் மூலமாக நெருக்கடி தருவது என்பதை தாண்டி, அந்த மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தருவதில்லை. ஒரு தேக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. திட்டமிட்டே இதை செய்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தவறுவதால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை தர மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். இது ஒரு எதேச்சதிகாரப் போக்கு. இவ்வாறு தடுத்து வைத்திருப்பதை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

    இது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறை. இதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுடையது. அரசியல் உள் நோக்கத்தோடு விமர்சிக்கும் போது எதையும் காரணமாக சொல்லலாம்.

    பா.ஜ.க., தி.மு.க.வோடு நெருங்கி விடக்கூடாது. நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதட்டம் அ.தி.மு.க.விடம் வெளிப்படுகிறது. தி.மு.க. மதச்சார்பற்ற கூட்டணியை தலைமை தாங்கி நடத்தும் போது அத்தகைய வரலாற்று பிழையை செய்யாது என்பது தமிழக மக்கள் உணர்ந்த உண்மை. அது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும், ஆனால் தி.மு.க. மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார். கீழடி ஆய்வறிக்கை என்பது கற்பனையான ஒன்று அல்ல. அதில் என்ன ஐயம் இருக்கிறது என்றால் அவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

    அவ்வாறின்றி அதனை திருப்பி அனுப்பி திருத்தம் செய்து அனுப்புங்கள் என்று சொல்வது எந்த அளவிற்கு தமிழர் தொன்மை குறித்த புரிதலில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

    தமிழர்கள் சாதியற்றவர்கள், மதமற்றவர்கள் என்பதை உலக மாந்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் தனி திறன் பெற்றவர்கள் என்பதற்கான பல்வேறு தரவுகள் கிடைத்து வருகிறது. அதற்கு கீழடி முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வட இந்திய புராணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    ஒரு மொழி, ஒரு நாடு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்புடையது அல்ல. யுபிஎஸ்சி தேர்வு மையங்களில் ஆங்கில அறிவிப்பு இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு, மாநில, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • வளர்ச்சிக்கான வேகத்தை நாம் அதிரிக்க வேண்டும்.
    • விக்சித் பாரத் என்ற இலக்கு ஒவ்வொரு இந்தியனின் இலக்கு.

    பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்ட நிதி ஆயோக்கின் 10ஆவது நிர்வாகக் கவுன்சில் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வளர்ச்சிக்கான வேகத்தை நாம் அதிரிக்க வேண்டும். டீம் இந்தியா போன்று மாத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. விக்சித் பாரத் என்ற இலக்கு ஒவ்வொரு இந்தியனின் இலக்கு. ஒவ்வொரு மாநிலமும் விக்சித் ஆகும்போது, பாரத் விக்சித் ஆகும். இது 140 கோடி மக்களின் விருப்பமாகும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
    • நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புறக்கணித்தனர்.

    நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. 10-வது முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புறக்கணித்தனர்.

    இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று மாலை 4.30 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

    பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் மாலை 6.30 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

    • நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    • தமிழக தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. 

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. 10-வது முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் இந்த கூட்டத்தில்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழக தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இன்று பிற்பகல் நிதி ஆயோக் கூட்டத்தின் இடைவெளியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

    டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை சில மாநில முதல்வர்கள் புறக்கணித்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புறக்கணித்தனர்.

    • நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
    • முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். அவர் நிதி பொறுப்பையும் வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார்.

    இந்த கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்கும்போதெல்லாம், அப்புறம் சொல்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே கூறி வந்தார்.

    ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை.

    அவர் டெல்லி செல்ல விமானத்தில் டிக்கெட் எதுவும் முன்பதிவு செய்யப்படவில்லை. நேற்று அவர் புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது பா.ஜ.க. கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • மாநில மற்றும் யூனியன் பிரதேச மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    • விக்சித் பாரத் 2047 திட்டத்திற்காக மாநிலங்கள் மீது கவனங்கள் செலுத்தக்கூடிய விசயங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்படும்.

    பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச மாநில முதல்வர்கள் மற்றும் மத்தயி அமைச்சர்கள் கலந்த கொள்கிறார்கள்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் முதல் ஆலோசனைக் கூட்டம் ஆகும்.

    இந்த கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டும் முதல் கூட்டம் நடைபெற்றது. நாளை நடைபெறுவது 10ஆவது கூட்டம் ஆகும்.

    விக்சித் பாரத் 2047 திட்டத்திற்காக மாநிலங்கள் மீது கவனங்கள் செலுத்தக்கூடிய விசயங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

    • கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
    • நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாக குழுக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    முந்தைய ஆண்டுகளில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்க இருக்கிறார்.

    இதற்காக அவர் இன்று காலை 9.50 மணியளவில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், முதலமைச்சரின் செயலாளர் சண்முகம் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

    விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், மயிலை த.வேலு, பிரபாகரராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், மேயர் பிரியா, அறிவாலயம் தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் புழல் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

    பகல் 1.15 மணியளவில் டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் மேளதாளங்கள் முழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லம் சென்றடைந்தார். அங்கு தங்கி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்குமாறு பேச உள்ளார்.

    தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதியை தருமாறு வலியுறுத்துவதுடன் பேரிடர் நிவாரண நிதி, திட்டங்களுக்கான கூடுதல் நிதி கேட்டும் வற்புறுத்துவார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தமிழ கத்துக்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த உள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழகத்துக்கான நிதியை போராடி பெறுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

    டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை இன்று மாலை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதே போல் நாளை நிதி ஆயோக் கூட்டம் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளதால் அங்குள்ள கூட்ட அரங்கில் நேரம் கிடைக்கும் போது பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அது மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

    நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



    • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் 10-வது நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    நிதி ஆயோக் 10-வது நிர்வாக குழுக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் 10-வது நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை சந்திக்கிறார். மேலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய பிரதமரை சந்தித்து வலியுறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.
    • கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். அதில், மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க. ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! என்று விமர்சித்து இருந்தார்.

    இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!

    சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

    "பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?

    இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!

    இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.

    கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்! என்று கூறியுள்ளார். 

    • நிதி ஆயோக்கின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது.
    • டெல்லியில் வரும் 24-ந்தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.

    தேசிய வளர்ச்சியில் மாநிலங்களின் தீவிர ஈடுபாடு, கூட்டாட்சியை வளர்ப்பது, அரசின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் உள்பட பல்வேறு நோக்கங்களுக்காக நிதி ஆயோக் அமைப்பு 2015-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.

    நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதில் பங்கேற்காத நிலையில், மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஆனால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என்றும் அதற்கு மேல் பேசும்போது மைக் அணைக்கப்பட்டது என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதான் கூட்டாட்சி தத்துவமா? முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை பா.ஜ.க. அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று கண்டித்தார்.

    டெல்லியில் வரும் 24-ந்தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்.

    இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    23-ந்தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது.

    ×