search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Niti Aayog"

    • வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் கடன் சுமை குறைவு
    • வர்த்தக நிறுவனங்களின் முடிவெடுக்கும் திறனை பயங்கரவாதம் பாதிக்கிறது

    நாட்டின் பொருளாதார சிந்தனையை வகுக்க உதவும் அமைப்பான "நிதி ஆயோக்", இந்திய நிதித்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கவுடில்யா பொருளாதார சந்திப்பு (Kautilya Economic Conclave) எனும் பொருளாதார நிபுணர்களின் சந்திப்பு கூட்டம் இந்திய தலைநகர் புது டெல்லியில் நடைபெற்றது.

    இதில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டின் மொத்த கடன் தொகையை குறைக்க வழி தேடுகிறோம். கடனை குறைக்க, வளர்ந்து வரும் நாடுகள் கடைபிடிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். நமது நாட்டு கடன் தொகையை குறைத்தாக வேண்டியது கட்டாயம். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கடன் அதிகம் அல்ல. ஆனாலும் எதிர்கால சந்ததியினர் இதன் தாக்கத்தை அனுபவிக்காத வகையில் பொறுப்புணர்ச்சியுடன் நாம் நடந்து கொள்ள வேண்டும். இந்த திசையில் தற்போது அரசாங்கத்தின் முயற்சிகள் சீராக்கப்பட்டு வருகிறது. நிச்சயம் இதை குறைத்து விடுவோம் என நம்புகிறேன். ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு, உலக வர்த்தக நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் செயல்திறனும் பயன்பாடும் குறைந்து வருகிறது. போர்கள் மற்றும் நாடுகளுக்கு இடையேயான சச்சரவு மற்றும் பயங்கரவாதம், நிறுவனங்கள் நீண்ட கால வர்த்தக முடிவுகளை எடுப்பதை தடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மார்ச் மாத இறுதி வரை உள்ள தரவுகளின்படி, மத்திய அரசாங்கத்தின் கடன் ரூ.155.6 டிரில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கடனும், அதை அடைப்பதற்கான அதிக செலவினங்களும், 'கிரெடிட் ரேட்டிங்' எனப்படும் வாங்கும் கடனை திருப்பி அடைக்கும் திறனுக்கான தர வரிசை பட்டியலில் இந்தியாவை முன்னேற முடியாமல் தடுக்கிறது.

    • மாநிலங்கள் நிதி ரீதியாக விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
    • தமிழகம், மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 11 மாநில முதல் மந்திரிகள் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

    புதுடெல்லி:

    நிதி ஆயோக் அமைப்பின் எட்டாவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான பொதுவான பார்வையை உருவாக்க வேண்டியது அவசியம் என்றார். மாநிலங்கள் நிதி ரீதியாக பலமானதாகவும், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகவும் இருக்கும் வகையில் நிதி ரீதியாக விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். 

    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்
    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்

    கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் உத்தரபிரதேசம், அசாம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். தமிழகம், மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 11 மாநில முதல் மந்திரிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

    • இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
    • இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    புதுடெல்லி :

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக 'நிதி ஆயோக்' என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். துணைத்தலைவராக சுமன் பெரி இருக்கிறார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இது பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி நடைபெற்றது.

    இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம், வரும் 27-ந் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மாநிலங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கு இலக்கு வைத்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கூட்டு நடவடிக்கை மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    • ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை என பிரதமர் வலியுறுத்தல்

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று நிதி ஆயோக்கின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவடைதல், தேசிய கல்வி கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 23 மாநில முதல்-மந்திரிகள், 3 துணைநிலை கவர்னர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய மந்திரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப முக்கிய பங்காற்றியது. இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதற்கு வழி வகுத்தது. ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்தவும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறவும் இது முக்கியமானது.

    மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத் துறையை நவீனமயமாக்க வேண்டும். அதன்மூலம் விவசாயத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைய முடியும், உலக அளவில் முன்னணியில் இருக்க முடியும். எளிதான வாழ்க்கை, வெளிப்படையான சேவை வழங்குதல் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் விரைவான நகரமயமாக்கல் பலவீனத்திற்குப் பதிலாக இந்தியாவின் பலமாக மாறும். சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • நிதி ஆயோக்கின் அதிகாரம் மிகுந்த அமைப்பான ஆட்சி மன்றக்குழு ஆண்டுதோறும் கூடுகிறது.
    • தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    புதுடெல்லி :

    நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார்.

    நிதி ஆயோக்கின் அதிகாரம் மிகுந்த அமைப்பான ஆட்சி மன்றக்குழு ஆண்டுதோறும் கூடுகிறது. பிரதமர், மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் மற்றும் பல்வேறு மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சிலின் 7-வது கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடக்கிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப்பின் முதல் முறையாக நேரடியாக நடைபெறும் இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் மாநில முதல்-மந்திரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் பயிர் பல்வகைப்படுத்தல், பருப்பு மற்றும் எண்ணெய் வித்து உற்பத்தியில் தற்சார்பு, புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 'ஒரு நிலையான மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான உந்துதலில், மத்திய மற்றும் மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்தை நோக்கி ஒருங்கிணைக்க இந்த கூட்டம் வழி வகுக்கும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடத்தும் நாடாகவும், தலைவராகவும் இந்தியா இருக்கும் நிலையில், இந்த திட்டங்களில் மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    கொரோனா தொற்று பின்னணியில் நாட்டு விடுதலை நூற்றாண்டுக்கு முந்தைய 25 ஆண்டுகளில் நுழையும் இந்த காலகட்டத்தில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்கள் மீதான மத்திய அரசின் தற்போதைய பாரபட்சமான போக்கை கண்டிக்கும் வகையில் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.

    வலுவான மற்றும் பொருளாதார ரீதியில் துடிப்பான மாநிலங்கள் மட்டுமே இந்தியாவை வலுவான நாடாக மாற்ற முடியும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

    அதேநேரம் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உறுதி உள்பட பல்வேறு பிரச்சினைகளை இந்த கூட்டத்தில் எழுப்ப போவதாக தெரிவித்தார்.

    • தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
    • மத்திய மந்திரிகள், மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

    நிதி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.

    வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் முதல் முறையாக தற்போது இந்த கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோகின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய மந்திரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்திற்கு எதிராக நிதி ஆயோக் துணைத் தலைவர் பேசியது தேர்தல் விதிமீறல் என தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #NitiAayog #RajivKumar
    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி அளிப்பு திட்டத்தின்கீழ் (நியாய்) மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி கொடுத்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இந்த திட்டம் இடம்பெற்றிருந்தது.

    இந்த திட்டத்தை மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் விமர்சனம் செய்தார். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று கூறிய அவர், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நிலாவை தருவேன் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளிக்கும் என்றும் டுவிட்டர் மூலம் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

    காங்கிரசால் முன்மொழியப்பட்ட இந்த வருமான உத்தரவாத திட்டம் பொருளாதார சோதனை, நிதி ஒழுங்குமுறை சோதனை மற்றும் நிறைவேற்று சோதனையில் தோல்வி அடைந்த திட்டம் என்றும், இதனை செயல்படுத்தினால் நிதி கட்டமைப்பு சீர்குலையும் என்றும் குறிப்பிடிருந்தார்.

    அரசு அதிகாரி இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜீவ் குமாரிடம், தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. அதன்பேரில் தேர்தல் ஆணையத்திற்கு ராஜீவ் குமார் விளக்க கடிதம் அனுப்பினார். அதில், பொருளாதார வல்லுநர் என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்ததாகவும், அரசு அமைப்பின் சார்பில் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.



    ஆனால், அவரது விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்ததுடன் அவரது கருத்துக்கு கடும் அதிருப்தியையும் தெரிவித்தது. இதுதொடர்பாக அவருக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “தாங்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. அரசு அதிகாரிகள் பாரபட்சமற்றவர்களாக இருக்கவேண்டும். தாங்கள் கூறிய கருத்து தேர்தல் விதிகளை மீறிய செயல் ஆகும். எதிர்காலத்தில் இதுபோன்று பேசாமல் எச்சரிக்கையுடன் கருத்து தெரிவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.” என கூறியுள்ளது. #LokSabhaElections2019 #NitiAayog #RajivKumar
     
    கியாஸ் மானியம் என்பதற்கு பதிலாக ‘சமையல் மானியம்’ என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த நிதி ஆயோக் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. #NitiAayog #CookingSubsidy
    புதுடெல்லி:

    சமையல் கியாஸ் (எல்.பி.ஜி.) இணைப்பு பெற்றிருப்போருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் சந்தை விலைக்கு சிலிண்டர்களை வாங்கிவிட்டு அதற்கான மானியத்தை வங்கி கணக்கில் பெற்று வருகின்றனர். இந்த மானியம் எல்.பி.ஜி. சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு (ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்) மட்டும் வழங்கப்படுகிறது.

    ஆனால் பல நகரங்களில் மக்கள் குழாய்கள் மூலம் கியாஸ் இணைப்பு (பி.என்.ஜி.) பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதைப்போல பலர் இயற்கை எரிவாயு மூலமும் சமையல் செய்து வருகின்றனர். இவர்களும் கியாஸ் மானியம் பெறும் வகையில் இந்த திட்டத்தை மாற்றியமைக்க அரசு பரிந்துரைத்து உள்ளது.

    இதற்காக கியாஸ் மானியம் என்பதற்கு பதிலாக ‘சமையல் மானியம்’ என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த பரிந்துரையை செயல்படுத்த நிதி ஆயோக் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இது குறித்து அந்த அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், ‘எல்.பி.ஜி. என்பது தனிப்பட்ட தயாரிப்பு. இதற்கு மட்டுமின்றி சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து எரிபொருளுக்கும் மானியம் வழங்க வேண்டும்’ என்றார். இந்த மாற்றம் ‘தேசிய எரிபொருள் கொள்கை 2030’-ல் இணைக்கப்படும் என தெரிகிறது.  #NitiAayog #CookingSubsidy #Tamilnews 
    டெல்லியில் பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் மாநாட்டில் உரை நிகழ்த்திய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய உள்துறை மந்திரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுச்சேரி:

    டெல்லியில் நேற்று மத்திய நிதி ஆயோக் மாநாடு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரிகள் மற்றும் அனைத்து மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    இதில், புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமியும் பங்கேற்றார். ஒவ்வொரு முதல்-அமைச்சரும் கூட்டத்தில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டனர்.

    அதேபோல முதல்- அமைச்சர் நாராயணசாமியும் உரை நிகழ்த்தினார். தனது உரை நிறைவு பெற்றபோது, திடீரென நாராயணசாமி புதுவை கவர்னர் பற்றி கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை கூறினார்.

    கவர்னரை பெயரை வெளிப்படையாக குறிப்பிடாமல் பேசிய அவர் அதிகாரத்தில் இருப்பவர்கள் மாநில அரசின் தினசரி நடவடிக்கைகளில் தலையிட்டு அரசியல் சாசன சட்டத்தை மீறி செயல்படுகிறார்கள் என்று கூறினார்.

    அப்போது உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இது இந்த கூட்டத்தில் பேச வேண்டிய வி‌ஷயம் அல்ல என்று கூறினார். அதற்கு நாராயணசாமி, இது சம்பந்தமாக நான் பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியிடம் புகார் கூறி அவரை மாற்றும்படி கூறியிருக்கிறேன்.

    மாநில நிர்வாகி அரசு முடிவுகளை கூட சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிடுகிறார், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியுடன் மோதல் போக்கில் செயல்படுகிறார் என்று கூறினார்.

    நாராயணசாமி குற்றச் சாட்டியதற்கு உள்துறை மந்திரி ஆட்சேபனை தெரிவித்ததால் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

    இதுசம்பந்தமாக நாராயணசாமியிடம் கேட்டபோது, நான் அந்த கூட்டத்தில் பேசியது என்ன என்பது பற்றி வெளியே சொல்ல முடியாது என்று கூறினார்.
    நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை தொடங்கியது. #NITIAayog #pmmodi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டது.

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் கடந்த 1-1-2015 அன்று உருவாக்கப்பட்ட புதிய அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணை தலைவராக ராஜிவ் குமார் என்பவரும் செயல்பட்டு வருகின்றனர்.

    மாநில அரசின் பங்களிப்புடன் நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக விவாதித்து, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்டவை இந்த அமைப்பின் முக்கிய அம்சமாக உள்ளது.

    இந்நிலையில், இந்த நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.

    மாலைவரை நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், அனைத்து மாநில முதல் மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஆயுஷ்மன் பாரத், தேசிய சத்துணவு திட்டம், இந்திரதனுஷ், மாவட்டங்களின் வளர்ச்சி மற்றும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, புதிய இந்தியா-2022 போன்ற விவகாரங்கள் இந்த கூட்டத்தின்போது விவாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது. #NITIAayog #pmmodi
    நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். #NITIAayog #pmmodi #EdappadiPalaniswami
    சென்னை :

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் கடந்த 1-1-2015 அன்று உருவாக்கப்பட்ட புதிய அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணை தலைவராக ராஜிவ் குமார் என்பவரும் செயல்பட்டு வருகின்றனர். 

    மாநில அரசின் பங்களிப்புடன் நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக விவாதித்து, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்டவை இந்த அமைப்பின் முக்கிய அம்சமாக உள்ளது.

    இந்த நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், மாநில முதல் மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் இருந்து  இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாட்டு இல்லத்தில் இன்று இரவு தங்கும் அவர் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். #NITIAayog #pmmodi #EdappadiPalaniswami
    டெல்லியில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்படுகிறார். #NITIAayog #EdappadiPalanisamy
    புதுடெல்லி:

    நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்துகொள்கிறார்கள்.

    அதன்படி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) மாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது. 2 அமர்வுகளாக இந்த கூட்டம் நடைபெற இருப்பதாகவும், கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்திக்க இருப்பதாகவும் தெரிகிறது.

    எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து பேசும்போது, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பார் என்றும், தமிழகம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவையும் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

    நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும், பொதிகை தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பும் எடப்பாடி பழனிசாமி, நாளை இரவே தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார். #NITIAayog #TamilnaduCM #EdappadiPalanisamy
    ×