டீம் இந்தியா போன்று மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல- பிரதமர் மோடி

வளர்ச்சிக்கான வேகத்தை நாம் அதிரிக்க வேண்டும்.விக்சித் பாரத் என்ற இலக்கு ஒவ்வொரு இந்தியனின் இலக்கு.
டீம் இந்தியா போன்று மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல- பிரதமர் மோடி
Published on

பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்ட நிதி ஆயோக்கின் 10ஆவது நிர்வாகக் கவுன்சில் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

வளர்ச்சிக்கான வேகத்தை நாம் அதிரிக்க வேண்டும். டீம் இந்தியா போன்று மாத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. விக்சித் பாரத் என்ற இலக்கு ஒவ்வொரு இந்தியனின் இலக்கு. ஒவ்வொரு மாநிலமும் விக்சித் ஆகும்போது, பாரத் விக்சித் ஆகும். இது 140 கோடி மக்களின் விருப்பமாகும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com