என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pon Radhakrishnan"
- இளைஞர்கள், தன்னார்வலர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் தாமாகவே யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள்.
- யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி நடைபயணம் தொடங்குகிறார். இந்த நடைபயண விவரங்கள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறார் மத்திய மந்திரி அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.
அன்றைய தினம் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.
மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெறுகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22-ந்தேதி நிறைவடைகிறது.
அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகளுடன் அடுத்தடுத்த கட்டங்களாக யாத்திரை நடைபெறும். ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடையும். தமிழ்நாட்டில் தூய்மையான நேர்மையான அரசாங்கம் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெறும் மோடி அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்த பயணம் அமையும்.
தேசிய ஜனநாயக கூட்டணி வருகிற தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராகும் இலக்கோடு இந்த பயணத்தை மக்கள் மத்தியில் நடத்துகிறோம்.
தமிழ்நாட்டில் தி.மு.க. வின் ஊழல் நிறைந்த ஆட்சியையும் இந்த ஆட்சியின் அவலங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது இந்த பயணத்தின் பிரதான நோக்கமாக இருக்கும். பிரசாரத்தின் போது வழி நெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
மேலும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்க இருக்கிறோம்.
நடை பயணத்தின் போது பதினோரு இடங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் அகில இந்திய தலைவர்கள் மத்திய மந்திரிகள் பங்கேற்பார்கள். இது தவிர நூற்றுக்கணக்கான தெரு முனை கூட்டங்களில் அண்ணாமலை உரையாற்றுவார்.
மேலும் கிராமசபை கூட்டங்களிலும் பங்கேற்று மக்களுடைய குறைகளை கேட்டு அறிவார். அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
முக்கியமான இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்படும் அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் பல கட்சிகளும் யாத்திரைகள் நடத்தி இருக்கலாம். இந்த யாத்திரை அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதும் யாத்திரை நிறைவு பெறும்போது அரசியலில் திருப்பு முனையை உருவாக்கும், யாத்திரையில் கலந்து கொள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.
இளைஞர்கள், தன்னார்வலர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் தாமாகவே இந்த யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள். இதை கட்சி யாத்திரையாக கருதாமல் தமிழக அரசியலில் ஒளி ஏற்றும் திருவிழாவாக மக்கள் கொண்டாடுவார்கள்.
இந்த யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படும். விடியல முடியல என்ற முழக்கத்தோடு கொண்டு செல்லப்படும்.
இந்த பெட்டியில் மக்கள் தங்கள் புகார்களையும் எழுதி போடலாம். யாத்திரை நிறைவில் பிரதமர் மோடியும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கி.பி.துரைசாமி யாத்திரையின் பொறுப்பாளர் நரேந்திரன் இணைப்பு பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
- விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்ற கைகோர்ப்பு என்று நான் கருதுகிறேன்.
- கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறீர்கள்.
நாகர்கோவில்:
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக விவசாயிகள் காவிரி நீரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் தற்போது கிடைக்கும் நீரை கூட முழுமையாக தடுக்க புதிய அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக மாநிலம் சென்று, அணை கட்ட முயற்சி எடுக்கும் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் அதற்கு மூளையாக இருக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோருடன் கை குலுக்கி கொண்டு, சோனியா காந்தி கொடுக்கும் விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இதுவெந்துபோன விவசாயி இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவது போல இருக்கிறது.
எனவே தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகா சென்றது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்கட்சி கூட்டணிக்காக சென்றாக கருதவில்லை. விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்ற கைகோர்ப்பு என்று நான் கருதுகிறேன். இது தமிழகத்துக்கான கேடு. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அங்கு சென்று இருக்கலாம். ஆனால் 8 கோடி மக்களின் முதலமைச்சராக சென்று கைகுலுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
மேகதாதுவில் அணைகட்ட மாட்டோம் என்ற வாக்குறுதியை தந்தால் மட்டுமே கூட்டணியில் கைகோர்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி கூறி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வாக்குறுதியை பெறவில்லை. அதனால் தான் இன்றைய தினத்தை துக்க தினமாக அனுசரித்து கருப்பு பட்டை அணிந்து இருக்கிறோம். கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறீர்கள். யார் தண்ணீர் தரவில்லை என்றாலும் தவறுதான்.
ஊழல்வாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தும். அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியின் போது செய்த தவறுக்காக தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 48 கோடி பேருக்கு புதிய வங்கி கணக்குகள் உருவாக்கியவர் மோடி.
- 2024-ல் தென்காசியில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
தென்காசி:
ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திடலில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
விபத்து காப்பீட்டு
கூட்டத்துக்கு தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஸ் ராஜா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் கோதை மாரியப்பன், மாவட்ட பொது செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன்,ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் பண்டாரிநாதன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-.
ஒரு ரூபாயில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீட்டு திட்டம் தந்தவர் பிரதமர் மோடி. சாதாரண பொதுமக்களும் வங்கி பழக்கத்தை பெற்றிட 48 கோடி பேருக்கு புதிய வங்கி கணக்குகள் உருவாக்கியவர் மோடி. இன்று உலக நாடுகள் நம்மை வணங்குகின்றன.
ஐ.நா.சபை
193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபையே நரேந்திர மோடியை உற்று பார்க்கிறது. ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் காஷ்மீரில் 370 என்ற தனிப்பிரிவை ரத்து செய்து இன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. உலகத்திலேயே மிக பெரிய கேன்சர் செண்டர் அசாமில் வருகிறது.
1999-ம் ஆண்டு தென்காசி தொகுதியில் 886 ஓட்டுவித்தியாசத்தில் வெற்றியை இழந்தோம். நல்ல மனிதரை இழந்தோம். அதற்கு ஒருபரிகாரம் உண்டு என்றால் 2024-ல் தென்காசியில் தாமரை மலர்ந்தே தீரும்.கேரளாவில் ஆற்றிங்கல்பகுதியில் கிறிஸ்தவர்கள் சொன்னார்கள் இந்த முறை தங்களின் வாக்கு நரேந்திரமோடிக்குதான் என்று.
தமிழகத்தில் 2024 தேர்தலில் 25 பாராளுமன்ற தொகுதியை வெல்ல உள்ளோம். அதில் நம்பர் ஒன்றாக தென்காசி பாராளுமன்றம் இருக்க வேண்டும்.
தூய்மையான, ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் மலர வீடுதோறும் நமது திட்டத்தினை எடுத்து கூறி தாமரையை வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.
- செந்தில் பாலாஜி தன் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
- செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும், தி.மு.க.விற்கும், மக்களுக்கும் நல்லது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்பை செய்தவன் தண்டனை அனுபவிப்பான் என்பதை மூதாதையர்கள் கூறியுள்ளனர். யாராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் அது பொருந்தும்.
தான் தூய்மையானவன் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. ஆனால் இதற்கு தி.மு.க. துணை போகக்கூடாது.
செந்தில் பாலாஜி தன் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும் தி.மு.க.விற்கும், மக்களுக்கும் நல்லது. அவருக்கு துணை நின்றால் தி.மு.க. அரசாங்கம் ஆள்வதற்கு அருகதை அற்றவர்கள் ஆவார்கள்.
இது 2015-ல் உள்ள பழைய வழக்கு, அப்போது தி.மு.க.வினர், அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தார்கள், அதே மனிதர் தி.மு.க.விற்கு வந்தவுடன் கங்கையில் குளித்து புனிதமானவர் என்பதா? தமிழக அரசு அவருக்கு ஆதரவு கொடுக்க கூடாது. அப்படி ஆதரவு கொடுத்தால் அது ஊழலுக்கு துணை போகும் செயல்.
இதுவரை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நேர்மையாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அரசின் திட்டங்கள் மக்களை தற்போது நேரடியாக சென்றடைகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்தார்.
- கர்நாடகத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டமுடியாது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பி னரும், நாடா ளுமன்ற பொறுப்பா ளருமான முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறிய தாவது:-
பிரதமர் மோடி தலைமை யில் பா.ஜ.க. அரசு பொறுப் பேற்று 9 ஆண்டுகள் நிறை வடைகிறது. இந்த 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒருமாத காலம் அனைத்து பா.ஜ.க. பொறுப் பாளர்களும் தீவிர பிரசா ரத்தில் ஈடுபட தேசிய தலைவர் நட்டா உத்தர விட்டுள்ளார்.
அதன்படி அனைத்து பொறுப்பாளர்களை கொண்ட குழுக்கள் அமைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களை நோக்கி பிரசாரம் செய்ய உள்ளோம். இந்த பணியில் 16 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். உலகின் வழி காட்டியாக பிரதமர் மோடி வரவேண்டும் என்று அனைத்து நாடுகளும் அவரை பாராட்டுகின்றன.
கடந்த காலங்களில் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வில்லை. தற்போது மத்திய அரசின் திட்டம் நேரடியாக மக்களை சென்றடைகிறது. இதனால் உலகில் உயர்ந்த நாடுகள் வரிசையில் முதல் 5 இடத்தில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளர்ச்சியை நோக்கிய பாதையில் இந்தியாவை பா.ஜ.க. செல்ல வைத்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தமிழகத்தில் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மீது தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மத்திய அரசின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்கிறது. கர்நாடகத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டமுடியாது.
இவ்வாறு கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், விவசாய அணி மாநில செயலாளர் பிரவீன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் ஆத்மா கார்த்திக், மணிமாறன், நாகேந்திரன், கணபதி, ஊடக பிரிவு மாநில செயலாளர் ஜெய குரு, மாவட்ட பார்வை யாளர் குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி அய்யாவை உணர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் புனித தலமாகும்.
- அய்யாவின் பதிக்குள் சென்று வழிபட விரும்புவோர் ஆண்களுக்கு உண்டான விதிமுறைகளை கட்டாய விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும்.
நாகர்கோவில்:
பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி அய்யாவை உணர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் புனித தலமாகும். அய்யாவின் பதிக்குள் சென்று வழிபட விரும்புவோர் ஆண்களுக்கு உண்டான விதிமுறைகளான மேலாடை தவிர்த்தல், தலையில் தலைப்பாகை அணிதல், நெற்றியில் திருநாமம் இடல் போன்ற கட்டாய விதிமுறைகளை கடைபிடித்தாகவேண்டும்.
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை தி.மு.க.வின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ், சாமிதோப்பு தலைமை பதிக்குள் அழைத்து சென்றுள்ளார்.
உடன் சென்ற அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேலாடையின்றி, தலைப்பாகை அணிந்து சென்றுள்ளனர். ஆனால் அய்யாவை அவமதிக்கும் வகையில், அவர் வகுத்து வைத்த விதிமுறைகளை வேண்டுமென்றே மீறும் வகையில் உதயநிதி ஸ்டாலினும், மகேசும் செயல்பட்டுள்ளனர். உதயநிதிஸ்டாலின், மகேஷ் ஆகியோர் தாங்கள் செய்த தவறுக்கு அய்யாவை வணங்கி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
மேலும், அவர்களை பதியின் சார்பில் உள்ளே அழைத்து சென்ற முதன்மை குரு பால ஜனாதிபதி தாம் வகிக்கும் பொறுப்பை துறக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. தரப்பில் பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- தி.மு.க. அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா? அதற்காக தற்போது செருப்பு வீசியதை சரி என நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை மதிக்கப்பட வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி அ.தி.மு.க. நிர்வாகிகள் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என நம்புகிறேன். இன்னொரு கட்சிக்கு ஆலோசனை சொல்லக்கூடிய அளவிற்கு நான் இல்லை. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சி என்றும், எப்போதும் அப்படியே திகழ்வதற்கான வாய்ப்பு வரும் என நம்புகிறேன்.
தி.மு.க. தரப்பில் பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் எதற்காக ஏன் இதை சொல்லி இருக்கிறார் என தெரியவில்லை. நாங்களும் அவர்களோடு சமரசம் செய்யமாட்டோம். தமிழக மக்களும் தி.மு.க.விடம் சமரசம் செய்ய தயாராக இல்லை. தமிழக மக்களுக்காக தி.மு.க.வை எதிர்த்து போராடுவதற்கு பா.ஜ.க. எப்போதும் தயாராக உள்ளது.
அமைச்சர் வாகனம் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் போலீசார் எந்த அடிப்படையில் கைது செய்துள்ளார்கள் என தெரியவில்லை. இதேபோல் எல்லா விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளார்களா? இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
கடந்த 2017-ம் ஆண்டு சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் படித்தபோது உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து அப்போது மத்திய மந்திரியாக இருந்த நான், அவரது உடலை மீட்டு சேலத்தில் ஒப்படைத்துவிட்டு திரும்பியபோது என் மீதும் செருப்பு வீசப்பட்டது. எனது காரிலும் தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது.
தி.மு.க. அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா? அதற்காக தற்போது செருப்பு வீசியதை சரி என நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அது சரியானது அல்ல. ஆனால் அமைச்சர் மீதே வீசி இருக்கிறார்கள் என்று சொன்னால், அன்று நானும் மந்திரியாக இருந்தபோதுதான் என் மீது செருப்பு வீசப்பட்டது. அப்போது அதனை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஒரு ஆவேசத்தில் மக்கள் இருக்கும்போது அதனை பெரிய மனதோடு விலகிச்செல்ல வேண்டும். மந்திரி மீது மட்டுமல்ல, சாதாரண மனிதன் யார் மீதும் செருப்பு வீசக்கூடாது.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காபட்டணம் துறைமுகத்தில் இதுவரை 27 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த துறைமுகத்தில் நிரம்பி இருக்கக்கூடிய மணலை எடுக்க வேண்டும். அதன் பணிகளை தமிழக அரசு விரைவாக முடிக்க வேண்டும். அதற்கான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது. சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. எல்லையை கண்காணிப்பதில் எந்த அளவிற்கு மற்றவர்கள் தயாராக இருக்கிறார்களோ, அதேபோல இந்திய எல்லையை பாதுகாப்பதில் நம்முடைய நாடும் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் கதிரவன், மாநில நிர்வாகிகள் சுப.நாகராஜன், ஆத்மா கார்த்திக், மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

அதேபோல பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினார்கள். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.
பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சி அமைக்கும்போது தமிழகத்தில் அந்த கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை தற்போது நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பாரதிய ஜனதா கட்சியினரிடம் ஏற்பட்டு உள்ளது.
அதற்கேற்ப டெல்லி வரும்படி பொன்.ராதா கிருஷ்ணனுக்கு பாரதிய ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்தது. அதைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
ஏற்கனவே 1999-ல் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரியாக பதவி வகித்து உள்ளார். அதேபோல கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்று மத்திய மந்திரியானது குறிப்பிடத்தக்கது.