search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுதோறும் பா.ஜ.க. திட்டத்தை எடுத்து கூற வேண்டும்-ஆலங்குளத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    கூட்டத்தில் பொன் ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.

    வீடுதோறும் பா.ஜ.க. திட்டத்தை எடுத்து கூற வேண்டும்-ஆலங்குளத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

    • 48 கோடி பேருக்கு புதிய வங்கி கணக்குகள் உருவாக்கியவர் மோடி.
    • 2024-ல் தென்காசியில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

    தென்காசி:

    ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திடலில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    விபத்து காப்பீட்டு

    கூட்டத்துக்கு தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஸ் ராஜா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் கோதை மாரியப்பன், மாவட்ட பொது செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன்,ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் பண்டாரிநாதன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-.

    ஒரு ரூபாயில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீட்டு திட்டம் தந்தவர் பிரதமர் மோடி. சாதாரண பொதுமக்களும் வங்கி பழக்கத்தை பெற்றிட 48 கோடி பேருக்கு புதிய வங்கி கணக்குகள் உருவாக்கியவர் மோடி. இன்று உலக நாடுகள் நம்மை வணங்குகின்றன.

    ஐ.நா.சபை

    193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபையே நரேந்திர மோடியை உற்று பார்க்கிறது. ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் காஷ்மீரில் 370 என்ற தனிப்பிரிவை ரத்து செய்து இன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. உலகத்திலேயே மிக பெரிய கேன்சர் செண்டர் அசாமில் வருகிறது.

    1999-ம் ஆண்டு தென்காசி தொகுதியில் 886 ஓட்டுவித்தியாசத்தில் வெற்றியை இழந்தோம். நல்ல மனிதரை இழந்தோம். அதற்கு ஒருபரிகாரம் உண்டு என்றால் 2024-ல் தென்காசியில் தாமரை மலர்ந்தே தீரும்.கேரளாவில் ஆற்றிங்கல்பகுதியில் கிறிஸ்தவர்கள் சொன்னார்கள் இந்த முறை தங்களின் வாக்கு நரேந்திரமோடிக்குதான் என்று.

    தமிழகத்தில் 2024 தேர்தலில் 25 பாராளுமன்ற தொகுதியை வெல்ல உள்ளோம். அதில் நம்பர் ஒன்றாக தென்காசி பாராளுமன்றம் இருக்க வேண்டும்.

    தூய்மையான, ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் மலர வீடுதோறும் நமது திட்டத்தினை எடுத்து கூறி தாமரையை வெற்றிபெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×