என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தினால் மத்திய அரசு மேலும் நிதி வழங்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்
- மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை.
- தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் மத்திய அரசின் முப்படைகளும் இறங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் மூலவர், சண்முகர், தட்சிணாமூர்த்தி, சூரசம்ஹாரமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை. முறையாக பயன்படுத்தினால் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும்.
மேலும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் மத்திய அரசின் முப்படைகளும் இறங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது. வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட மக்களிடம் நேரடியாகக் கேட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






