search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்டி"

    • இன்று IANS செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் பேசியுள்ளார்
    • எப்போது இறக்கிறார்கள் என்ற நேரம் மட்டுமே வேறுபடும்' என்று தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த வாரம் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

     

     

    நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

     

    இடையில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று IANS செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த  பேட்டியில் , 'இந்த சம்பவம் எங்களை மிகவும் பாதித்துள்ளது. ஆனால் நடப்பதை யாரால் தடுக்க முடியும். பூமியில் பிறந்தவர்கள் ஒரு நாள் இறந்துதான் ஆகா வேண்டும்.எப்போது இறக்கிறார்கள் என்ற நேரம் மட்டுமே வேறுபடும்' என்று தெரிவித்துள்ளார்.

     

    மேலும்' இந்த சம்பத்தை வைத்து எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள். கூட்டத்தில் விஷத் தன்மையுள்ள திரவம் தெளிக்கப்பட்டது. அதை நேரில் கண்ட சிலர் எங்களது வக்கீலிடம் அதை உறுதி செய்து வாக்குமூலம் அளித்துள்ளனர்' என்றும் தெரிவித்துள்ளார். 

    • திருமணத்தின் பின் முதல் முறையாக இருவரும் தங்கள் உறவு குறித்தும் காதல் குறித்தும் செய்தியாளர்களிடம் மனம் திறந்துள்ளனர்.
    • 'நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பதுதான் இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் சொந்தம்'

    தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்துக்குமாருக்கும் முமபை கேலரிஸ்ட் நிக்கோலய் -கும் கடந்த ஜூலை 10 ஆம் தேதி அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் திருமணத்தின் பின் முதல் முறையாக இருவரும் தங்கள் உறவு குறித்தும் காதல் குறித்தும் செய்தியாளர்களிடம் மனம் திறந்துள்ளனர். திருமணத்துக்கு பின் நாடு திரும்பிய நிலையில் இன்று சென்னையில் வைத்து தந்தை சரத்குமார் மற்றும் கணவன் நிக்கோலய் உடன் வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

     

    நிக்கோலய் பேசியதாவது, "எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னைதான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன்.

    திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன். ஆனால், நான் அவரது பெயரை எடுத்துக் கொள்கிறேன்.

    நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பதுதான் இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் சொந்தம். வரலட்சுமி என்னைத் திருமணம் செய்திருந்தாலும் நான் அவருடைய முதல் காதல் இல்லை. அவருடைய முதல் காதல் எப்போதும் சினிமாவில் நடிப்பதுதான். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார். உங்கள் அன்பும், ஆதரவும் நிச்சயம் அவருக்கு வேண்டும்" என்றார்.

    நடிகை வரலட்சுமி சரத்குமார், "நீங்கள் எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. நிக்கோலய் சொன்னதுபோல என்னுடைய காதல் அவர். ஆனால், என்னுடைய உயிர் சினிமாதான். அதனால், திருமணத்திற்குப் பிறகும் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன். வந்து வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி" என்றார்.

    நடிகர் சரத்குமார், "வரலட்சுமிதான் நிக்கோலயை எங்களுக்கு அறிமுகப்படுத்தினர். நிக்கோலயுடன் எங்கள் குடும்பத்திற்கு கண்டதும் காதல் வந்துவிட்டது. ரொம்ப எனர்ஜிட்டிக்கான மனிதர் அவர். அவர் கொடுத்திருக்கும் சந்தோஷம் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இறைவனால், இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்". 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டடத்துக்கு தயாராகி வருகிறது.
    • பிரதமர் நரேந்திர மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

    விண்வெளித்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டடத்துக்கு தயாராகி வருகிறது. ககன்யான் திட்டத்தின்கீழ் அடுத்த வருட இறுதியில் முதல் சோதனை பயணம் நடப்பட்ட உள்ளது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திட்டம் குறித்த சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

     

    இந்தியாவில் பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்கள் குறைவு என்பதால் முதலில் விண்வெளிக்கு யாரை அனுப்புவது என்ற சிக்கல் உள்ளது. முதல் முறையாக செய்யப்படும் சோதனை பயணம் என்பதால் வெறும் ஆர்வம் மட்டுமே உள்ளவர்களை விஐபிகளை விண்வெளிக்கு அனுப்ப முடியாது. முழுவதுமாக பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே விஐபிகளை விண்வெளிக்கு அனுப்ப முடியும். எனவே இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்று சோம்நாத் தெரிவித்தார்.

     

    அப்போது அவரிடம், பிரதமர் நரேந்திர மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவதில் நான் மட்டும் அல்ல இந்திய நாடே பெருமை கொள்ளும். அது மிகவும் சிறந்த தருணமாக இருக்கும். ஆனால் முழுமையாகி பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பிறகே பிரதமர் போன்ற முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்று தெரிவித்தார்.

     

    இதற்கிடையில் அடுத்த வருடம் இறுதியில் நடக்கும் முதல் ககன்யான் சோதனை பயணத்தை மேற்கொள்ள பிரஷாந்த் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்சு சுக்லா ஆகிய விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தத்க்கது.

    • பேசுவதற்கு முதல் காரணம் என்று பார்த்தால் மரபணு பிரச்சனை ஒன்றாகும்.
    • குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்பட்டு இதுவும் பேசுவதற்கு தாமதத்தை ஏற்படுத்துகிறது.

    தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் பேத்தாலஜிஸ்ட் டாக்டர் நித்யா மாலைமலர்.காமிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    நிறைய பெற்றோர்களுக்கு நமது குழந்தை எப்போது பேசும் என்பதில் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் சில குழந்தைகள் குறிப்பிட்ட வயதில் பேசிவிடுவார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு தாமதம் ஆகிறது.

    குழந்தைகள் பேசுவதற்கு தாமதம் ஆகிறது என்றால் அதற்கு என்ன காரணம்?

    பேசுவதற்கு முதல் காரணம் என்று பார்த்தால் மரபணு பிரச்சனை ஒன்றாகும். எடுத்துக்காட்டாக அப்பாவே, அம்மாவே தனது குழந்தை பருவத்தில் தாமதமாக பேசி இருக்கலாம். அதனால் குழந்தையும் தாமதமாக பேசுவாங்க.

    கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்று இருந்தது, அதனால் குழந்தைகளுக்கு பேசுவது, புரிந்து கொள்வது போன்ற பிரச்சனையாக இல்லை. ஆனால் இந்த காலக்கட்டத்தில் அம்மா, அப்பா, குழந்தை என்று குறுகிய வட்டத்தில் வளர்வதால் குழந்தைகளிடம் அந்த புரிதல் என்பது இல்லாமல் இருக்கிறது. இப்போது உள்ள குழந்தைகள் அதிகப்படியாக தனிமையிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்களுடன் பேசி விளையாட தாத்தா, பாட்டி, அப்பா என ஆட்கள் இல்லை இதுவும் பேசுவதில் தாமதத்திற்கு காரணமாக உள்ளது.

    மேலும் குழந்தைகளுக்கு மொழி ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. நாம் வீட்டில் தமிழ் மொழியில் பேசுகிறோம். ஆனால் போன் மூலம் ஆங்கிலத்தில் குழந்தைகளுக்காக பாடல்கள் வைக்கிறோம். இதனால் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்பட்டு இதுவும் பேசுவதற்கு தாமதத்தை ஏற்படுத்துகிறது.

    போன் மூலம் பாடல்கள், கதைகள் போன்றவற்றை அறிவதால், முகம் பார்த்து பேசுதல் என்பது இல்லாமல் போய்விடுகிறது. 2 வயதிலேயே குழந்தைகள் போன்களின் மூலம் பாடல், படிப்பு என கற்றுக் கொள்கிறார்கள். ஒரு சமயம் இந்த போன் சாதகமாக இருந்தாலும், 100 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்கு மரபணு பிரச்சனை இருக்கும் போது போன் பார்ப்பதால் பேசுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.


    ஒரு குழந்தை எந்த வயதில் இருந்து பேச தொடங்கும்? எந்த வயதில் இருந்து நல்லா பேச தொடங்கும்? இல்ல பேசுவதில் தாமதம் என்று நாம் எப்படி கண்டுபிடிப்பது?

    ஒரு குழந்தை பிறந்தவுடனேயே பேச தொடங்கிவிடும். பசி என்றால் அழுதால் அதுவும் பேசுவதற்கு முதல் நிலை ஆகும்.

    ஒரு வயதில் குழந்தை அம்மா, அப்பா என்று ஆரம்பிக்கும்.. படிப்டபடியாக 2 வயதில் 2 வார்த்தைகைள் பேசும். 3 மூன்று வார்த்தைகள் பேசும்.

    மூன்று வயது ஆன பிறகும் குழந்தைகள் அம்மா, அப்பா என்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவும் பேச வில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.

    குழந்தைகள் பேசுவதற்கு எவ்வளவு நாள் காத்திருக்கலாம்?

    நாங்கள் தனி குடும்பமாகதான் இருக்கிறோம். இருவரும் வேலை செல்கிறோம் வேலைக்கு ஆட்கள் வைத்து பார்க்கிறோம் என்றால், அந்த குழந்தையுடன் தொடர்பில் இருப்பவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். நம் குழந்தை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.

    காத்திருக்கும் நாள் என்பது அதிக பட்சமாக 3 முதல் 6 மாதமாக இருக்கலாம். 2 அல்லது 3 வயது ஆகியும் குழந்தை பேசவில்லை என்றால் பேச்சு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சென்று பார்ப்பது நல்லது. மருத்துவர்களிடம் இது வெறும் பேச்சு தாமதம் மட்டுமா? அல்லது குழந்தைக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கா என்று கேட்டு அறிந்த கொள்ளலாம்.

    இந்த இடைப்பட்ட காலத்தில் போன் உபயோகிப்பதை நிறுத்திக் கொள்வதும் நல்லது. நீங்கள் மருத்துவரை அணுகும் போது குழந்தைகளுக்கு ஆர்டிசமோ, எடிஎச்டியோ இருக்கலாம் என்று சொன்னால் இன்னும் அதிக கண்காணிப்பு கொடுக்க வேண்டி வரும்.

    குழந்தைகள் பேசுவதில் தாமதம் என்றால் எந்த மருத்துவரை பார்க்க வேண்டும்? குழந்தை நல மருத்துவரா? அல்லது ஒரு தெரபிஸ்டை போய் பார்க்கணுமா?

    நீங்கள் குழந்தை நல மருத்துவரையும் பார்க்கலாம். ஸ்பீச் தெரபிஸ்ட்டையும் போய் பார்க்கலாம். இரண்டு பேரும் உங்களை வழி நடத்துவார்கள்.

    தெரபிஸ்டை போய் பார்க்கும் போது எந்த மாதிரியான நடைமுறைகள் இருக்கும்?

    முதலில் பெற்றோர் சார்ந்த கேள்விகள் இருக்கும். குழந்தைகளின் புரிதல் திறன், பேசும் திறன் எப்படி இருக்கு என்று பார்ப்போம். 3 வயது குழந்தைக்கு 1 வயதிற்கான புரிதல் திறன் தான் இருக்கு, பேசும் திறன் 8 மாதத்திற்கு தான் இருக்கு என்றால் அந்த குழந்தையால் ஏன் அடுத்தவர்களை பார்த்து கற்று கொள்ள முடியவில்லை என்று பார்ப்போம்.


    யார் யாரெல்லாம் தெரபிஸ்ட்டை பார்க்கலாம்? குழந்தைகள் மட்டுமா? அல்லது பெரியவர்களும் பார்க்கலாமா?

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்பீச் தெரபிஸ்ட்டை பார்க்கலாம். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், பேச முடியாத குழந்தைகள், மென்று சாப்பிட முடியாத குழந்தைகள், திக்கி பேசும் குழந்தைகள், உச்சரிப்பு குறைப்பாடு உள்ள குழந்தைகள், டீன் ஏஜ் இருந்து அடல்ட் ஏஜ் வரும், குரலில் மாறுபாடு இருக்கும் குழந்தைகள், உதாரணமாக ஆண் குரல் பெண் போலவும், பெண் குரல் ஆண் போலும் இருக்கும் அது போல் உள்ள குழந்தைகள், விபத்தால் குரல் திறன் இழந்தவர்கள், பக்கவாதம் வந்து குரல் இழந்தவர்கள் என மேற்கண்ட அனைவரும் ஸ்பீச் தெரபிஸ்டை பார்க்க வேண்டும்.

    பேச்சு தாமதத்திற்கும் ஆர்டிசத்திற்கு தொடர்பு இருக்கா?

    ஒரு குழந்தைக்கு வேறும் பேச்சு தாமதம் மட்டும் தான் இருக்கு என்றால் அந்த குழந்தைக்கு புரிதல் திறன் நன்றாக இருக்கும். நம் கண் பார்த்து பேசுவாங்க, நம்ம என்ன சொன்னாலும் செய்வார்கள்.

    ஆனால் ஆர்டிசம் என்பதில் நிறைய விஷயங்கள் உள்ளடக்கி உள்ளது. பேச்சு தாமதம் இருக்கும், புரிதல் திறன் குறைவாக இருக்கும், செய்ததையே திரும்ப திரும்ப செய்வார்கள் இதெல்லாம் ஆர்டிசத்துடன் தொடர்புடையது. ஆர்டிசத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதம் இருக்கும். ஆனால் பேச்சுதாமதம் இருக்கும் குழந்தைகளுக்கு ஆர்டிசம் இருக்காது.

    திக்கு வாய் உள்ள குழந்தைகளை தெரபி மூலம் சரிசெய்ய முடியுமா?

    திக்கு வாய் என்பது ஒரு நோய் கிடையாது. திக்கு வாய் என்பது ஒரு குறைபாடு சம்பந்தப்பட்ட விஷயம். இதற்க பல்வேறு பயிற்சி மூலம் இதை சரிசெய்ய முடியும். இது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கு உள்ளது. இதற்கு 3 மாதம் தெரபி எடுத்தாலே சரி செய்து விடலாம்.

    ஆண்ணிற்கு ஒரு பெண்ணின் குரல் இருப்பது ஒரு பிரச்சனையாக உள்ளது அதை சரிசெய்ய முடியுமா?

    இந்த குரல் மாற்றம் என்பது ஹார்மோன்ஸ் சம்பந்தபட்ட விஷயம். இதை சரிசெய்ய முடியும், இதற்கு முறையான தெரபிகள் மற்றும் பயிற்சிகள் உள்ளது. நிறைய பேருக்கு 3 அமர்வுகளில் சரியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு 10 அமர்வுகளில் சரியாகி உள்ளது. ஆண்களுக்கு விரைவில் குணப்படுத்தலாம் ஆனால் பெண்களுக்கு கால தாமதமாகும்.

    குழந்தைகள் போன் பயன்படுத்தலாம் ஆனா அது அளவு இருக்கனும்னு சொன்னீங்க.. எந்த அளவு என்று சொல்லுங்கள்...

    உலக சுகாதாரத்துறை கருத்துப்படி, 0-2 வயது குழந்தைகளுக்கு அதிகபட்சமாக போன் காண்பிக்க கூடாது என்றும் அந்த வயது குழந்தைகளில் மூலை நன்கு வளர்ச்சியடையும் காலம். அந்த நேரத்தில் போன்களை பார்க்கும் போது அவர்களது உலகம் அந்த போனிலேயே முடிந்து விடும்.

    ஆனால் 2 வயது மேல் போன் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 1மணி நேரம் கொடுக்கலாம். குழந்தைகள் போன் உபயோகிக்கும் போது கண்டிப்பாக பெற்றோர்கள் அருகில் இருக்க வேண்டும்.


    பேச்சு தாமதம் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

    குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவிட வேண்டும் இது மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகளை அந்த வயதுடைய குழந்தைகளுடன் பழக செய்ய வேண்டும்.

    குழந்தைகள் துரு துரு என்று இருந்ததால் என்ன பண்ணனும்?

    குழந்தை என்றால் துரு துருனு தான் இருக்கும். ஆனால் ரொம் துரு துருனு இருந்தால் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். குழந்தை துருதுருனு இருக்கு ஆனா நல்ல பேசுது, விளையாடுது, புரிஞ்சுக்குது என்றால் நீங்கள் பயப்படவே தேவையில்லை.

    இவ்வாறு டாக்டர் நித்யா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    • கவுதம் காம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
    • டோனியின் கேப்டன்சியின்கீழ் அதிக காலம் நான் விளையாடியிருக்கிறேன்.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை போட்டிகளுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு மாற்றாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    ஐபிஎல் போட்டிகளில் கேகேஆர் அணியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தன்னை சிறந்த பயிற்சியாளராக நிரூபித்துள்ளார் காம்பீர். கடந்த 2018 இல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற காம்பீர் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்களிலின் ஆட்டம் குறித்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைப்பவராக உள்ளார்.

    இந்நிலையில்தான் அணியின் வீரராக இருந்த காலத்தில் எம்.எஸ்.டோனி, அணில் கும்ப்ளே ஆகியோரின் கேப்டன்சியில் விளையாடியுள்ள்ள கவுதம் காம்பீரிடம் யாருடைய கேப்டன்சி சிறந்தது என்று சமீபத்தில் நடந்த பேட்டியொன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


     



    இதற்கு பதிலளித்த காம்பீர், இது மிகவும் சர்ச்சைக்குரிய கேள்வி, இதற்கு பதிலளித்து நான் தலைப்புச் செய்தியில் வர விரும்பவில்லை. ஒவ்வொருவரிடமும் அவரவருக்கேயான பலங்களும் பலவீனங்களும் இருக்கும். நான் முதல் முதலாக டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் கேப்டன்சியில் விளையாடினேன்.

    எனது முதல் ஓடிஐ போட்டி சவுரவ் கங்குலி கேப்டன்சியின்கீழ் அமைந்தது. அணில் கும்ப்ளே கேப்ரான்சியின்கீழ் நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். டோனியின் கேப்டன்சியின்கீழ் அதிக காலம் நான் விளையாடியிருக்கிறேன். அவருடன் விளையாடுவதை நான் விரும்பினேன். அவர் அணியை வழிநடத்தும் பக்குவம் எனக்கு பிடிக்கும் என்று பொத்தாம் பொதுவாக பதிலளித்துவிட்டு நழுவியுள்ளார். 

    • வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் தயவுசெய்து வாக்களிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார்.
    • டெல்லியில் இன்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

    மக்களவைத் தேர்தல் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி, ஹரியானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று (மே 25) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லியில் இன்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

    அந்த வகையில் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்துள்ள ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா மற்றும் குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு வந்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் அகர்வாலுக்கு வாக்களித்தார்.

    வாக்களித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், எனது தந்தை, மனைவி மற்றும் எனது குழந்தைகள் இருவரும் வாக்களித்தனர். எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இன்று வர முடியவில்லை. பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

    மேலும் வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். தயவுசெய்து வாக்களிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார். கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் ஜூன் 1-ம் தேதி நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஒரு 'பேஷன் ஷோ' நிகழ்ச்சி பார்க்க சென்ற போது எனது நிலைமை மாறியது
    • விடாமுயற்சி, போராடும் குணம் தான் எனக்கு வெற்றியை தேடித் தந்தது.

    பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பல்வேறு வணிகத்திலும் அவர் ஈடுபட்டு உள்ளார். 

    மும்பை மாநகரத்தின் மைய பகுதியில் 'பாஸ்டியன் உணவகம்' என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றும் நடத்தி வருகிறார்.இந்த உணவகம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது.  48 வயதாகும் ஷில்பா தற்போது பஞ்சாபி இல்லத்தரசி கேரக்டரில் ஒரு இந்தி படத்திலும் நடித்து உள்ளார்.

    நடிகை ஷில்பா ஷெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது :-




    எனது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் தயாரிப்பாளர்களிடம் இருந்து பல நிராகரிப்பு, அவமானங்களை நான் சந்தித்தேன். ஏமாற்றம், மனச்சோர்வு அடைந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.

    நான் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் நான் என் தந்தையுடன் வேலை செய்ய விரும்பினேன். புதிதாகவும் சிறப்பாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என எனக்கு ஆசை இருந்தது.

    இந்நிலையில் ஒரு 'பேஷன் ஷோ' நிகழ்ச்சி பார்க்க சென்ற போது எனது நிலைமை மாறியது. ஒரு புகைப்படக்கலைஞர் என்னை படம் எடுத்தார். அதன் மூலம் பேஷன் துறைக்கு அறிமுகமானேன்.அதன் பிறகு எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது.



    நான் நடிக்க வந்தபோது எனக்கு வயது 17. அப்போது நான் உலகத்தைப் பார்க்கவில்லை, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை.இந்தியில் பேசத் தெரியாமல், கேமரா முன் நிற்பதை நினைத்து பதட்டமாக இருந்தது. அதன்பின் முயற்சி செய்து நடித்து பிரபலமானேன்

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் பாகுபாடு காட்டியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் நான் விடாப்பிடியாக இருந்தேன். இவ்வளவு தூரம் வந்த பிறகு ஒரு அடி கூட பின்வாங்க மனமில்லை.




    நான் வெற்றி பெற்ற பிறகு, என்னை பலர் பாராட்டினர். எனது விடாமுயற்சி, போராடும் குணம் தான் எனக்கு வெற்றியை தேடித் தந்தது. தற்போது நான் ஒரு வலிமையான சுதந்திர பெண்ணாகவும், நடிகையாகவும், மனைவியாகவும், தாயாகவும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

    ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை மணந்தார். இவர்களுக்கு வியான் மற்றும் ஷமிஷா என இரு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு ஆடம்பர பங்களா உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மேலும் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமாக 'ஜெட்' விமானம் ஒன்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மோடி, 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு முறை கூட பேட்டியளித்ததில்லை
    • சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து கேட்டால் முகத்தை திருப்பி கொள்வார் என்றார் ஜஃப்ரெலாட்

    கடந்த 2014ல் முதல்முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.

    அவரது முதல் பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் 2019ல் பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார்.

    காங்கிரஸ் கட்சி அல்லாத, காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறாத ஒரு கட்சியில் இருந்து தொடர்ந்து 2 முறை ஒருவர் பிரதமர் ஆனது நாட்டிலேயே அப்போதுதான் முதல்முறையாக நடந்தது.

    இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மீண்டும் பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க.வினால் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒருவர் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும், தொலைக்காட்சியில் மக்களுக்கு செய்தியளிப்பதையும் கடந்து ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நடைமுறையை ஒரு முறை கூட கடைபிடிக்கவில்லை.


    பலரும் இதனை விமர்சித்து வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் அரசியல் குறித்து விமர்சித்து வருபவரான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 60 வயதான கிறிஸ்டோஃப் ஜஃப்ரெலாட் (Christophe Jaffrelot) இதனை விமர்சனத்துள்ளார்.

    கிறிஸ்டோஃப் விமர்சனத்தில் தெரிவித்ததாவது:

    பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் மோடி, ஊடகவியலாளர்கள் சந்திப்பையோ, கலந்துரையாடல்களையோ ஏன் தவிர்க்கிறார்? ஏனென்றால், அவர் பேச்சில் குறிப்பிடும் "இந்தியா" என ஒரு இந்தியா இல்லவே இல்லை.

    இல்லாத ஒரு இந்தியா இருப்பதாக மிக அழகாக நீங்கள் கற்பனை செய்து வைத்துள்ள நிலையில், கற்பனையை உடைக்கும் வகையில் எந்த கேள்வி எழுப்பப்பட்டாலும், அது ஒரு வெற்றிடத்தை காட்டி விடும்.

    பொருளாதாரம் சிறப்பாக இல்லை. சீனாவுடனான உறவுமுறை சரியாக இல்லை. இது குறித்து கேட்கப்பட்டால் அவர் முகத்தை திருப்பி கொள்வார்.

    சீனா நம் நாட்டை ஆக்கிரமித்துள்ளது என்பதை அவர் எவ்வாறு ஒப்பு கொள்வார்? அவரால் பதில் சொல்ல முடியாது.

    அதைத்தான் அவர் மாதந்தோறும் "மன் கி பாத்" (Mann ki baat) நிகழ்ச்சியில் செய்து வருகிறார். அது ஒரு ஒன்வே டிராஃபிக்.

    ஆனால், பத்திரிகையாளர்கள் அவரிடம் அவர் நம்பிக்கைக்கு எதிரான கேள்விகளை எழுப்பினால் அவரால் சமாளிக்க முடியாது.

    இவ்வாறு கிறிஸ்டோஃப் கூறினார்.

    • மாணவர்கள் ஆபாச படம் பார்த்து சீரழிந்து விடுவார்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
    • ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் பேசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், எம்மிகானூர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எர்ரகொட்டா சென்ன கேசவலு ரெட்டி. இவர் நேற்று தனது வீட்டில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆந்திராவில் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர் பெருநகரங்களில் கூட ஆபாச படங்களை பார்க்கிறார்கள்.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ஆட்சியில் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள லேப்டாப், டேப் செல்போன் வழங்கப்படுகிறது.

    இதனால் மாணவர்கள் ஆபாச படம் பார்த்து சீரழிந்து விடுவார்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்க தல்ல. ஒரு சில மாணவர்கள் செய்யும் செயல்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தை குறை கூறுவது நியாயமானது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் பேசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சுமார் 25 பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவினை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தி, வாகனங்கள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் வட்டத்தில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட குயின்ஹில்ஸ் பகுதி தடுப்புச்சுவர், மவுண்ட்பிளசன்டில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை சுற்று லாத்துறை அமைச்சர்

    கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வையிட்டு, முத்தாலம்மன் பேட்டை அங்கன்வாடி மையத்தில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

    பின்னர், நீலகிரி எம்.பி. ஆ,ராசா நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சுமார் 25 பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தயாவசிய தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட நிர்வாகம் 24 மணிநேரமும் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவினை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தி, வாகனங்கள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிய தர்சினி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 நாட்கள் முகாம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல்
    • 2-வது கட்டமாக இந்தாண்டு 3500 வீடுகள் கட்டும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் பூலுவபட்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தமிழக வெளிநாட்டு வாழ் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டு, அங்கு உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் முறையானபடி கிடைக்கி றதா? பண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அம்சங்கள் சரியானபடி கிடைக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நெசவாளர் கண்காட்சி விற்பனை கண்காட்சி திறப்பு விழாவில் பங்கேற்றேன்.

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதி இலங்கை வாழ் மக்கள் மீது தனி கவனம் செலுத்தி னார். மேலும் அகதிகள் முகாம் என்று கூறாமல், மறுவாழ்வு முகாம் என்று அழைக்க வலியுறுத்தினார். அந்த வகையில் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு அவர்க ளின் தேவைகளை பூர்த்தி செய்வது நமது கடமை.

    கடந்தஆண்டு முதல் கட்டமாக 3500 வீடுகளும், 2-வது கட்டமாக இந்தாண்டு 3500 வீடுகளும், மொத்தத்தில் 7000 வீடுகள் கட்டும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதேபோல கோவை பூலுவப்பட்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் 320 குடும்பங்கள் உள்ளன, இந்த பகுதியில் இடத்திற்கு தகுந்தாற்போல 280 வீடுகள் கட்டப்பட உள்ளது.

    அவர்களுக்கு வழங்கப்படும் பணம் மற்றும் உதவிகள் சரியான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

    ரேஷன் கடைகளிலும் பொருட்கள் தவறாமல் வழங்குகிறார்கள். மேலும் நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் சரியாக கிடைக்கி றதா? என நேரிடையாக சென்று ஆய்வு செய்து வரும்படி உத்தரவிட்டார்.

    அதன்படி இங்கு வந்துள்ளேன். இந்த பகுதியில் 2 நாட்கள் முகாம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த முகாமில் உங்களுக்கு வேண்டிய உதவிகளை கோரி விண்ணப்பம் செய்யுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது 3 கப்பல்களில், 172 கோடி மதிப்பீட்டில் மருந்து மற்றும் உணவு பொருட்களை இலங்கைக்கு அனுப்பி உதவி செய்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, சாமிபிள்ளை மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • அ.தி.மு.க இரட்டை வேடம் போடாமல் தனித்தன்மையுடன் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
    • கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதுதான் விதி.

    தருமபுரியில் நடைபெற்ற அதி.மு.க.பிரமுகா் இல்லத்திருமணவிழாவில் கலந்துக்கொண்ட அதிமுகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவா் பேசியதாவது:-

    தி.மு.க. என்பது முரண்பாடு உடைய ஒட்டு மொத்த உருவம். சட்டமன்றத்தில் கவர்னர் தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். தி.மு.க.விற்கு ஒத்திசை பாடி எல்லோவற்றுக்கும் தலையாட்டுகின்ற கவர்னர் இருந்தால் நாட்டுக்கு தேவை என்பார்கள். 17 ஆண்டுகள் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்தீர்கள். சர்க்காரியா ஒரு கமிஷனை நியமனம் செய்து மாநிலங்களில் இருந்து கருத்து கேட்டு கவர்னருக்கு என்னென்ன அதிகாரம் வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தினார். அமல்படுத்தியிருந்தாலே போதும் பிரச்சனை வந்திருக்காது.

    17ஆண்டுகள் காலம் ஆட்சியில் இருந்து விட்டு அப்பொழுது அமல்படுத்தியிருந்தால் பிரச்சனை இல்லை. கவர்னருக்கும், அரசுக்கும் மோதல் போக்கு உருவாகி இருக்காது. கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதுதான் விதி அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடும் என தேவைக்கு ஏற்றார் போல் பச்சோந்தி தனமாக முறைகளை கையாள்வதில் கில்லாடிகள் இந்த தி.மு.க. அரசு.

    சட்டமன்றத்தில் பூனை குட்டி வெளியே வந்து விட்டது என்று துரைமுருகன் பேசினாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தி.மு.க. 17 ஆண்டுகள் மத்தியில் இருந்தது அப்பொழுது பூனை குட்டிகள் எல்லாம் என்ன செய்தது. அப்போது அந்த பூனை குட்டிகள் எதுவும் செய்யவில்லை. அதிகாரத்தில் இருக்கும் பொழுது மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்காமல் மாநில உரிமைக்கு குரல் கொடுக்காமல் தனது குடும்ப நலன்களுக்காக உரிமையை விற்றவர்கள் பேசலாமா?, இவர்களைப் போல நாங்கள் இரட்டை வேடம் போடுவது இல்லை தனித் தன்மையுடன் தான் இருக்கிறோம். இவ்வாறு அதி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியின் போது தெரிவித்தார்.

    ×