search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ேதால்வியை சந்திக்கும்
    X

    சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ேதால்வியை சந்திக்கும்

    • ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ேதால்வியை சந்திக்கும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    சிவகாசி அம்மன்கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருடன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துரையாடினார்.

    அப்போது மாணவ மாணவியர் தரையில் அமர வைக்கப்பட்டதை கண்ட மாணிக்கம் தாகூர் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் அதற்கான காரணத்தை கேட்டபோது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் இல்லை என தெரிவித்ததை தொடர்ந்து தனது நிதியின் மூலம் மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிவகாசி மாநகராட்சியை இணைக்க வேண்டும்.இதன் மூலம் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்படும்.

    ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி கண்ணிற்கு முன் நிற்பதால் அழ தொடங்கிவிட்டார். அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்க உள்ளதை எடப்பாடி பழனிச்சாமி அறிந்து கொண்டுள்ளார் .

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் ஆதரவு மிக முக்கியமான ஆதரவாக காங்கிரஸ் பார்க்கிறது. காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து அதன் பிரதிபலிப்பாக நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×