என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர்கள் இடைத்தரகராக செயல்படுகின்றனர் - அன்புமணி குற்றச்சாட்டு
- 12 பேர் தற்கொலைக்கு கவர்னரே காரணம்...
- ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை
அரியலூர்,
பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பு மணி ராமதாஸ் முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நெய்வேலியில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்றும், அதே நேரத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருப்பது வேதனையளிக்கிறது. மேலும், 2025-ம் ஆண்டு வாக்கில் என்எல்சி நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய போவதாக மத்திய அரசு மக்களவையில் அறிவித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏன். ஆன்லைன் விளையாட்டுக்கு தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். ஆன்லைன் விளையாட்டில் கடந்த இரண்டரை மாதத்தில் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களது உயிரிழப்புக்கு ஆளுநரே காரணம். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு ஆட்சி அமைப்போம். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவும் இல்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை என்றார்.