search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "projects"

    • மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகருக்கு சென்றார்.
    • நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று மோடியை வரவேற்றனர்.

    கிருஷ்ணாநகர்:

    பிரதமர் மோடி நேற்று மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றார். அங்கு ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ.720 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

    இன்று பிரதமர் மோடி ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகருக்கு சென்றார். அங்கு அவர் ரோடு ஷோ நடத்தினார்.

    திறந்த ஜீப்பில் நின்றபடி ஊர்வலமாக சென்றார். இதில் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து கை அசைத்தபடி பிரதமர் மோடி சென்றார். அப்போது மோடியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று மோடியை வரவேற்றனர்.

    கிருஷ்ணா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மின்சாரம், ரெயில், சாலை உள்ளிட்ட துறைகளில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த திட்டங்கள் மேற்கு வங்காளத்தை வளர்ந்த மாநிலமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டவை. இது மேற்கு வங்காளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேகத்தை அளிக்கும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

    கடந்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் ரெயில்வே கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக அரசு செலவிடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1500 பேருக்கு புதிய பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.
    • பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரை.

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (20-ந் தேதி) ஜம்மு செல்கிறார். அங்கு காலை 11-30 மணியளவில், ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    சுகாதாரம், கல்வி, ரெயில், சாலை, விமானப்போக்குவரத்து, பெட்ரோலியம், குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பலதுறைகளுடன் தொடர்புடைய திட்டப்பணிகள் இதில் அடங்கும்.

    இந்த நிகழ்ச்சியின்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1500 பேருக்கு புதிய பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.

    மேலும், விக்சித் பாரத் விக்சித் ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார்.

    • மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர், மாணவர்கள் முன்னேற்றத்தில் அரசின் திட்டங்கள் பெரும்பங்கு வகிக்கிறது,

    இந்த திட்டங்களை மக்கள் அறிந்துக் கொண்டு பயன்பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக இந்த திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.

    இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும் கியூ.ஆர்.கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் அரசின் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும். 'ஆகு மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம்' மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது.

    இன்று தமிழ்நாட்டின் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோவை அதில் காணலாம்.

    நாட்டிலேயே முதன் முறையாக, ஒரு அரசியல் கட்சி இது போன்று முதலமைச்சரே, மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

    அரியலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் முந்திரி பயிர்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

    அரியலூர், 

    அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர்

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து: அரியலூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் விவசாயிக ளுக்கு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன்: அரியலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டரில் முந்திரி விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது முந்திரி கொட்டைக்கு விலையில்லாத தால் விவசாயிகள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மானியத்தில் முந்தி ரிக்கு அணைப் போட்டு (கரை அமைத்து)கொடுக்க வேண்டும். முந்திரிக்கு காப்பீடு திட்டம் கொண்டு வரவேண்டும்.மக்காச்சோளம் பயிரால் நஷ்டமடைந்த விவசாயிக ளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்.

    அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம்: அரியலூர் மாவட்டத்தி லுள்ள காவிரி டெல்டா பகுதிகளில் நிகழாண்டு சாகுபடி செய்ய இயலாத விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொ)பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபா சங்கரி மற்றும் அனைத்து துறை அலுவ லர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நடைபயிற்சி திட்டம் விரைவில் தொடக்கம்

    அரியலூர், 

    அரியலூரில் 8.கி.மீ தூரம் நடைபயிற்சி திட்டம் விரைவில் தொடங்கும் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    அரியலூரில் நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார திட்டத்தின் படி 8.கி.மீ தூரம் உள்ள நடைபயிற்சி பாதை கண்டறியப்பட்டு விரைவில் தொடங்க உள்ளது. அரியலூர் நகரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கல்லூரி சாலை வழியாக பல்லேரி அரசு மருத்துவமனை சாலை வழியாக பென்னி ஹவுஸ் தெருவில் இருந்து பெரம்பலூர் சாலை, சத்திரம்,

    நகராட்சி நூலகம், தேரடி வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி செட்டி ஏரி வழியாக ஜெயங்கொண்டம் சாலையில் அரசு பல்துறை அலுவலக கட்டிடம் வரை 4 கிலோ மீட்டர் தூரமும் அங்கிருந்து திரும்பி மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை அடைந்து 8 கிலோமீட்டர் தூரம் நடை பயணத்தை நிறைவு செய்யுமாறு திட்டமிடப்பட்டுள்ளது

    நடை பயிற்சி பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு இடம் மற்றும் இடையிடையே மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து உடல்நலம் பரிசோதனை மேற்கொள்வார்கள். இப்பயண வழியில் ஒரு கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் இளைப்பாறும் இடமும், குடிதண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி உடல்நலம் காக்குமாறும் தினமும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் இத்தடத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஜெயசீ லன் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.15.18 லட்சம் மதிப்பில் மந்தை ஊரணி வரத்துக் கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும், சமத்துவ புரத்தில் ரூ.23.40 லட்சம் மதிப்பில் வரத்துக் கால்வா யில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதை யும் கலெக்டர் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து பந்தனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.25 லட்சம் வகுப்பறை புனரமைக்கப்பட்ட பணி களையும், ஜோகில்பட்டி ஊராட்சியில், முதலமைச் சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.59.02 லட்சம் மதிப்பில் திருச்சி - தூத்துக்குடி சாலை முதல் கனக்கனேந்தல் - கரியனேந்தல் சாலை மேம்படுத்தும் பணிகளை யும் ஆய்வு செய்தார்.

    வக்கனாங்குண்டு ஊராட்சியில் முதலமைச்ச ரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.157.30 லட்சம் மதிப்பில் கரியனேந்தல்- சித்துமூன்றடைப்பு சாலைப் பணிகள் நடைபெற்று வருதையும், டி.வேப்பங் குளம் ஊராட்சியில் ரூ.1.96 லட்சம் மதிப்பில் சிறிய சுகாதார வளாகம் கட்டப்பட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.45 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளையும் விரை வாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத் தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சென்று பார்வை யிட்டனர்.

    கோபாலபுரம் ஊராட்சி யில் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சித்திட்டம், கூடங்குளம் அனல் மின் நிலைய சமூகபொறுப்பு நிதியின் கீழ் ரூ.12.80 லட்சம், ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ் ரூ.5.80 லட்சம் ஆக மொத்தம் ரூ.18.60 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள மாதிரி குழந்தை கள் மையத்தினை அவர்கள் பார்வையிட்டனர்.

    ேமலும் காரீப் முன் பருவத்திற்கான பயிற்சி பெற்ற விவசாயியின் நிலத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரில், ஊடு பயிராக பயிரிடப்பட்ட உளுந்து மற்றும் துவரை பயிர்களை ஆய்வுசெய்தனர்.ராமனுஜபுரம் ஊராட்சியில் கொண்டிசெட்டி ஊரணியில் ரூ.13.96 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மற்றும் குளியல் படித்து றையை பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.24 லட்சம் மதிப்பில் முடிவடைந்த திட்டப்பணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
    • துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் (பொ) காளிமுத்தன், மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 வார்டு எண்.23 தாகூர் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர்கள் ஓய்வு அறை, வார்டு எண்.24 செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் வீதி, ராஜாஜி நடுநிலைப் பள்ளியில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    இவற்றை வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் பிரவீன்குமார், எம்.எல்.ஏ. கோ.தளபதி ஆகியோர் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து மண்டலம் 2 வார்டு எண்.27 செல்லூர் அகிம்சாபுரம் சிவகாமி தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவு மைய கட்டிடம், வார்டு எண்.35 அண்ணாநகர் நியூ எல்.ஐ.ஜி.காலனி சிறுவர் பூங்காவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் ஆகியவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் (பொ) காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர்சி வசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.344.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.45.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.344.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.45.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாநகராட்சி பாண்டியன் நகரில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கதொட்டி, சினேகா நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.31 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம், டவுன்ஹாலில் ரூ.54.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநாட்டு அரங்கம் என மொத்தம் ரூ.389.61 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன என்றார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் , துணை ஆணையர் பாலகிருஷ்ணன்,மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் கண்ணன், வாசு, திருப்பூர் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் பத்மநாபன், கோவிந்தராஜ் மற்றும் தொடர்புடைய அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

    • ஏழைகள் அதிகம் வசிக்கும்புதுக்கோட்டை மாவட்டதிற்கு சிறப்பு திட்டங்கள்
    • இந்திய மாதர் சம்மேளத்தின் கூட்டத்தில் வலியுறுத்தல்

    புதுக்கோட்டை

    இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின்  புதுக்கோட்டை மாவட்ட நிர்வா கக்குழு கூட்டம்  மாவட்ட துணைத் தலைவர்  ஜெயா தலைமையில்  வடக்கு ராஜ வீதி  சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  மாநில செயலாளர்  ஜி.மஞ்சுளா இன்றைய அரசியல் நிலை குறித் தும்  சங்கத்தின் செயல்பாடு கள் குறித்தும் பேசினார் .

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்  த.செங்கோடன் வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கள்  தனலட்சுமி, கோமதி, விமலா, பரமேஸ்வரி, பஞ்சவர்ணம் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய ங்களில் பெண் மருத்து வர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண் டும், கேரளாவை போல்  ரேஷன் கடைகளில் தக்காளி வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும்,  புதுக்கோட்டை மாவட்டம் ஏழைகள் அதிகம் வசிக்கும் மாவட்டம் என  நிதி ஆயோக் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது, வறுமையிலும் கல்வியிலும் இந்ம மாவட்டம் பின் தங்கியுள்ளதால்  மத்திய அரசும் மாநில அரசும் அதற்கு ஏற்ப  சிறப்பு திட்டங்களை  அறிவித்து செயல்படுத்திட வேண்டும் என்ற தீர்மானங்கள்  ஏக மனதாக நிறைவேற்ற ப்பட்டன.

    • ராமநாதபுரத்தில் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • இதில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 17, 18-ந்தேதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பேசுகையில், முதல்-அமைச்சர் வருகிற 18-ந்தேதி மண்டபத்தில் நடைபெற உள்ள மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    இதில் வருவாய்த்துறை, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மீன்வளத்துறை மற்றும் பிற துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தொடர்புடைய துறைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், வளர்ச்சி முகமை முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) அபிதா ஹனிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர்களுக்கு உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது
    • அமைச்சர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சியில் உள்ள சிப்காட், வ.உ.சி நகர், திருவள்ளுவர் நகர், புளியங்கண்ணு ஆகிய இடங்களில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி, மாவட்ட ஊராட்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,ஒன்றிய பொது நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய நிதிகளிலிருந்து மொத்தம் ரூ.97 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 7 வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    இதன்படி கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், காரிய மேடை, அங்கன்வாடி மைய கட்டிடம், நெற்களம், நாடக மேடை ஆகியவற்றிற்கான திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

    விழா நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டே கால் ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் புதுமையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுதெல்லாம் மக்களை கேட்காமலேயே மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவார்.

    அதே வழியில் நமது முதல் அமைச்சரும் மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், புதுமைப் பெண், காலை உணவு, இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால் மகளிர்கள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர்.

    செப்டம்பர் முதல் மகளிர்களுக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இந்த நவ்லாக் ஊராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் ரூ.11 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு பயன்பெற வேண்டும் .

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி,ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், கோமதி விஜயகுமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தியாகராஜன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், நவ்லாக் ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி குமார், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×