search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "development"

    • மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
    • ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பார்க் உருவானதில் இருந்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சி அபரி மிதமானது.

    பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர், சிறுசேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்காகிவிட்டது.

    மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இப்போது சென்னையின் வெளிவட்ட சாலையின் கிழக்கு பகுதியான மண்ணிவாக்கம், மலையம்பாக்கம் வண்ட லூர் பகுதியிலும் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

    டைடல் பார்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இதற்கு முதற்கட்ட அனுமதியை வழங்கி உள்ளது.

    இதற்கான நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதை சரிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

    இதில் மலையம்பாக்கம் பகுதியில் அமையும் தொழில்நுட்ப பூங்காவுக்கு 5.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2-வது ஐ.டி. பூங்கா மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு ஏக்கருக்கு ரூ.5 கோடி என நிலமதிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    3-வது தொழில்நுட்ப பூங்கா வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு நில மதிப்பு ஏக்கருக்கு ரூ.8.05 கோடி மதிப்பாக உள்ளது.

    இந்த 3 புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை 1½ வருடத்தில் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    இதன்மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மென்பொருள் ஏற்றுமதியில் மேலும் வளர்ச்சி அடைய இது உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுற்றுலா அமைச்சர் நேரில் ஆய்வு
    • படகு இல்லத்தை சுற்றிலும் தொங்கு பாலம், ஜிப் சைக்கிளிங், பங்கீ ஜம்பிங், ரோலா் கோஸ்டா்போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன

    ஊட்டி, 

    ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழக சுற்றுலா அமைச்சா் ராமசந்திரன் நேரடியாக ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக விளங்குவதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே இங்குள்ள சுற்றுலாத் தலங்களை பயணிகள் மேலும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு வளா்ச்சிப் பணிகளை மேம்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    இதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில், பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடமாக படகு இல்லம் உள்ளது. எனவே அங்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் பல்வேறு பொழுதுபோக்கு சாகச சுற்றுலாவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக தற்போது படகு இல்லத்தை சுற்றி உள்ள பகுதியில் மாபெரும் ஊஞ்சல், தொங்கு பாலம், ஜிப் சைக்கிளிங், பங்கீ ஜம்பிங், ரோலா் கோஸ்டா், குடில்கள், மர வீடு, வாகன நிறுத்தம் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் குணேஸ்வரன், உதவி செயற்பொறியாளா் குணசேகரன், ஊட்டி படகு இல்ல மேலாளா் சாம்சன் கனகராஜ், உதவி சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ் உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • விருதுநகர் ரெயில் நிலையத்தில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படுகிறது.
    • எம்.பி.-அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    விருதுநகர்

    மதுரை கோட்டத்தில் 4-வது பெரிய ரெயில் நிலையமான விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலை யத்தை ரூ.15 கோடியில் மேம்படுத்த அம்ருத்திட்டத்தின் கீழ் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ரூ.8 கோடி மதிப்பில் ரெயில் நிலைய முகப்பு நவீனப்படுத்தப்படு வதுடன் ரூ.17 கோடியில் ரெயில்நிலைய உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுகிறது.

    1-வது நடைமேடை முதல் 5-வது நடைமேடை வரை மேம்பாலம் அமைத்தல், நடைமேடை களுக்கு மேற்கூரை அமைத்தல், விப்ட் வசதி, நவீன கழிவறை வசதிகள் கிழக்கு பகுதியில் நுழை வாயில் டிஜிட்டல்போர்டு, மழை நீர் வடிகால், உணவு விடுதி வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப் பட உள்ளது. இத்திட்டம் வருகிற 5-ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மதுரை மண்டல ரெயில்வே அதிகாரிகள் மாணிக்கம்தாகூர் எம்.பி.யுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர். முதலில் ரெயில் நிலைய முகப்பு நவீனப்படுத்தப்படும் அதன் பின்னர் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தனர். அப்போது மாணிக்கம் தாகூர் எம்.பி. உள் கட்ட மைப்பு வசதிகள் மேம்படுத்துவதில் தாமதம் கூடாது என வலியுறுத் தினார். மேலும் ரெயில் நிலையத்தின் முன்பு வாகனங்கள் நிறுத்துமிடம் முறையாக அமைக்க வேண்டும், ரெயில் நிலை யத்தில் முறையான விசாரணை அலுவலகம், ரெயில்கள் குறித்த அறி விப்பு ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகளை கிடப்பில் போடாமல் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    • மொத்தம் ரூ.96 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
    • கேத்தி பேரூராட்சியில் புனரமைக்கப்பட் வளம் மீட்பு பூங்காவை திறந்து வைத்தாா்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சோலூா் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.

    நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் சோலூா் மற்றும் கேத்தி பேரூராட்சி பகுதிகளில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலமாக 1.11 கோடி மதிப்பில் கெரடா கெங்குந்தை சாலை அமைத்தல், நீா்கம்பை மயானத்துக்கு நடைபாதைக்கான கல்வெட்டு அமைத்தல், பழங்குடியின தோடா் காலனியில் நடைபாதை அமைத்தல், முக்கட்டியில் சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.

    சிறப்பு மேம்பாட்டுத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய நியாய விலைக் கடை, பொதுக் கழிப்பிடம், சாலை பலப்ப டுத்துதல், சாலையில் வடிகால் அமைத்தல், தடுப்புச் சுவா் அமைத்தல், நீா்த்தேக்க தொட்டி அமைத்தல் என மொத்தம் ரூ.96 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

    மேலும், கேத்தி பேரூராட்சியில் புனரமைக்கப்பட் வளம் மீட்பு பூங்காவை திறந்து வைத்தாா். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து மண்புழு உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் திட்டமும் இப்பூங்காவில் நடைமுறை படுத்தப்பட்டது. இதனை அமைச்சா் ராமசந்திரன் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

    பின்னா் அவா் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித்திட்டங்களும், சோலூா் பேரூராட்சியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

    நிகழ்ச்சியில் குன்னூா் கோட்டாட்சியா் பூஷண குமாா், கேத்தி பேரூராட்சி செயல் இயக்குநா் நடராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

    • ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது.
    • கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் அடுத்த வாரம் கோடை விழா, மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது. கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

    2022-23-ஆம் நிதியாண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் 4 பணிகளும், கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், பொது நிதியின் கீழ் ரூ.2.36 கோடி

    மதிப்பீட்டில் 54 பணி களும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் 123 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.69 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் 5 பணிகளும் என 2022-23-ஆம் நிதியாண்டில் ஏற்காட்டை மேம்படுத்தும் வகையில் ரூ.10.79 கோடி மதிப்பீட்டிலான 222 வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஏற்காடு ஊராட்சி ஒன்றி யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறிப்பிட்ட கால அள விற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திடவும், மலைவாழ் மக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை நிறை வேற்றித்தரவும் துறை அலு வலர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, ஏற்காடு தாசில்தார் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், உதவிப் பொறியாளர் சதீஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார்.

    சேலம்:

    மாநில நெடுஞ்சா லைத்துறை சார்பில் சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல், நெத்திமேடு முதல் கொண்டலாம்பட்டி ரவுண்டானா வரையிலும், அம்மாபேட்டை மிலிட்டரி சாலையில் பாலபாரதி பள்ளி முதல் அணைமேடு வரையிலும் மற்றும் நெய்க்காரப்பட்டி முதல் உத்தமசோழபுரம் வரையி லும் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரு கிறது. பொன்னம்மா பேட்டை ெரயில்வே கேட் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சாலையின் நீளம், அகலம், தடிமன், அடர்த்தி, சாலை தளத்தின் சாய்மானம் மற்றும் தரத்தை ஆய்வு செய்தார். மேலும், சாய்வு தளம் மற்றும் தரத்தை ஆய்வு செய்து மழைநீர் தேங்காத வகையில் சாலைகள் அமைக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் ரா.சவுந்தர்யா, சுமதி மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் கோதை மற்றும் உதவி பொறியாளர்கள் கவின், பிருந்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரூ.18.89 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • மாணவ, மாணவிகளை புத்தகம் வாசிக்க சொல்லி அவர்களுடன் கலந்துரையாடினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் ஊராட்சி அனுசியாபுரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.11.92 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணிகள், எட்டிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பாடுகளை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் மாணவ, மாணவிகளை புத்தகம் வாசிக்க சொல்லி அவர்களுடன் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.76 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணி, தென்னவனூர்-வீரவனூர் இணைப்பு சாலையில் ரூ.11.56 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி, சத்திரக்குடி கிராமத்தில் 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, தீயனூர் சமத்துவ புரத்தில் ரூ.45.74 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளில் பழுது நீக்கம் செய்யும் பணி, போகலூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு சுகாதாரத் தலைப்பு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

    பின்னர், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இருவழி சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து, போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் ஆய்வு செய்து, அங்கு வந்த கர்ப்பிணிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் தொடர்பாகவும், பரிசோதனை முறைகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் சிவசாமி, பரமக்குடி, வட்டாட்சியர் ரவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • அபிவிருத்தி திட்ட மேம்பாட்டுக்கு நிதி வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.
    • நிர்வாக மேலாளர் சரவணன்,துணை மேலாளர்கள் ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடலோர சதுப்பு நில காடுகளின் அபிவிருத்தி திட்ட மேம்பாட்டிற்காக ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தை மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் வழங்கினார். இது குறித்து மாவட்ட வன அலுவலர் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் திட்ட பணிகளை மேற்கொள்ள தங்கள் நிறுவனத்தில் இருந்து பெறக்கூடிய லாபத்தில் அதாவது சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு திட்டம் (சி.எஸ்.ஆர்.) மூலம் 2 சதவீதம் நிதி உதவி வழங்குவது வழக்கம். அந்த அடிப்படையில் கடற்கரை ஓரமுள்ள வனப்பகுதிகளை பாதுகாப்பதற்கான பணிகளுக்கு ரூ.50 லட்சத்தை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி உள்ளனர் என்றார்.

    இதில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத் தலைவர் எஸ்.ராமலிங்கம், உதவி தலைவர் மணிகண்டன், நிர்வாக மேலாளர் சரவணன்,துணை மேலாளர்கள் ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட் என்பதை சிவசேனா வரவேற்கிறது.
    • அரிசி, கேழ்வரகு, பருப்பு உள்ளிட்டவைகளை இந்து அறநிலையத்துறை மூலம் வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாநில முதன்மைச் செயலாளர் சுந்தர வடிவேலன் ஆகியோர் நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் விவசாயிகள் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாததால் விவசாய பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளது. விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட் என்பதை சிவசேனா வரவேற்கிறது.

    மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை அரசு மேம்படுத்த வேண்டும். சட்டசபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் கருத்துக்கள் சொல்ல உரிமை உள்ளது.

    அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. நாகை மாவட்டம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.

    மீன்பிடித்தொழிலை தவிர வேறு எதுவும் இல்லாததால், மக்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலை உருவாகி உள்ளது.

    எனவே தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆடி மாதம் கோயில்களில் நடைபெறும் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இந்துக்களுக்கு எதிரானவர் அல்ல என்ற புரிதலை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

    ஆடி மாதம் கோயில்களில் கூழ் ஊற்றும் வகையில், அதற்கு தேவையான அரிசி, கேழ்வரகு, பருப்பு உள்ளிட்டவைகளை இந்து அறநிலையத்துறை மூலம் வழங்க வேண்டும்.

    இது குறித்து சிவசேனா கட்சி சார்பில் இந்து அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின் போது மாநில இளைஞரணி செயலாளர் விஜய் உடன் இருந்தார்.

    • உடுமலை பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
    • உடுமலை நகரிலுள்ள விபத்து பகுதிகளில், பரிந்துரை மற்றும் கருத்துரு அடிப்படையில், எவ்வித பணிகளும் இதுவரை செய்யப்படவில்லை.

    உடுமலை

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகரம் அமைந்துள்ளது.மேலும், பல்லடம், தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகளும், மாவட்ட முக்கிய ரோடுகளும், நகர போக்குவரத்தில், முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்நிலையில், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து மேம்படுத்த, வருவாய்த்துறை, போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, சாலை பாதுகாப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது.இக்குழுவினர் உடுமலை பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் பகுதிகளை கண்டறிந்து, 'பிளாக் ஸ்பாட்' என பெயரிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பரிந்துரைக்கின்றனர். இதற்காக மாதம்தோறும் ஆலோசனை கூட்டமும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    உடுமலை பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. அங்கு, வாகன ஓட்டுனர்களை எச்சரிக்க இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும். சிறிய அளவிலான வேகத்தடை (ரம்புள் ஸ்பீட் பிரேக்கர்), ரோட்டில் ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டட் (கேட் ஐ), நான்கு வரிசையில், ஒளியை பிரதிபளிக்கும் பிரதிபளிப்பான் பொருத்த வேண்டும்.மெதுவாக செல்லவும் என்ற அறிவிப்பு பலகை வைக்க பரிந்துரைக்கப்பட்டது. இப்பணிகள், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.

    நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள தளி ரோடு மேம்பாலம் நுழைவாயில் பகுதியில்இரண்டு ஆண்டுகளில், விபத்தினால், 3 உயிரிழப்புகள் ஏற்பட்டது. அங்கு, விபத்தை தவிர்க்க இடது பக்க தடுப்புச்சுவரை, 30 மீட்டருக்கு விரிவுபடுத்த வேண்டும். சுவரில் ஒளி பிரதிபலிப்பான் பொருத்தி, இருபுறமும்,'சோலார் பிளிங்கிரிங் லைட், அணுகுசாலையில், இடது புறமும் திரும்ப தேவையான வெள்ளை குறியீடுகள் அமைக்க வேண்டும்.இதே போல், நகர எல்லையில் தேசிய நெடுஞ்சாலை - கொழுமம் ரோடு சந்திப்பில் வேகத்தடை, தேவையான வெள்ளை குறியீடு அமைத்து அதில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்கப்பட வேண்டும்.விபத்து பகுதி மெதுவாக செல்லவும் என்ற அறிவிப்பு பலகை வைக்கலாம். ரோட்டின் மையத்தில், டிராபிக் ஐ லேண்ட் எனப்படும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

    மேலும், உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில்சி வசக்திகாலனி கோவில் சந்திப்பு பகுதியில் சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அங்கு தேவையான எச்சரிக்கை குறியீடு அமைத்து, வாகனங்களின் வேகத்தை குறைப்பதால் விபத்து தவிர்க்கப்படும் என கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.இவ்வாறு நகரில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதி, விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதிகளை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்தவே சாலை பாதுகாப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது.இக்குழுவினர் பல முறை ஆய்வு செய்து ஒவ்வொரு துறையினர் பரிந்துரைகளை பெற்று, விபத்து பகுதிகளில் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள கருத்துருவும் அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

    ஆனால் உடுமலை நகரிலுள்ள விபத்து பகுதிகளில், பரிந்துரை மற்றும் கருத்துரு அடிப்படையில், எவ்வித பணிகளும் இதுவரை செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே கருத்துரு மற்றும் பரிந்துரைகளை செயல்படுத்தி, விபத்தில்லா நகரம் என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர்  லலிதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் கட்டப்படும் நூலககட்டிடம், ரெட்டிகோடங்குடி வா ய்க்கால் தடுப்பணை, மேல தெருவில் மகாத்மா காந்தி தேசியஊரகவேலை உறுதிதிட்டத்தின்கீழ் அமைக்க ப்படும் கப்பிசாலை ஆகிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணக்கு பதிவேடு களையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, ஓவர் சீயர்கள் வேலழகன், மோகன் ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதாபேகம்க மாலூதீன் மற்றும் வஜிரூதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து கதிராமங்கலம் ஊராட்சி, திருப்புன்கூர், அகணி ஆகிய ஊராட்சிகளிலும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ரெயில்வே ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் திறன் மேம்பட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.   இந்த  தொடக்கவிழாவில் சேலம் ெரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கிவைத்தார். 

    இந்த நிகழ்ச்சியில் ெரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ெரயில்வே அதிகா–ரிகள் உடன் இருந்தனர். 

      டிக்கெட் பரிசோதகர்கள், பயணச்சீட்டு வழங்குப–வர்கள், ெரயில் நிலைய அதிகாரிகள், பார்சல் அலுவலகத்தில் பணி–புரியும் அலுவலர்கள், கூட்ஷெட்டில் பணிபுரியும் ெரயில்வே தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி வழங்கப்படுகிறது.

     இந்தப் பயிற்சியில்  ெரயில் பயணிகளுக்கு  சேவைகளை எப்படி சிறப்பாக செய்வது, ெரயில் பயணிகளின் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது, பயணிகளுடன் கனிவாக நடந்து கொள்வதைப் பற்றி, பயணிகளின் தேவைகளை நன்றாக அறிந்து அவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும், கனிவான முறையில் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்வது என்பது  குறித்து பயிற்சி  அளிக்கப்படுகிறது.
    ×