search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vigilance"

    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தகவல் தெரிவிக்க ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் வெளியே வரத் தொடங்கியது. இதையடுத்து ஹாசன் தொகுதியில் கடந்த 26-ந் தேதி ஓட்டுப்பதிவு முடிந்த சில மணி நேரங்களில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அவர்கள் ஆபாச படத்தில் இருந்த பெண்களை அடையாளம் கண்டு வாக்குமூலம் பெற தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த பிரஜ்வாலுக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

    மேலும் கர்நாடக சிறப்புக் குழுவினர் புளூ கார்னர் நோட்டீஸ் கொடுக்கவும் பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் வெளிநாட்டில் உள்ள பிரஜ்வாலை அங்குள்ள போலீசார் மூலம் கைது செய்து அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் பெண் கடத்தல் வழக்கில் பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டதால் பிரஜ்வால் கர்நாடகா திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது.

    ஜெர்மனியில் இருப்பதாக கூறப்பட்ட பிரஜ்வால் துபாயில் இருந்து கர்நாடகம் திரும்புவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    துபாயில் இருந்து வரும் பிரஜ்வாலை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    போலீசார் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதால் பிரஜ்வால் ரேவண்ணா துபாயில் இருந்து வேறு மாநிலத்திற்கு வந்து அங்கிருந்து ரெயில் மூலம் கர்நாடகா வரலாம் என்ற தகவலும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்தது.

    இதையடுத்து அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் பிரஜ்வாலை கைது செய்ய தயாராக உள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் கூறும்போது, பிரஜ்வால் வெளிநாட்டில் இருந்தபடி கர்நாடகாவைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவர்களை கண்காணித்து வருகிறோம். மேலும் பிரஜ்வாலை கண்டுபிடித்து கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது என்று கூறினர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஹாசன் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்க எஸ்.ஐ.டி. குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே ஆபாச வீடியோவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதுபற்றிய தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்க ஹெல்ப் லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே இதுதொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 6360938947 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி, பாதுகாப்பு மற்றும் பிற உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை தீவிர கண்காணிப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
    • சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு, வாகன தணிக்கை சோதனை

    ஊட்டி,

    கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்கள் வயநாடு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனவே கேரளாவில் பதுங்கி உள்ள மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் அந்த மாநில போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன்காரணமாக அவர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவ முயல்வதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்து உள்ளது. எனவே தமிழகம்-கேரளா எல்லைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடி களில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு பிரபாகர் அங்கு உள்ள சோதனை சாவடி களில் நேரடியாக பார்வை யிட்டு ஆய்வுசெய்தார். அங்கு மேற்கொள்ள ப்படும் சோதனை பணிகள் மற்றும் புதிதாக வரும் வாகனங்களை சோதனை செய்த விவரங்கள் ஆகி யவை குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரபாகர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    தமிழகம்-கேரளா எல்லைப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமா ட்டத்தை கண்காணிக்கும் வகையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ள னர். இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக மாவட்ட எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு உஷார்ப்படு த்தப்பட்டு உள்ளது. மேலும் வாகன தணிக்கை சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தமிழகம்-கேரளா எல்லையில் நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் தாலுகா உள்ளது. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு பகுதியில் தற்போது மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    எனவே தமிழகம்-கேரளா வனப்பகுதிகளில் இருமாநில அதிரடி படை போலீசாரும் தொடர் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீலகிரியில் உள்ள சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கை சோதனை ஆகியவை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலையரசன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
    • இளைஞர்களுக்கு செல்போன் மூலம், ஒலி பெருக்கி மூலம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அம்மன் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கலையரசன் (வயது29). இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனில் வாஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதி நேர வேலையில் சிறிய முதலீடு செய்தால், அதிக சம்பளமும், அதிக கமிஷன் தொகையும் தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை நம்பிய கலையரசன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டபோது, எதிர் முனையில் பேசிய மர்ம நபர்கள் குறிப்பிட்ட தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனே அவர்கள் கூறிய வங்கி கணக்கில் கலையரசன் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மர்ம நபர்கள் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து அவர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது மர்ம நபரின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர். இதுகுறித்து கலையரசன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று ஓசூர் பத்தலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (39). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கும் முன்பு அதிக சம்பளத்தில் பகுதி நேர வேலை தருவதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதனை நம்பிய அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு அவர் அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து படித்த இளைஞர்களை குறிவைத்து இதேபோன்று ஆன்லைன் மூலம் பணமோசடியில் ஈடுபடும் மர்ம கும்பலை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், ஆன்லைன் மூலம் மோசடி நடைபெறுவதை தவிர்க்க இளைஞர்களுக்கு செல்போன் மூலம், ஒலி பெருக்கி மூலம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்க விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
    • 5 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி பெரு விழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவு வருவார்கள். இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்க விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், இளங்கோவன், கொளஞ்சி, அன்பு பழனி, ஸ்டாலின் ராஜரத்தினம், மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் மேல்மலையனூர் பகுதியில் உள்ள 55 கடை களில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, லேபிள் விதிமீறல் காரணங்களுக்காக 5 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஆய்வில் 90 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், 50 கிலோ அயோடின் சேர்க்கப்படாத உப்பு, 21 கிலோ சாப்பிடக் கூடாத பேரிச்சம்பழம், 1 கிலோ கலப்பட டீ தூள், 3 கிலோ அதிக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள், ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் தற்காலிக விழாக்காலக் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்த ப்பட்டது. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலக மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • இந்த பேரணியை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • ஹெல்மெட் அணிந்து, அபராதத்தை தவிர்க்க வேண்டும் என்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில், புதுச்சேரி மாநிலம் முழுவதும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தி வரும் நிலையில், பலர் ஹெல்மெட்டை அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.  காரைக்காலில் உள்ள போக்குவரத்து காவல்நிலையம் மற்றும் அனைத்து காவல்நிலைய போலீசார், தினசரி ஹெல்மெட் அணியாமல் செல்லும் 100-க்கு மேற்பட்டோரை பிடித்து தலா ரூ.1000 அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில், காரை க்காலில் பொதுமக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வாயிலில் போலீசார் நேற்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    இந்த பேரணியை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் ஹெல்மெட்டுடன் பங்கேற்றனர். இந்த பேரணி, காரைக்காலின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வாயிலில் நிறைவு பெற்றது. பேரணியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் பேசியதாவது:- சாலை விபத்துகளில் எற்படும் உயிர்பலி மற்றும் பெரும் காயங்களை தவிர்க்க, ஹெல்மெட் மிக அவசியம். அதனால், அனைத்து போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். போலீசாரை பார்த்துதான் பொதுமக்களும் ஹெல்மெட் அணிவார்கள். முக்கியமாக, இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, அபராதத்தை தவிர்க்க வேண்டும். என்றார்.

    • பெண் குழந்தைகளுக்கான ஊக்க தொகை ஆகியவற்றை அளித்து வருகின்றது.
    • துளசேந்திரபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாற்று திறனாளி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.

    சீர்காழி:

    வட்டார வளமையம் கொள்ளிடம் ஒன்றியத்தின் சார்பாக உலக மாற்றுதிற னாளிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இப்பேரணிக்கு வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி வரவேற்புரை ஆற்றினார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமையே ற்றார். பேரணியை ஒன்றிய துணைத்தலைவர் பானுசேகர் தொடங்கிவை த்தார்.

    கொள்ளிடம்காவல் துணை ஆய்வாளர் கோவிந்த ராஜன் வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார வளமையமேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி பேசும் பொழுது மாற்றுதி றனாளி குழந்தைகளை சமூகத்தில் பாதுகாப்பு கொடுத்து அவர்களை சமமாக நடத்த வேண்டும், அவர்களிடம் பல திறமைகள் உள்ளது.

    அதை வெளிபடுத்த அனைவரும் வாய்பளிக்க வேண்டும்.

    மாற்று திறனாளி குழந்தைகளுக்கு தமிழக அரசு தேசிய அடையாள அட்டை, மாதாந்திர பராமரிப்பு தொகை இலவச பேருந்து பயணம் கல்வி உதவிதொகை உதவி உபகரணங்கள் பெண் குழந்தைகளுக்கான ஊக்க தொகை ஆகியவற்றை அளித்து வருகின்றது.

    இவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பிசியோதெரபி பயிற்சி கொடுத்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

    முன்னதாக துளசேந்திரபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாற்று திறனாளி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.

    இந்நிகழ்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஐசக் ஞானராஜ், பாக்கியலெட்சுமி, அபூர்வராணி, கவிதா, சிறப்பு ஆசிரியர்கள் பிரவினா, ரூபா, ராஜலெட்சுமி, கீதா, உமா, ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் தணிக்கையா ளர்கள் ராஜீவ் காந்தி சிவனேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பிசியோதெரபி மலர் கண்ணன் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
    • திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர் மற்றும் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தெரிவித்தாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    ஆய்வு கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, சப்- கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறுவேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சம்பவத்தின் பின்னணியில் உள்ள தகவலை தெரிந்து கொள்ளலாம். #TrafficInspector
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பதி (வயது 47). இவர் சத்தியில் இருந்து பண்ணாரி, திம்பம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் லாரிகளை வாகன சோதனை செய்வது போல் தடுத்து நிறுத்தி டிரைவர்களை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது.

    அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டார்கள்.

    அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 பேர் டிரைவர், கிளீனர் போல் மாறுவேடத்தில் நேற்று முன்தினம் இரவு லாரியில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி சென்றார்கள். அப்போது சிக்கரசம்பாளையம் அருகே அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி தனது சொந்த காரில் சென்று தனியாக வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாறுவேடத்தில் ஓட்டி வந்த லாரியையும் அவர் தடுத்து நிறுத்தி டிரைவராக இருந்தவரிடம் மாமூல் கேட்டார். உடனே லாரியில் மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கீழே இறங்கினார்கள்.



    அதன்பின்னர் டிரைவர் போல் மாறுவேடத்தில் இருந்தவர் தான் கொண்டுவந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பதியிடம் கொடுத்தார். அதை அவர் பெற்றுக்கொண்ட போது மாறுவேடத்தில் இருந்த 2 பேரும், ‘நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். உங்களை விசாரிக்க வேண்டும். சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள்’ என்று கூறி சுற்றி வளைத்தார்கள்.

    அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் பதி, ‘சரி நான் என்னுடைய காரிலேயே போலீஸ் நிலையத்துக்கு வருகிறேன்’ என்று கூறினார். அதை நம்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாங்கள் வந்த லாரியிலும், அவர்களின் பின்னால் பதி தன்னுடைய காரிலும் சத்தியமங்கலத்துக்கு சென்றுகொண்டு இருந்தனர்.

    சிக்கரசம்பாளையம் தாண்டி கெஞ்சனூர் செல்லும் சாலை வந்தபோது, பதி திடீரென காரை கெஞ்சனூர் நோக்கி திருப்பினார். அதன்பின்னர் கார் மின்னல் வேகத்தில் கெஞ்சனூர் நோக்கி சென்றுவிட்டது. இதைப்பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் லாரியில் காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றார்கள். ஆனால் காரை தடுத்து நிறுத்த முடியவில்லை. வேகமாக சென்றபோது பதியின் கார் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி படுகாயம் அடைந்தார். அந்த பகுதி பொதுமக்கள் ஆம்புலன்சை வரவழைத்து வேலுச்சாமியை சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். இன்ஸ்பெக்டர் பதி லஞ்ச ஒழிப்புதுறை போலீசாரிடம் சிக்காமல் தப்பி சென்று விட்டார்.

    இதைத்தொடர்ந்து லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், விபத்தை ஏற்படுத்தி வேலுச்சாமி படுகாயம் அடைந்ததற்காக சத்தியமங்கலம் போலீசாரும் பதி மீது வழக்குப்பதிவு செய்தனர். காரில் தப்பி ஓடிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை வலைவீசி தேடி வருகிறார்கள். #TrafficInspector

    பழனி மற்றும் தேனியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ.45 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். #Vigilance

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் நூற்றுக்கணக்கானோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டு தோறும் தங்கள் அடையாளத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பழனி கோவில் தங்கும் விடுதியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் முன்னிலையில் ஆள் அறிதல் புதுப்பிப்பு முகாம் நடந்தது.

    இந்த முகாமில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் அங்கு வந்த போலீசார் கணக்கில் வராத ரூ.34 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ஓய்வூதிய பலன்கள் வழங்குவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரிய வந்ததால் பணத்தை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தேனி லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.14 ஆயிரத்து 680-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தவர்களிடம் தீபாவளி இனாமாகவும், வேறு பெயர்களைச் சொல்லியும் வசூல் செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.  #Vigilance

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் மீது இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, முறைகேடு எதுவும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. #ChennaiHC
    சென்னை:

    தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

    அதனால், இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நீதிபதி முன்பு கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி, ‘நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு வழங்கியதாக முதல்-அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டதா?

    அந்த விசாரணை நிலை என்ன?. ஒப்பந்த ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்த விசாரணையின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘1991ம் ஆண்டு முதல் எஸ்.பி.கே. நிறுவனம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியிலும் அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டச்சத்திரம்-தாராபுரம்-அவினாசி பாளையம் 4 வழிச்சாலை ஒப்பந்த பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகரிப்படவில்லை. முதல்-அமைச்சர் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வெளிப்படையாக தற்போது கூற முடியாது’ என்று கூறினார்.

    இதனையடுத்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், தினந்தோறும் நடத்தப்பட்ட விசாரணையின் விரிவான அறிக்கையை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் புலன் விசாரணை தொடர்பான விவரங்களை கொண்ட ரகசிய அறிக்கையை நீதிபதி முன்பு சமர்பித்தார்.


    பின்னர், ‘முதல்-அமைச்சருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை. இந்த டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடு நடைபெறவில்லை’ என்று அட்வகேட் ஜெனரல் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒப்பந்த நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்றார். இதற்கு அட்வகேட் ஜெனரல் கால அவகாசம் கேட்டார். இதற்கு அனுமதித்த நீதிபதி, விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #ChennaiHC #EdappadiPalaniswami
    ×