search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊர்வலம்"

    • ராமநவமி விழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • கொல்கத்தாவின் புர்ரா பஜார், சிலிகுரி, பராசத் ஆகிய இடங்களில் பெரிய ஊர்வலங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கொல்கத்தா:

    ராம நவமி விழாவையொட்டி மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் இந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு இன்று சுமார் 5 ஆயிரம் ஊர்வலங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ராம நவமி விழாவின்போது சில இடங்களில் மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து தற்போது ராமநவமி விழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவின் புர்ரா பஜார், சிலிகுரி, பராசத் ஆகிய இடங்களில் பெரிய ஊர்வலங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • இன்று அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா.
    • சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர்.

    தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார்.

    கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு பகுதியில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. உன்னில் இறைவனைப் பார் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு இங்கு கண்ணாடியே தரிசனத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது. அய்யா வைகுண்டரை பின்பற்றுபவர்கள் நெற்றியில் நீண்ட நாமமும், தலையில் தலைப்பாகையும் கட்டுவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும், மாசி 20-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அவதார தினம் மார்ச் 3-ந் தேதி வருகிறது. அய்யா வழி மக்கள் தெய்வமாக போற்றி வழிபடும் அய்யா வைகுண்டரின் 192- வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி திருவனந்தபுரத்தில் இருந்தும் திருச்செந்தூரில் இருந்தும் வெவ்வேறு பேரணிகள் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்து அடைந்தது.

    இன்று காலை நாகர்கோவிலில் இருந்து தலைமை பதியான சுவாமி தோப்பிற்கு பிரம்மாண்ட பேரணி துவங்கியது. சந்தன குடங்கள், முத்துக் குடைகள் ஏந்தியபடி பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க சென்ற இந்த பேரணியில் சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது.

    இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அய்யா ஹர ஹர ஐயா சிவ சிவ என கோஷமிட்டபடி சென்றனர். பேரணியை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் சென்றன.

    இதேபோல் அய்யா வைகுண்டர் 192-வது அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அவதார பதியில் அதிகாலை தாலாட்டு, பள்ளி உணர்தல், அபயம் பாடுதல் நடைபெற்றது. சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு அய்யா வைகுண்டரை அழைத்து வருதல், அய்யா வைகுண்டருக்கு பணிவிடை, அன்னதானம் நடைபெறுகிறது. இதையொட்டி கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    தனிமனிதன் நெடுங்காலம் இருக்க முடியாது ஆனால் மானுடம் நெடுங்காலம் இருக்கும். மானுடத்தின் மதிப்பீடுகளை தனிமனிதன்தான் வகுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அறம்சார்ந்து வாழ வேண்டும், பொய் பேசக்கூடாது. எளிமையாய் வாழு, காட்டுக்குப்போய் கடும் தவம் செய்ய வேண்டாம், வீட்டுக்குள் இருந்து உன் சொந்த பந்தங்களுடன் முறிவு ஏற்படாமல் புத்திரோடு பேசி இருந்தால் அதுதான் ஆன்மீகம் என்கிறது அய்யாவழி.

    • ஆர்.எஸ்.எஸ். கொடி ஏற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஆர்.எஸ்.எஸ்.சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் சங்க கொடிக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பாரதமாதா, மற்றும் நிறுவனர் கேசவர் மற்றும் தலைவர் மாதவர் ஆகியோரின் உருவப்படங்களை வாகனத்தில் வைத்து பேரணியாக சென்றனர்.

    பேரணியை தலைவர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியானது கண்ணாரதெரு, கச்சேரி ரோடு, காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, பெரி யகடைவீதி மகாதான தெரு உள்ளிட்ட வீதிகளின் வழியாக துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது.

    தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். கொடியேற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தனியார் பள்ளி தாளாளர் வெங்கட்ரமணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் மௌன மடாலயம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி பேசினார்.

    இதில் பாஜக, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ரயில் நிலையத்தி லிருந்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. அப்போது வழி நெடுகிலும் கூடியிருந்த பெண்கள் ஆர் எஸ் எஸ் கொடிக்கு மலர் தூவி அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலமானது நாகை அவுரித்திடலில் நிறைவடைந்தது.

    அதன் பின்னர் அவுரித்தி டலில் கொடியேற்றப்பட்டு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியை செய்து காண்பித்தனர்.

    நாகையில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    • கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பான பணியில் ஈடுபட்டனர்.

    கம்பம்:

    கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் தேனி மாவட்ட தலைவர் உதயகுமார் வரவேற்புரை வழங்கினார்.

    வ. உ .சி திடலில் தொட ங்கிய ஊர்வலத்திற்கு கட்டுமான ஒப்பந்ததாரர் துரை.தங்கமாயன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தினை தேனி மாவட்ட கம்பம் பள்ளதாக்கு விவசாய சங்க செயலாளர் ஜெய பாண்டியன், கம்பம் வேளாளர் மத்திய சங்க தலைவர் முருகேசன், கம்பம் இந்து நாடார் சங்க நிர்வாகி ராஜாராம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஊர்வலமானது வ.உ.சி திடலில் இருந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, பார்க்ரோடு, எல்.எப்.மெயின்ரோடு, சிலப்பதிகாரம் தெரு, நெல்லு குத்தி புளியமரம் தெரு, கூலத்தேவர் முக்கு, வேலப்பர் கோவில் தெரு, போக்குவரத்து சிக்னல், பழைய பஸ் நிலையம், வரதராஜபுரம், கொண்டித்தொழு வழியாக வழியாக வ.உ .சி திடலில் நிறைவடைந்தது. பொதுக் கூட்டத் திடலில் ஆர். எஸ். எஸ் பயிற்சி மையத்தில் பயின்று வருபவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே, ஒருங்கிணைந்த செயல்பாடு, சுய கட்டுப்பாட்டு திற ன்களை வெளிக்காட்டினர்.

    பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் கோட்ட பொறு ப்பாளர் மகேஷ் சிறப்புரை யாற்றினார்.தேனி மாவட்டத்தில் இருந்து திரளான ஆர். எஸ். எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தை முன்னிட்டு உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பான பணியில் ஈடுபட்டனர்.

    • அனைத்து கட்சியினர் சார்பாக சங்கரய்யா புகைப்படத்தை கையில் ஏந்தி முக்கிய ரத வீதிகள் வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
    • வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே, சங்கரய்யா மறைவிற்கு சி.பி.எம். கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

    சிவகிரி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா மறைந்ததை யொட்டி சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக அனைத்து கட்சியினர் சார்பாக சங்கரய்யா புகைப்படத்தை கையில் ஏந்தி முக்கிய ரத வீதிகள் வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு மீண்டும் கலையரங்கம் வந்து அடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சிவசுப்பிர மணியன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்தையா பாண்டியன், கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமல்ராஜ், சுப்பிரமணியன், சுப்புலட்சுமி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், மற்றும் பலர் கலந்து கொண்டு இரங்கல் கூட்டத்தில் பேசினர். வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே, சங்கரய்யா மறைவிற்கு சி.பி.எம். கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.இதில் வாசுதேவநல்லூர் பேரூர் தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவர் மகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கோவில்வென்னிக்கு இடையில் புதிதாக டோல்கேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஊர்வலமாக சென்று டோல்கேட் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருவதோடு விதிமுறைக ளுக்கு புறம்பாக டோல்கேட் அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

    ஆனால், நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து தேவையற்ற இடங்களில் 'டோல்கேட்'களை நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விடும் நிலை தொடர்கிறது. இந்த டோல்கேட்களைக் கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமா கும்போது டோல் கட்டண ங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், குத்தகை எடுத்த தனியார் நிறுவனங்க ளும் அதைக் கடைப்பிடிப்பது இல்லை.

    இந்நிலையில், தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில்

    தஞ்சாவூர் மாவட்ட எல்லையான பல்லவ ராயன்பேட்டைக்கும் திருவாரூர் மாவட்டம் தொ டங்கும் கோவில்வெ ன்னிக்கும் இடையில் புதிதாக டோல்கேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சாலையில் டோ ல்கேட் அமைக்கப்பட்டால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளார்கள்.

    ஆகவே டோல்கேட் அமைக்கும் பணியை உடனடியாக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 28-ந் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அம்மாபே ட்டையில் இருந்து ஊர்வ லமாக சென்று டோல்கேட் முன்பு பெருந்திரள் மறியல் போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாள்-வில் அம்புக்கு கொலு மண்டபத்தில் பூஜை நடந்தது.
    • ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷபூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகனபவனி, நாதஸ்வரக் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, பரத நாட்டியம் போன்றவை நடைபெற்று வருகிறது. இரவில் வெள்ளிக் கலைமான் வாகனம், வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி இமயகிரி வாகனம், போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழாவான விஜயதசமி நாளான இன்று (செவ்வாய்கிழமை) மாலை நடக்கிறது. இதையொட்டி அம்மன் வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் குதிரைக்கு கொள்ளு, காணம் போன்ற உணவு வகைகள் படைத்து பூஜைகளும் நடத்தப்பட்டது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வாள்-வில், அம்பு போன்ற ஆயுதங்களையும் அதன்அருகில் பாணாசுரன் என்ற அரக்கனின் உருவ பொம்மையும் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் 1-மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்கியது.

    இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் வெளியே வரும் போதும், கோவிலின் பிரதான நுழைவு வாசல் வழியாக சன்னதி தெருவுக்கு வரும் போதும் போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

    ஊர்வலத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானைஅணிவகுத்து சென்றது. அதைத் தொடர்ந்து 2 குதிரைகளில் பக்தர்கள் வேடம் அணிந்து சென்றனர். இதனையடுத்து கோவில் ஊழியர் வாள் ஏந்திய படியும், சுண்டன்பரப்பை பரம்பரை தர்மகர்த்தா வில் -அம்பு ஏந்திய படியும் சென்றனர். அதனைத் தொடர்ந்து பஞ்ச வாத்தியம் கேரள புகழ் தையம் ஆட்டம், சிங்காரி மேளம், செண்டை மேளம், ஒயிலாட்டம், கோலாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது.

    அங்குபகவதி அம்மன், பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவிலுக்கு பகவதி அம்மன் செல்கிறார். அங்கு அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடக்கிறது.

    அதன் பிறகு அம்மனின் வாகனம் பஞ்சலிங்கபுரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர். அம்மனின் வாகன பவனி முடிந்ததும் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் உள்ள காரியக்காரன் மடம் வந்து வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாகம் இணைந்து செய்து வருகிறது. பரிவேட்டை ஊர்வலத்தையொட்டி நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலும், அஞ்சுகிராமம் கன்னியாகுமரி சாலையிலும் இன்று பகல் 11 மணிக்கு பிறகு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    மதுரை

    ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) சங்க நிர்வாகி சேகர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    மதுரை, தேனி, திண்டுக் கல், திருச்சி, விருதுநகர், புதுகோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவ கங்கை, உள்ளிட்ட மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 20 இடங்களில் வரு கின்ற விஜ யதசமி நாளன்று (22-ந் தேதி) ஊர்வ லம் மற்றும் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    அன்றைய தினம் ஆர்.எஸ்.எஸ். சார்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை யான காக்கி டவுசர், வெள்ளை சட்டை, தொப்பி, பெல்ட், பிளாக் ஷூ அணிந்து இசை வாத்தியம் முழங்க நகர் முழுவதும் மாலை 4 மணிக்கு பேரணி ஆரம்பித்து நகரின் பல்வேறு பகுதிகளை பேரணி ஊர்வ லமாக சுற்றி இறுதியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கடந்த மாதம் விண்ணப்பித் திருந்தும் இதுவரை சம் பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

    எனவே விஜயதசமி அன்று பேரணி, கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண் டும்.

    இவ்வாறு மனுவில் கூறி யிருந்தனர்.

    இந்த மனு நீதிபதி இளங் கோவன் முன் விசார ணைக்கு வந்தது. விசாரணை யின் போது நீதிபதி, இதே கோரிக்கைகளை வலியு றுத்தி பல்வேறு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார். இந்த வழக்குகளை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    • மாணவிகள் விழிப்புணர்வு பகாதைகளுடன் கோடியக்கரை பூங்காவிலிருந்து ஊர்வலமாக சரணாலயம் வந்தனர்.
    • அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக்காப்பாளர் அபிஷேக் தோமர், உத்தரவின்படி நாகப்பட்டினம் வனஉயிரினக் கோட்டம் வேதாரண்யம் வனச்சரகம் கோடியக்கரை சரணா லயத்தில் வனஉயிரின வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்சியாக வனசரக அலுவலர் அயூப்கான் தலைமையில் கோடியக்கரை அரசு மேல்நிலைபள்ளி மாணவ, மாணவிகள் ஆரியர்கள், வனத்துறை , பணியாளர்கள், வனவர்கள் மகாலெட்சுமி, பெரியசாமி, சதீஷ்குமார். மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர், பாலசுப்பிரமணியன் மற்றும் துணை தலைவர் குமார் ,உறுப்பினர்கள் ராமன், வீரசுந்தரம், சிவகணேசன் உள்ளியிட்டோர் கலந்துகொ ண்டனர்.

    பின்பு தம்புசாமி இல்லவளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன .வன உயிரின வாரா நிகழ்ச்சியினை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பகாதைகளுடன் கோடியக்கரை பூங்கா விலிருந்து ஊர் வலமாக சரணாலயம நுழைவுவாயிலை வந்த டைந்து அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பின் சரணாலய பகுதிகளை சுற்றி காண்பித்தும் வனஉயிரினங்கள், வனம், மற்றும் பறவைகள் குறித்து டாக்டர். சிவகணேசன் மாணவ- மாணவிகளுக்கு எடுத்து உரைத்தார்.

    முடிவில் வனஉயிரின வார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.
    • முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 31-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.

    இதற்கு பா.ஜனதா மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்குகிறார்.

    இந்து முன்னணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

    அனைத்து கிராம கமிட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவபிரகாஷம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகாணந்தம், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், பா.ஜனதா மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

    ஊர்வலமானது மதியம் 2 மணிக்கு தொடங்கி ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையின் முக்கிய பகுதி மற்றும் ஊர்வல பாதை முழுவதும் 165 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    5ஆளில்லா குட்டி விமானங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    100-க்கும் மேற்பட்ட இடத்தில் போலீசார் நிறுத்தி பைனாக்குலர் பயன்படுத்த உள்ளது.

    மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டிஐஜி ஜெயசந்திரன், திருச்சி டிஐஜி பலவன், விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார், மயிலாடுதுறை எஸ்பி மீனா, தஞ்சை எஸ்.பி ஆஸிஷ் ராவத், எஸ்ஐயூ எஸ்பி பாண்டியராஜன், திருச்சி டிராபிக் எஸ்பி செல்வகுமார், சேலம் எஸ்பி மதிவாணன், கரூர் எஸ்பி சுந்தரவதனம், கடலோர காவல் படை எஸ்பி அதிவீரப்பாண்டியன், திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில்குமார், அரியலூர் எஸ்பி பரோஸ்கான் அப்துல்லா உட்பட 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்காவலர் படை போலீசார் உள்பட திருச்சி மண்டலத்தில் உள்ள தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும், கமோண்டோ போலீசாரும் வந்துள்ளனர்.

    மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். முத்துப்பேட்டை நகரை போலீசார் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு
    • நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஊர்வலத்தில் சிறிது தூரம் கலந்து கொண்டார்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் அடைக்காக்குழி பாத்திமாநகர் பகுதியில் இந்து மகா சபா சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கும் ஊர்வல நிகழ்ச்சி புல்லூர் பகவதி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கியது. நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்துக்கு இந்து மகா சபா நிர்வாகிகளும், காங்கிரஸ் நிர்வாகிகளும் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு ஊர்வலம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஊர்வலத்தில் சிறிது தூரம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டார தலைவர் விஜயகுமார், குளப்புறம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில், மெதுகும்மல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், நடைக்காவு பஞ்சாயத்து தலைவர் கிறிஸ்டல்ஜாண், நடைக்காவு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெக்கின்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், முன்னாள் வட்டார தலைவர் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×