என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அபிஷேகம்"
- இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார்.
- வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்தசாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற 20.12.23 அன்று மாலை 05.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர். சனிப்பெயர்ச்சி விழா நெருங்குவதால், வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், டெல்டா மாவங்களில் கனமழையின் காரணமாக, இன்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும், குறைவான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி தங்கள் தோஷங்களை போக்கி, சனீஸ்வரரை மிக எளிமையாக அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்களுக்கு 7 வகையானபிரசாதம் வழங்கப்பட்டது
- 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி :
கொட்டாரம் பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இங்கு உள்ள மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அப்போது எண்ணெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சன பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டு சர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார்.
பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி சிவனடியார்கள் மற்றும் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல், கொண்டை கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார்சாதம் போன்ற 7 வகையான அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
- புனிதநீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி:
கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை யொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருவெண்கா ட்டில் பிர்ம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யே ஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் காசிக்கு இணையான 6 கோவில்களில் முதன்மையான கோவிலாகும்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை யொட்டி 1008 சங்காபிஷகம் நடந்தது.
முன்னதாக புனிதநீர் நிரப்பபட்ட சங்குகள் நெல்லின் மீது பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வ ரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ராமகிருஷ்ணன் குடும்பத்தி னர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், சீர்காழி திருநிலைநாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசாமி கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை யொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.
முன்னதாக புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பி க்கப்பட்டது.
தொடர்ந்து, புனிதநீரால் மூலவர் பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், பொன்னா கவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையார் கோவில் மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசாமி கோவிலில் கார்த்திகை மாத சோம வாரத்தை யொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.
பின், மூலவருக்கு சங்காபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பஞ்சாமிர்தம்-ஆயுள் விருத்தியை அளிக்கும்.
- தேன் அபிஷேகம்- இனிய குரல் வளத்தையும் நல்ல வாழ்க்கை துணையையும் கொடுக்கும்.
சாஸ்தாவுக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்க வல்லது.
தைலாபிஷேகம்- வியாதிகளை நாசம் செய்யும்.
திரவியப்பொடி, மஞ்சள்பொடி,அரிசிமா பொடி, நெல்லிப்பொடி போன்ற அபிஷேக பொடிகள்- கடன் நிவாரணத்தை அளிக்கும்.
பஞ்சகவ்யம்-ஞானம் அருளும்.
பஞ்சாமிர்தம்-ஆயுள் விருத்தியை அளிக்கும்.
பசும்பால்-செல்வ வளத்தை அளிக்கும்.
தயிர் அபிஷேகம்-தேக புஷ்டியையும் ஆரோக்கியத்தையும் அருளும்.
நெய் அபிஷேகம்- நோயற்ற வாழ்வு தரும்.
தேன் அபிஷேகம்- இனிய குரல் வளத்தையும் நல்ல வாழ்க்கை துணையையும் கொடுக்கும்.
கருப்பஞ்சாறு -வம்ச விருத்தி உண்டாகும்.
பழச்சாறுகள்-தோற்றப்பொலிவைத் தரும்.
இளநீர்-சத்புத்ர பேற்றையும் பெரும் வித்யையையும் அளிக்கும்.
சந்தன அபிஷேகம்- தான்ய லாபத்தையும் தேக சௌக்கியத்தையும் அளிக்கும்.
விபூதி அபிஷேகம்- ஐஸ்வர்யத்தையும் முக்தியையும் அளிக்கும்.
புஷ்போதக அபிஷேகம்-ராஜ பதவியை அளிக்கும்.
- கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது.
- ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.
1. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
2. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது.
எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.
3. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.
4. விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.
5. கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும்
ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.
6. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.
7. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள்.
கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.
8. முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும்.
ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான்.
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில்
குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.
9. கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும்.
கார்த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.
10. கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.
11. கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.
12. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
13. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
14. கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
15. கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
16. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.
17. கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.
18. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.
19. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.
20. திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள்.
இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள்.
மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
21. கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது.
மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.
நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
22. கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.
23. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது.
அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.
24. கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றாலநாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.
25. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.
- கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள்.
- இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது.
சபரிமலையில் 18ஆம் படி ஏறியவுடன் நம் கண்ணில் படுவது கொடிமரம் தான்.
கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள்.
கொடி மரத்தின் உச்சியில் அய்யப்பனின் வாகனமான குதிரை சிறிய அளவில் உள்ளது.
கொடிமரத்தின் வலதுபுறம் கற்பூர ஆழி உள்ளது.
சபரிமலையில் கொடிமரத்தின் முன் வீழ்ந்து பக்தர்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது.
இக்கொடி மரத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம், அதன் நீண்ட பாகம் விஷ்ணுவைக் குறிக்கும்.
எனவே சபரிமலை ஆலய கொடிமரம் மும் மூர்த்திகளை குறிக்கிறது.
- மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர்.
- சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.
மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலில் இருந்து லீலா என்ற
தேவதை போன்ற அழகிய பெண் வெளிவந்து அய்யப்பனை வணங்கி
"நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன்.
என் சாபம் நீங்குவதற்குக் காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வேண்டும்.
என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டினாள்.
மணிகண்டனாகிய அய்யப்பன் அவளிடம் "நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளேன்.
எனவே உன்னை ஏற்க இயலாது" என்று கூறி அவளது வேண்டுகோளை நிராகரித்தார்.
அதோடு அந்தப் பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்படும் கோவிலில்
மாளிகைப்புறத்தம்மா என்ற பெயரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி பக்தர்கள் மாளிகைப் புறத்தம்மன் எனக் கூறப்படும் மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும்,
தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர்.
சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.
திருமணம் கை கூடுவதற்காக சிலர் இரண்டு ஜாக்கெட் துண்டு கொடுத்து ஒன்றைத்திரும்ப வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.
- கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு.
- கருப்ப சுவாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.
அய்யப்பனுடைய படையில் சிறந்த சேனாதிபதியாகவும், பிரதான வீரராகவும் கடுத்த சுவாமி திகழ்ந்தார் என்று சொல்வார்கள்.
மேலும் பந்தள ராஜாவிற்காக யுத்தங்களில் வென்று வாகை சூடியதாக கடுத்தசுவாமி பற்றி கூறப்படுகிறது.
கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு.
இவருக்குப் பொரி, அவல், மிளகு,பழம் நைவேத்தியமாக படைக்கிறார்கள்.
பதினெட்டுப் படிக்குக் கீழேயும் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.
கடுத்த சுவாமிக்கு சிலர் சுருட்டும் காணிக்கையாக வைக்கின்றனர்.
பதினெட்டாம் படிக்குத் தொட்டது போல் வடக்கு பக்கத்தில் கருப்பசாமி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.
கருப்ப சுவாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.
- மதிய பூஜைக்கு பொதுவாக இடித்து பிழிந்த பாயாசமே நைவேத்தியம்.
- உதயாஸ்தமன பூஜை வேளையில் நண்பகலுக்கு முன்பு 15 பூஜைகள் நடைபெறும்.
அதிகாலை பூஜைக்கு அஷ்டாபிஷேகம், விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர்,தூய நீர்
போன்ற எட்டு பொருட்களால் அபிஷேகம் செய்து திருமதுரம்
(பழம் மற்றும் தேன், சர்க்கரை சேர்த்த கலவை) நைவேத்தியம் செய்வர்.
பிற்பாடு நெய் அபிஷேகம்.
மதிய பூஜைக்கு பொதுவாக இடித்து பிழிந்த பாயாசமே நைவேத்தியம்.
(இடித்துப் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பாலுடன் கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படுவது. மகா நைவேத்தியம் எனப்படும்.)
உதயாஸ்தமன பூஜை வேளையில் நண்பகலுக்கு முன்பு 15 பூஜைகள் நடைபெறும்.
அவை அனைத்திலுமே இடித்துப் பிழிந்த பாயாசமே நைவேத்தியமாகப் படைக்கப்படும்.
இருபத்தியைந்து கலசங்களுடன் மதிய பூஜை நடைபெறும்.
- கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
- ஏரியில் நடுவில் அமைந்துள்ள தடாக நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகே ஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது.
பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.
இதைப்போல வேதாரண்யம் வேதமிருத ஏரியில் நடுவில் அமைந்துள்ள தடாக நந்திகேஸ்வரருக்கும், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோ மநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
ஆங்காங்கே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.