என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hanuman"
- ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.
- வெளிநாட்டு பக்தர்களையும் வியக்க வைக்கும் இந்த கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது.
1) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் மட்டும் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
2) ஆஞ்சநேயர் கோவிலில் புதிய வாகனங்களுக்கு பூஜை போடுவதை நாமக்கல் நகர மக்கள் வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இரு சக்கர வாகனங்களுக்கு பூஜைபோட கட்டணமாக ரூ.50ம், கார், வேன்களுக்கு ரூ.200ம், பஸ், லாரிகளுக்கு ரூ.500ம் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.
3) வருடந்தோறும் அனுமன் பிறந்த மூல நட்சத்திர நாளில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வடை மாலைகள் சாத்தப்படுகிறது.
4) ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
5) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் 2009ம் ஆண்டு நடந்தது.
6) ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.
7) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூமாலைகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
8) ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துதல் மற்றும் முத்தங்கி அலங்காரம் உள்ளிட்ட கட்டளைதாரர் சேவைக்கான முன்பதிவு கோவில் அலுவலகத்தில் நடந்து வருகிறது.
9) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத் தேர் உண்டு. பணம் கட்டியவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் மாலை 6.30 மணிக்கு தங்கத்தேரை இழுக்கலாம்.
10) தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் அபிஷேகத்தில் சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
11) மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
12) அமாவாசை, பவுர்ணமி, ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப் படும்.
13) ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.
14) ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெண்ணெய் பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
15) நாமக்கல் நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
16) ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
17) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க கவசம் அலங்காரமும் முத்தங்கி அலங்காரமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அலங்காரத்தில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.
18) நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.
19) 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
20) வெளிநாட்டு பக்தர்களையும் வியக்க வைக்கும் இந்த கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது.
21) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். அவருக்கு நெய் தீபம் மற்றும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
22) ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு செய்வார்கள். ஆனால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு செய்வது கிடையாது.
23) நாமக்கல் ஆஞ்சநேயரை முத்தங்கி சேவை அலங்காரத்தில் தரிசிப்பதன் மூலம் ராஜயோகம் கிட்டும்.
25) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று 1 லட்சத்து 8 வடை மாலையாக அணிவிக்கப்படுகிறது.
26) எந்தவித அலங்காரமும் இல்லாமல் சாதாரண தோற்றத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசித்தால் காரியத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
27) இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.
28) ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இன்றே நடக்கும். வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும்.
29) தமிழக அரசின் அன்னதான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.2500, ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் அன்னதானம் வழங்க வைப்பு நிதியாக ரூ.25 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
30) ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் நித்திய கட்டளை பூஜையில் கலந்துகொள்ள வைப்பு நிதியில் ரூ.5 ஆயிரம் செலுத்தி அதில் வரும் வட்டியை கொண்டு நித்திய கட்டளை பூஜை நடத்தப்படுகிறது.
- பீடத்திலிருந்து 22அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்ட, ஆஞ்சநேயர் முகம் தேஜஸ் ஔியில் மிளிர்கிறது.
- ஒரே கல்லில் செதுக்கப் பட்ட ஆஞ்சநேயர் சிலை பிரம்மாண்டத்தின் பிம்பமாக நிற்கிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர் வானமே கூரையாக திறந்த வெளியில், தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியோடும் ஆஜானுபாகுவாக நின்று சிந்தையை ஈர்க்கும் ஆஞ்சநேயர் சிற்பம், ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு.
ஒரே கல்லில் செதுக்கப் பட்ட ஆஞ்சநேயர் சிலை பிரம்மாண்டத்தின் பிம்பமாக நிற்கிறது.
பீடத்திலிருந்து 22அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்ட, ஆஞ்சநேயர் முகம் அழகிய தேஜஸ் ஒளியில் மிளிர்கிறது.
காற்று, மழை, வெயில், புயல் என்று இயற்கை சீற்றங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்று அருட்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.
லோகநாயகனான ஸ்ரீநரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார் என்பதும், நாமக்கல் ஆஞ்சநேயர் நாளுக்கு நாள், வளரும் அபூர்வ சக்தி கொண்டவர்.
அதனால் அவரை ஒரு கட்டுமானத்திற்குள் வைக்காமல் காற்று வெளியில் பிரதிஷ்டை செய்துள்ளனர் என்பதும் பக்தர்களின் கூற்று.
- ராமர் நலமாக உள்ள விபரங்களைச் சீதையிடம் அனுமன் தெரிவித்தார்.
- ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார்.
நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதை அசோக வனத்தில் இருப்பதை அவர் கண்டு பிடித்தார்.
ராமர் நலமாக உள்ள விபரங்களைச் சீதையிடம் அனுமன் தெரிவித்தார்.
பிறகு ராமர் தந்த மோதிரத்தை சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர். சீதாதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதாதேவி விரும்பினாள்.
ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவி, மனதார ஆசீர்வதித்தாள்.
அந்த வெற்றிலைகளை மாலையாகவும் கட்டி அனுமனுக்குப் போட்டு மகிழ்ச்சியடைந்தாள்.
சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியை ஸ்ரீ ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
அன்று முதல் அனுமனுக்கு வெற்றிலை மாலை போடும் வழக்கம் ஏற்பட்டது.
பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.
என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது.
அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.
ஆகவே, ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும் போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒரு பாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்று பாக்கு என்பதாக இருக்க வேண்டும்.
மேலும் வெற்றிலையை நரம்பில்லாத முன்பகுதி வெளியில் தெரியுமாறு மடித்து, வாழை நார் போன்றவற்றைக் கொண்டு, மாலையாகத் தொடுத்துப் போடலாம்.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இனிதே நடக்கும், நல்ல வேலை கிடைக்கும்.
பதவி உயர்வும் கிடைக்கப்பெறும். மேலும் கடன்தொல்லையும் நீங்கும்.
இதனால் பக்தர்கள் நேர்த்திக்கடனாக நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் அணிவிக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், கரூர் மாவட்டம் குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்கிறார்கள்.
வெற்றிலை விவசாயிகள் தங்களுடைய பயிரில் நோய் வராமல் காத்து நன்றாக வெற்றிலையை அறுவடை செய்தால் வெற்றிலை மாலையை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
- ஒரு காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடி மக்களின் தாகம் தீர்த்தது இந்த குளம்.
- கமலாலய குளத்தில் ஆஞ்சநேயர் பாதம் அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடி மக்களின் தாகம் தீர்த்தது இந்த குளம்.
கமலாலய குளத்திற்கும், நாமகிரித் தாயாருக்கும், நரசிம்ம மூர்த்திக்கும், ஆஞ்சநேயருக்குமான பிணைப்பு வியப்புக்குரியது.
நாமகிரித் தாயாரும், ஆஞ்சநேயரும் நீராடி வழிபட்ட கமலாலயக் குளத்திற்குள் 7 கிணறுகள் இருப்பது கூடுதல் சிறப்பு.
ஆஞ்சநேயர் பாதம்
கமலாலய குளத்தில் ஆஞ்சநேயர் பாதம் அமைந்துள்ளது.
குளத்தில் தண்ணீர் வற்றும் சமயத்தில் அதை காண முடியும்.
- நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஏறத்தாழ 136 ஏக்கர் பரப்பளவில் ஒரே கல்லினால் ஆன பெரிய மலை உள்ளது.
- சாலக்கிராமம் என்பது விஷ்ணுவுக்கு உகந்த தெய்வீக கல் ஆகும்.
லட்சுமி கடாட்சம் அருளும் கமலாலய குளம்
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஏறத்தாழ 136 ஏக்கர் பரப்பளவில் ஒரே கல்லினால் ஆன பெரிய மலை உள்ளது.
இந்த மலையின் உயரம் 75 மீட்டர் (246 அடி) ஆகும்.
சுற்றிலும், கமலாலய குளம், ஜெட்டி குளம், திருப்பாகுளம் ஆகியவை உள்ளன.
கமலாலய குளம் புராண கால சிறப்புகளை உடையது.
ராமாயண காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து கொண்டு இலங்கைக்கு செல்லும் வழியில், நாமக்கல் வந்தார்.
அப்போது அவருக்கு, சாலக்கிராமம் கிடைக்க பெற்றார்.
சாலக்கிராமம் என்பது விஷ்ணுவுக்கு உகந்த தெய்வீக கல் ஆகும்.
அப்போது 'உனக்கு கிடைக்க பெற்றதை எந்த இடத்தில் வைக்கிறாயோ,
அந்த இடம் மலையாக மாறிவிடும்' என்ற அசரீரி வார்த்தை கேட்டது.
இந்த தலத்திற்கு ஆஞ்சநேயர் வந்தபோது, சந்தியாவந்தனம் செய்வதற்காக கமலாலய குளத்தில் இறங்கினார்.
அப்போது சாலக்கிராமத்தை எப்படி கீழே வைப்பது என்று யோசித்த போது, அங்கு மகாலட்சுமி தவம் செய்து கொண்டு இருப்பதை கண்டார்.
மகாலட்சுமியிடம் தான் தியானம் செய்யும் வரை சாலக்கிராமத்தை கீழே வைத்து விடாமல் கையிலேயே வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நேரம் அதிகமாகவே ஆஞ்சநேயர் மறந்து விட்டார் என நினைத்து மகாலட்சுமி சாலக்கிராமத்தை கீழே வைத்து விட்டார்.
சந்தியா வந்தனம் முடித்து வந்து பார்த்த போது தனக்கு முன்பு பெரிய மலை உருவாகி இருப்பதை ஆஞ்சநேயர் கண்டார் என்பதும், அந்த மலையே நாமகிரி மலை என்றும் இதன் தல வரலாறு கூறுகிறது.
மலை அடிவாரத்தில் மகாலட்சுமி வாசம் செய்யும் குளம்தான் கமலாலய குளம்.
கமலம் என்றல் தாமரை என பொருள். தாமரையில் அமர்ந்தபடி லட்சுமி அருள்பாலிக்கும் குளம் என்பதால் இதை கமலாலய குளம் என்கின்றனர்.
இந்த குளத்து தீர்த்தம் புண்ணியமிக்கது. லட்சுமி கடாட்சம் அருளக்கூடியது என்கின்றனர் ஆன்மீகவாதிகள்.
எனவே இந்த தீர்த்த குளத்து நீரை வீடுகளில் தெளித்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும் என்கிறார்கள்.
* தமிழ் மாதம் முதல் ஞாயிறு சிறப்பு வடைமாலை அபிஷேகம் பங்குனித் தேர்த்திருவிழா
* தை வெள்ளி
* வைகுண்ட ஏகாதசி
* ஆஞ்சநேயர் ஜெயந்தி
* நவராத்திரி விழா
* நரசிம்ம ஜெயந்தி
* கிருஷ்ணர் ஜெயந்தி
* ஆடி வெள்ளி
* ஆவணி அவிட்டம்
* புரட்டாசி ஐந்து சனிக்கிழமை
* யுகாதி பண்டிகை
* திருக்கார்த்திகை தீபம்
ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோவில்களில் இவ்விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி-காலை 6.30 முதல் 1.30 மணி
- மாலை 4.30 முதல் 8.30 மணி
ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி
காலை 6.30 முதல் 1.30 மணி
மாலை 4.30 முதல் 8.30 மணி
ஸ்ரீ நரசிம்மர் சன்னதி
காலை 6.30 முதல்1.30 மணி
மாலை 4.30 முதல் 8.30 மணி
ஸ்ரீஅரங்கர் சன்னதி
காலை 9.00 முதல் முதல் 11.00 மணி
மாலை 5.00 முதல் 7.00 மணி
- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
- பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
அதன் பிறகு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஆஞ்சநேயர் வடை மாலையுடன் காட்சி அளிப்பார்.
அதன்பிறகு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
முதலில் நல்லெண்ணை காப்பு செய்யப்படுகிறது. பிறகு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது.
பின்னர் சீயக்காய், பால், தயிர், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சொர்ண அபிஷேகம் ஆகிய அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.
ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி பழம், மாதுளம் பழம், திராட்சை பழம் ஆகியவற்றை கொண்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.
அதன்பிறகு உச்சிகால பூஜை நடத்தப்படுகிறது.
- நாமக்கல்லில் வாயு மைந்தன் அனுமான் வானமே கூரையாக கொண்டு அருள்பாலிக்கிறார்.
- நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும்.
நாமக்கல்லில் வாயு மைந்தன் அனுமான் வானமே கூரையாக கொண்டு அருள்பாலிக்கிறார்.
இவரது சன்னதியில் கோபுரம், மேற்கூரை கிடையாது...
சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் வாயு மைந்தன் என்பதால் காற்று போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதே இதன் தத்துவமாகும்.
இவருக்கு கோபுரம் கிடையாது.
வெயிலிலும், மழையிலும், காற்றிலும் பொலிவு மாறாமல் காட்சி அளிக்கிறார்.
நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரில்தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.
நரசிம்மருக்கு கோபுரம் இல்லை. அவர் அமர்ந்திருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது.
அவருக்கு கோபுரம் இல்லாததால், அவரது தாசனான தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் கூறியதாக வரலாற்றுத் தகவல் மூலம் தெரிய வருகிறது.
நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும்.
மலையின் மேற்கு புறம் உள்ள மலைக்கோவிலில் இந்த நரசிம்மர் நாமகிரி தாயார் கோவில் உள்ளது.
நரசிம்மரின் சிலை மலையைக் குடைந்து வடிக்கப்பட்டு உள்ளது.
நாமகிரி தாயாரின் கோவில் மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடவரைக் கோவில் ஆகும்.
பல்லவர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. மலையின் கிழக்கு புறம் அரங்கநாதன் கோவில் உள்ளது.
இங்கு 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு திருவரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதன்மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிக்கட்டு உள்ளது.
பாறையை செதுக்கி இந்த படிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கில் நேரு பூங்காவும், தெற்கில் செலம்ப கவுண்டர் பூங்காவும் உள்ளது.
- பிரசாதம் என்பதால் பக்தர்களும் இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.
- 20 டிகிரி செல்சியஸ் அளவில் சுவாமி சிலையை குளிர வைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, தை மாதங்களில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்துப்படி அலங்காரம் நடைபெறும்.
பிரசாதம் என்பதால் பக்தர்களும் இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இதுபற்றி கோவில் அர்ச்சகர்கள் கூறுகையில், ஆஞ்சநேயருக்கான வெண்ணெய் அலங்காரம் மேற்கொள்ள 10 அர்ச்சகர்கள் பணியில் உள்ளோம்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கினால் இரவு 7 மணியாகிவிடும்.
20 டிகிரி செல்சியஸ் அளவில் சுவாமி சிலையை குளிர வைக்க வேண்டும்.
இதற்காக ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்துசிலை மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்போம்.
குளிர்காலத்தில் மட்டுமே இதனை செய்ய முடியும்.
அதன்பிறகு 110 கிலோ வெண்ணெய்யை கொஞ்சம், கொஞ்சமாக சாத்தி கட்டளை தாரர்கள் விரும்பும் வகையில் வெண்ணெய் சாத்துப்படி அலங்காரம் செய்யப்படும்.
குறைந்தபட்சம் 4 மணி நேரம் மட்டுமே வெண்ணெய் அலங்காரம் சிலையில் இருக்கும்.
பின்னர் உதிரத் தொடங்கி விடும். 110 கிலோவில் சுமார் 10 கிலோ வெண்ணெய் வீணாகி விடும்.
கட்டளை தாரர்களுக்கு 50 கிலோ, அர்ச்சகர்களுக்கு 40 கிலோ வெண்ணெய் வழங்கப்படும்.
10 கிலோ வெண்ணெய் கோவில் நிர்வாகம் சார்பில் விற்கப்படும்.
சுவாமிக்கு சாத்தப்பட்ட வெண்ணெய்யை நெய்யாக உருக்கி வீட்டில் பயன்படுத்தினால் அனைத்து வளமும் கிடைக்கும் என்றனர்.
- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பவுர்ணமிதோறும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
- பவுர்ணமி அன்று மாலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை இந்த பூஜை நடைபெறும்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பவுர்ணமிதோறும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
கோவில் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் பவுர்ணமி அன்று மாலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை இந்த பூஜை நடைபெறும்.
இதற்கு அனுமதி இலவசம்.
பெண்கள் பூஜை பொருட்களை கொண்டு வரவேண்டும்.
- ஐயப்ப சீசன் என்பதால் அந்நேரங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அலை மோதுகிறது.
- சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பாகும்.
அனுமன் ஜெயந்தி, அமாவாசை, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஐயப்ப சீசன் என்பதால் அந்நேரங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அலை மோதுகிறது.
சனி ஓரையில் ஆஞ்சநேயரை தரிசிப்பது நன்மை தரும் என்றும், மனதில் நினைத்ததை நிறைவேற்றுவார் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பாகும்.
வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் படித்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வெண்ணை காப்பு சாத்தி வழிபடலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்