search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spirituality"

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்.
    • வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை)

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-11 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி நள்ளிரவு 1.25 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: ரேவதி மாலை 5.27 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று), தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில்களில் திருமஞ்சன அலங்கார சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன அலங்கார சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமி காலை சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மரியாதை

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-சுபம்

    கடகம்-கவனம்

    சிம்மம்-சுகம்

    கன்னி-தெளிவு

    துலாம்- சிந்தனை

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு- தெளிவு

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-உறுதி

    மீனம்-திடம்

    • பிள்ளையாருக்கு ‘விக்னகர்த்தா’ என்ற பெயரும் உண்டு.
    • `விக்னம்’ என்பதற்கு ‘இடையூறு’ என்று பொருள்.

    விநாயகரை கும்பிட்டால் விக்கினம் தீரும் என்பது நம்பிக்கை. 'விக்னம்' என்பதற்கு 'இடையூறு' என்று பொருள். இந்த இடையூறுகளை நீக்குவதற்கு, விநாயகர் வழிபாடு முக்கியமான ஒன்று.

    எந்த காரியத்தை தொடங்கும் போதும் பிள்ளையாரை வழிபட்டு தான் தொடங்குகிறோம். அப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது, இந்து சமயம் சொல்லும் ஆகம விதி. பிள்ளையாருக்கு 'விக்னகர்த்தா' (விக்னங்களை உண்டாக்குபவர்), 'விக்னேஸ்வரன்' (விக்னங்களை நீக்குபவர்) என்ற பெயரும் உண்டு.

    நாம் ஒரு காரியத்தை தொடங்கும் போது அந்த காரியம் எந்த தடையும் இன்றி நன்கு நடைபெற வேண்டும் என்று நினைப்போம். அந்த நினைப்பை வணங்குதலாக, விநாயகரை நோக்கி வைக்க வேண்டும். விநாயகரை வழிபடாது தொடங்கும் காரியங்களில் இடையூறுகள் ஏற்படும் என்பதை பல புராணக் கதைகள் நமக்கு சொல்கின்றன.

    வள்ளியை மணம் முடிக்கச் சென்ற முருகப்பெருமான் கதை நம்மில் பலருக்கும் தெரியும். வள்ளியை மணம் முடிக்கும் அவசரத்தில், அவர் தன் அண்ணனான விநாயகரை வணங்காமல் சென்று விட்டார். வள்ளியை மணம் முடிக்க அவர் வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக என்று பல உருவங்கள் எடுத்தும் அவரது முயற்சி பலிக்கவில்லை.

    அப்போது நாரதரின் மூலமாக தன் அண்ணனை வழிபடாமல் வந்த விஷயம் தெரியவர, உடனடியாக விநாயகரை நினைத்து வழிபட்டார் முருகப் பெருமான். அப்போது யானை வடிவில் வந்த விநாயகர், முருகப்பெருமானையும், வள்ளியையும் சேர்த்து வைத்தார்.

    இதேபோல ஒவ்வொரு கடவுளரும், விநாயகரை வணங்க மறந்த போதெல்லாம் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டதை நமது புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

    விநாயகரை திருப்திப்படுத்த ஒரு அச்சுவெல்லம், ஒரு கை பொரி, ஒரு பிடி அவல் மட்டுமே போதுமானது. இவற்றைக் கொண்டு விநாயகரை நினைத்து, தலையில் குட்டிக்கொண்டு 'சுக்லாம் பரதரம்..' என்ற சுலோகத்தை சொல்லி வழிபட்டால், அவர் உடனடியாக நம்மை தேடி வந்து நன்மைகளைச் செய்வார்.

    • திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆடி 10 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: பஞ்சமி காலை 6.10 மணி வரை. பிறகு சஷ்டி பின்னிரவு 3.28 மணி வரை. பிறகு சப்தமி.

    நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 7 மணி வரை. பிறகு ரேவதி.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: ேமற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பிகை புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. லால்குடி ஸ்ரீபிரலிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியர் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஜெயம்

    ரிஷபம் -சாந்தம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்- அமைதி

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-நலம்

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- நன்மை

    மகரம்-புகழ்

    கும்பம்-பரிசு

    மீனம்-போட்டி

    • அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக இருப்பது பராசக்தியாகும்.
    • நான்கு பக்கங்களாலும் இத்தலம் வனத்தால் சூழப்பட்டுள்ளது.

    அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக இருப்பது பராசக்தியாகும். அப்பராசக்தியே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களிலும் குடிகொண்டுள்ளாள். அச்சக்தியே கொங்கு நாட்டின் வடமேற்கு எல்லை அருகில் மைசூர் செல்லும் பாதையில் பிரதானமாக வீற்றிருக்கும் பண்ணாரி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும்.

    இத்தலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்தினிடையே அமைந்துள்ளது. நான்கு பக்கங்களாலும் இத்தலம் வனத்தால் சூழப்பட்டுள்ளது.

    அடர்ந்த காட்டுப் பகுதியில் யானைகளும், காட்டுப்பன்றிகளும், மான்களும், நரிகளும், வண்ண மயில்களும், குரங்குகளும், முயல்களும், கரடிகளும் மற்றும் மிகக் கொடிய விஷ ஜந்துகளும் சர்வ சாதாரணமாக உலாவும். இத்தலத்தில் தெற்குப் பார்த்த வண்ணமாக எழுந்தருளியுள்ள பண்ணாரி மாரியம்மன் சுயம்பு லிங்க வடிவமாக உள்ளாள்.

    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும். இக்காட்டாறு இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது.

    திம்பம் மலையின் அடிவாரம் அன்னை பண்ணாரி அம்மனின் அவதாரம் இவ்விடத்தில் நிகழப்போகிறது என்பதை உலகிற்கு அறிவிக்கவோ என்னவோ இக்காட்டாற்றின் துறையில் பசுவும், புலியும் ஒரே இடத்தில் நீர் குடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

    இச்சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு இவ்வனப்பகுதிக்குச் செல்வது வழக்கம். இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப் பகுதியிலேயே தங்கிக் கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள்.

    பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள். காலையிலும், மாலையிலும் பாலைக் கறந்து மாட்டின் உரிமையாளருக்குக் கொடுப்பார்கள்.

    ஒரு பட்டியிலிருந்து காரம்பசு (மாடு) ஒன்று கறக்கச் சென்றால் கறப்பதற்கு நில்லாமல் தன் கன்றுக்கும் கொடுக்காமல் இருப்பதை மாடுகளை மேய்ப்பவன் அறிந்தான். மறுநாள் மாட்டினைப் பின்தொடர்ந்து சென்று கவனித்தான்.

    அப்பசு தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாகப் பொழிவதை மறைவில் இருந்து பார்த்தான்.

    இந்நிகழ்ச்சியை பார்த்த அவன் மறுநாள் சுற்றுவட்டார கிராம மக்கள் ஊர்ப் பெரியவர்களிடமும் விவரத்தைச் சொல்லி அனைவரையும் அழைத்துக்கொண்டு மாட்டினைப் பின்தொடர்ந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரம்பசு பால் சொரிவதைக் காண்பித்தான்.

    அனைவரும் இவ்வரிய நிகழ்ச்சியினைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றார்கள். இதுதெய்வத்தின் திருவிளையாடல் என்று எண்ணிக் கைகூப்பித் தொழுதார்கள்.

    மக்கள் அனைவரும் அவ்விடத்தை சுத்தம் செய்யும் போது கணங்கு புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்கத் திருவுருவும் வேங்கை மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டார்கள்.

    அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி தான் கேரளா மாநிலம் வண்ணார்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன் என்றும் எழில் மிகுந்த இவ்வியற்கை சூழலில் தான் தங்கி விட்டதாகவும் தன்னை இனிமேல் பண்ணாரி அம்மன் எனப்போற்றி வழிபட்டு வாருங்கள் எனவும் அருள்வாக்கில் கூறினார்.

    அன்னையின் அருள்வாக்கின்படி அவ்விடத்தில் கணங்குப்புற்கள் கொண்டு ஒரு குடில் அமைத்துக் கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அன்னையை வழிபட்டு வந்தனர். பின்பு ஊர் மக்கள் அன்னையின் சிறப்பு கருதி அன்னைக்கு விமானத்துடன் கூடிய சிறு கோவில் அமைத்து பத்மபீடத்துடன் திரு உருவம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
    • ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-9 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி காலை 8.40 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 8.41 மணி வரை பிறகு உத்திரட்டாதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை. வடமதுரை ஸ்ரீ சவுந்தர ராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் விடையாற்று உற்சவம். சோழவந்தான் சமீபம் குருவித்துறை குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-மகிழ்ச்சி

    மிதுனம்-தேர்ச்சி

    கடகம்-உயர்வு

    சிம்மம்-சுகம்

    கன்னி-செலவு

    துலாம்- வரவு

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- பரிவு

    மகரம்-சிந்தனை

    கும்பம்-பாராட்டு

    மீனம்-வெற்றி

    • திருமணங்கள் செய்யக் கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை.
    • ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம்.

    முந்தய காலங்களில் நம் முன்னோர்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து வந்தனர். `ஆடிப்பட்டம் தேடி விதை' என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான வேலைகளில் ஈடுபடுவார்கள்.

    எனவே ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்த சமயத்தில் வேறு செலவுகள் செய்ய பணம் இருக்காது. அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.

    ஆடி மாதம் முழுவதுமே விசேஷம் தான். ஒரு வருடத்தை போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர். போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள காலம்.

    யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை. போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது தபஸ், யாகம், யக்ஞம், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய காலம். யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம்.

    ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது. ஆடி மாதத்தில் சந்திரன் சொந்ந வீட்டில் இருக்கிறார்.

    அந்த சொந்த க்ஷேத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது, அதற்கு விசேஷம் அதிகம் உண்டு.

    • ஆடி கிருத்திகை வருகிற 9-ந் தேதி வருகிறது.
    • உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது.

    உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடி கொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது. முக்கியத்துவம் வாய்ந்தது.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

    இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    இந்த ஆண்டு ஆடி கிருத்திகை வருகிற 9-ந் தேதி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பதவி உயர்வு தானாக வரும்.

    ஆடி கிருத்திகை விரதத்தை நாரதர் 12 ஆண்டுகள் மேற்கொண்டார். இதனால் அவருக்கு முனிவர்களில் முதன்மையான முனிவர் என்ற பதவி உயர்வு கிடைத்தது.

    இந்த நாட்களில் காலையில் நீராடி வழிபட வேண்டும். அப்போது கந்த சஷ்டி கவசம் மற்றும் சண்முக கவசம் பாடுவது நல்லது. முருகனுக்கு அன்று பாலாபிஷேகம் செய்வது கூடுதல் நன்மை தரும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழனியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப் பொறிகள். சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என விமரிசையாக நடக்கிறது.

    காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி, மச்சக்காவடி, செடில் காவடி, சேவல்காவடி, தீர்த்தக்காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.

    கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி பாமாலைகள் பக்தி சிரத்தையுடன் பாடிவிரதத்தை முடிக்கின்றனர்.

    அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம் போற்றி புகழ்கிறது. திருத்தணி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மானசீகமாக வழிபட்டாலும் திருத்தணி என்ற பெயரை சொன்னாலும் நம் தீவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.

    முருகப்பெருமான் இத்தலத்தில் ஞானசக்தியாகிய வேலைத் தாங்கி நிற்கிறார். முருகனின் பதினாறு வகையான திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

    முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

    • போட்டோ வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
    • ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம்.

    ஆடி மாத வளர்பிறை செவ்வாய்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த கன்னிப் பெண்களை மனதில் நினைத்து தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன் உணவு, சர்க்கரை பொங்கல், அதிரசம் அல்லது பணியாரம் போன்ற இனிப்பு பண்டங்களை தேங்காய் வெற்றிலை, பாக்கு வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும்.

    மேலும் இறந்த கன்னியின் வயதுக்கு ஏற்ற உடை (பாவாடை, சட்டை, தாவணி, சேலை ) மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், பொட்டு, வாசனையான ஜாதி மல்லி, குண்டு மல்லி மரிக்கொழுந்து படைக்க வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும்.

    போட்டோ வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி கன்னியை பூஜையில் ஆவாகனம் செய்து உங்களின் கோரிக்கைகளை கூற வேண்டும்.

    பிரார்த்தனை நிறைவேற உங்களின் ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம். இதை கூட்டாக பகை மறந்து அங்காளி, பங்காளிகளுடன் இணைந்து வழிபட பலன் இரட்டிப்பாகும். பிறகு பூஜையில் படைத்த உணவை பயபக்தியுடன் அனைவரும் உண்ண வேண்டும்.

    படைத்த ஆடை மற்றும் மங்கலப் பொருட்களை (மூங்கில் கூடை நார்ப்பெட்டியில்) வைத்து பின்னர் வீட்டின் தென்மேற்கு பகுதியான கன்னி மூலையில் உயரமான இடத்தில் இந்த பெட்டியை வைக்க வேண்டும். முதலாண்டு வைத்து படைத்த கன்னிப் பெட்டியை மறு ஆண்டுதான் எடுக்க வேண்டும்.

    கன்னி பெட்டி உள்ள அறைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் இடலாம். மறு வருடம் கன்னி வழிபாடு செய்யும் போது வீட்டை சுத்தம் செய்து விட்டு பெட்டியை திறக்க வேண்டும். பெட்டியை திறந்தவுடன் பூ வாசம் மணக்கும். பூ வாசம் மணந்தால் கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை.

    அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள நிறைவேறாத பிரார்த்தனை உள்ள பெண்களுக்கு கொடுக்க வேண்டும். இதை பல குடும்பத்தினர் வீட்டு சாமி கும்பிடுதல் என்றும் கூறுவார்கள். இந்த வழிபாட்டை ஆடி மாதங்களில் கடை பிடிக்க முடியாதவர்கள் தை மாதங்களிலும் வழிபடலாம். கன்னி தெய்வத்தை வழிபட வெள்ளிக்கிழமையை விட செவ்வாய்கிழமை தான் ஏற்ற நாள்.

    சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் செய்வினை கோளாறு நீங்கும். நோய் நொடிகள் தீர்ந்து விடும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.

    • இன்று சங்கடஹர சதுர்த்தி.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-7 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை காலை 11.01 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: சதயம் இரவு 10.17 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், திருச்சி உச்சி பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் கோவில்களில் காலை கணபதி ஹோமம், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் காலை அலங்கார திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-பரிசு

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-தாமதம்

    துலாம்- தேர்ச்சி

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- அமைதி

    மகரம்-இன்பம்

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-நன்மை

    • சப்த ரிஷிகளில் முக்கியமானவர் பிருகு முனிவர்.
    • மகாலட்சுமியை பூஜிப்பவர்களுக்கு தரித்திரம் விலகும்.

    சப்த ரிஷிகளில் முக்கியமானவர், பிருகு முனிவர். ஒரு முறை 'மும்மூர்த்திகளில் யார் மிகச் சிறந்தவர்?' என்ற விவாதம் தேவர்களுக்கு இடையே ஏற்பட்டது. அப்போது தேவர்கள் அனைவரும் இதுபற்றி பிருகு முனிவரிடம் கேட்டனர். அவரோ நேராக பிரம்மலோகம் சென்றார்.

    அங்கிருந்து பிரம்மனை நோக்கி, "நீர் ஒரு பொய்யர். ஈசனின் திருமுடியை கண்டதாக பொய் கூறினீரே" என்று பலவிதமாக கேலி பேசினார். அதைக் கேட்டு பிரம்மன் வெகுண்டு எழ, அவரது கோபத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து கயிலாயம் சென்றார், பிருகு முனிவர்.

    கயிலாயத்தில் சிவபெருமானை சந்தித்த அவர், "உன்னை எல்லோரும் உலகிற்கெல்லாம் படியளக்கும் ஈசன் என்கிறார்கள். ஆனால் நீயோ பார்வதி தேவியின் சக்திக்கு உட்பட்டவர்" என்றார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், தன்னுடைய நெற்றிக் கண்ணை திறக்க, அங்கிருந்தும் தப்பித்து வைகுண்டம் வந்தடைந்தார், பிருகு முனிவர். அங்கு விஷ்ணு யோக நித்திரையில் இருந்தார்.

    அதைக் கண்ட பிருகு முனிவர், "உன் இல்லத்திற்கு வந்த (வைகுண்டத்திற்கு) விருந்தினரை கவனிக்காமல் இப்படி தூங்குவது சரியா? நீ இப்படி தூங்கிக் கொண்டிருந்தால் உலகத்தை எப்படி பரிபாலனம் செய்ய முடியும்?" எனக் கூறி மகாவிஷ்ணுவின் மார்பில் உதைத்தார்.

    இதைக் கண்டு எழுந்த மகாவிஷ்ணு, "நீங்கள் பெரிய முனிவர். நான் உங்களுக்கு தகுந்த மரியாதை அளிக்க தவறிவிட்டேன். என் மார்பில் உதைத்ததால், உங்கள் கால் வலிக்குமே" என்று கூறி, பிருகு முனிவரின் காலை பிடித்துவிட்டார்.

    இந்த சம்பவத்திற்கு பின்னர் தேவலோகம் சென்ற பிருகு முனிவர், அங்கிருந்த தேவர்களிடம், "மும்மூர்த்திகளில் மகாவிஷ்ணுவே உயர்ந்தவர். நான் காலால் உதைத்த போதிலும், மிகப் பொறுமையாக அந்த பிரச்சினையை கையாண்டதால் அவரே உயர்ந்தவர்" எனக் கூறினார். (இதில் பிருகு முனிவரின் காலில் ஒரு கண் இருந்ததாகவும், அந்தக் காலை பிடித்து விடுவதுபோல், அந்தக் கண்ணை மகாவிஷ்ணு பிடுங்கி விட்டதாகவும் ஒரு சிலர் சொல்வர்).

    அதே நேரத்தில் மகாவிஷ்ணுவின் மார்பில் மகாலட்சுமி வசிப்பதால், மகாலட்சுமி உதைத்த தோஷம் பிருகு முனிவருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து பிருகு முனிவர், மகாலட்சுமி தாயாரிடம் "நான் செய்த இந்த பெரும் பாவத்தை பொறுத்து, என்னை மன்னித்து அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டினார். அதற்கு மகாலட்சுமி, "நான் உனக்கு குழந்தையாகப் பிறந்து, என் கால்களால் உன்னை உதைப்பேன். அப்போது உன் பாவம் நீங்கும், கவலைப்படாதே" என்று கூறினார்.

    அதன்படியே மகாலட்சுமி தாயார், பிருகு முனிவருக்கு மகளாக பிறந்ததாகவும் புராணங்கள் சொல்கின்றன.

    மகாலட்சுமி அவதாரம்

    மகாலட்சுமி, பாற்கடலில் இருந்து தோன்றியவர். அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைவது என்று முடிவெடுத்தனர். கிடைக்கும் அமிர்தத்தை இருவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வது என்றும் தீர்மானித்தனர்.

    பாற்கடலை கடைவதற்கு மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினர். வாசுகி பாம்பின் தலை பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர்.

    ஆனால் மந்தார மலை, பாற்கடலில் நிற்காமல் சரியத் தொடங்கியது. அப்போது மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மலையை தன்னுடைய முதுகில் தாங்கினார்.

    அப்படி மந்தார மலையை கடையும் போது முதலில் வெளிவந்தது, ஆலகாலம் என்னும் விஷம். இந்த விஷத்தின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் அனைத்து ஜீவராசிகளும் தவித்தன. அந்த விஷத்தை, சிவபெருமான் உண்டார். அந்த விஷம் அவரது கழுத்தில் நின்றதால், அவர் 'நீலகண்டர்' ஆனார்.

    இதற்கு பின் ஐராவதம் என்ற வெள்ளை யானை வெளிவந்தது. அதை இந்திரன் எடுத்துக் கொண்டான். ஐராவதத்திற்கு பின்னர் சந்திரன், காமதேனு, கற்பகத் தரு, மகாலட்சுமி, அமிர்த கலசத்துடன் தன்வந்திரி இப்படி ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தது.

    அப்படி வெளிவந்த மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் சரணடைந்தாள். இந்த மகாலட்சுமி சகலவிதமான செல்வத்திற்கும் அதிதேவதையாக விளங்கினாள்.

    இந்த மகாலட்சுமியை யார் பூஜிக்கிறார்களோ, அவர்களுக்கு தரித்திரங்கள் விலகும். ஆதிசங்கரர், ஒரு ஏழையின் வறுமையைப் போக்குவதற்காக மகாலட்சுமியின் மீது கனகதாரா துதியை பாடியதன் காரணமாக, அந்த வீட்டின் மீது நெல்லிக்கனி வடிவில் தங்க மழை பொழிந்தது.

    மகாலட்சுமியை வழிபட பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் உகந்தது. இந்த நாட்களில் திருவிளக்கு பூஜை செய்வதால், மகாலட்சுமியின் அருளைப் பெறலாம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை வந்தாலும், ஆடி வெள்ளிக்கிழமைகளும், தை வெள்ளிக்கிழமைகளும் சிறப்புக்குரியவையாக பார்க்கப்படுகிறது.

    இந்த நாட்களில் திருவிளக்குப் பூஜை செய்து மகாலட்சுமியை வணங்கினால், நிறைந்த செல்வமும், மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும். மேலும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மகாலட்சுமியை, 'ஷோடச லட்சுமி' என்று 16 வகையான லட்சுமிகளாக வழிபடும் வழக்கமும் உள்ளது.

    தீபம், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், ஸ்ரீ சூரணம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, கோலம், ஸ்வஸ்திகா சின்னம், யானை, கண்ணாடி ஆகியவற்றில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது.

    திருவிளக்குப் பூஜை செய்வதற்கு வாழை இலை, வெற்றிலை, பாக்கு, பழம், அவல், பொரி, கற்கண்டு, திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரிப்பூ, ஊதுபத்தி, துளசி, கற்பூரம், கலச நீர், அரிசி, மஞ்சள், எண்ணெய், திரி, விளக்கு போன்ற பொருட்கள் தேவைப்படும்.

    மகாலட்சுமியை வழிபாடு செய்வதால், ராஜ பதவி, மக்கட்செல்வம், சுற்றம், பொன், நவரத்தினங்கள், நெல் முதலான தானியங்கள், பல்லக்கு, பணியாட்கள் ஆகிய அஷ்ட ஐஸ்வரியங்கள் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.

    • 24-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி
    • 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேய்பிறை அஷ்டமி

    23-ந்தேதி (செவ்வாய்)

    * குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நாராயண தீர்த்தம்.

    * வடமதுரை சவுந்திரராஜர் வசந்த உற்சவம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    24-ந்தேதி (புதன்)

    * சங்கடகர சதுர்த்தி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப்பெருமா னுக்கு பால் அபிஷேகம்.

    25-ந் தேதி (வியாழன்)

    * வடமதுரை சவுந்திரராஜர் குதிரை வாகனத்தில் விடை யாற்று உற்சவம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    26-ந்தேதி (வெள்ளி)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.

    * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    27-ந்தேதி (சனி)

    * திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆகிய திருத்தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * திருவரங்கம் நம்பெருமாள். தேவகோட்டை ரங்கநாதர் புறப் பாடு கண்டருளல்.

    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (ஞாயிறு)

    * தேய்பிறை அஷ்டமி.

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.

    * ஆலயங்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    29-ந்தேதி (திங்கள்)

    * திருப்போரூர் முருகப்பெருமான் கோவிலில் பால் அபிஷேகம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
    • வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆடி 7 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: துவிதியை நண்பகல் 1.13 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம்: அவிட்டம் இரவு 11.47 மணி வரை. பிறகு சதயம்.

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமி மலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம். முத்துப் பல்லக்கில் அருளிய லீலை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை தலங்களில் காலை சிறப்பு அபிஷேகம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-வரவு

    கடகம்- செலவு

    சிம்மம்-நட்பு

    கன்னி-நலம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- ஆர்வம்

    மகரம்-சுபம்

    கும்பம்-முயற்சி

    மீனம்-கவனம்

    ×