என் மலர்
நீங்கள் தேடியது "Today Rasipalan"
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நன்மைகள் நடைபெறும் நாள். தேகநலன் சீராகும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
ரிஷபம்
சங்கடங்கள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.
மிதுனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.
கடகம்
யோகமான நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துகொள்வீர்கள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
வசதிகள் பெருகும் நாள். வருங்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. போன்மூலம் பொன்னான தகவலொன்று வந்து சேரும்.
கன்னி
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
துலாம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது.
விருச்சிகம்
தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.
தனுசு
தன்னம்பிக்கை தேவைப்படும் நாள். வாங்கல் கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மகரம்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.
கும்பம்
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.
மீனம்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். வருமானம் உயரும்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-16 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி இரவு 11.16 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : கார்த்திகை இரவு 11.26 மணி வரை பிறகு ரோகிணி
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்குத் திருமஞ்சன சேவை
இன்று கார்த்திகை விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். நவநிதி மகாதீர்த்தம். ஸ்ரீரங்கம் கோவிலில் காயத்ரி மண்டபத்துக்குள் மூலஸ்தானத்தைச் சுற்றி திருவண்ணாழி பிரதட்சணம், நாச்சியார் திருக்கோலம். எம்பெருமான் தெப்பம். ஆவுடையார் கோவிலில் ஸ்ரீ மாணிக்கவாசர் எல்லாம்வல்ல சித்தராய் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவகோட்டை அரங்கநாதர் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமி பாலகர் ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூர் அமராவதி நதியின் வடகரையில் முத்தான சயனத்தில் அபயப்பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிறப்பு
ரிஷபம்-பயணம்
மிதுனம்-தேர்ச்சி
கடகம்-கண்ணியம்
சிம்மம்-முயற்சி
கன்னி-பயிற்சி
துலாம்- உறுதி
விருச்சிகம்-கடமை
தனுசு- விவேகம்
மகரம்-உண்மை
கும்பம்-நட்பு
மீனம்-நன்மை
- ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சகல விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு விழா.
- ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-15 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி நள்ளிரவு 1.34 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 1.03 மணி வரை பிறகு கிருத்திகை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று வைகுண்ட ஏகாதசி, பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
இன்று ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சகல விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு விழா. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் முத்தங்கி சேவை. சகல விஷ்ணு ஆலயங்களில் இராப்பத்து உற்சவம் ஆரம்பம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி, வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருநாரையூர் சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-ஆசை
மிதுனம்-கடமை
கடகம்-சுகம்
சிம்மம்-அன்பு
கன்னி-சுபம்
துலாம்- களிப்பு
விருச்சிகம்-வரவு
தனுசு- நட்பு
மகரம்-தாமதம்
கும்பம்-இன்பம்
மீனம்-உவகை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
விஷ்ணு வழிபாட்டால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.
ரிஷபம்
முன்னேற்றம் கூடும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சகோதர ஒத்துழைப்புடன் பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடைபெறும்.
மிதுனம்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். தொழில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும்.
சிம்மம்
தேவைக்கு ஏற்ற பணம் தேடி வரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
கன்னி
வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
துலாம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக வருவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
விருச்சிகம்
பெருமாள் வழிபாட்டால் பெருமைகள் குவியும் நாள். காரிய வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளைக் கண்டு மேலதிகாரிகள் பாராட்டுவர்.
தனுசு
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். விட்டுப்போன வரன் மீண்டும் வந்து சேரலாம்.
மகரம்
வருமானம் திருப்தி தரும்நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம்
நன்மைகள் நடைபெறும் நாள். நம்பிக்கைக்குரிய நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வரலாம். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.
மீனம்
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
- திருக்குற்றாலம் திருக்குற்றால நாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரதோற்சவம்.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்கும் திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-14 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி பின்னிரவு 3.50 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 2.40 மணி வரை பிறகு பரணி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் அபிஷேகம்
இன்று கெர்ப்போட்டம் ஆரம்பம். திருக்குற்றாலம் திருக்குற்றால நாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரதோற்சவம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி. வீரவநல்லூர் ஸ்ரீ சுவாமி ரிஷப வாகனத்திலும், இரவு ஸ்ரீசுவாமி இந்திர வாகனத்திலும் வீதி உலா. ஆவுடையார் கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் ஊர்துவத் தாண்டவக் காட்சி, இரவு யானை வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதியில் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கும், நத்தம் ஸ்ரீவிஜயாசனப் பெருமாளுக்கும், கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்கும் திருமஞ்சனம்.
திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசி அம்மன் சமேத ஸ்ரீரத்தின கிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி கோவில்களில் சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு பாலாபிஷேகம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஊக்கம்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-ஈகை
கடகம்-ஓய்வு
சிம்மம்-லாபம்
கன்னி-ஜெயம்
துலாம்- திடம்
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- போட்டி
மகரம்-வரவு
கும்பம்-ஆசை
மீனம்-உறுதி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். எந்தக் காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
ரிஷபம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மதியத்திற்கு மேல் மன உளைச்சல் அதிகரிக்கும். பணியாளர்களால் தொல்லை உண்டு.
மிதுனம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் மாற்றம் ஏற்படும். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்து வருவர். கடன் சுமை குறையும். பயணங்களால் விரயம் உண்டு.
கடகம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். எதிர்பார்த்தபடியே தனலாபம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும்.
சிம்மம்
இன்பங்கள் கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். கரைந்த சேமிப்பை ஈடு கட்டுவீர்கள். அயல் நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.
கன்னி
விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். பண வரவில் தாமதங்கள் ஏற்படும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் தொல்லைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் உண்டு.
துலாம்
பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். உங்களின் வைப்பு நிதி உயரும். திட்டமிட்ட காரியம் ஒன்றில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோக உயர்வு உண்டு.
விருச்சிகம்
நினைத்தது நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகம் சம்பந்தமாக நல்ல தகவல் வந்து சேரும். பிறர் உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை முடித்துக் கொடுப்பீர்கள்.
தனுசு
அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். உறவினர் பகை அகலும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
மகரம்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். பழுதான வீடுகளைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.
கும்பம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். போன்வழித் தகவல் பொருள் வரவிற்கு வழிவகுக்கும்.
மீனம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்.
- குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-13 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி காலை 7.46 மணி வரை பிறகு நவமி மறுநாள் விடியற்காலை 4.41 வரை பிறகு தசமி
நட்சத்திரம் : ரேவதி மறுநாள் விடியற்காலை 4.04 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
காஞ்சிபுரம், சமயபுரம் உள்பட மாரியம்மன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், தஞ்சை ஸ்ரீ புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. கானாடுகாத்தான் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிம்மதி
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-அனுகூலம்
கடகம்-பயணம்
சிம்மம்-ஜெயம்
கன்னி-மாற்றம்
துலாம்- திறமை
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- யோகம்
மகரம்-சுகம்
கும்பம்-சுபம்
மீனம்-ஆதரவு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. நட்பிற்காகச் செலவிடும் சூழ்நிலை உண்டு.
ரிஷபம்
யோகமான நாள். செலவிற்கேற்ற வரவு உண்டு. விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
கடகம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தக்க விதத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். இடம்,பூமி சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சி கைகூடும்.
சிம்மம்
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம்.
கன்னி
பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.
துலாம்
அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். உத்தியோகம் சம்பந்தமான முயற்சியில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
விருச்சிகம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பிக்கள் வீடு தேடி வருவர். கட்டிடம் கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.
தனுசு
குழப்பங்கள் அகலும் நாள். தாய் வழியில் ஆதரவு உண்டு. அந்நிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். ஆலயத் திருப்பணிக்கு உதவ முன்வருவீர்கள்.
மகரம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். வியாபார விரோதம் அகலும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்
முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் நாள். முக்கியப் புள்ளிகள் வழிகாட்டுவர். மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
மீனம்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விவேகத்துடன் செயல்படுவீர்கள். ஊர் மாற்றம், இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும்.
- குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சனம்
- உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-12 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி காலை 9.21 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : உத்திரட்டாதி மறுநாள் விடியற்காலை 5.18 மணி வரை பிறகு ரேவதி
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் அலங்கார திருமஞ்சனம்
குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சனம். சிதம்பரம் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் பவனி. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் இராப்பத்து உற்சவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. நயினார் கோவில் அன்னை சவுந்தரநாயகி திருவாடனை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார சிறப்பு திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர், தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உவகை
ரிஷபம்-திறமை
மிதுனம்-போட்டி
கடகம்-பாராட்டு
சிம்மம்-பெருமை
கன்னி-நன்மை
துலாம்- இன்பம்
விருச்சிகம்-பரிசு
தனுசு- பரிவு
மகரம்-முயற்சி
கும்பம்-உயர்வு
மீனம்-பாசம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கட்டிடப் பணி தொடரும்.
ரிஷபம்
பிரிந்தவர்கள் வந்திணையும் நாள். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
மிதுனம்
கடன் சுமை குறையும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். பிள்ளைகள் வழியில் விரயம் உண்டு. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.
கடகம்
இனிய செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். சொத்து, இடம் வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.
சிம்மம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்காக பணப்பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரும்.
கன்னி
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். செல்லும் இடங்களில் செல்வாக்கு மேலோங்கும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும்.
துலாம்
பற்றாக்குறை அகலும் நாள். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றத்தால் மனக்கலக்கம் ஏற்படலாம். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வகையில் நல்ல முடிவு எடுப்பீர்கள்.
தனுசு
அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும்.
மகரம்
எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
கும்பம்
அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை கூடும்.
மீனம்
மனக்குழப்பம் அகலும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடிவரும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்று சிந்திப்பீர்கள்.
- திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
- திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-11 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி காலை 10.37 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : சதயம் காலை 6.34 வரை பிறகு பூரட்டாதி, மறுநாள் விடியற்காலை 6.06 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
அம்மன் கோவில்களில் சிறப்பு பால் அபிஷேகம், திருத்தணி முருகன் கிளி வாகன சேவை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் தங்கப் பாவாடை தரிசனம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் சந்திரபிரபையில் பவனி. ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோலமாய்க் காட்சி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளிவாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-சுகம்
மிதுனம்-சுபம்
கடகம்-ஆக்கம்
சிம்மம்-ஆதரவு
கன்னி-பரிவு
துலாம்- நன்மை
விருச்சிகம்-ஓய்வு
தனுசு- புகழ்
மகரம்-கடமை
கும்பம்-உவகை
மீனம்-வெற்றி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோகமான நாள். தேடிய வேலை திடீரென கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.
ரிஷபம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்காகச் செய்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மிதுனம்
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும்.
கடகம்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். கடன் சுமை கூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.
சிம்மம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.
கன்னி
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தன வரவு திருப்தி தரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல் யுத்தம் சுமூகமாக முடியும்.
துலாம்
விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.
விருச்சிகம்
புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் ஒத்துழைப்பு செய்வர்.
தனுசு
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும். குடும்பத்தில் அமைதி கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மகரம்
பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும்.
கும்பம்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளால் செலவு ஏற்படலாம்.
மீனம்
புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டிகள் அகலும்.






