என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "space"

    • உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான் அனுராக் தாகூர் கூறினார்.
    • நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.

    மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.

    அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான்" என்று மாணவர்களிடம் கூறினார். பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் முதன்முதலாக விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என்று பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் பேசியதற்கு திமுக எம்.பி. கனிமொழி, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் ஆதரவு தெரிவித்தார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இதிகாசங்களில் நிலவுக்கு அனுமான் சென்றார் என்ற பதிவு இருக்கிறது என்று சொல்கிறார். இதில் தவறு இல்லை. எதை எடுத்தாலும் குறை சொல்வதா. விண்வெளிக்கு முதல் முதலில் சென்றது அனுமன் என அனுராக் தாக்கூர் நம்புகிறார், அதனால் சொன்னார். மெய்ஞான்மும் விஞ்ஞானமும் ஏற்கனவே இணைந்து தான் இந்திய நாட்டில் பரிமாண வளர்ச்சியில் வலர்ந்து கொண்டு இருக்கிறது.

    ராமர் என்ன என்ஜீனியரா என்று கேட்டனர். அதன் பின்னர் ராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் மோடி அரசு வான்வெளியில் என்ன முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பதை பாருங்கள். அனுராக் தாகூர் பேசுவதை விட்டு முன்னேற்றத்தை பாருங்கள்" என்று தெரிவித்தார்.

    • அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல...
    • பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.

    உலகின் முதல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது என்றும் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன்தான் எனவும் பள்ளி மாணவர்கள் மத்தியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல,

    பா.ஜ.க.வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.

    நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். 

    • எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் அனுராக் தாகூர் கூறினார்.
    • நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.

    மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.

    அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் என்றார். மேலும் அவர் பேசியதாவது:

    நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம்.

    எனவே, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தத் திசையில் பார்த்தால் நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என தெரிவித்தார்.

    நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என்று பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், பள்ளி மாணவர்களிடம் நிலவில் முதன்முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.

    அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. வகுப்பறைகளில்மாணவர்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும்.

    இந்தியாவின் எதிர்காலம், உண்மையை கட்டுக்கதையுடன் குழப்பிக் கொள்ளாமல், ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    • உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன்தான்.
    • நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.

    மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.

    அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் என்றார். மேலும் அவர் பேசியதாவது:

    நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம்.

    எனவே, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தத் திசையில் பார்த்தால் நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என தெரிவித்தார்.

    நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, அங்கே இருந்தவாறே தனது குடும்பத்தினருடன் பேசினார்.
    • விண்வெளியில் இருந்து பூமியையும், பிரபஞ்சத்தையும் பார்ப்பது எவ்வளவு அழகானது? என சுபான்ஷு எங்களுக்கு தெரிவித்தார்.

    லக்னோ:

    அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் கடந்த மாதம் 25-ந்தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா அங்கே பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அவரது இந்த பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகிற 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார். அவர் பாதுகாப்பாக பூமியில் காலடி வைப்பதை இந்தியா முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது.

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, அங்கே இருந்தவாறே தனது குடும்பத்தினருடன் பேசினார். இது அவரது பெற்றோரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இது தொடர்பாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர்கள் சிறப்பு பேட்டி அளித்தனர். அப்போது சுபான்ஷுவின் தந்தை ஷம்பு தயால் சுக்லா கூறியதாவது:-

    விண்வெளியில் அனைத்தும் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்த திட்டம் நன்றாக நடைபெறுவதை பார்க்கும்போது சிறப்பாக உள்ளது.

    விண்வெளி நிலையத்தில் அவர் பணி செய்வதை எங்களுக்கு காட்டினார். அதாவது பணி செய்யும் இடம், தூங்கும் இடம், அவரது ஆய்வுக்கூடம், தினசரி பணிகள் போன்றவற்றை எங்களுக்கு காட்டினார். ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கினார்.

    சுபான்ஷு, தான் செய்யும் பணியில் மிகுந்த ஈடுபாடுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். மகிழ்ச்சியாக செய்யும் எந்தவொரு செயலும் எப்போதும் சிறப்பாக இருக்கும்.

    அவரிடம் பேசியபிறகு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாங்களும் இங்கே நன்றாக இருக்கிறோம். அவர் பூமிக்கு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். எங்கள் மொத்த குடும்பமும், உறவினர்களும் அவருக்காக காத்திருக்கிறோம்.

    இந்த பயணத்துக்காகவும், அவர் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை அறியும்போது எங்கள் குடும்பம் மிகுந்த பெருமையடைகிறது.

    இவ்வாறு ஷம்பு தயால் சர்மா கூறினார்.

    சுபான்ஷுவின் தாய் ஆஷா கூறியதாவது:-

    விண்வெளியில் இருந்து பூமியையும், பிரபஞ்சத்தையும் பார்ப்பது எவ்வளவு அழகானது? என சுபான்ஷு எங்களுக்கு தெரிவித்தார். விண்வெளி நிலையத்தின் புகைப்படங்களையும் எங்களுக்கு காட்டினார்.

    அதையெல்லாம் பார்ப்பது மனதுக்கு இதமாக இருந்தது. அதைவிட எங்கள் மகன் மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் இருப்பதைப் பார்ப்பது இன்னும் சிறப்பாக இருந்தது.

    அவரது வருகைக்காக நாங்கள் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வானிலை மற்றும் பிற சூழல்களை பொறுத்தே அவரது பயணம் இருக்கும். ஆனால் எப்போது திரும்பினாலும் அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு ஆஷா கூறினார்.

    மகனை வரவேற்க என்னென்ன ஏற்பாடுகள் நடந்து வருகின்றன? என்ற கேள்விக்கு அவர், 'அவருக்காக என்ன வேண்டுமானாலும் சமைப்பேன். வெளிநாட்டில் இருந்ததால் கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக சாப்பிடாத அனைத்தையும் இந்த முறை சாப்பிட விரும்புவதாக அவர் எங்களிடம் கூறினார். தனக்குப் பிடித்தமான வீட்டில் சமைத்த உணவுகளை எல்லாம் ருசிக்க விரும்புவதாக அவர் கூறினார்' என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

    • பாசிப்பயறு மற்றும் வெந்தய செடிகளின் வளர்ச்சியை தினமும் ஆய்வு செய்து வருகிறார்.
    • சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரின் விண்வெளி ஆராய்ச்சிப்பணி இன்றுடன் நிறைவடைகிறது.

    புதுடெல்லி:

    ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ், பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த 25-ந்தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டார் இந்திய விண்வெளி வீரரரான சுபான்ஷு சுக்லா. அவருடன் அமெரிக்கா, போலந்து, அங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த 3 வீரர்களும் சென்றுள்ளனர்.

    சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும், ராக்கெட்டில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ந்தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

    அங்கு அவர்கள் 14 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். சுபான்ஷு சுக்லா மட்டும் தனியாக சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக அவர் பூமியில் இருந்து பாசிப்பயறு மற்றும் வெந்தயத்தை எடுத்து சென்றார்.

    விண்வெளி நிலையத்தில் அந்த விதைகளை முளைக்க வைத்துள்ளார். பாசிப்பயறு மற்றும் வெந்தய செடிகளின் வளர்ச்சியை தினமும் ஆய்வு செய்து வருகிறார்.

    அவர் பூமிக்கு திரும்பும்போது அந்த செடிகளையும் கொண்டு வருவார். அந்த செடிகள் கர்நாடக மாநிலம் தார்வாட் கொண்டு செல்லப்பட்டு, வளர்க்கப்படும். இந்த பரிசோதனையை தார்வாட்டில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரவிக்குமார் ஹோசமணி மற்றும் தார்வாட்டின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த சுதீர் சித்தபுரெட்டி ஆகியார் வழிநடத்துகின்றனர்.

    சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரின் விண்வெளி ஆராய்ச்சிப்பணி இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. எனவே அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது இணைக்கப்பட்டு இருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் அங்கிருந்து 13-ந்தேதி புறப்பட்டு, புளோரிடா கடற்கரைக்கு வெளியே 14-ந்தேதி தரையிறங்குவார்கள் என்று நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 60 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. விண்வெளியில் நுண்பாசி மாதிரிகளை சுபான்ஷூ சுக்லா ஆய்வு செய்தார். வருங்காலத்தில் இவை விண்வெளியில் உணவு, எரிசக்தி மற்றும் தூய காற்றைக் கூட வழங்கலாம்' என்றனர்.

    நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'விண்வெளி சூழலில் நுண்ணியிர்களின் செயல்பாடு குறித்த இந்திய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சோதனையிலும் அவர் பங்கேற்றார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம அவர்கள் பூமிக்கு திரும்புவதை நாசா நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது' என்றனர்.

    இதனிடையே சர்வதேச விண்வளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, சக வீரர்களுடன் உற்சாகமாக உரையாடுகிறார். அவ்வாறு நடந்த ஒரு இனிமையான உரையாடலின்போது சகவீரர் ஒருவரிடம், 'இஸ்ரோ நாடு முழுவதும் உள்ள தேசிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்காகவும் சில அற்புதமான ஆராய்ச்சிகளை வழங்க முடிந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதைச் செய்வது உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது' என்று கூறினார்.

    மேலும், 'நான் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடும் ஆராய்ச்சி ஸ்டெம் செல் ஆராய்ச்சி, அங்கு ஸ்டெம் செல்களில் கூடுதல் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் மீட்சியை துரிதப்படுத்த முடியுமா, வளர்ச்சியை துரிதப்படுத்த முடியுமா. காயத்தை சரிசெய்ய முடியுமா என்பதை ஆராய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

    • இறந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செலஸ்டிஸ் நிறுவனம் செயல்படுத்தியது.
    • அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ் மன்னிப்பு கோரியது.

    விண்வெளிக்கு 166 பேரின் சாம்பலையும், கஞ்சா விதைகளையும் கொண்டு சென்ற Mission Possible என்ற விண்கலம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பசிபிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ், இறந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு அனுப்பி, அவர்கள் நினைவை பதிவு செய்யும் திட்டமாக இதை செயல்படுத்தியது.

    இந்த விபத்து தொடர்பாக செலஸ்டிஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது. 

    • இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் நாடு திரும்பினர்.
    • இந்திய வீரரின் விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' மனித விண்வெளி பயணத்திற்கான 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது.

    இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் செல்ல இருந்தனர். பலமுறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    எனவே இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் நாடு திரும்பி உள்ளனர் என நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது
    • இந்த புகைப்படங்கள் சூரிய புயலின்போது அதன் தன்மையை அறிய உதவும்.

    ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர் முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து சாதனை படைத்துள்ளது

    ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சோலார் ஆர்பிட்டர் நெருப்புக் குழம்புகளை கொப்பளிக்கும் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது

    இந்த புகைப்படங்கள் சூரிய புயலின்போது அதன் தன்மையை அறிய உதவும் என கூறப்படுகிறது.

    • 4 மூத்த விஞ்ஞானிகள் இயக்குனர்களாக பணியாற்றி வருகின்றனர்.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ஏ.ராஜராஜன்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் மையங்களில் பணியாற்றி வரும் 4 மூத்த விஞ்ஞானிகளுக்கு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    குறிப்பாக குஜராத் மாநிலம் அகமதபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனர் நிலேஷ் எம். தேசாய், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலாவில் உள்ள திரவ இயக்க திட்ட மைய இயக்குனர் எம்.மோகன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ஏ.ராஜராஜன், தமிழ்நாடு, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆரய்ச்சி நிறுவன உந்து விசை வளாக இயக்குனர் ஜெ.பாக்கியராஜ் ஆகிய 4 மூத்த விஞ்ஞானிகள் இந்த மையங்களில் இயக்குனர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் பணி ஓய்வு பெற இருப்பதையொட்டி, மேலும் 1 ஆண்டுகள் இவர்களுடைய பணிக்காலத்தை நீட்டிப்பு செய்து, மத்திய பணியாளர் அமைச்சகத்தின் நியமனக் குழு செயலகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    • பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன.
    • ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும்.

    ஓஸ்லோ:

    விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போடுகின்றன. இந்த போட்டியில் தற்போது பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன.

    அந்தவகையில் ஜெர்மனியைச் சேர்ந்த இசார் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனமானது நார்வேயில் இருந்து சோதனை அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை ஏவியது. ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும்.

    திட்டமிட்டபடி அந்த ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. 30 நொடிகள் வானில் பறந்த அந்த ராக்கெட் பின்னர் சுழன்றடித்துக் கொண்டு கடற்பகுதியில் விழுந்தது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ராக்கெட் எட்டியதாக இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.
    • சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டார்.

    விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டார்.

    விண்வெளியில் 9 மாதங்கள் எப்படி சுனிதா வில்லியம்ஸ் உயிர் பிழைத்தார். எவ்வாறு அவர் உணவு உட்கொண்டார் என்று மக்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன.

    இந்நிலையில், விண்வெளியில் பெண்கள் தங்கியிருக்கும் சமயத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படுமா? அப்படி மாதவிடாய் ஏற்பட்டால் வெளியேறும் ரத்தம் விண்வெளியில் மிதக்குமா? என்று பெண்களுக்கு கேள்விகள் எழலாம்.

    விண்வெளியில் தங்கியிருக்கும் பெண்கள் தங்களுக்கு மாதவிடாய் ஏற்பட வேண்டுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். மாதவிடாய் வேண்டாம் என்று முடிவு செய்தால் ஹார்மோன் மாத்திரைகளை பெண்கள் எடுத்து கொள்ளலாம். இது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.

    அதே சமயம் விண்வெளியில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் ஏற்பட வேண்டும் என்று நினைப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். பூமியில் நிகழ்வது போலவே விண்வெளியில் இயல்பாகவே மாதவிடாய் ஏற்படும். அந்த சமயத்தில் பெண்கள் சானிட்டரி பேடுகளை பயனபடுத்திக்கொள்ளலாம்.

    ×