என் மலர்

    நீங்கள் தேடியது "space"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
    • இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2020 மற்றும் 2021-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் சித்தார்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய நிகழ்ச்சி இயக்குநரும், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான நிகர் ஷாஜி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.

    பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இன்று இளநிலை படிப்பில் 542 பேரும், முதுகலை படிப்பில் 56 பேரும் என மொத்தம் 598 பேர் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் சிறப்பு விருந்தினர் நிகர்ஷாஜி கூறும்போது, இந்த கல்லூரியின் முன்னாள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது.

    சந்திராயன்-1 மற்றும் சந்திராயன்-2 ஏவியதன் மூலம் உலக அரங்கில் இந்தியா புகழ் பெற்றுள்ளது என்றார்.

    இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விண்வெளியில் சாதித்த விஞ்ஞானிகளின் வரலாறு, விண்வெளி சாா்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
    • சந்திர கிரகணம் மற்றும் வானியல் நிகழ்வுகளை பொதுமக்கள் நுண்ணோக்கி மூலம் கண்டு ரசிக்க முடியும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மேலஉளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 921 மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு ரூ. 3.81 லட்சம் மதிப்பில் வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில், அதிக திறன் கொண்ட தொலைநோக்கி, கோள்களின் இயக்கங்களை துல்லியமாக கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்கள், நவீன அறிதிறன் தொலைக்காட்சி, வானியல் தொடா்பான சுமாா் 28-க்கும் மேற்பட்ட பொருள்கள், சூரிய மண்டல அமைப்பு, கோள்கள், நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள், விண்வெளியில் சாதித்த விஞ்ஞானிகளின் வரலாறு, விண்வெளி சாா்ந்த புத்தகங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    இந்த வானியல் ஆய்வகத்தை பள்ளி கல்வி துறை அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தாா். பின்னர் அவர் தொலைநோக்கி கருவிகளை பார்வையிட்டார்.

    இந்த விழாவில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சிவக்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா் கோவிந்தராஜ், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ.ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பள்ளி மேலாண் குழுவைச் சோ்ந்தவா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

    வானியல் ஆய்வகம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் கூறும்போது:

    தமிழகத்தில் மேலஉளூா் அரசுப் பள்ளியில்தான் முதல்முறையாக வானியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. 2-வதாக கும்பகோணம் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வகத்தின் மூலம், சூரிய, சந்திர கிரகணம் மற்றும் வானியல் நிகழ்வுகளை மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் நுண்ணோக்கி மூலம் கண்டு ரசிக்க முடியும். மேலும், மாணவா்கள் வானியல் சாா்ந்த புத்தகங்களை படித்து வானியல் அறிவியல் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்றாா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 20 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
    • அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல்:

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இடம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 20 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் படித்த பள்ளி மற்றும் பெயர் விவரம் வருமாறு:-

    புதுச்சத்திரம் அரசு பள்ளி மாணவர் முகேஷ், ராசிபுரம் அண்ணா சாலை அரசு பள்ளி மாணவர் தரண்ராஜ், மாணவி ரம்யா ஸ்ரீ, பள்ளிப்பாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவி ரோகிணி தங்கம், பாச்சல் அரசு பள்ளி மாணவி பூமிகா, வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நவீன் குமார், கமலகாந்த், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்தி, கொல்லிமலை மாதிரி பள்ளி மாணவர் வெற்றி முருகன், ஆர். புதுப்பாளையம் அரசு பள்ளி மாணவர் ஜெயபாரதி, முத்துக்காப்பட்டி அரசு பள்ளி மாணவர் சுந்தரமூர்த்தி, சேந்தமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவி சுந்தரி, பாண்டமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவி வேத ஸ்ரீ, வளையபட்டி அரசு பள்ளி மாணவி சினேகா, திருச்செங்கோடு அரசு ஆண்கள் பள்ளி மாணவர் நாகேஸ்வரன், வேலகவுண்டம்பட்டி அரசு பள்ளி மாணவி சபித்ரா, வெண்ணந்தூர் மற்றும் எருமப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் கோமதி, நித்தியா ஸ்ரீ, வெண்ணந்தூர் அரசு பள்ளி மாணவர் கவின் கண்ணா, வலையபட்டி அரசு பள்ளி மாணவி திரிஷா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சீன ராக்கெட் பாகங்கள் இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.

    பீஜிங்:

    சீனா, விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில் விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.

    23 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட், செயற்கை கோளை நிலை நிறுத்திவிட்டது. இந்த நிலையில் ராக்கெட்டில் இருந்தது பூஸ்டர் பாகங்கள் என்றும் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாக தெரியவிக்கப்பட்டது.

    செயற்கைகோள், விரும்பிய திசையில் செல்ல உதவ பூஸ்டர்கள் அனுப்பப்படும். அந்த பூஸ்டரின் ஒரு பகுதி தான் பூமியில் விழவில் உள்ளது என்றும் அந்த பாகங்கள் மீது பெரியதாக இருப்பதால் புவி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பல் ஆகாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    விண்ணில் ஏவப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு சீன ராக்கெட்டின் பாகங்கள் இன்று பூமியில் விழும் என்றும் ஆனால் எந்த பகுதியில் விழும் என்று தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ராக்கெட் பாகங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

    இந்த நிலையில் சீன ராக்கெட் பாகங்கள் இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. தென்கிழக்கு ஆசியாவில் பூமியின் வளிமண்டலத்தின் வழியாக கடும் வேகத்தில் வந்த ராக்கெட் பாகங்கள் கடலில் விழுந்தது.

    இதனை அமெரிக்க ராணுவம் உறுதிபடுத்தியது. அதேவேளையில் சீனா எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தது. ராக்கெட் பாகங்கள் வானில் சீறிப் பாய்ந்து செல்லும் போது அதனை மலேசியாவில் மக்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனையான வாங் யாபிங், முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    பீஜிங்:

    சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.

    இங்கு சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் வாங் யாபிங் என்ற பெண் வீராங்கனையும் ஒருவர். நேற்று இரவு அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் சிறிது தூரம் நடந்தார்.

    அவருடன் தலைமை விண்வெளி வீரர் ஷாய் சிகாங்கும் விண்வெளியில் நடந்தார்.

    வாங் யாபிங் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனை ஆவார். ஆனால் முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை வாங் யாபிங் பெற்றுள்ளார்.

    சில நிமிடங்கள் மட்டும் நடந்துவிட்டு பின்னர் அவர் விண்வெளி நிலையத்திற்கு திரும்பினார்.

    வாங் யாபிங் சீன விமானப்படை வீராங்கனையாக இருந்து வந்தார். 2010-ம் ஆண்டு அவர் விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 41 வயதான நிலையில் அவர் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரூ.30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறியுள்ளார். #ISRO #Sivan
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆய்வு மைய (‘இஸ்ரோ’) தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு 17 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் ஒரு திட்டம் தோல்வியில் முடிந்தது. மற்ற திட்டங்கள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 7 செயற்கைகோள்கள் மற்றும் 9 ராக்கெட்டுகள் அடங்கும். ‘உன்னதி’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதில் 45 நாடுகள் பங்கேற்கின்றன.

    இதில் நானோ செயற்கைகோளை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை வருகிற 17-ந் தேதி மத்திய மந்திரி தொடங்கி வைக்கிறார். ரூ.30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி, பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டு தயாரிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி, புதிய செயற்கைகோள்களை உருவாக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ரூ.30 ஆயிரம் கோடி 2 ஆண்டுகளுக்கான திட்ட பணிகளுக்கு செலவு செய்யப்படும். இதன் மூலம் புதிதாக 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஏற்கப்படும். இந்த ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ககன்யான் திட்டத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் மிக முக்கியமான விஷயம் ஆகும். இதில் 2 விஷயங்கள் உள்ளன. அதாவது ஒன்று என்ஜினீயரிங் மற்றும் மற்றொன்று மனிதர்கள் ஆகும்.

    மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது என்பது ‘இஸ்ரோ’ வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு என்றே மனித விண்வெளி அறிவியல் மையத்தை அமைத்துள்ளோம்.



    இதற்காக அட்டின் என்பவரை இயக்குனராக நியமித்துள்ளோம். ககன்யான் திட்ட பணிகள் முழுவதையும் அந்த மையமே பார்த்துக்கொள்ளும். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முன்பு, சோதனைக்காக ஆளில்லாத விண்கலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும், 2021-ம் ஆண்டு ஜூலை மாதமும் விண்ணுக்கு ஏவப்படும்.

    இந்த சோதனையின்போது அதில் ஏதாவது குறைகள், பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தால், அதை சரிசெய்வோம். கடைசியாக 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். இந்த திட்ட இலக்கை அடைய முழுவீச்சில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    நடப்பு ஆண்டில் ககன்யான் திட்டத்திற்கு தான் அதிகப்படியான முன்னுரிமை அளிக்கிறோம். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முன், இந்தியாவில் ஆரம்பகட்ட பயிற்சி வழங்குகிறோம். அதன் பிறகு நவீன பயிற்சிகள் வெளிநாட்டில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரஷியாவில் வழங்கப்படலாம்.

    விண்கலத்தில் இந்தியர்கள் தான் அனுப்பப்படுவார்கள். விண்ணுக்கு பெண்களை அனுப்பவும் நாங்கள் விரும்புகிறோம். விண்ணுக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் இந்தியாவால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியில் வெளிநாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்தமாட்டோம்.

    இறுதிக்கட்ட பணிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படலாம். விண்ணுக்கு செல்லும் மனிதர்கள் 7 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறினார். #ISRO #Sivan 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய ‘ரோவர்’ எந்திரத்துடன் சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #Chandrayaan2 #ISRO #Sivan
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் சில சோதனைகள் இன்னும் முடிவடையாததால், சந்திரயான்-2 விண்கலம் மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும். அதில் ரோவர் நகரும் ஆய்வு எந்திரம் பொருத்தப்படும். அந்த வாகனம், நிலவில் தரையில் இறங்கி ஆய்வு செய்யும். அது 500 மீட்டர் சுற்றளவுக்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.



    இஸ்ரோ வெளிநாடுகளிலும் தரை கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. அது ரஷியா, ஜப்பான் நாடுகளாக இருக்கலாம். இஸ்ரோ டி.வி.யை தொடங்க முடிவு செய்துள்ளோம். இதற்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டுக்குள் இஸ்ரோ டி.வி. தொடங்கப்படும்.

    பூடான் நாடு, தங்கள் நாட்டில் தரை கட்டுப்பாட்டு மையத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆதித்யா விண்கலம் 2020-ம் ஆண்டு விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது சூரியனை ஆய்வு செய்யும்.

    இவ்வாறு சிவன் கூறினார். #Chandrayaan2 #ISRO #Sivan 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்களுடன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. #ISRO #KSivan
    ஸ்ரீஹரிகோட்டா :

    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் மூலம் பூமியை கண்காணிக்கும் ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ என்ற செயற்கைகோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 30 செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு நேற்று செலுத்தியது. இதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக தீர்மானிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ராக்கெட் மூலம் ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பப்பட்ட 30 செயற்கைகோள்கள், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்டுள்ளன. ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள், சண்டிகாரில் உள்ள ஆய்வு கூடத்தில் தயாரிக்கப்பட்டது. பூமி ஆய்வுக்காக மட்டுமே அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த செயற்கைகோளில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புவிப்பரப்பின் மீது உள்ள பொருட்களை மிகத் துல்லியமாக அடையாளம் காண்பது இந்த செயற்கைகோளின் முதன்மை நோக்கமாகும். இந்த செயற்கை கோள் விவசாய மேம்பாட்டுக்கு முழுமையாக பயன்படுத்த முடியும்.

    தொடர்ந்து, பிரெஞ்சு கயானாவில் இருந்து டிசம்பர் 5-ந்தேதி அதிக எடை கொண்ட ஜிசாட்-11 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. பொதுவாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 4 டன் வரையிலான செயற்கைகோள்களை மட்டுமே செலுத்தும் திறன் கொண்டது. ஆனால் ஜிசாட்-11 5.86 டன் எடை கொண்டது. அதனால் இந்த செயற்கைகோளை இங்கிருந்து விண்ணில் அனுப்ப இயலாது என்பதால் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்படுகிறது.



    அதைத்தொடர்ந்து, 20 நாள்களில் ஜி.எஸ்.எல்.வி. ஜிசாட்-7ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும். தொடர்ந்து, அடுத்த ஆண்டு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுகிறது.

    இஸ்ரோ இதுவரை 20 நாடுகளை சேர்ந்த 270 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது உலக அளவில் இஸ்ரோவுக்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது. புவி வட்டப்பாதையில் இப்போது இஸ்ரோவின் 47 செயற்கைகோள்கள் தகவல் தொடர்புகள், புவி கண்காணிப்பு, அறிவியல் ஆய்வுகள், கடல்சார் ஆய்வுகள் போன்ற பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகின்றன.

    ‘ககன்யான்’ விண்கலம் விண்ணுக்கு அனுப்புவதற்கான பணிகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. ககன்யானுக்கு முன்னதாக ஆளில்லாத முதலாவது விண்கலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து மேலும் ஒரு விண்கலம் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    அதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் செல்லும் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    தொடர்ந்து அடுத்த ஆண்டு, 12 முதல் 14 செயற்கைகோள் அதாவது 15 நாட்களுக்கு ஒரு ராக்கெட் வீதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விண்வெளி என்கிற சொத்தை இஸ்ரோ திறமையாக கையாண்டு தொலை உணர்வு (ரிமோட் சென்சிங்) சேவையை நாட்டுக்கு வழங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #KSivan
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தான் நாட்டில் இருந்து முதன்முதலாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் சீனாவின் உதவியுடன் 2022-ல் நிறைவேற்றப்படும் என அந்நாட்டு தகவல் தொடர்பு மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். #Pakistan #China #SpaceProject #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அரசு சீனாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்து முதல் நபரை விண்வெளிக்கு அனுப்ப சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானில் இருந்து தயாரிக்கப்பட்ட 2 செயற்கைகோள்களை சீனாவின் ராக்கெட்டுகளை பயன்படுத்தி விண்ணில் ஏவப்பட்டது. 2022-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து முதல் வீரரை விண்வெளிக்கு அனுப்ப சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கான ஒப்புதல் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெறப்பட்டதாக அந்நாட்டு தகவல் தொடர்பு மந்திரி பவாத் சவுத்ரி அறிவித்துள்ளார்.



    சீனாவில் இருந்து ஆயுதங்களை வாங்கும் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருந்து வரும் நிலையில், நவம்பர் 3-ம் தேதி பிரதமராக சீனாவுக்கான தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #China #SpaceProject #ImranKhan
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மெக்சிகோவில் பிணவறைகளில் உடல்களை பாதுகாக்க போதிய இடவசதி இல்லாதா காரணத்தால் லாரியில் 273 பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
    மெக்சிகன் சிட்டி:

    மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் தொழில் பெருமளவில் நடக்கிறது. அதனால் ஏற்படும் தொழில் போட்டியில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடைபெறுகிறது. அதில் பலர் கொல்லப்படுகின்றனர்.

    அவர்களின் உடல்கள் பிணவறையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் மேற்கு ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள பிணவறைகளில் உடல்களை பாதுகாக்க போதிய இடவசதி இல்லை. இதனால் அவை குளிரூட்டப்பட்ட கண்டெய்னருடன் கூடிய ஒரு லாரியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு ஜாலிஸ்கோ மாகாண தலைநகர் குயாடா லஜராவிலொரு லாரியில் ஒரு கண்டெய்னரில் 273 பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த லாரி அங்குள்ள பட்டறை அருகே 2 வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றத்துடன் பிணவாடை வீசியதால் குடியிருப்பு வாசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த லாரி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

    அங்கும் குடியிருப்பு வாசிகள் எதிர்த்ததுடன் போராட்டமும் நடத்தினார்கள். அதன் காரணமாக பிணங்களுடன் லாரிகள் சுற்றி சுற்றி வருகிறது. மெக்சிகோ சட்டப்படி குற்ற வழக்குகளில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை உடனே எரிக்க முடியாது. ஆகவே வழக்கு முடியும் வரை உடல்கள் பாதுகாப்புடன் வைக்கப்படுகின்றன. #tamilnews
    ×