search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "space"

    • விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
    • ககன்யான் திட்டத்திற்காக தேர்வான 4 விண்வெளி வீரர்களின் பெயர்களை அறிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 மாதங்களில் மூன்றாவது முறையாக இன்று கேரளாவுக்கு சுற்றுப் பயணம் வந்தார். அவர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடக்கும் பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டார்.

    திருவனந்தபுரத்திற்கு இன்று காலை விமானத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதலில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். அங்கு ககன்யான் திட்ட பணிகளை இஸ்ரோ தலைவர் சோம்நாத்துடன் சென்று பார்வையிட்டார்.

    அப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளை பிரதமர் மோடிக்கு, சோம்நாத் அறிமுகம் செய்துவைத்தார். விண்வெளி திட்டங்கள் மற்றும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் விளக்கினார்.

    அப்போது கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், மத்திய மந்திரி முரளிதரன், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் உள்ளிட்டோர் பிரதமருடன் சென்றனர். பின்பு ககன்யான் திட்டம் தொடர்பாக திருவனந்தபுரம், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ரூ1,800கோடி மதிப்பிலான புதிய வசதிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


    ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதற்காக தேர்வு செய்யப்பட்ட 4பேர் ககன்யான் திட்ட விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். விணவெளி பயணத்துக்காக அந்த 4 பேரும் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர்.

    தேர்வானர்கள் பெயர் விவரம் இன்று தெரிய வந்தது. அவர்களது பெயர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத்பிரதாப், அஜித் கிருஷ்ணன், சவுகான். இவர்கள் 4 பேரும் இந்திய விமானப்படையில் விமானியாக பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்களில் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள நென்மாரா பகுதியை சேர்ந்தவர் ஆவார். விமானப்படை குரூப் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

    விண்வெளி பயணத்துககு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விமானிகள், ரஷ்யா மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மனித விண்வெளி விமான மையத்தில் கடுமையான பயிற்சி பெற்றவர்கள் ஆவர். ககன்யான் திட்டத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ள அவர்களது 4பேரின் பெயர் விவரத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

    பின்பு விண்வெளி பயணத்துக்கு தேர்வாகியுள்ள பிரசாந்த் பால கிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சவுகான் ஆகி யோருக்கு விண்வெளி சிறகுகள் என்ற பதக்கத்தை வழங்கினார். இவர்களுக்கு சுபன்ஷு சுக்லா குழுவின் விங் கமாண்டராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்துக்கு சென்றார். அங்கு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரனின் பாதயாத்திரை நிறைவுவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    அங்கு சுரேந்திரனின் பாதயாத்திரையை நிறைவு செய்து பிரதமர் மோடி பேசினார்.

    • தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
    • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏவியது.

    சியோல்:

    வடகொரியா சமீபத்தில் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவி நிலை நிறுத்தியது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதற்கிடையே உளவு செயற்கைக்கோள் மூலம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, ராணுவ தலைமையகமான பென்டகன், கடற்படை தளம் ஆகியவற்றை படம் பிடித்ததாக வடகொரியா தெரிவித்தது.

    மேலும் இவ்விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது.

    இந்த நிலையில் தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏவியது.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் தென்கொரியா செய்துள்ள ஒப்பந்தத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

    வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விண்கலத்தில் 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார்.
    • குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர்.

    பீஜிங்:

    அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு மையத்தை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக சீன விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர்.

    கடந்த மே மாதம் 30-ந்தேதி, ஷென்சோ-16, விண்கலத்தில் விண்வெளி வீரர்களான ஜிங்ஹைபெங், ஜூ யாங்சு மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் குய் ஹைச்சாலோ ஆகிய 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். அங்கு அவர்கள் காய்கறிகள் பயிரிட்டனர்.

    கீரை, சின்ன வெங்காயம், செர்ரி, தக்காளி செடிகளை வளர்த்தனர். பூமியில் தேவையான சூரிய வெளிச்சம், தண்ணீர் இருப்பதால் செடிகள் எளிதில் வளரும். ஆனால் விண்வெளியில் இந்த சாத்தியகூறுகள் இல்லாததால் சீனா சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்த செடிகளை பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை உருவாக்கி இருந்தது.

    தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. அவர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி, தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை நன்கு வளர்ந்துள்ளது. இதையடுத்து அவற்றை அவர்கள் அறுவடை செய்துள்ளனர். இந்த குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர். முன்னதாக விண்வெளியில் காய்கறி செடிகளை வளர்த்து அறுவடை செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் சாதனை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
    • பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும்.

    ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

    இதற்காக ககன்யான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கி.மீ. தொலைவுள்ள புவிதாழ் வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரா்களை அனுப்பி, அவா்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாகத் திருப்பி அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

    இந்தத் திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    அதன்படி, முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் மாதிரி கலனை தரையில் இருந்து 17 கி.மீ. தொலைவு வரை அனுப்பி மீண்டும் அதை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வந்து வங்கக் கடலில் இறக்கப்படும். அங்கிருந்து கலன் மீட்கப்படும்.

    இதற்காக கவுண்ட்டவுன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தச் சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டா் திறன் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. பூமியில் இருந்து புறப்பட்டு சுமாா் 17 கி.மீ. உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாக பிரிந்துவிடும். அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும்.

    கடல் நீரில் கலன் விழுந்த உடன் இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினா் அதை மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வாா்கள். ககன்யான் திட்டத்தின் வெற்றிக்கு பிறகு, 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.

    • ஒருநாள் உலக கோப்பை போட்டியை பிரபலப்படுத்த ஐசிசி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

    மும்பை:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டிகள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    மீதமுள்ள அணிகளுக்கு தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெறும். இதில் வெற்றி பெறும் 2 அணிகள் உலக கோப்பையில் விளையாடும். இந்த போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் ஒருநாள் உலக கோப்பை போட்டியை பிரபலப்படுத்த ஐசிசி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அது என்னவென்றால் உலக கோப்பை டிராபியை பிரத்யேக பலூனில் வைத்து பூமியில் இருந்து சுமார் 1.20 லட்சம் அடி உயரத்தில் வளிமண்டலத்தின் விளிம்பில் கோப்பை நிலை நிறுத்தப்பட்டது.

    இன்று முதல் 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கோப்பை வரும் செப்டம்பர் 4-ந் தேதி மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும்.

    முதல்முறையாக விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்ட கோப்பை என்ற பெருமையை ஐசிசி ஒருநாள் உலக கோப்பை பெற்றுள்ளது.

    • பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
    • இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2020 மற்றும் 2021-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் சித்தார்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய நிகழ்ச்சி இயக்குநரும், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான நிகர் ஷாஜி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.

    பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இன்று இளநிலை படிப்பில் 542 பேரும், முதுகலை படிப்பில் 56 பேரும் என மொத்தம் 598 பேர் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் சிறப்பு விருந்தினர் நிகர்ஷாஜி கூறும்போது, இந்த கல்லூரியின் முன்னாள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது.

    சந்திராயன்-1 மற்றும் சந்திராயன்-2 ஏவியதன் மூலம் உலக அரங்கில் இந்தியா புகழ் பெற்றுள்ளது என்றார்.

    இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • விண்வெளியில் சாதித்த விஞ்ஞானிகளின் வரலாறு, விண்வெளி சாா்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
    • சந்திர கிரகணம் மற்றும் வானியல் நிகழ்வுகளை பொதுமக்கள் நுண்ணோக்கி மூலம் கண்டு ரசிக்க முடியும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மேலஉளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 921 மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு ரூ. 3.81 லட்சம் மதிப்பில் வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில், அதிக திறன் கொண்ட தொலைநோக்கி, கோள்களின் இயக்கங்களை துல்லியமாக கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்கள், நவீன அறிதிறன் தொலைக்காட்சி, வானியல் தொடா்பான சுமாா் 28-க்கும் மேற்பட்ட பொருள்கள், சூரிய மண்டல அமைப்பு, கோள்கள், நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள், விண்வெளியில் சாதித்த விஞ்ஞானிகளின் வரலாறு, விண்வெளி சாா்ந்த புத்தகங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    இந்த வானியல் ஆய்வகத்தை பள்ளி கல்வி துறை அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தாா். பின்னர் அவர் தொலைநோக்கி கருவிகளை பார்வையிட்டார்.

    இந்த விழாவில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சிவக்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா் கோவிந்தராஜ், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ.ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பள்ளி மேலாண் குழுவைச் சோ்ந்தவா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

    வானியல் ஆய்வகம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் கூறும்போது:

    தமிழகத்தில் மேலஉளூா் அரசுப் பள்ளியில்தான் முதல்முறையாக வானியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. 2-வதாக கும்பகோணம் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வகத்தின் மூலம், சூரிய, சந்திர கிரகணம் மற்றும் வானியல் நிகழ்வுகளை மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் நுண்ணோக்கி மூலம் கண்டு ரசிக்க முடியும். மேலும், மாணவா்கள் வானியல் சாா்ந்த புத்தகங்களை படித்து வானியல் அறிவியல் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்றாா்.

    • நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 20 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
    • அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல்:

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இடம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 20 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் படித்த பள்ளி மற்றும் பெயர் விவரம் வருமாறு:-

    புதுச்சத்திரம் அரசு பள்ளி மாணவர் முகேஷ், ராசிபுரம் அண்ணா சாலை அரசு பள்ளி மாணவர் தரண்ராஜ், மாணவி ரம்யா ஸ்ரீ, பள்ளிப்பாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவி ரோகிணி தங்கம், பாச்சல் அரசு பள்ளி மாணவி பூமிகா, வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நவீன் குமார், கமலகாந்த், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்தி, கொல்லிமலை மாதிரி பள்ளி மாணவர் வெற்றி முருகன், ஆர். புதுப்பாளையம் அரசு பள்ளி மாணவர் ஜெயபாரதி, முத்துக்காப்பட்டி அரசு பள்ளி மாணவர் சுந்தரமூர்த்தி, சேந்தமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவி சுந்தரி, பாண்டமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவி வேத ஸ்ரீ, வளையபட்டி அரசு பள்ளி மாணவி சினேகா, திருச்செங்கோடு அரசு ஆண்கள் பள்ளி மாணவர் நாகேஸ்வரன், வேலகவுண்டம்பட்டி அரசு பள்ளி மாணவி சபித்ரா, வெண்ணந்தூர் மற்றும் எருமப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் கோமதி, நித்தியா ஸ்ரீ, வெண்ணந்தூர் அரசு பள்ளி மாணவர் கவின் கண்ணா, வலையபட்டி அரசு பள்ளி மாணவி திரிஷா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சீன ராக்கெட் பாகங்கள் இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.

    பீஜிங்:

    சீனா, விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில் விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.

    23 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட், செயற்கை கோளை நிலை நிறுத்திவிட்டது. இந்த நிலையில் ராக்கெட்டில் இருந்தது பூஸ்டர் பாகங்கள் என்றும் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாக தெரியவிக்கப்பட்டது.

    செயற்கைகோள், விரும்பிய திசையில் செல்ல உதவ பூஸ்டர்கள் அனுப்பப்படும். அந்த பூஸ்டரின் ஒரு பகுதி தான் பூமியில் விழவில் உள்ளது என்றும் அந்த பாகங்கள் மீது பெரியதாக இருப்பதால் புவி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பல் ஆகாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    விண்ணில் ஏவப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு சீன ராக்கெட்டின் பாகங்கள் இன்று பூமியில் விழும் என்றும் ஆனால் எந்த பகுதியில் விழும் என்று தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ராக்கெட் பாகங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

    இந்த நிலையில் சீன ராக்கெட் பாகங்கள் இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. தென்கிழக்கு ஆசியாவில் பூமியின் வளிமண்டலத்தின் வழியாக கடும் வேகத்தில் வந்த ராக்கெட் பாகங்கள் கடலில் விழுந்தது.

    இதனை அமெரிக்க ராணுவம் உறுதிபடுத்தியது. அதேவேளையில் சீனா எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தது. ராக்கெட் பாகங்கள் வானில் சீறிப் பாய்ந்து செல்லும் போது அதனை மலேசியாவில் மக்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.

    விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனையான வாங் யாபிங், முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    பீஜிங்:

    சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.

    இங்கு சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் வாங் யாபிங் என்ற பெண் வீராங்கனையும் ஒருவர். நேற்று இரவு அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் சிறிது தூரம் நடந்தார்.

    அவருடன் தலைமை விண்வெளி வீரர் ஷாய் சிகாங்கும் விண்வெளியில் நடந்தார்.

    வாங் யாபிங் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனை ஆவார். ஆனால் முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை வாங் யாபிங் பெற்றுள்ளார்.

    சில நிமிடங்கள் மட்டும் நடந்துவிட்டு பின்னர் அவர் விண்வெளி நிலையத்திற்கு திரும்பினார்.

    வாங் யாபிங் சீன விமானப்படை வீராங்கனையாக இருந்து வந்தார். 2010-ம் ஆண்டு அவர் விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 41 வயதான நிலையில் அவர் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.



    ரூ.30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறியுள்ளார். #ISRO #Sivan
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆய்வு மைய (‘இஸ்ரோ’) தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு 17 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் ஒரு திட்டம் தோல்வியில் முடிந்தது. மற்ற திட்டங்கள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 7 செயற்கைகோள்கள் மற்றும் 9 ராக்கெட்டுகள் அடங்கும். ‘உன்னதி’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதில் 45 நாடுகள் பங்கேற்கின்றன.

    இதில் நானோ செயற்கைகோளை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை வருகிற 17-ந் தேதி மத்திய மந்திரி தொடங்கி வைக்கிறார். ரூ.30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி, பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டு தயாரிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி, புதிய செயற்கைகோள்களை உருவாக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ரூ.30 ஆயிரம் கோடி 2 ஆண்டுகளுக்கான திட்ட பணிகளுக்கு செலவு செய்யப்படும். இதன் மூலம் புதிதாக 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஏற்கப்படும். இந்த ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ககன்யான் திட்டத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் மிக முக்கியமான விஷயம் ஆகும். இதில் 2 விஷயங்கள் உள்ளன. அதாவது ஒன்று என்ஜினீயரிங் மற்றும் மற்றொன்று மனிதர்கள் ஆகும்.

    மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது என்பது ‘இஸ்ரோ’ வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு என்றே மனித விண்வெளி அறிவியல் மையத்தை அமைத்துள்ளோம்.



    இதற்காக அட்டின் என்பவரை இயக்குனராக நியமித்துள்ளோம். ககன்யான் திட்ட பணிகள் முழுவதையும் அந்த மையமே பார்த்துக்கொள்ளும். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முன்பு, சோதனைக்காக ஆளில்லாத விண்கலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும், 2021-ம் ஆண்டு ஜூலை மாதமும் விண்ணுக்கு ஏவப்படும்.

    இந்த சோதனையின்போது அதில் ஏதாவது குறைகள், பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தால், அதை சரிசெய்வோம். கடைசியாக 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். இந்த திட்ட இலக்கை அடைய முழுவீச்சில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    நடப்பு ஆண்டில் ககன்யான் திட்டத்திற்கு தான் அதிகப்படியான முன்னுரிமை அளிக்கிறோம். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முன், இந்தியாவில் ஆரம்பகட்ட பயிற்சி வழங்குகிறோம். அதன் பிறகு நவீன பயிற்சிகள் வெளிநாட்டில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரஷியாவில் வழங்கப்படலாம்.

    விண்கலத்தில் இந்தியர்கள் தான் அனுப்பப்படுவார்கள். விண்ணுக்கு பெண்களை அனுப்பவும் நாங்கள் விரும்புகிறோம். விண்ணுக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் இந்தியாவால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியில் வெளிநாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்தமாட்டோம்.

    இறுதிக்கட்ட பணிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படலாம். விண்ணுக்கு செல்லும் மனிதர்கள் 7 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறினார். #ISRO #Sivan 
    நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய ‘ரோவர்’ எந்திரத்துடன் சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #Chandrayaan2 #ISRO #Sivan
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் சில சோதனைகள் இன்னும் முடிவடையாததால், சந்திரயான்-2 விண்கலம் மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும். அதில் ரோவர் நகரும் ஆய்வு எந்திரம் பொருத்தப்படும். அந்த வாகனம், நிலவில் தரையில் இறங்கி ஆய்வு செய்யும். அது 500 மீட்டர் சுற்றளவுக்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.



    இஸ்ரோ வெளிநாடுகளிலும் தரை கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. அது ரஷியா, ஜப்பான் நாடுகளாக இருக்கலாம். இஸ்ரோ டி.வி.யை தொடங்க முடிவு செய்துள்ளோம். இதற்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டுக்குள் இஸ்ரோ டி.வி. தொடங்கப்படும்.

    பூடான் நாடு, தங்கள் நாட்டில் தரை கட்டுப்பாட்டு மையத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆதித்யா விண்கலம் 2020-ம் ஆண்டு விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது சூரியனை ஆய்வு செய்யும்.

    இவ்வாறு சிவன் கூறினார். #Chandrayaan2 #ISRO #Sivan 
    ×