என் மலர்
நீங்கள் தேடியது "விண்வெளி நிலையம்"
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, அங்கே இருந்தவாறே தனது குடும்பத்தினருடன் பேசினார்.
- விண்வெளியில் இருந்து பூமியையும், பிரபஞ்சத்தையும் பார்ப்பது எவ்வளவு அழகானது? என சுபான்ஷு எங்களுக்கு தெரிவித்தார்.
லக்னோ:
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் கடந்த மாதம் 25-ந்தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா அங்கே பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவரது இந்த பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகிற 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார். அவர் பாதுகாப்பாக பூமியில் காலடி வைப்பதை இந்தியா முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, அங்கே இருந்தவாறே தனது குடும்பத்தினருடன் பேசினார். இது அவரது பெற்றோரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இது தொடர்பாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர்கள் சிறப்பு பேட்டி அளித்தனர். அப்போது சுபான்ஷுவின் தந்தை ஷம்பு தயால் சுக்லா கூறியதாவது:-
விண்வெளியில் அனைத்தும் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்த திட்டம் நன்றாக நடைபெறுவதை பார்க்கும்போது சிறப்பாக உள்ளது.
விண்வெளி நிலையத்தில் அவர் பணி செய்வதை எங்களுக்கு காட்டினார். அதாவது பணி செய்யும் இடம், தூங்கும் இடம், அவரது ஆய்வுக்கூடம், தினசரி பணிகள் போன்றவற்றை எங்களுக்கு காட்டினார். ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கினார்.
சுபான்ஷு, தான் செய்யும் பணியில் மிகுந்த ஈடுபாடுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். மகிழ்ச்சியாக செய்யும் எந்தவொரு செயலும் எப்போதும் சிறப்பாக இருக்கும்.
அவரிடம் பேசியபிறகு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாங்களும் இங்கே நன்றாக இருக்கிறோம். அவர் பூமிக்கு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். எங்கள் மொத்த குடும்பமும், உறவினர்களும் அவருக்காக காத்திருக்கிறோம்.
இந்த பயணத்துக்காகவும், அவர் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை அறியும்போது எங்கள் குடும்பம் மிகுந்த பெருமையடைகிறது.
இவ்வாறு ஷம்பு தயால் சர்மா கூறினார்.
சுபான்ஷுவின் தாய் ஆஷா கூறியதாவது:-
விண்வெளியில் இருந்து பூமியையும், பிரபஞ்சத்தையும் பார்ப்பது எவ்வளவு அழகானது? என சுபான்ஷு எங்களுக்கு தெரிவித்தார். விண்வெளி நிலையத்தின் புகைப்படங்களையும் எங்களுக்கு காட்டினார்.
அதையெல்லாம் பார்ப்பது மனதுக்கு இதமாக இருந்தது. அதைவிட எங்கள் மகன் மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் இருப்பதைப் பார்ப்பது இன்னும் சிறப்பாக இருந்தது.
அவரது வருகைக்காக நாங்கள் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வானிலை மற்றும் பிற சூழல்களை பொறுத்தே அவரது பயணம் இருக்கும். ஆனால் எப்போது திரும்பினாலும் அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு ஆஷா கூறினார்.
மகனை வரவேற்க என்னென்ன ஏற்பாடுகள் நடந்து வருகின்றன? என்ற கேள்விக்கு அவர், 'அவருக்காக என்ன வேண்டுமானாலும் சமைப்பேன். வெளிநாட்டில் இருந்ததால் கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக சாப்பிடாத அனைத்தையும் இந்த முறை சாப்பிட விரும்புவதாக அவர் எங்களிடம் கூறினார். தனக்குப் பிடித்தமான வீட்டில் சமைத்த உணவுகளை எல்லாம் ருசிக்க விரும்புவதாக அவர் கூறினார்' என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
- பாசிப்பயறு மற்றும் வெந்தய செடிகளின் வளர்ச்சியை தினமும் ஆய்வு செய்து வருகிறார்.
- சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரின் விண்வெளி ஆராய்ச்சிப்பணி இன்றுடன் நிறைவடைகிறது.
புதுடெல்லி:
ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ், பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த 25-ந்தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டார் இந்திய விண்வெளி வீரரரான சுபான்ஷு சுக்லா. அவருடன் அமெரிக்கா, போலந்து, அங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த 3 வீரர்களும் சென்றுள்ளனர்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும், ராக்கெட்டில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ந்தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
அங்கு அவர்கள் 14 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். சுபான்ஷு சுக்லா மட்டும் தனியாக சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக அவர் பூமியில் இருந்து பாசிப்பயறு மற்றும் வெந்தயத்தை எடுத்து சென்றார்.
விண்வெளி நிலையத்தில் அந்த விதைகளை முளைக்க வைத்துள்ளார். பாசிப்பயறு மற்றும் வெந்தய செடிகளின் வளர்ச்சியை தினமும் ஆய்வு செய்து வருகிறார்.
அவர் பூமிக்கு திரும்பும்போது அந்த செடிகளையும் கொண்டு வருவார். அந்த செடிகள் கர்நாடக மாநிலம் தார்வாட் கொண்டு செல்லப்பட்டு, வளர்க்கப்படும். இந்த பரிசோதனையை தார்வாட்டில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரவிக்குமார் ஹோசமணி மற்றும் தார்வாட்டின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த சுதீர் சித்தபுரெட்டி ஆகியார் வழிநடத்துகின்றனர்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரின் விண்வெளி ஆராய்ச்சிப்பணி இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. எனவே அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது இணைக்கப்பட்டு இருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் அங்கிருந்து 13-ந்தேதி புறப்பட்டு, புளோரிடா கடற்கரைக்கு வெளியே 14-ந்தேதி தரையிறங்குவார்கள் என்று நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 60 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. விண்வெளியில் நுண்பாசி மாதிரிகளை சுபான்ஷூ சுக்லா ஆய்வு செய்தார். வருங்காலத்தில் இவை விண்வெளியில் உணவு, எரிசக்தி மற்றும் தூய காற்றைக் கூட வழங்கலாம்' என்றனர்.
நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'விண்வெளி சூழலில் நுண்ணியிர்களின் செயல்பாடு குறித்த இந்திய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சோதனையிலும் அவர் பங்கேற்றார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம அவர்கள் பூமிக்கு திரும்புவதை நாசா நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது' என்றனர்.
இதனிடையே சர்வதேச விண்வளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, சக வீரர்களுடன் உற்சாகமாக உரையாடுகிறார். அவ்வாறு நடந்த ஒரு இனிமையான உரையாடலின்போது சகவீரர் ஒருவரிடம், 'இஸ்ரோ நாடு முழுவதும் உள்ள தேசிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்காகவும் சில அற்புதமான ஆராய்ச்சிகளை வழங்க முடிந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதைச் செய்வது உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது' என்று கூறினார்.
மேலும், 'நான் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடும் ஆராய்ச்சி ஸ்டெம் செல் ஆராய்ச்சி, அங்கு ஸ்டெம் செல்களில் கூடுதல் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் மீட்சியை துரிதப்படுத்த முடியுமா, வளர்ச்சியை துரிதப்படுத்த முடியுமா. காயத்தை சரிசெய்ய முடியுமா என்பதை ஆராய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.
- விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
- மெங்டியன் என்கிற 2-வது ஆய்வுகூட அமைப்பை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பீஜிங் :
சீனா விண்வெளியில் தனெக்கென புதிதாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. 'தியான்ஹே' என பெயரிடப்பட்டுள்ள புதிய விண்வெளி நிலையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.
இதற்காக சீன விண்வெளி வீரர்கள் சூழற்சி முறையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த விண்வெளி நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக சீனா ஏற்கனவே வெண்டியன் என்கிற ஆய்வுகூட அமைப்பை அனுப்பியது. அந்த ஆய்வுகூட அமைப்பு 'தியான்ஹே' விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மெங்டியன் என்கிற 2-வது ஆய்வுகூட அமைப்பை சீனா நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனான் கடற்கரையில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து 'லாங் மார்ச் 5பி ஒய்4' ராக்கெட் மூலம் மெங்டியன் ஆய்வுகூட அமைப்பு விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ஆய்வுகூட அமைப்பு நுண் புவியீர்ப்பு விசையை படிக்கவும், திரவ இயற்பியல், பொருள் அறிவியல், அடிப்படை இயற்பியல் ஆகியவற்றில் சோதனைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையத்தை கட்டி முடிக்க சீனா தீவிரம்
- ஷென்சோ-15 விண்கலம் மூலம் வீரர்கள் பயணம்
பெய்ஜிங்:
விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் பணிக்காக பல நாடுகளுடன் இணைந்த கூட்டுத் திட்டத்தின்படி ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. நீண்ட கால ஆய்வுக்கு பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் ரஷ்யாவின் விண்வெளி நிலையம் ஓய்வு பெறும் என கூறப்படுகிறது.
இதையடுத்து ரஷியாவிற்கு போட்டியாக புவி சுற்றுப் பாதையில் விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகளில் சீனா தீவிரம் காட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கடந்த ஜூன் மாதம் ஷென்சோ-14 குழுவை சீனா விண்வெளிக்கு அனுப்பியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில் இருந்து ஷென்சோ-15 விண்கலத்துடன் இணைந்த ஒய்15 கேரியர் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மூன்று வீரர்களை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியது.

இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விண்கலத்தை ஏவும் பணி சில நிமிடங்களில் வெற்றிகரமாக நடந்ததாக கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விண்வெளிக்கு சென்றுள்ள ஷென்சோ-15 குழுவை சேர்ந்த வீரர்கள், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள 3 வீரர்களுடன் இணைந்து கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிகிறது. கட்டுமானத்தில் இருக்கும் விண்வெளி நிலையத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கியிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
- விண்வெளி வீரர்களை அழைத்து வருவதற்கான எம்எஸ்-22 விண்கலம் மீது விண்கல் மோதியதால் சேதம்.
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது 7 விண்வெளி வீரர்கள் உள்ளனர்.
மாஸ்கோ:
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான விண்கலம் மீது சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து விண்கலத்தில் தங்கியிருக்கும் 3 வீரர்களையும் ஏற்றி வருவதற்காக அடுத்த மாதம் 20ம் தேதி மீட்பு விண்கலத்தை ராக்கெட்டில் அனுப்ப உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷியாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் கூறியிருப்பதாவது:-
ரஷிய விண்வெளி வீரர்களான செர்ஜி புரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் மற்றும் நாசா விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ ஆகியோரை பூமிக்கு அழைத்து வர முதலில் அனுப்பட்ட எம்எஸ்-22 விண்கலம் ஒரு சிறிய விண்கல் மோதியதால் சேதமடைந்துள்ளது. எனவே, அவர்களுக்காக சோயுஸ் எம்எஸ்-23 ராக்கெட் பிப்ரவரி 20ம் தேதி ஆட்கள் யாரும் இன்றி செலுத்தப்பட உள்ளது. சேதமடைந்த சோயுஸ் எம்எஸ்-22 ஆட்கள் இல்லாமல் பூமிக்கு திரும்பும்.
இவ்வாறு விண்வெளி நிறுவனம் கூறி உள்ளது.
விண்வெளி நிலையத்தில் தற்போது 7 பேர் உள்ளனர். அவசர காலத்தில் வீரர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்றால் விண்வெளி நிலையத்தில் நான்கு பேரை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரே ஒரு மீட்பு விண்கலம் மட்டுமே உள்ளது. தற்போது எம்எஸ்-22 ராக்கெட் தகுதியற்றதாகக் கருதப்படுவதால் அதற்கு மாற்றாக மற்றொரு விண்கலம் ராக்கெட்டில் அனுப்பப்படுகிறது.
- விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியதால் விண்கலம் லேசான சேதம் அடைந்தது
- பைகானூர் ஏவுதளம் அருகில் உள்ள கசாக் புல்வெளியில் விண்கலம் தரையிறங்கியது.
மாஸ்கோ:
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து விண்கலத்தில் தங்கியிருக்கும் 3 வீரர்களையும் ஏற்றி வருவதற்காக கடந்த மாதம் சோயுஸ் எம்எஸ்-23 என்ற விண்கலத்தை ரஷியா அனுப்பியது.
அதேசமயம், சேதமடைந்த சோயுஸ் எம்எஸ்-22 விண்கலத்தை ஆட்கள் இன்றி பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பியது. பைகானூர் ஏவுதளம் அருகில் உள்ள கசாக் புல்வெளியில் விண்கலம் தரையிறங்கியது. விண்கலத்தில் சிறிய அளவிலேயே சேதம் ஏற்பட்டுள்ளதால், அதை சரிசெய்து மீண்டும் பயன்படுத்தலாமா? என்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
- 90 நிமிடங்கள் விண்வெளி நிலையம் உடனான தொடர்பு துண்டிப்பு
- ரஷியாவின் தகவல் தொடர்பு அமைப்பு மூலம் 20 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி மையம், விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பின்னர் பேக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் விண்வெளி மையத்துடன் தொடர்பை ஏற்படுத்தினர். மின்தடையால் சுமார் 90 நிமிடங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நாசாவில் ஏற்பட்ட மின்தடை குறித்து ரஷியாவின் தகவல் தொடர்பு அமைப்பு மூலமாக 20 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளி மையத்துடன் தொடர்பு கொள்ள நாசாவில் தனியாக கட்டுப்பாட்டு மையம் உள்ளது. ஒருவேளை இந்த மையம் வேலை செய்யவில்லை என்றால், இதற்கு மாற்று திட்டம் வகுத்துள்ளது. முதன்முறையாக விண்வெளி மையத்தை தொடர்பு கொள்ள நாசா இந்த மாற்று ஏற்பாட்டை பயன்படுத்தியுள்ளது.
ஒருவேளை இயற்கை பேரழிவு ஏற்பட்டால் மாற்று ஏற்பாட்டிற்காக ஹூஸ்டனில் இருந்து சில மைல் தூரத்தில் மாற்று கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து பராமரித்து வருகிறது. ஆனால் தற்போது விளக்குகள் மற்றும் ஏ.சி. வேலை செய்ததால் நாசா மையத்தில் இருந்தே தொடர்பு கொண்டுள்ளது.
இதுகுறித்து விண்வெளி நிலைய திட்ட மேலாளர் ஜோல் கூறுகையில் ''விண்வெளி வீரர்களுக்கோ, நிலையத்திற்கோ எந்தவொரு ஆபத்தும் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டி வருகிறது. இதற்காக விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளன. அவர்கள் விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது மகனுடன் பேசி உள்ளார்.
- விண்வெளியில் நான் விரும்பும் சிறந்த விஷயம் என்ன என்று கேட்கிறீர்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 மாத விண்வெளி பயணமாக சென்றுள்ளார். அவர் அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இமயமலை புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது மகனுடன் பேசி உள்ளார். அப்போது அவரிடம் பூமியில் உங்களுக்கு எது மிகவும் பிடிக்கும் என அவரது மகன் அப்துல்லா கேட்டுள்ளார். அதற்கு அவர் மகன், பூமியில் நான் மிகவும் விரும்பும் விஷயம் நீ தான் என்று சுல்தான் அல் நெயாடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், விண்வெளியில் நான் விரும்பும் சிறந்த விஷயம் என்ன என்று கேட்கிறீர்கள். அது உங்களுக்கு தெரியும். நாங்கள் இங்கே மைக்ரோ கிராவிட்டி சூழலில் இருக்கிறோம். நீங்கள் விரும்பும் பல விஷயங்களை நாங்கள் இங்கே செய்யலாம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பறப்பது போன்ற அனைத்தையும் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் டுவிட்டரில் வைரலாகி வரும் நிலையில் அதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- விண்வெளி நிலையம் இந்திய விண்வெளி பொருளாதாரத்திற்கு எவ்வாறு பயன் அளிக்கும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.
- ககன்யான் திட்டத்தை பொறுத்தவரை மனித விண்வெளி பயண திறனை நோக்கியதாகும்.
இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது:-
சந்திரயான்-3 பயணத்தின் வெற்றிக்கு பிறகு அனைத்து சாத்திய கூறுகளையும் நாங்கள் பார்த்து வருகிறோம். என்ன வகையான அறிவியல் மேம்பாடுகளை செய்ய முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம். விண்வெளி நிலையத்தை உருவாக்குவது போன்ற பெரிய திட்டங்களும் உள்ளது. விண்வெளி நிலையம் இந்திய விண்வெளி பொருளாதாரத்திற்கு எவ்வாறு பயன் அளிக்கும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.
எதிர்காலத்தில் ஒரு விண்வெளி நிறுவனத்தை தொடங்க வேண்டும். அதனை ரோபோ இயக்கத்துடன் தொடங்க வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் உள்ளது. ககன்யான் திட்டத்தை பொறுத்தவரை மனித விண்வெளி பயண திறனை நோக்கியதாகும். அது நடந்த உடன் அடுத்த 20 அல்லது 25 ஆண்டுகளுக்குள் விண்வெளி நிலைய கட்டிட பணிகளை நாம் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- விண்கலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது.
- விண்வெளி நிலையத்தில் தற்போது 7 விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கேப் கனரவல்:
நாசாவின் 4 விண்வெளி வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். விண்வெளி நிலையத்தில் சுமார் 6 மாத காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட அவர்கள், நேற்று பூமிக்கு திரும்பினர். அவர்களின் விண்கலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது.
விண்கலமானது, விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேறிய சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, புளோரிடாவின் ஜாக்சன்வில்லிக்கு அருகில் கடலில் பாராசூட் மூலம் இறங்கியது. பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக, ஸ்பேஸ்எக்ஸ் கடந்த வாரம் வேறு வீரர்களை அனுப்பியது. தற்போது விண்வெளி நிலையத்தில் 3 அமெரிக்கர்கள், 3 ரஷியர்கள் மற்றும் ஒரு ஜப்பானியர் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- கான்சு மாகாணத்தில் உள்ள ஜியூகுவான் ஏவுதளத்தில் இருந்து இன்று, மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது. அவர்களை சுமந்து சென்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது.
- சீனாவின் இந்த விண்வெளி நிலையம் தான் உலகில் செயல்படக் கூடிய ஒரே விண்வெளி மையமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த விண்வெளி நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் உலகில் தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்த பெருமை சீனாவுக்கு கிடைக்கும்.
சமீபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் அடங்கிய விண்வெளி வீரர்கள்குழு தியாங்காங் விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் 6 மாதம் அங்கு தங்கி இருந்து முக்கிய பாகங்களை பொருத்திவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் பத்திரமா கபூமிக்கு திரும்பினார்கள்.
விண்வெளி நிலையத்தில் இத்தனை காலங்கள் வீரர்கள் தங்கி இருந்தது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் இறுதிகட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது மேலும் 3 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவினரை சீனா அனுப்ப முடிவு செய்தது.
இந்த குழுவில் காய்ஜூஷே, சென்டாங், லியூயாங் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் இன்று காலை விண்வெளிக்கு சென்றுள்ளனர். சென்ஷோ -14 என்ற விண்கலம் மூலம் இவர்கள் விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
கான்சு மாகாணத்தில் உள்ள ஜியூகுவான் ஏவுதளத்தில் இருந்து இன்று, மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது. அவர்களை சுமந்து சென்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது.
இந்த விண்கலம் தியாங்காங் விண்வெளி நிலையத்தை அடைந்ததும் இந்த விண்கலம் அத்துடன் இணைக்கப்படும். அதில் இந்த குழுவினர் இறங்கி விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
சீனாவில் உள்ள சி.எம்.எஸ் ஏ ஆய்வு மையக்குழுவினர் வழிகாட்டுதலுடன் 6 மாதங்களில் விண்வெளி நிலைய பணிகளை அவர்கள் நிறைவு செய்வார்கள் என சீனா ஆய்வு மையத்தின் இணை இயக்குனர் லீன் ஜிகி யாங் தெரிவித்து உள்ளார்.
இன்னும் சில ஆண்டுக்குள் சர்வதேச விண்வெளி நிலையம் ஓய்வுபெற உள்ளது. அதன் பிறகு சீனாவின் இந்த விண்வெளி நிலையம் தான் உலகில் செயல்படக் கூடிய ஒரே விண்வெளி மையமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.






