என் மலர்
நீங்கள் தேடியது "seeds"
- சருமம், முடி, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் பப்பாளி.
- சாறு, சோப்பு, பொடி என பல்வேறு வடிவங்களில் பப்பாளியின் நன்மைகளைப் பெறலாம்.
பப்பாளி சருமம், முடி, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?. பப்பாளியால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? அது எந்தெந்த வடிவங்களில் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.
முகப்பரு கட்டுப்பாடு
பப்பாளியில் உள்ள பப்பைன் மற்றும் கைமோபப்பைன் என்ற நொதிகள் புரதங்களை உடைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும் இந்த பப்பைன் நொதி இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாக செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை அகற்றவும், துளைகளை அடைக்கவும், மென்மையான மற்றும் பிரகாசமான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இறந்த செல்கள் அகற்றப்படுவதால் முகத்தில் பருக்களின் அளவு குறையும்.
முகச்சுருக்கம்
பப்பாளியில் 'லைகோபீன்' என்ற ஆக்ஸிஜனேற்ற பைட்டோநியூட்ரியண்ட் அதிகளவு உள்ளது. இது தோல் பாதுகாப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி , பப்பாளியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது உங்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். மேலும் லைகோபீன் இளமை தோற்றத்தை தக்கவைக்க உதவுகிறது. தோல் சுருக்கத்தை குறைக்கவும் உதவும்.
சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும்
பப்பாளியில் பயனுள்ள நொதிகள் மற்றும் தாவர அடிப்படையிலான ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த கூறுகள் சருமத்தின் மேற்பரப்பில் இருந்து இறந்த மற்றும் சேதமடைந்த செல்கள், திசுக்கள் மற்றும் மாசுக்களை அகற்ற உதவும். பப்பாளி சருமத்துளைகளை சுத்தம் செய்து சருமத்தை பிரகாசமாகவும், தெளிவாகவும் மாற்ற உதவுகிறது. மேலும் சருமத்தின் உள் அடுக்குகளில் ஊடுருவி, அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றுவதன் மூலம் நல்ல நிறத்தையும் கொடுக்கிறது.
தோல் நோய்கள்
பல காலமாக பப்பாளி தழும்புகள், தீக்காயங்கள் மற்றும் பிற தோல் நோய்களுக்கு இயற்கையான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி நொதிகள் இறந்த சரும செல்களை வெளியேற்றி, சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்குகின்றன. பாதிக்கப்பட்ட இடத்தில் பப்பாளிக்கூழை பயன்படுத்தினால் உடனடியாக தீர்வு கிடைக்கும். தோல் அரிப்பு மற்றும் அலர்ஜிக்கு தீர்வு அளிக்கிறது.
ஈரப்பதம்
பப்பாளியில் அதிக அளவு உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நொதிகள் வறண்ட, தோல் உரியும் சருமத்திற்கு சிகிச்சையளிப்பதற்கும், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை மீட்டெடுப்பதற்கும் உதவுகின்றன. பப்பாளி கூழை உங்கள் சருமத்தில் தொடர்ந்து தடவுவது சருமத்தை மென்மையாக்கி அதன் இயற்கையான பளபளப்பை மீண்டும் கொண்டு வர உதவும்.
அடிமுதல் நுனிவரை
பப்பாளி பழம் மட்டுமின்றி பப்பாளிச் செடியின் பல பாகங்களும் சருமத்திற்கு நன்மை பயக்கும். சாறு, சோப்பு, பொடி என பல்வேறு வடிவங்களில் பப்பாளியின் நன்மைகளைப் பெறலாம். பப்பாளியின் நன்மைகளை வெவ்வேறு வடிவங்களில் எவ்வாறு பெறுவது என்பதைப் பார்ப்போம்.

பழம், சாறு, இலை என அனைத்து வடிவங்களிலும் சருமத்திற்கும், உடலுக்கும் நன்மை அளிக்கிறது பப்பாளி
பழம்...
பப்பாளியை பச்சையாகவோ, பழுத்ததாகவோ அல்லது சமைத்ததாகவோ சாப்பிட்டாலும் உங்களுக்கு நன்மை பயக்கும். சாப்பிடுவதைத் தவிர, மசித்த பப்பாளி கூழை ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். மசித்த பப்பாளி கூழில் தேன், மஞ்சள், எலுமிச்சை சாறு அல்லது முட்டையின் வெள்ளைக்கருவை (உங்கள் சருமத்தின் தேவைக்கேற்ப) சேர்க்கலாம். பழுப்பு நிறத்தை நீக்க, சருமத்தை ஒளிரச் செய்ய, ஈரப்பதத்தை தக்கவைக்க அல்லது ஊட்டமளிக்க இதைப் பயன்படுத்துங்கள்.
விதைகள்
பப்பாளி விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் அதிகளவில் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. பப்பாளி விதைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உங்கள் சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கும்.
இலைகள்
பொதுவாக மென்மையான, தெளிவான மற்றும் இளமையான சருமத்திற்கு பப்பாளி இலைகள் சாறு வடிவத்திலும், பேஸ்ட் வடிவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி இலைகளில் புரதத்தை கரைக்கும் நொதியான பப்பெய்னும் உள்ளது. எனவே, அதன் இலையை அறைத்து அந்த சாற்றை இறந்த சரும செல்களை அகற்றவும், அடைபட்ட துளைகளை அழிக்கவும், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும் ஒரு எக்ஸ்ஃபோலியண்டாக மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம்.
சோப்பு
பப்பாளியின் நன்மைகளைப் பெற இதுவே எளிதான வழி. பழச்சாறு, வைட்டமின் சி & ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கொண்ட ஆர்கானிக் பப்பாளி சோப்பு உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும், ஒழுங்கற்ற நிறமிகளைக் குறைக்கும் மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும்.
சாறு
பப்பாளி ஜூஸ் உடனடி நீரேற்றம் மற்றும் பளபளப்பை வழங்கும். சாற்றில் பொட்டாசியம் இருப்பது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் மந்தமான தன்மையை நீக்குகிறது.
- பாசிப்பயறு மற்றும் வெந்தய செடிகளின் வளர்ச்சியை தினமும் ஆய்வு செய்து வருகிறார்.
- சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரின் விண்வெளி ஆராய்ச்சிப்பணி இன்றுடன் நிறைவடைகிறது.
புதுடெல்லி:
ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ், பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த 25-ந்தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டார் இந்திய விண்வெளி வீரரரான சுபான்ஷு சுக்லா. அவருடன் அமெரிக்கா, போலந்து, அங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த 3 வீரர்களும் சென்றுள்ளனர்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும், ராக்கெட்டில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ந்தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
அங்கு அவர்கள் 14 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். சுபான்ஷு சுக்லா மட்டும் தனியாக சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக அவர் பூமியில் இருந்து பாசிப்பயறு மற்றும் வெந்தயத்தை எடுத்து சென்றார்.
விண்வெளி நிலையத்தில் அந்த விதைகளை முளைக்க வைத்துள்ளார். பாசிப்பயறு மற்றும் வெந்தய செடிகளின் வளர்ச்சியை தினமும் ஆய்வு செய்து வருகிறார்.
அவர் பூமிக்கு திரும்பும்போது அந்த செடிகளையும் கொண்டு வருவார். அந்த செடிகள் கர்நாடக மாநிலம் தார்வாட் கொண்டு செல்லப்பட்டு, வளர்க்கப்படும். இந்த பரிசோதனையை தார்வாட்டில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரவிக்குமார் ஹோசமணி மற்றும் தார்வாட்டின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த சுதீர் சித்தபுரெட்டி ஆகியார் வழிநடத்துகின்றனர்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரின் விண்வெளி ஆராய்ச்சிப்பணி இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. எனவே அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது இணைக்கப்பட்டு இருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் அங்கிருந்து 13-ந்தேதி புறப்பட்டு, புளோரிடா கடற்கரைக்கு வெளியே 14-ந்தேதி தரையிறங்குவார்கள் என்று நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 60 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. விண்வெளியில் நுண்பாசி மாதிரிகளை சுபான்ஷூ சுக்லா ஆய்வு செய்தார். வருங்காலத்தில் இவை விண்வெளியில் உணவு, எரிசக்தி மற்றும் தூய காற்றைக் கூட வழங்கலாம்' என்றனர்.
நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'விண்வெளி சூழலில் நுண்ணியிர்களின் செயல்பாடு குறித்த இந்திய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சோதனையிலும் அவர் பங்கேற்றார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம அவர்கள் பூமிக்கு திரும்புவதை நாசா நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது' என்றனர்.
இதனிடையே சர்வதேச விண்வளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, சக வீரர்களுடன் உற்சாகமாக உரையாடுகிறார். அவ்வாறு நடந்த ஒரு இனிமையான உரையாடலின்போது சகவீரர் ஒருவரிடம், 'இஸ்ரோ நாடு முழுவதும் உள்ள தேசிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்காகவும் சில அற்புதமான ஆராய்ச்சிகளை வழங்க முடிந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதைச் செய்வது உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது' என்று கூறினார்.
மேலும், 'நான் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடும் ஆராய்ச்சி ஸ்டெம் செல் ஆராய்ச்சி, அங்கு ஸ்டெம் செல்களில் கூடுதல் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் மீட்சியை துரிதப்படுத்த முடியுமா, வளர்ச்சியை துரிதப்படுத்த முடியுமா. காயத்தை சரிசெய்ய முடியுமா என்பதை ஆராய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.
- மூலனூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன.
- உயிர் உரங்களான அசோஸ்பைரில்லாம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் டிவிரிடி இருப்பில் உள்ளன.
மூலனூர் :
மூலனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மூலனூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. மக்காச்சோளம்-405 கிகி. சோளம் -2.5 டன், உளுந்து 3 டன், கொள்ளு 108 கிகி, நிலக்கடலை- 2 டன், மற்றும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லாம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் டிவிரிடி இருப்பில் உள்ளன.மக்காச்சோளம் ரூ.100 மானிய விலையிலும், சோளம் ரூ.30 மானியவிலையிலும், உளுந்து ரூ.47 மானிய விலையிலும், கொள்ளு ரூ.67, நிலக்கடலை ரூ.47 மானியவிலையிலும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தேவையான உரம் மற்றும் உரங்களை வாங்கி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகள் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள்.
- விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.
வெள்ளகோவில்:
முத்தூர், நத்தக்காடையூர் பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற முன்வர வேண்டும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை இயக்குனர் கோ.வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், பூமாண்டன் வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் மற்றும் நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.
விவசாயிகள் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள். நிலக்கடலை சாகுபடி செய்யும் காலங்களில் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் பெறுவதற்கு நிலக்கடலை விதை பருப்புகள் பங்கு முக்கியமானது. எனவே விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி தொடங்கும் காலத்தில் நல்ல தரமான நிலக்கடலை விதை கிடைத்திடும் வகையில் விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிலக்கடலை சாகுபடியில் நல்ல ரக நிலக்கடலை விதை பருப்புகளை விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிலக்கடலை விதை பருப்புகள் தரமற்றதாகவும், முளைப்புத் திறன் குறைபாடு கொண்டதாகவும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஈரோடு மாவட்ட விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் புகார் மனு அனுப்பி தீர்வு கண்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை தோட்டக்கலை துறை மூலம் விதைகள் மானியம் மூலம் வழங்கப்படுகிறது.
- தக்காளி, வெங்காயம்,சுரை,கத்திரி, மிளகாய்,பாகல்,பீர்க்கன்,கொத்தவரை,வெண்டை ஆகிய விதைகள் வழங்கல்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை தோட்டக்கலை துறை மூலம் தக்காளி, வெங்காயம்,சுரை,கத்திரி, மிளகாய்,பாகல்,பீர்க்கன்,கொத்தவரை,வெண்டை ஆகிய விதைகள் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. எனவே விதைகள் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் ஜெராக்ஸ் ,ரேசன் ஜெராக்ஸ்,சிட்டா நகல்,அடங்கல்நகல், வங்கிகணக்குபுத்தகம்நகல்,போட்டோ2, ஆகியவற்றை கொண்டு வந்து கபிலர்மலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் கொடுத்து விதைகளை பெற்றுக் கொள்ளுமாறு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- விதை கொள்கலன்களில் விவர அட்டை உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
- விதைச்சான்று துறையின்கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுதத வேண்டும்.
நெல்லை:
நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் விதை விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களில் விதைச்சான்றுத் துறையினரால் சான்று செய்ய பெற்ற விதைகளை வாங்க வேண்டும். விதை கொள்கலன்களில் விவர அட்டை உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
சாக்குப் பைகளில் தமிழ்நாடு அரசு விதைச்சான்றளிப்புத் துறையால் சான்றளிக்கப்பட்ட ஆதார நிலை(வெள்ளைஅட்டை) அல்லது சான்றுநிலை(நீலநிற அட்டை)-ல் ஏதேனும் ஒன்றுடன் உற்பத்தியாளர் அட்டையும் சேர்த்து 2 அட்டைகள் பொருத்தப்பட்ட விதைகளை வாங்க வேண்டும்.
விவர அட்டைகளில் விதையின் ரகம், உற்பத்தியாளர் முகவரி விதைச்சான்றளிப்புத் துறையின் முத்திரை காணப்படும். காலக்கெடு தேதியைக் கவனித்து, காலக்கெடு முடிவடையாத, விதைப்பதற்கு போதிய அவகாசம் உள்ள விதைகளை வாங்க வேண்டும்.
விதைச்சான்று துறையின்கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுதத வேண்டும். அவரவர் பகுதிக்கு ஏற்ற ரகமா, முக்கியமாக அந்தப் பருவத்திற்கு ஏற்ற ரகம்ரானா எனக் கவனித்து வாங்க வேண்டும்.
விதை வாங்கும்போது விற்பனை ரசீது கண்டிப்பாக கேட்டு வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலக்கெடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். விற்பனை ரசீதில், வாங்குபவர்கள் கண்டிப்பாக கையெழுத்திட்டு வாங்க வேண்டும்.
விதையின் கொள்கலன் கிழிபடாமல் நன்றாக தைக்கப்பட்டு, சீல் இடப்பட்டுள்ளதா எனக் கவனித்து வாங்க வேண்டும். விதை வாங்கும் போது மேற்கூறிய கருத்துக்களை கவனித்தில் கொண்டால், தரமான விதை கொண்டு அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரியலூர் மாவட்டத்தில் காலாவதியான விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
- விதைகளை வாங்கும் போது விற்பனையாளர்களிடம் அவசியம் விற்பனை ரசீதை கேட்டு பெறவேண்டும்
அரியலூர்:
திருச்சி விதை ஆய்வு இயக்குநர் கோவிந்தராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு பின் பாசன வசதிஉள்ள இடங்களில் பருத்தி, எள், உளுந்துஆகிய பயிர்கள் சாகுபடிசெய்யப்படுகின்றன. விவசாயிகள் தங்களுக்கு தேவையான மேற்கண்ட விதைகளை வாங்கும் போது அரசினால் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே தங்களுக்கு தேவையான விதைகளை வாங்க வேண்டும்.
அப்படி விதைகளை வாங்கும் போது விற்பனையாளர்களிடம் அவசியம் விற்பனை ரசீதை கேட்டு பெறவேண்டும். இதை பயிர் அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு வழங்கும் விற்பனை ரசீதில் விவசாயின் பெயர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றை ரசீதில் குறிப்பிட்டு விவசாயிடம் கையொப்பம் பெற்று விற்பனைச் செய்யவேண்டும்.
காலாவதியான விதைகளை விற்பனைசெய்யக் கூடாது. பருவத்திற்கு ஏற்ற விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் விதை விற்பனையாளர்கள் மீது விதைச் சட்டபடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு திருச்சி மன்னார்புரத்திலுள்ள விதை ஆய்வு இயக்குநர் அலுவலக தொலைப்பேசி 0431-2420587 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
- இருக்கன்துறை பகுதி விவசாயிகள் பேசும்போது, எங்கள் பகுதியில் உள்ள கல் குவாரிகளால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரி வித்தனர்.
- மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து யானைகள் இறங்கி வந்து அங்குள்ள தென்னை மரங்களை நாசம் செய்கிறது எனவும் விவசாயிகள் கூறினர்.
நெல்லை:
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார், வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்குவாரி
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறினர். இருக்கன்துறை பகுதி விவசாயிகள் பேசும்போது, எங்கள் பகுதியில் உள்ள கல் குவாரிகளால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரி வித்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதி விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து யானைகள் இறங்கி வந்து அங்குள்ள தென்னை மரங்களை நாசம் செய்கிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.
மானூர் பகுதி விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள சில குளங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே அதை கண்டுபிடித்து தர வேண்டும் என்றனர்.
தரம் குறைந்த விதைகள்
பின்னர் கலெக்டர் கார்த்திகேயன் பேசிய தாவது:-
நெல்லை மாவட்ட அணைகளில் கடந்த ஆண்டு இதே நேரத்தில் 62.10 சதவீதம் நீர் இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 29.30 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இம்மாதம் இயல்பான மழை அளவை விட 48.32 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 265 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் 1,546 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்ப ட்டுள்ளது.
இதில் 39 விதைகள் தரமற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் அந்த விதை விற்பனை யாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும், 2 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 57.79 மெட்ரிக் டன் எடையுள்ள தரம் குறைந்த விதைகள் கண்டறியப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.77 லட்சத்து 36 ஆயிரம் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும்.
- விவசாயிகள் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-
மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிசான பருவத்தில் நடவு செய்யப்பட்ட 24 ஆயிரத்து 409 ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பில், 17,500 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி முடிந்துள்ளது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊக்கத்தொகையுடன் கூடிய ஆதார விலையாக முதல் ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,160-ம், சாதாரண வகை நெல்லுக்கு ரூ.2,115-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் வளத்தை பெருக்கிட குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு சென்ற ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 251 குளங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 56 கிராம பஞ்சாயத்துக்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு தென்னங் கன்றுகள், விசை தெளிப்பான் உள்ளிட்ட இடு பொருட்கள் ரூ.62 லட்சம் மதிப்பில் 21 ஆயிரத்து 932 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும். இந்த மாதம் வரை பெற வேண்டிய மழை அளவு 121.7 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் இதுவரை 58.88 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. எனவே விவசாயிகள் குறைந்த நீரினை பயன்படுத்தி நீர் மேலாண்மை முறைகளான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் ஆகிய உத்திகளை கையாண்டு சாகுபடி செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.
மாவட்டத்தில் 267 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. இங்கு இதுவரை 1,620 விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 39 மாதிரிகள் தரமற்றதாக தெரிய வந்துள்ளது.
37 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது துறை நடவடிக்கையும், 2 விற்பனையாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்ட 57.76 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.77.50 லட்சம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார், சப்-கலெக்டர் சபிர் ஆலம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- விவசாயிகள், செடி முருங்கை, தக்காளி, மிளகாய், காய்கறி பயிர்கள், பப்பாளி நடவு செய்துவருகின்றனர்.
- உரிமம் இல்லாதவர்களிடம் விதைகளை வாங்கி ஏமாந்துவிடுகின்றனர்.
திருப்பூர் :
விவசாயிகள் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே விதை வாங்கி நடவு செய்யவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் சுந்தரவடிவேலு கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, குடிமங்கலம், பல்லடம், பொங்கலுார், திருப்பூர், மடத்துக்குளம், உடுமலை பகுதி விவசாயிகள், செடி முருங்கை, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள், பழச் செடியான பப்பாளி நடவு செய்துவருகின்றனர்.இப்பயிர்களை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள், விதை மற்றும் நாற்றுக்களை விதை விற்பனை உரிமம் பெற்ற கடைகள் மற்றும் நாற்றுப்பண்ணைகளில் மட்டுமே வாங்கவேண்டும்.விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக, விவசாயிகள் சிலர், உரிமம் இல்லாதவர்களிடம் விதைகளை வாங்கி ஏமாந்துவிடுகின்றனர்.
தவறாமல் விதைக்கான ரசீது பெறவேண்டும். அந்த ரசீதில் விதை தொகுப்பு எண், காலாவதி தேதி கட்டாயம் இருக்கவேண்டும். இதன்மூலம் விதையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கமுடியும்.ரபி, காரீப் என அந்தந்த சீசனுக்கு ஏற்ற விதைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்தவேண்டும். காரீப் சீசனுக்கான விதையை, ரபி பருவத்திலும், ரபி பருவத்துக்கான ரகங்களை காரீப்பில் என சீசன் மாற்றி விதைக்க கூடாது. அதேபோல் சீரான இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.சில விவசாயிகள், செடி முருங்கை போன்ற காய்கறி பயிர்களை குறைந்த இடைவெளியில் நடவு செய்கின்றனர். சீசன் மாறி குறுகிய இடைவெளியில் நடவு செய்தால், அந்த பயிரின் தன்மை மாறிவிடும். இதனால் எதிர்பார்த்த பலனை பெறமுடியாமல் போய்விடும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம்.
- உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
காங்கயம்:
காங்கயம் பகுதிகளில் உரிமம் பெறாமல் பயிறு வகைகள், சோளம் விதைகள், காய்கறி விதைகளை விற்றால் விற்பனை செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் மாவட்டம், வெள்ளகோவில் மற்றும் காங்கயம் வட்டாரங்களில் விதை விற்பனை உரிமம் பெற்ற 34 அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், சூரிய காந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனைப் பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். அதில் விதை குவியல் எண், காலாவதி நாள், விற்பனை செய்த நாள், வாங்குபவா் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் உள்ளதா என சரி பாா்த்து வாங்க வேண்டும்.
விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம். திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக்கூடாது. உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது விதைகள் சட்டம் 1966இன் படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
- பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு பருவத்திற்கு விதைப்பு செய்ய ஏற்ற நிலக்கடலை ரகங்கள் டி.எம்.வி 14, கதிரிலப்பாக்ஸி 1812, பிஎஸ்ஆர் 2, உளுந்து விதைகள் வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10, சோளவிதைகள்- கோ-32, கே-12 ஆகிய சான்று பெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விதைகள் தேவைப்படும் விவசாயிகள் பரமத்தி வேளாண் விரிவாக்கம் மையத்தில் வாங்கி பயன்பெறலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.






