search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "soap"

    • 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மிரட்டியதாக புகார்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோட்டராம் மகன் சென்னராம். (வயது26) மைசூர் அருகே உள்ள சிவராம் பேட் பகுதியில் வசித்து வருகிறார் இவர் பல்வேறு கடைகளுக்கு மளிகை, சோப், ஆயில் பேனா, உள்ளிட்ட பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்கிறார்.

    இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள லாலாராம் என்பவரிடமிருந்து பொருட்களை வாங்கி சப்ளை செய்துள்ளார் அதற்காக அவருக்கு ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும். அவர் பலமுறை கேட்டுள்ளார். நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்து பணம் தருவதாக கூறி உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சென்னராம் புகார் மனுவை அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் நேற்று மைசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்து கொண்டிருந்தபோது திருப்பத்தூர் அருகே கோணப்பட்டு என்ற ஊர் அருகே 4, பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்தும் துப்பாக்கியை காட்டி மிரட்டியும் நான் வைத்திருந்த ரூ.40 லட்சத்தை பறித்து சென்றுவிட்டனர்.

    கார் கண்ணாடிகளை உடைத்து விட்டு மர்மகும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டதாக புகார் அளித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த திருப்பத்தூர் தாலுகா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அகிலன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சென்னராமிடம் உரிய முறையில் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரியில் உள்ள லாலாராம்க்கு கடன் தொகை ரூ20 லட்சம் தருவதாக ரூ.20 லட்சத்திற்கே சரக்கு எடுப்பதாகவும் கூறிவிட்டேன்.

    ஆனால் என்னிடம் பணம் இல்லாததால் எனது சொகுசு கார் கண்ணாடிகளை நானே உடைத்து விட்டு தரவேண்டிய பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறி லாலாராம்க்கு தெரிவித்து நாடகமாடி தங்களிடம் புகார் மனு கொடுத்துள்ளேன் என கூறினார்.

    இதையடுத்து போலீசாரை அலைக்கழித்து பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றிய சென்னாராம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • நெல்லை தாமிரபரணி ஆற்றில் சோப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • குப்பை கழிவுகள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு நதி தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது

    நெல்லை:

    தாமிரபரணி நதியை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை நீர்வளம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு நதியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    பாபநாசத்தில் தொடங்கி மருதூர் அணை கட்டு வரை நதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள், குப்பை கழிவுகள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு நதி தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 58 இடங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த தூய்மை பணியின் ஒரு பகுதியாக அருகன்குளம் காட்டு ராமர் கோவில் பகுதியில் இருந்து நாரணம்மாள்புரம் ஜடாயுதீர்த்தம் வரை நேற்று தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.

    நெல்லை நீர்வளத்தின் கீழ் உழவார பணிக்குழுவினரால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நதியில் முட்புதர்களை அகற்றும் பணியை இன்று நாரணம்மாள்புரம் 4 வழிச்சாலை அருகே கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தூய்மை பணி, படித்துறை களை சீரமைக்கும் பணி உள்ளிட்டவைகளை அவர் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் 58 இடங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. நெல்லை நீர்வளம் திட்டம் மூலமாக கடந்த சில மாதங்களாக இந்த பணியானது நடைபெற்று வருகிறது.

    தாமிரபரணி நதியை முழுமையாக தூய்மை படுத்துவதுதான் இதன் நோக்கம்.

    குளிக்கும் தரத்தில் உள்ள இந்த நீரை குடிக்கும் தரத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    பொதுமக்கள் ஆற்றில் குளிக்கும்போது ரசாயனம், சோப்பு, மக்காத பொருட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

    இதற்கான நடவடிக்கை விரைவில் அமலுக்கு வரும். ஏற்கனவே நீர்நிலைகளில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களை சுத்தம் செய்வதற்கு தடை சட்டம் உள்ளது.

    அதன்படி விரைவில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மூலமாக தாமிரபரணி நதியில் வாகனங்களை சுத்தம் செய்பவர்கள் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இணைய வழி வர்த்தகம் மூலம் பணம் கட்டி செல்போனுக்கு பதிலாக சோப்புக் கட்டி வந்தது தொடர்பாக இணையவழி வர்த்தக நிறுவன அதிகாரி உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. #OnlineMobile
    நொய்டா:

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அமேசான் இணைய வழி வர்த்தக நிறுவனத்திடம் குறிப்பிட்ட ரக செல்போன் கேட்டு கடந்த 23-ந்தேதி ஆர்டர் செய்தார். அடுத்த 4 நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வழியாக அவருக்கு ஒரு பார்சல் வந்தது.

    அதை பிரித்துப் பார்த்தவருக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவர் பணம் கட்டி கேட்டிருந்த செல்போனுக்கு பதிலாக அந்த பார்சலுக்குள் சோப்புக் கட்டி ஒன்று இருந்தது. இதுபற்றி அந்த வாடிக்கையாளர், அருகில் உள்ள பிஸ்ரா போலீஸ் நிலையத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி அமித் அகர்வால், தர்ஷிதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன இயக்குனர்கள் பிரதீப் குமார், ரவிஸ் அகர்வால் மற்றும் பார்சலை கொண்டு வந்த அனில் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இச்சம்பவத்தை உறுதி செய்த அமேசான் இந்தியா நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு பணத்தை திருப்பி அளிக்க சம்மதம் தெரிவித்து உள்ளது. மேலும், இதுபற்றி அந்த நிறுவனம் கூறுகையில், “இதுபோன்ற மோசடிகளை நாங்கள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்று தெரிவித்து உள்ளது. 
    ×