என் மலர்
நீங்கள் தேடியது "Soap"
- சருமம், முடி, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் பப்பாளி.
- சாறு, சோப்பு, பொடி என பல்வேறு வடிவங்களில் பப்பாளியின் நன்மைகளைப் பெறலாம்.
பப்பாளி சருமம், முடி, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?. பப்பாளியால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? அது எந்தெந்த வடிவங்களில் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.
முகப்பரு கட்டுப்பாடு
பப்பாளியில் உள்ள பப்பைன் மற்றும் கைமோபப்பைன் என்ற நொதிகள் புரதங்களை உடைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும் இந்த பப்பைன் நொதி இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாக செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை அகற்றவும், துளைகளை அடைக்கவும், மென்மையான மற்றும் பிரகாசமான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இறந்த செல்கள் அகற்றப்படுவதால் முகத்தில் பருக்களின் அளவு குறையும்.
முகச்சுருக்கம்
பப்பாளியில் 'லைகோபீன்' என்ற ஆக்ஸிஜனேற்ற பைட்டோநியூட்ரியண்ட் அதிகளவு உள்ளது. இது தோல் பாதுகாப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி , பப்பாளியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது உங்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். மேலும் லைகோபீன் இளமை தோற்றத்தை தக்கவைக்க உதவுகிறது. தோல் சுருக்கத்தை குறைக்கவும் உதவும்.
சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும்
பப்பாளியில் பயனுள்ள நொதிகள் மற்றும் தாவர அடிப்படையிலான ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த கூறுகள் சருமத்தின் மேற்பரப்பில் இருந்து இறந்த மற்றும் சேதமடைந்த செல்கள், திசுக்கள் மற்றும் மாசுக்களை அகற்ற உதவும். பப்பாளி சருமத்துளைகளை சுத்தம் செய்து சருமத்தை பிரகாசமாகவும், தெளிவாகவும் மாற்ற உதவுகிறது. மேலும் சருமத்தின் உள் அடுக்குகளில் ஊடுருவி, அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றுவதன் மூலம் நல்ல நிறத்தையும் கொடுக்கிறது.
தோல் நோய்கள்
பல காலமாக பப்பாளி தழும்புகள், தீக்காயங்கள் மற்றும் பிற தோல் நோய்களுக்கு இயற்கையான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி நொதிகள் இறந்த சரும செல்களை வெளியேற்றி, சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்குகின்றன. பாதிக்கப்பட்ட இடத்தில் பப்பாளிக்கூழை பயன்படுத்தினால் உடனடியாக தீர்வு கிடைக்கும். தோல் அரிப்பு மற்றும் அலர்ஜிக்கு தீர்வு அளிக்கிறது.
ஈரப்பதம்
பப்பாளியில் அதிக அளவு உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நொதிகள் வறண்ட, தோல் உரியும் சருமத்திற்கு சிகிச்சையளிப்பதற்கும், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை மீட்டெடுப்பதற்கும் உதவுகின்றன. பப்பாளி கூழை உங்கள் சருமத்தில் தொடர்ந்து தடவுவது சருமத்தை மென்மையாக்கி அதன் இயற்கையான பளபளப்பை மீண்டும் கொண்டு வர உதவும்.
அடிமுதல் நுனிவரை
பப்பாளி பழம் மட்டுமின்றி பப்பாளிச் செடியின் பல பாகங்களும் சருமத்திற்கு நன்மை பயக்கும். சாறு, சோப்பு, பொடி என பல்வேறு வடிவங்களில் பப்பாளியின் நன்மைகளைப் பெறலாம். பப்பாளியின் நன்மைகளை வெவ்வேறு வடிவங்களில் எவ்வாறு பெறுவது என்பதைப் பார்ப்போம்.

பழம், சாறு, இலை என அனைத்து வடிவங்களிலும் சருமத்திற்கும், உடலுக்கும் நன்மை அளிக்கிறது பப்பாளி
பழம்...
பப்பாளியை பச்சையாகவோ, பழுத்ததாகவோ அல்லது சமைத்ததாகவோ சாப்பிட்டாலும் உங்களுக்கு நன்மை பயக்கும். சாப்பிடுவதைத் தவிர, மசித்த பப்பாளி கூழை ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். மசித்த பப்பாளி கூழில் தேன், மஞ்சள், எலுமிச்சை சாறு அல்லது முட்டையின் வெள்ளைக்கருவை (உங்கள் சருமத்தின் தேவைக்கேற்ப) சேர்க்கலாம். பழுப்பு நிறத்தை நீக்க, சருமத்தை ஒளிரச் செய்ய, ஈரப்பதத்தை தக்கவைக்க அல்லது ஊட்டமளிக்க இதைப் பயன்படுத்துங்கள்.
விதைகள்
பப்பாளி விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் அதிகளவில் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. பப்பாளி விதைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உங்கள் சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கும்.
இலைகள்
பொதுவாக மென்மையான, தெளிவான மற்றும் இளமையான சருமத்திற்கு பப்பாளி இலைகள் சாறு வடிவத்திலும், பேஸ்ட் வடிவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி இலைகளில் புரதத்தை கரைக்கும் நொதியான பப்பெய்னும் உள்ளது. எனவே, அதன் இலையை அறைத்து அந்த சாற்றை இறந்த சரும செல்களை அகற்றவும், அடைபட்ட துளைகளை அழிக்கவும், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும் ஒரு எக்ஸ்ஃபோலியண்டாக மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம்.
சோப்பு
பப்பாளியின் நன்மைகளைப் பெற இதுவே எளிதான வழி. பழச்சாறு, வைட்டமின் சி & ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கொண்ட ஆர்கானிக் பப்பாளி சோப்பு உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும், ஒழுங்கற்ற நிறமிகளைக் குறைக்கும் மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும்.
சாறு
பப்பாளி ஜூஸ் உடனடி நீரேற்றம் மற்றும் பளபளப்பை வழங்கும். சாற்றில் பொட்டாசியம் இருப்பது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் மந்தமான தன்மையை நீக்குகிறது.
- சோப்புக் கட்டி ஈரப்பதத்தை இழுத்து வைத்திருக்கும்.
- சோப்புக் கட்டியை பலபேர் உபயோகப்படுத்தும்போது, இந்த நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவ வாய்ப்பு அதிகம்.
அந்தக் காலத்தில், ஒரு சோப்பை வீட்டிலுள்ள அனைவரும் உபயோகப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். அதை ஒரு பெரிய விஷயமாக யாரும் அப்பொழுது நினைத்ததில்லை. ஆனால், இப்பொழுது பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டுவிட்டது. அதனால், குடும்பத்துக்குள்ளேயே ஒவ்வொருவரும் தனித்தனியே தங்களுக்குப் பிடித்த சோப்பை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இது நல்லதே.
பலவிதமான சரும அமைப்புகள் உள்ளவர்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள். இப்படியிருக்கும்போது, ஒரே சோப்பை பலர் உபயோகிப்பதால், தீமைதான் அதிகமே தவிர, நன்மை இல்லை.
பாத்ரூமில் பலர் சோப்பை உபயோகித்தபின் அதன் மீது நிற்கும் நுரையைக் கழுவாமல் சோப்பை அப்படியே வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். இதனால் ஏற்கனவே சோப்பை உபயோகித்தவருக்கு ஏதாவது சரும நோய் இருந்திருந்தாலும் நன்றாகக் கழுவி உலர வைத்துவிட்டால் அடுத்தவர் உபயோகிக்கும்போது தொற்று ஏற்படாமல் தடுக்க ஓரளவு வாய்ப்பாகும்.
சோப்புக் கட்டி ஈரப்பதத்தை இழுத்து வைத்திருக்கும். இதனால் பாக்டீரியா, வைரஸ், பங்கஸ் கிருமிகள் போன்றவை சோப்பின் மேல் பகுதியில் தங்கியிருக்கும். ஆக, ஒரு சோப்புக் கட்டியை பலபேர் உபயோகப்படுத்தும்போது, இந்த நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவ வாய்ப்பு அதிகம்.
நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான உடலமைப்பு கொண்டவர்கள் உபயோகிக்கும்போது, அந்த சோப்பின் மூலம் அதிகமாக கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. வெளிக்காயம், அதிக எதிர்ப்புச்சக்தி இல்லாதவர்கள், 'எக்ஸிமா' என்று சொல்லக்கூடிய சரும நோய் உள்ளவர்களிடமிருந்து கண்டிப்பாக சருமநோய் பரவத்தான் செய்யும்.
ஒருவர் உபயோகித்த சோப்பை இன்னொருவர் உபயோகித்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலை வந்தால், நீங்கள் உபயோகித்த சோப்பை நன்கு கழுவி, உலரவிட்டு உபயோகிக்க வேண்டும். கணவன்-மனைவி என்றாலும் கூட இதே முறையைத்தான் கடைப்பிடித்தாக வேண்டும்.
இப்பொழுதெல்லாம் 'லிக்யுட் சோப்' என்கிற திரவ வடிவ சோப்புக் கரைசல் பாட்டில்களில் கிடைக்கிறது. இதை பயன்படுத்தும்போது தொற்று என்கிற பேச்சுக்கே இடமில்லை.
சோப்பை நாம் உபயோகிப்பதே, நம் உடம்பை சுத்தம் செய்ய, நம் உடம்பு புத்துணர்ச்சி பெற, நம் உடம்பில் ஒட்டியிருக்கும் அழுக்கு, தூசி, பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், எண்ணெய் படலம், வியர்வை நாற்றம் முதலியவற்றை அகற்றத்தான். எனவே அந்த சோப் தரமானதாக இருக்க வேண்டும்.
தோல் பராமரிப்பு என்பது, பாத்ரூமுக்கு போனவுடன் 2 சொம்பு தண்ணீரை ஊற்றி, சோப்பை உடல் முழுவதும் ஒரு நிமிடத்தில் தேய்த்துவிட்டு, தண்ணீரை மறுபடியும் ஊற்றிக் கொண்டு, பாத்ரூமை விட்டு வெளியே ஓடி வந்துவிடுவதல்ல. சிறிது கவனம், சிறிது நேரம், சிறிது அக்கறை, தரமான குளியல் சோப்புடன் சேரும்போது, அந்தக் குளியல், ஆனந்தக் குளியலாக எப்பொழுதும் இருக்கும்.
- 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மிரட்டியதாக புகார்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோட்டராம் மகன் சென்னராம். (வயது26) மைசூர் அருகே உள்ள சிவராம் பேட் பகுதியில் வசித்து வருகிறார் இவர் பல்வேறு கடைகளுக்கு மளிகை, சோப், ஆயில் பேனா, உள்ளிட்ட பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்கிறார்.
இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள லாலாராம் என்பவரிடமிருந்து பொருட்களை வாங்கி சப்ளை செய்துள்ளார் அதற்காக அவருக்கு ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும். அவர் பலமுறை கேட்டுள்ளார். நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்து பணம் தருவதாக கூறி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சென்னராம் புகார் மனுவை அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
நான் நேற்று மைசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்து கொண்டிருந்தபோது திருப்பத்தூர் அருகே கோணப்பட்டு என்ற ஊர் அருகே 4, பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்தும் துப்பாக்கியை காட்டி மிரட்டியும் நான் வைத்திருந்த ரூ.40 லட்சத்தை பறித்து சென்றுவிட்டனர்.
கார் கண்ணாடிகளை உடைத்து விட்டு மர்மகும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டதாக புகார் அளித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த திருப்பத்தூர் தாலுகா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அகிலன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சென்னராமிடம் உரிய முறையில் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரியில் உள்ள லாலாராம்க்கு கடன் தொகை ரூ20 லட்சம் தருவதாக ரூ.20 லட்சத்திற்கே சரக்கு எடுப்பதாகவும் கூறிவிட்டேன்.
ஆனால் என்னிடம் பணம் இல்லாததால் எனது சொகுசு கார் கண்ணாடிகளை நானே உடைத்து விட்டு தரவேண்டிய பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறி லாலாராம்க்கு தெரிவித்து நாடகமாடி தங்களிடம் புகார் மனு கொடுத்துள்ளேன் என கூறினார்.
இதையடுத்து போலீசாரை அலைக்கழித்து பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றிய சென்னாராம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- நெல்லை தாமிரபரணி ஆற்றில் சோப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- குப்பை கழிவுகள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு நதி தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது
நெல்லை:
தாமிரபரணி நதியை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை நீர்வளம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு நதியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பாபநாசத்தில் தொடங்கி மருதூர் அணை கட்டு வரை நதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள், குப்பை கழிவுகள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு நதி தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 58 இடங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த தூய்மை பணியின் ஒரு பகுதியாக அருகன்குளம் காட்டு ராமர் கோவில் பகுதியில் இருந்து நாரணம்மாள்புரம் ஜடாயுதீர்த்தம் வரை நேற்று தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.
நெல்லை நீர்வளத்தின் கீழ் உழவார பணிக்குழுவினரால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நதியில் முட்புதர்களை அகற்றும் பணியை இன்று நாரணம்மாள்புரம் 4 வழிச்சாலை அருகே கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தூய்மை பணி, படித்துறை களை சீரமைக்கும் பணி உள்ளிட்டவைகளை அவர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தாமிரபரணி ஆற்றில் 58 இடங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. நெல்லை நீர்வளம் திட்டம் மூலமாக கடந்த சில மாதங்களாக இந்த பணியானது நடைபெற்று வருகிறது.
தாமிரபரணி நதியை முழுமையாக தூய்மை படுத்துவதுதான் இதன் நோக்கம்.
குளிக்கும் தரத்தில் உள்ள இந்த நீரை குடிக்கும் தரத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பொதுமக்கள் ஆற்றில் குளிக்கும்போது ரசாயனம், சோப்பு, மக்காத பொருட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.
இதற்கான நடவடிக்கை விரைவில் அமலுக்கு வரும். ஏற்கனவே நீர்நிலைகளில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களை சுத்தம் செய்வதற்கு தடை சட்டம் உள்ளது.
அதன்படி விரைவில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மூலமாக தாமிரபரணி நதியில் வாகனங்களை சுத்தம் செய்பவர்கள் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அமேசான் இணைய வழி வர்த்தக நிறுவனத்திடம் குறிப்பிட்ட ரக செல்போன் கேட்டு கடந்த 23-ந்தேதி ஆர்டர் செய்தார். அடுத்த 4 நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வழியாக அவருக்கு ஒரு பார்சல் வந்தது.
அதை பிரித்துப் பார்த்தவருக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவர் பணம் கட்டி கேட்டிருந்த செல்போனுக்கு பதிலாக அந்த பார்சலுக்குள் சோப்புக் கட்டி ஒன்று இருந்தது. இதுபற்றி அந்த வாடிக்கையாளர், அருகில் உள்ள பிஸ்ரா போலீஸ் நிலையத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி அமித் அகர்வால், தர்ஷிதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன இயக்குனர்கள் பிரதீப் குமார், ரவிஸ் அகர்வால் மற்றும் பார்சலை கொண்டு வந்த அனில் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இச்சம்பவத்தை உறுதி செய்த அமேசான் இந்தியா நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு பணத்தை திருப்பி அளிக்க சம்மதம் தெரிவித்து உள்ளது. மேலும், இதுபற்றி அந்த நிறுவனம் கூறுகையில், “இதுபோன்ற மோசடிகளை நாங்கள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்று தெரிவித்து உள்ளது.






