என் மலர்
நீங்கள் தேடியது "river"
- இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்ற நீரை, இனி நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்
- இந்தத் திட்டத்திற்கு 1982-லேயே இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்.
பஞ்சாப் - ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஷாபுர்கண்டி அணைத் திட்டம் இறுதி நிலையை எட்டியுள்ளது.
இதன் மூலம், ரவி நதியிலிருந்து பல தசாப்தங்களாக பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த உபரி நீர், இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு முழுமையாக நிறுத்தப்படும்.
ஷாபுர்கண்டி அணைத் கட்டுமானம் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று ஜம்மு காஷ்மீர் நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா அறிவித்துள்ளார்.
"இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்ற நீரை, இனி நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்" என்று அமைச்சர் ராணா தெரிவித்துள்ளார்.
இந்த அணையில் தேக்கப்படும் நீரைக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் சாம்பா மாவட்டங்களில் உள்ள 32,173 ஹெக்டேர் வறண்ட நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கப்படும்.
மேலும், பஞ்சாபில் உள்ள 5,000 ஹெக்டேர் நிலங்களும் பலன் பெறும். இந்தத் திட்டத்தின் மூலம் 206 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, ரவி நதியின் மீது இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.
இந்தத் திட்டத்திற்கு 1982-லேயே இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களால் தடைபட்டிருந்த இந்தப் பணி, 2018ல் மத்திய அரசின் தலையீட்டிற்கு பிறகு வேகம் எடுத்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. மேலும் செனாப் நதியின் குறுகியும் நீர் மின் நிலையத்தை கட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
- 2 பேரும் தடுப்பணையில் நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
- இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரும்பாவூர்:
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் தினேஷ் (வயது 28). தொண்டமாந்துறை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் அவரது மகன் ரஞ்சித் (25).
இவர்கள் 2 பேரும் நேற்று நள்ளிரவு அங்குள்ள பேச்சாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் தெருவிளக்கு மின் வயரில் இருந்து இணைப்பு எடுத்து அங்குள்ள தடுப்பணையில் நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
நெற்றியில் விளக்கு பொருத்தி அந்த வெளிச்சத்தில் மீன்களைப் பார்த்து மின்சாரத்தை பாய்ச்சும்போது அந்த மீன்கள் கொத்தாக மயக்க நிலைக்கு வந்து பிடிபடும் என கூறப்படுகிறது.
இவ்வாறு கையில் மின் வயரை வைத்துக்கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் தினேஷ் மற்றும் ரஞ்சித் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடம் வரைந்து வந்தனர் பின்னர் தடுப்பணை நீரில் பிணமாக மிதந்த அவர்கள் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த பெரம்பலூர் துணை போலி சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் சம்பவ இடம் விரைந்து சென்றார் மேலும் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கயல்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நூதன முறையில் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சி மீன்பிடித்த 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அரும்பாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
- புதிய ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ரிவர், இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. ரிவர் இண்டீ என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ரிவர் இண்டீ விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரிவர் இண்டீ வினியோகம் ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புதிய ரிவர் இண்டீ மாடலில் பிரமாண்ட முன்புறம், சதுரங்க வடிவ டூயல் எல்இடி ஹெட்லேம்ப், முன்புறம் வளைந்த அப்ரன் உள்ளது.

பக்கவாட்டில் பாக்சி ரியர் பதுகியில் செவ்வக வடிவம் கொண்ட டெயில் லேம்ப் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் கிராஷ் கார்டுகள் ஸ்கூட்டரின் பாடி பேனலில் இண்டகிரேட் செய்யப்படுகிறது. இத்துடன் பேனியர் ஸ்டே, க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் வழங்கப்படுகிறது. ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 12 லிட்டர் முன்புற குளோவ் பாக்ஸ், 43 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
இத்துடன் டிஜிட்டல் கலர் டிஸ்ப்ளே, இரண்டு யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ரிவர் இண்டீ எலெ்க்ட்ரிக் ஸ்கூட்டர் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 6.7 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது. இது 120 கிலோமீட்டர் ரேன்ஜ், அதிகபட்சம் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
முதற்கட்டமாக ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை பெங்களூருவில் துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் முன்பதிவு ரிவர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நடைபெற்று வருகிறது.
- ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தையே காண முடியாத அளவுக்கு உள்ளது.
- ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வழித்தடங்களை கண்டறிந்து அதனை தடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூரில் நகரின் மையமாக ஓடம்போக்கி ஆறு செல்கிறது. ஒரு காலத்தில் இந்த ஆற்றில் ஓடம் போக்குவரத்து இருந்ததால் இதனை ஓடம்போக்கி ஆறு என்று அழைத்ததாக கூறுகின்றனர்.
இந்த ஆற்றின் மூலம் திருவாரூர் நகரம், விளமல், வன்மீகபுரம், தியானபுரம், சாப்பாவூர், கடாரம்கொண்டான், அலிவலம், கீவளூர் ஆகிய இடங்களில் பாசன வசதிகளும் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து இருப்பது நீரின் போக்கை மாற்றுகிறது.
மேலும் நகர்ப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் இந்த ஆற்றில் கலந்து விடுகிறது. இதனால் இந்த ஆற்றின் தண்ணீர் தெளிவற்ற நிலையில் கருமை நிறமாக காட்சியளிக்கிறது.
மேலும் இந்த ஆற்றில் பெரும்பாலான இடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தையே காண முடியாத அளவுக்கு உள்ளது.
இதனால் நீரின் தூய்மை மாறுவதோடு, ஆற்று நீரின் போக்கும் மாறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த ஆற்றில் தெளிந்த நீரோட்டம் இருக்கும் வகையில் செய்திட வேண்டும்.
அதற்கேற்ற வகையில் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வழித்தடங்களை கண்டறிந்து அதனையும் தடுத்து, அப்புறப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் ஆற்றில் தெளிவான நீரோட்டத்தை ஏற்படுத்தி நகரின் அழகை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பரமக்குடியில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர் இறங்கினார்.
- டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா ெதாடங்கியது. தினமும் யாக சாலை பூஜைகள் நடந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. நள்ளிரவு பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, நெல் மணி தோரணங்கள் கட்டி ஈட்டி, கத்தி, வளரி, வாள் ஏந்தி கள்ளழகர் கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். இதனால் மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்வதுடன், விவசாயம் செழித்து நல்ல வளர்ச்சி காண்பார்கள், அர்ச்சகர் சத்யா பட்டாச்சாரியார் தெரிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் சேவை சாதித்து தல்லாகுளம் மண்டபத்தை அடைந்தார். திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன், பொருளாளர் பாலமுருகன், டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்க சென்றார்.
- தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி வாலிபர் உடலை மீட்டனர்.
பூதலூர்:
கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கல்லணை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் ஓரளவுக்கு ஓடிக் கொண்டுள்ளது. நேற்று விடுமுறை நாளாக இருந்ததால் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கல்லணைக்கு வந்து பார்வையிட்டனர்.
கல்லணையில் உள்ள மற்ற ஆறுகளில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் ஆபத்தை உணராமல் சிறுவர் முதல் பெரியவர் வரை இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.
திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சியை சேர்ந்த கார்த்திக் என்கிற பாலகிருஷ்ணன் (வயது 33 ) தனியார் நிறுவன தொழிலாளி. இவர் தனது நண்பர் சிவக்குமார் உடன் கல்லணையை சுற்றி பார்க்க வந்தார். சுற்றிப் பார்த்தவர் சிவகுமாரை மணலில் உட்கார வைத்துவிட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்க தொடங்கினார். ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கினார். இது குறித்து சிவக்குமார் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறை அலுவலர் சகாயராஜ் ,போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடி உயிரற்ற நிலையில் கார்த்தி என்கிற பாலகிருஷ்ணன் உடலை மீட்டனர். இதுகுறித்து தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
- நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் உடலை மீட்டனர்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகிமைபுரம் பூண்டி, புதுத்தெருவை சேர்ந்தவர் ஆரோன் இளையராஜா (வயது38).
இவர் திருச்சியில் உள்ள ராணுவ பட்டாலி யனில் ஹவில்தாராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று தனது அண்ணன் மகன்களான சூர்யா (18), ஹரீஷ் (12) மற்றும் மனைவி சுகன்யாவுடன் அந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார்.
இவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது சூர்யாவும், ஹரீசும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
இதை பார்த்த ஆரோன் இளையராஜா, ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த அண்ணன் மகன்கள் 2 பேரையும் மீட்டார். பின்னர் அவர் கரைக்கு செல்ல முயன்ற போது தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் திருக்காட்டு ப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் ஆரோன் இளையராஜா உடலை மீட்டனர்.
தகவல் அறிந்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகதீசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிர மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆரோன் இளையராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் ஏற வெட்டாற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
- தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஒக்கூர் ஊராட்சியில் விளா ம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராம த்தில் சுமார் 100- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்திற்கு இதுநாள் வரை அரசு, தனியார் பஸ்களோ கிடையாது. நாகப்பட்டினம் செல்வதற்கு 10 கிலோ மீட்டர் நடந்து வந்து கீழ்வேளூரில்தான் பஸ் ஏற வேண்டும்.
விளாம்பாக்கத்தில் இருந்து கீழ்வேளூர், நாகப்ப ட்டினம், திருவாரூரில் படிக்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், வயல் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் ஆற்றுக்கு அடுத்துள்ள கோகூர் சென்று பஸ் ஏற வெட்டா ற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதற்காக கிராமத்தினரே தட்டிப்பாலம் அமைத்து சென்று வருவதும் மழை, வெள்ளக் காலத்தில் அந்த தட்டிப்பாலம் ஆற்றில் அடித்து செல்வதுமாக தொடர்கதை யாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆற்றில் தற்போது உள்ள உடைந்த தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் மாணவர்கள் மற்றும் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர்.
எனவே உடனடியாக ஒரு ஆம்புலன்ஸ் செல்லும் அளவுக்காவது சிமெண்ட் பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூடலுார் தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரம் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அவசர காலத்தில், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஊட்டி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அவ்வப்போது சாலைகளில் மரங்கள்; மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி-பர்சன்ஸ்வேலி சாலை, தீட்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை மரம் விழுந்தது. கூடலுார் தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரம் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக-கேரளா-கர்நாடக இடையே இயக்கப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தீயணைப்பு துறையினர் வந்து, மரங்களை அறுத்து அகற்றிய பின், ஒரு மணி நேரத்துக்கு பின்பு போக்குவரத்து சீரானது. பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் தொடரும் மழையால் கடும் மேக மூட்டம் நிலவுவதால், வாகனங்கள் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.
மேலும், கூடலுாரில் உற்பத்தியாகும் பாண்டியார்-புன்னம்புழா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றோர பகுதிகளுக்கு குளிக்கவும், துணி துவைக்கவும் மக்கள் செல்ல கூடாது; சிறுவர்களை ஆற்றோரத்துக்கு பெற்றோர் அனுப்ப கூடாது என வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஊட்டி பூங்கா, படகு இல்லம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கடும் குளிர் நிலவுவதால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளூர் மக்கள் அவதிப்படுகின்றனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, தேவாலாவில் 55 மி.மீ. கூடலுாரில் 44 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா கூறுகையில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாண்டியார்-புன்னம்புழா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றில் குளிக்கவும், கடக்கவும் யாரும் செல்ல கூடாது. அவசர காலத்தில், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.
- தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
- இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குருவாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மகன் சந்திரசேகர் (வயது 65). விவசாயி.
இவர் நேற்று காலை 11 மணியளவில் முடிகொண்டான் ஆற்றில் இறங்கி அக்கரையில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு நண்பர்கள் சிலருடன் சென்றுள்ளார்.கோவிலில் சாமி தரிசனம் செய்து மீண்டும் மாலை 3 மணி அளவில் திரும்பி ஆற்றில் இறங்கி வந்துள்ளார்.
அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் அடித்து செல்லப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திருமருகல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் திருமருகல் தீயணைப்புத் துறையினர் மற்றும் திட்டச்சேரி போலீசார் சந்திரசேகரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர். இருப்பினும் கிராம மக்கள் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.கோவிலுக்கு சென்றவர் ஆற்றில் மூழ்கி முதியவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
- ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.
திருவாரூர்:
முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனத்தில் மறைக்கா கோரையாறு உள்ளது.
மேலபெருமழை, பள்ளிமேடு, தில்லைவிளாகம், தொண்டியக்காடு, இடும்பாவனம் போன்ற பகுதிகளில் உள்ள சாகுபடி நிலங்களுக்கு இந்த ஆற்றின் மூலம் தான் தண்ணீர் செல்கிறது.
கடைமடை பகுதிகளான இப்பகுதியில் நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது இந்த ஆற்றில் தண்ணீர் செல்லமுடியாதவாறு ஆகாயதாமரைகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளது.
இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தண்ணீர் திறப்பதற்கு முன்பே ஆற்ைற ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அகற்றவில்லை.
தற்போது ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடும்பாவனம் மறைக்கா கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அபிராமி, மீரா ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதால் மாயமாகினர்.
- நேற்று மாலை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே உள்ளவளையப்பேட்டை, மல்லப்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் அபிராமி (வயது 22),இவருடைய உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி மகள்கள் மீரா (23), மற்றும் கீர்த்திகா, ரத்தினம் மகள் பாலா , சுபாஷ்சந்திரபோஸ் மகன்கள் ஹரிஹரன் , சந்தோஷ் ஆகிய 6 பேரும் நேற்று அருகிலுள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அப்போது அவர்களில் அபிராமி மற்றும் மீரா ஆகிய 2 பேரும் ஆழமானப் பகுதிக்கு சென்றதால், அவர்கள் 2 பேரும் மாயமானார்கள். இதனையறிந்த அவருடன் வந்த பாலா, அவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்ற போது, ஆற்றில் அடித்துதச் செல்லப்பட்டார். இதனையறிந்த கரையிலிருந்தவர்கள், பாலாவை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அருகிலுள்ளவர்கள், சுவாமிமலை போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் அந்த இடத்திற்கு வந்த கும்பகோணம் தீயணைப்பு துறையினர், ஆற்றில் தேடி வந்த நிலையில், அபிராமி உடலை மட்டும் மீட்டனர். மாயமான மற்றொரு பெண் மீராவை நேற்று மாலை வரை தேடி வந்தனர். மீரா கிடைக்காத காரணத்தால் நேற்று மாலை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது அதனை தொடர்ந்து இன்று காலை இரண்டாவது நாளாக தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






