என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயமான மீரா மற்றும் அவரை தேடும் பணியில் ஈடுபடும் தீயணைப்பு துறையினர்.
காவிரி ஆற்றில் மாயமான பெண்ணை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
- அபிராமி, மீரா ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதால் மாயமாகினர்.
- நேற்று மாலை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே உள்ளவளையப்பேட்டை, மல்லப்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் அபிராமி (வயது 22),இவருடைய உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி மகள்கள் மீரா (23), மற்றும் கீர்த்திகா, ரத்தினம் மகள் பாலா , சுபாஷ்சந்திரபோஸ் மகன்கள் ஹரிஹரன் , சந்தோஷ் ஆகிய 6 பேரும் நேற்று அருகிலுள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அப்போது அவர்களில் அபிராமி மற்றும் மீரா ஆகிய 2 பேரும் ஆழமானப் பகுதிக்கு சென்றதால், அவர்கள் 2 பேரும் மாயமானார்கள். இதனையறிந்த அவருடன் வந்த பாலா, அவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்ற போது, ஆற்றில் அடித்துதச் செல்லப்பட்டார். இதனையறிந்த கரையிலிருந்தவர்கள், பாலாவை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அருகிலுள்ளவர்கள், சுவாமிமலை போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் அந்த இடத்திற்கு வந்த கும்பகோணம் தீயணைப்பு துறையினர், ஆற்றில் தேடி வந்த நிலையில், அபிராமி உடலை மட்டும் மீட்டனர். மாயமான மற்றொரு பெண் மீராவை நேற்று மாலை வரை தேடி வந்தனர். மீரா கிடைக்காத காரணத்தால் நேற்று மாலை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது அதனை தொடர்ந்து இன்று காலை இரண்டாவது நாளாக தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






