search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Old Man"

    • கணேசன் வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
    • இடது கை தோள்பட்டையில் ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (63). சம்பவத்தன்று கணேசன் வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    அதிகாலை 4. 45 மணிக்கு தூங்கி கொண்டிருந்த போது அவரது இடது கை தோள்பட்டையில் ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது.

    வாலியால் துடித்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கணேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது.
    • வீட்டிலிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவை சேர்ந்தவர் பழனி. இந்நிலையில் சம்பவத்தன்று பழனி வீட்டின் உள்ளே படுத்திருந்தார்.

    அப்போது திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    அதைத்தொ டர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    மேலும் விட்டினுள் படுத்திருந்த பழனி உடல் கருகிய நிலை யில் கிடந்து ள்ளார். இதை யடுத்து தீய ணைப்பு வீர ர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகி ச்சைக்காக அனுப்பி வை த்தனர்.

    இந்நி லையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து கடத்தூ ர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது.
    • டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் எதிரே சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு டவுன் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் நேரில் சென்று மயங்கிய கிடந்த முதியவரை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்தவருக்கு 55 வயது முதல் 60 வயது இருக்கும் எனவும், ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
    • இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குருவாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மகன் சந்திரசேகர் (வயது 65). விவசாயி.

    இவர் நேற்று காலை 11 மணியளவில் முடிகொண்டான் ஆற்றில் இறங்கி அக்கரையில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு நண்பர்கள் சிலருடன் சென்றுள்ளார்.கோவிலில் சாமி தரிசனம் செய்து மீண்டும் மாலை 3 மணி அளவில் திரும்பி ஆற்றில் இறங்கி வந்துள்ளார்.

    அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் அடித்து செல்லப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திருமருகல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் திருமருகல் தீயணைப்புத் துறையினர் மற்றும் திட்டச்சேரி போலீசார் சந்திரசேகரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர். இருப்பினும் கிராம மக்கள் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.கோவிலுக்கு சென்றவர் ஆற்றில் மூழ்கி முதியவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முகம் கழுவிவிட்டு வருவதற்காக சென்றபோது மாணிக்கம் திடீரென மயங்கி விழுந்தார்.
    • மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு

    ஈரோடு வீரப்பன் சத்திரம் பாரதி நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (86). இவர் தனது மகன் கோபாலகிருஷ்ணன் (46) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் தூங்கி எழுந்து முகம் கழுவிவிட்டு வருவதற்காக சென்றபோது மாணிக்கம் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
    • டாக்டர் பரிசோதனை செய்து விட்டு சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள விண்ணப்பள்ளி தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (63). இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது மனைவி சுசீலா சுப்பிரமணியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பழனிசாமி சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார்.
    • இதையடுத்து அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    பெருந்துறை:

    பெருந்துறை ஈரோடு ரோடு சென்னிவலசு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (30). இவர் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நந்த குமாரின் அப்பா, அம்மா, மற்றும் தாத்தா பழனிச்சாமி (75) ஆகியோரும் குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பழனிசாமியின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து பழனிச்சாமி கொரோனா சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டு வந்தார்.

    இதனால் பழனிசாமி அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று தொடர்ந்து வீட்டில் இருந்து வருகிறார். இதனால் பழனிச் சாமி மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இநத நிலையில் பழனிசாமி சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் மீண்டும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து நந்தகுமார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பழனி ச்சாமியை தேடி வருகிறார்.

    • கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
    • தோப்புக்கு குளிக்க சென்ற கந்தசாமி இரவு வரை வீடு திரும்பவில்லை.

    ஸ்ரீவில்லிபுத்தூர்,

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது80). இவருக்கு இப்பகுதியில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் மாலை தோப்புக்கு குளிக்க சென்ற கந்தசாமி இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது மகன் பொன்னுசாமி தோட்டத்திற்கு சென்று பார்த்த போது கிணற்றின் அருகே அவரது ஆடைகள் இருந்தது.

    தந்தை குளிக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என நினைத்து தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தார். அதிக அளவு தண்ணீர் இருந்ததால் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. நேற்று மதியம் முதியவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
    • பாண்டியராஜ் வெளியே வந்து பார்த்தபோது குஞ்சான் வீட்டில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மூங்கில் பாளையம் பகுதி சேர்ந்தவர் குஞ்சான் வயது 65. இவர் தனது மனைவி சென்னியம்மாள், மகள் பூங்கொடி, மருமகன் பாண்டியராஜ் மற்றும் பேத்திகளுடன் குடியிருந்து வருகிறார். இவரும் இவர் மனைவியும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களாக குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடித்து அளவுக்கு அதிகமாக முடித்துவிட்டு போதையில் வந்த குஞ்சான் குடும்பத்தாரிடம் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.

    இதை கண்ட அவரது மனைவி சத்தம் போடாமல் போய் தூங்குங்கள் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று தூங்கிவிட்டார். இரவு அவரது மருமகன் பாண்டியராஜ் வெளியே வந்து பார்த்தபோது குஞ்சான் வீட்டில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    உடனே அவரை இறக்கி ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குஞ்சான் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் முதியவர் மூழ்கி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம், சரவணப் பொய்கை குளத்தில் அடையாளம் தெரியாத முதியவர் உடல் மிதப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு குளத்துக்குள் உடல் மிதந்த நிலையில் கிடந்தது. இது குறித்து பெரியார் பஸ் நிலைய தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். சரவண பொய்கை குளத்துக்குள் பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் என்பது தெரிய வந்தது.

    திருப்பரங்குன்றம் போலீசார் குளக்கரையில் இருந்த உடைமைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சரவண பொய்கையில் மூழ்கி இறந்தவர், மதுரை டி.ஆர்.ஓ காலனியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 62) என்பது தெரிய வந்தது. இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று இரவு திருப்பரங்குன்றத்தில் தங்கி இருந்தார். அவர் காலை 10 மணி அளவில் குளிக்க சென்றதை அங்கு உள்ளவர்கள் பார்த்து உள்ளனர்.

    சரவண பொய்கை குளத்தில் முதியவர் வெங்க டேசன், மூச்சை அடக்கிய நிலையில் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • களக்காடு கீழபத்தையை சேர்ந்தவர் கிருஷ்ணன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழபத்தை ஊரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது60).

    இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மேலவடகரை பாலத்தின் அருகில் பச்சை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென நீரில் மூழ்கி இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×