திருப்பரங்குன்றம்: சரவண பொய்கையில் மூழ்கி முதியவர் சாவு

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் முதியவர் மூழ்கி இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்கப்பட்ட முதியவரின் உடல்.
மீட்கப்பட்ட முதியவரின் உடல்.
Published on

மதுரை

திருப்பரங்குன்றம், சரவணப் பொய்கை குளத்தில் அடையாளம் தெரியாத முதியவர் உடல் மிதப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு குளத்துக்குள் உடல் மிதந்த நிலையில் கிடந்தது. இது குறித்து பெரியார் பஸ் நிலைய தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். சரவண பொய்கை குளத்துக்குள் பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் என்பது தெரிய வந்தது.

திருப்பரங்குன்றம் போலீசார் குளக்கரையில் இருந்த உடைமைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சரவண பொய்கையில் மூழ்கி இறந்தவர், மதுரை டி.ஆர்.ஓ காலனியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 62) என்பது தெரிய வந்தது. இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று இரவு திருப்பரங்குன்றத்தில் தங்கி இருந்தார். அவர் காலை 10 மணி அளவில் குளிக்க சென்றதை அங்கு உள்ளவர்கள் பார்த்து உள்ளனர்.

சரவண பொய்கை குளத்தில் முதியவர் வெங்க டேசன், மூச்சை அடக்கிய நிலையில் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com