வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் மாயம்

பழனிசாமி சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார்.இதையடுத்து அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் மாயம்
Published on

பெருந்துறை:

பெருந்துறை ஈரோடு ரோடு சென்னிவலசு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (30). இவர் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நந்த குமாரின் அப்பா, அம்மா, மற்றும் தாத்தா பழனிச்சாமி (75) ஆகியோரும் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பழனிசாமியின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து பழனிச்சாமி கொரோனா சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டு வந்தார்.

இதனால் பழனிசாமி அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று தொடர்ந்து வீட்டில் இருந்து வருகிறார். இதனால் பழனிச் சாமி மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இநத நிலையில் பழனிசாமி சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் மீண்டும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து நந்தகுமார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பழனி ச்சாமியை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com