search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fainted and died"

    • பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
    • பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி இச்சிபாளையம் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (65). இவரது தாயார் பொன்னாள் (86). இவர் தனது மகனின் வீட்டின் அருகிலேயே தனியாக வசித்து வருகிறார்.

    100 நாள் வேலைக்கு சென்று வரும் பொன்னாள் சம்ப வத்தன்று காலையில் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். சுமார் 10 மணியளவில் பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

    அருகில் இருந்தவர்கள் உடனடி யாக அவரை மீட்டு கொடுமுடி யில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டீ குடிக்க நடந்து சென்று கொண்டிருந்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    தூசி:

    பீகார் மாநிலம் தானாசிகர் பாராஹாத்தாலுகா நாராயணபூர் அருகே உள்ள பக்பூல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு முர்மு (வயது 25). இவரது மனைவிஷம்மி (23). இருவரும் சிப்காட்டில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த னர். இதற்காக அருகே உள்ள சோழவ ரம் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை அஞ்சு முர்மு அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.

    • மனு அளிக்க வந்த நிலையில் பரிதாபம்
    • 108 ஊழியர்கள் முதலுதவி அளித்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் மேஷக் (வயது 62). இவர் பெருமுகையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். மேஷக் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஊழியர்கள் மேஷாக்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மேஷக் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சுப்பிரமணி மனைவி தனலட்சுமி (57) புது மரக்கோணம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து வந்தார்.
    • மயங்கி விழுந்து இறந்தது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே பிண்ணணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி தனலட்சுமி (57) புது மரக்கோணம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து வந்தார்.நேற்று பிற்பகல் தனலட்சுமி 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சக ஆசிரியர்கள் டாக்டரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.தனலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதனால் அந்த பள்ளியில் உள்ள ஆசியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலை மையாசிரியை வகுப்பறை யில் மயங்கி விழுந்து இறந்தது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • திருபுவனை அருகே கூட்டுறவு நூற்பாலை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    • உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீட்டிலேயே மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே கூட்டுறவு நூற்பாலை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    திருபுவனை அருகே கொத்தபுரி நந்தம் சொசைட்டி வீதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது57). இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அரிகிருஷ்ணன் திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலையில் ஆப்ரேட்டராக பணிபுரிந்து கடந்த 2019-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். அரிகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீட்டிலேயே மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்தநிலையில்  வீட்டில் இருந்த அரிகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அரிகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திடீர் மாரடைப்பால் அரிகிருஷ்ணன் இறந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மகன் சரவணசாமி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினர்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பண்ணாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.
    • அப்போது திடீரென பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம், போஸ்டல் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (59). இவரது மனைவி பேச்சியம்மாள் (47). பாலகிருஷ்ணன் பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவினில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சம்பவத்தன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.

    மதியம் சுமார் 2 மணியளவில் குடும்பத்தினர் பொங்கல் வைத்து கொண்டிருந்தபோது பூஜை பொருள்கள் வாங்குவதற்காக கோவிலுக்கு வெளியில் உள்ள கடைக்கு பாலகிருஷ்ணனும், அவரது மனைவியும் சென்றனர்.

    அப்போது திடீரென பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். உனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வந்தவாசி அரசு பள்ளியில் பரிதாபம்
    • மாணவர்கள், சக ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது

    வந்தவாசி:

    வந்தவாசி தேனருவி நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (56). இவர் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நேற்று மதியம் பள்ளி உணவு இடைவே ளையின்போது குருமூர்த்தி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

    இதையடுத்து சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குருமூர்த்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர் குருமூர்த்தி இறந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முகம் கழுவிவிட்டு வருவதற்காக சென்றபோது மாணிக்கம் திடீரென மயங்கி விழுந்தார்.
    • மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு

    ஈரோடு வீரப்பன் சத்திரம் பாரதி நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (86). இவர் தனது மகன் கோபாலகிருஷ்ணன் (46) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் தூங்கி எழுந்து முகம் கழுவிவிட்டு வருவதற்காக சென்றபோது மாணிக்கம் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஈரோடு- நசியனூர் ரோட்டில் குமார் மயங்கிய நிலையில் விழுந்து இறந்து கிடந்தார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    திருபுவனம் மாவட்டம் கோதன்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (46) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி திருசாடை என்ற மனைவியும், தினேஷ் பிரபு, லோகேஷ் என்ற 2 மகன்களும், திவ்யதர்ஷினி என்ற ஒரு மகள் உள்ளனர்.

    குமார் நசியனூரில் உள்ள ஒரு தனியார் நிறுவ னத்தில் எலக்ட்ரீனாக பணியாற்றி வந்தார். இவர் நிறுவனத்தின் அருகேவீடு வாடகைக்கு எடுத்து தங்கி மாதம் ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவார்.

    இந்த நிலையில் குமார் கடந்த மாதம் சொந்த உருக்கு சென்று விட்டு மீண்டும் நசியனூருக்கு வந்துள்ளார். அவர் தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என கூறி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஈரோடு- நசியனூர் ரோட்டில் குமார் மயங்கிய நிலையில் விழுந்து இறந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அவரது உடலை மீட்டு ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது மனைவி திருசாடைக்கு போன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி சம்பவ இடத்துக்கு வந்து போலீசில் புகார் கொடுத்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • திடீரென மயங்கி கீேழ விழுந்தார்.

    கோவை,

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள கிளிய கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 27). பிளம்பர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீேழ விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மகேஷ்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மகேஷ்குமாரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மகேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேலைக்கு சென்ற ஜீவா திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார்
    • அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜீவா இறந்து விட்டதாகத் தெரிவித்தார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (72). சத்தியமங்கலத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி ஜீவா (60). இவரும் சத்திய மங்கலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.மகனுக்கு திருமணமாக வில்லை.

    நேற்று காலை வழக்கம் போல ஜீவா வேலைக்கு சென்றுள்ளார். மாலை சுமார் 5.30 மணியளவில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜீவா இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, சத்தியங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சேதராப்பட்டில் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
    புதுச்சேரி:

    வானூர் அருகே பேராவூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது46). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சிவக்குமார் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 7 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.  வழக்கம் போல் சிவக்குமார் காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 

    அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிவக்குமாரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிவக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிவக்குமாரின் சகோதரர் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×