search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The woman"

    • லட்சுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
    • பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி 2-வது மெயின் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (29). கட்டிட தொழிலாளி. இவரது தாய் லட்சுமி (48). ராஜேந்திரனின் தங்கை ரேவதி. அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி ரேவதி தனது குழந்தைக்கு பால் காய்ச்சுவதற்காக சமையல் அறைக்கு சென்று லைட் போடுவதற்காக சுவிட்சை போட்டுள்ளார்.

    அப்போது ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டிருந்ததால் லைட் சுவிட்சை போட்டவுடன் சமையல் அறை முழுவதும் தீப்பிடித்துள்ளது.

    இதனால் அலறி துடித்த ரேவதியை காப்பாற்ற சென்ற அவரது தாய் லட்சுமி, உறவினர் கணேசன் ஆகியோர் மீதும் தீப்பிடித்தது.

    உடனடியாக அக்கம்ப க்கத்தினர் 3 பேரையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் உயர் சிகிச்சை க்காக 3 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி, கணேசன் ஆகியோர் சிகிச்சை முடிந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினர்.

    ரேவதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் லட்சுமிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வேலைக்கு சென்ற ஜீவா திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார்
    • அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜீவா இறந்து விட்டதாகத் தெரிவித்தார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (72). சத்தியமங்கலத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி ஜீவா (60). இவரும் சத்திய மங்கலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.மகனுக்கு திருமணமாக வில்லை.

    நேற்று காலை வழக்கம் போல ஜீவா வேலைக்கு சென்றுள்ளார். மாலை சுமார் 5.30 மணியளவில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜீவா இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, சத்தியங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடனை திருப்பித் தரவில்லை என போலீஸ் நிலையத்தில் செல்வி அளித்த புகார் அளித்தார்.
    • சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், வளர்மதி, கதிர்வேல் தம்பதியினரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரது மகள் வளர்மதி மற்றும் மருமகன் கதிர்வேல்.

    இவர்கள் சிக்கரச ம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்,செல்வி தம்பதியிடம் கடந்த 2019-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக 2.50 லட்சம் ரூபாய் பணம், 4 பவுன் நகை கடனாக வாங்கியுள்ளனர்.

    இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த செந்தில், செல்வி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதையடுத்து கடன் பெற்ற வளர்மதி, கதிர்வேல் தம்பதியிடம் செல்வி நீங்கள் வாங்கிய கடன் தொகையை என்னிடம் அளிக்குமாறு கேட்டுள்ளார்.

    இதேபோல் செல்வியின் கணவர் செந்தில் ஒருபுறம் தன்னிடம் தான் பணம் நகை கொடுக்க வேண்டும் என்று வளர்மதி -கதிர்வேலிடம் கேட்டுள்ளார்.

    இந்த சூழ்நிலையில் கடனை அடைக்க வளர்மதி-கதிர்வேல் தம்பதியினர் கால அவகாசம் கேட்டுள்ளனர். இருப்பினும் கடனை திருப்பித் தரவில்லை என போலீஸ் நிலையத்தில் செல்வி அளித்த புகார் அளித்தார்.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், வளர்மதி, கதிர்வேல் தம்பதியினரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனால் அச்சமடைந்த வளர்மதி, கதிர்வேல் ஆகிய 2 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாயமாகிவிட்டனர். தனது மகள் மருமகனை, கிருஷ்ணவேணி பல்வேறு இடங்களிலும் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் நேற்று கிருஷ்ணவேணி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது கிருஷ்ணவேணி திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ணை கேனை திறந்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்து அவரை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • டீ வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்தது.
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஆர்.என்.புதூர் அடுத்த பெருமாள்மலை, ராஜீவ் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. அவரது மனைவி நாகராணி (45). மூர்த்தி டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று மாலை நாகராணி டீ வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்தது. இதனால் வேதனையில் அவர் அலறினார்.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் நாகராணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நாகராணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×