search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காவலாளி மயங்கி விழுந்து சாவு
    X

    கோப்பு படம்.

    காவலாளி மயங்கி விழுந்து சாவு

    • முத்திரையர் பாளையத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார். புதுவை முத்திரையர் பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் கலைவாணன்(வயது48). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், விக்னேஷ் மற்றும் தயாநிதி ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
    • உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    முத்திரையர் பாளையத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.

    புதுவை முத்திரையர் பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் கலைவாணன்(வயது48). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், விக்னேஷ் மற்றும் தயாநிதி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர். பாப்ஸ்கோவில் பணிபுரிந்து வந்த கலைவாணனை கடந்த 6 ஆண்டுகளுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையால் பணியில் இருந்து நீக்கிவிட்டதால் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இதற்கிடையே கலைவாணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு நீரழிவு நோய் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கலைவாணன் வீட்டில் இருந்த போது திடீரென மயங்கி சாய்ந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலைவாணன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×