search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மலையனூர் அருகே வகுப்பறையில் பாடம் நடத்திய தலைமையாசிரிைய மயங்கி விழுந்து சாவு
    X

    மேல்மலையனூர் அருகே வகுப்பறையில் பாடம் நடத்திய தலைமையாசிரிைய மயங்கி விழுந்து சாவு

    • சுப்பிரமணி மனைவி தனலட்சுமி (57) புது மரக்கோணம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து வந்தார்.
    • மயங்கி விழுந்து இறந்தது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே பிண்ணணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி தனலட்சுமி (57) புது மரக்கோணம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து வந்தார்.நேற்று பிற்பகல் தனலட்சுமி 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சக ஆசிரியர்கள் டாக்டரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.தனலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதனால் அந்த பள்ளியில் உள்ள ஆசியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலை மையாசிரியை வகுப்பறை யில் மயங்கி விழுந்து இறந்தது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×