search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தபிளம்பர் மயங்கி விழுந்து சாவு
    X

    வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தபிளம்பர் மயங்கி விழுந்து சாவு

    • சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • திடீரென மயங்கி கீேழ விழுந்தார்.

    கோவை,

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள கிளிய கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 27). பிளம்பர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீேழ விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மகேஷ்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மகேஷ்குமாரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மகேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×